மின்சார துறையை தனியார் மையமாக்குவதை கண்டித்தும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடிப்பது, துன்புறுத்துவதை தடுக்கத் தவறும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக, இன்று (02-12-2022 வெள்ளி) மாலை 5 மணி அளவில், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
“திமுக அரசின் மின் கட்டண உயர்வு நேர்மையற்றது. சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு எதிரானது. தனியார்மய கொள்ளையை தடுக்காமல் சாமானியர்களை தண்டிக்காதீர்கள். பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக அரசுகள் தொடர்ந்து கடைபிடித்த தனியார்மயத்தினால் நட்டத்தை சந்தித்த மின்சார வாரியத்திற்கான நட்ட ஈட்டை தனியார் பெரு நிறுவனங்களிடமிருந்து வசூல் செய்யுங்கள். சிறு-குறு நிறுவனங்களை பலியிடாதீர்கள். இந்த அநீதிக்கு எதிரான பணிகளை மே 17 இயக்கம் விரைந்து முன்னெடுக்கும். இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.”
–
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
யூடியூப் இணைப்பு
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>“1,50,000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய – மின்வாரியத்தில் முடிவெடுக்கும் முக்கிய பொறுப்பிலிருக்கும் உயர் அதிகாரிகள், நிதி நிர்வாக அதிகாரிகள், ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆகிய அனைவரின் மீதும் வெளிப்படையான விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும். …கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் போராட்டம் நடத்தப்படும். மின்வாரியம், ஒழுங்குமுறை ஆணையம், ஆகியவற்றின் முன்பாக ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு அதிகாரிகளின் பெயரைச் சொல்லி பிரச்சாரம் செய்யப்படும்.” என திருமுருகன் காந்தி அவர்கள் அறிவித்தார்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
மின்சார விலையேற்றம் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறு-குறுதொழில்கள் ஆகியவற்றை மோசமாக பாதிக்கும் என்பதை கவனத்தில்கொண்டு பங்கேற்க அழைக்கிறோம். 2012இல் இதேபோன்ற எதிர்ப்பை மே17 இயக்கம் பதிவு செய்து விலையேற்றத்தை தவிர்த்தோம். அதேபோன்று இன்றும் அழைக்கிறோம்.
தமிழர் நலன்களுக்காக என்றும் மே17 களத்தில் நிற்கும். பங்கேற்க வாரீர்.
இடம்: கலைவாணர் அரங்கம்
நாள்: 22.08.2022 திங்கட்கிழமை காலை 9மணி.
( 9மணிக்கு வந்து முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கருத்தை பதிவு செய்யமுடியும். ஆகவே அனைவரும் கட்டாயம் 9மணிக்கு முன்பதிவு செய்துவிட்டு உள்நுழையவும்).
மே17 இயக்கம்
9884864010
]]>மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் திடீர் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தொடர் மின்வெட்டுகள் ஏற்பட்டன. இந்தப் பற்றாக்குறையை காரணம் காட்டி, தேசிய அனல் மின் நிலையம் (NTPC) 5.75 மெட்ரிக் டன் அளவிற்கு, ரூபாய் 8,422 கோடி மதிப்புள்ள நிலக்கரியை இறக்குமதி செய்ய அதானி நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. …இந்த கொள்ளையின் சுமையை மாநில மின்வாரிய நிலையங்கள் சுமக்கின்றன. அதனால் அதிகரிக்கும் மின் கட்டணம் ஊடாக மக்கள் மீது விழுந்து அந்த சுமையை மக்கள் சுமக்கிறார்கள்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9884864010
இன்றைய ஸ்பேஸஸ் அரங்கில்,
“ஊழலும் மின்சாரமும்”
என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற மின் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர்
சா. காந்தி அவர்கள்
உரையாற்றுகின்றார்.
மே 17 இயக்கக் குரல் இணையதளத்தில் இன்று வெளியான,
“மின்சார வாரியத்தை மூழ்கடிக்கும் ‘ஊழல் மின்சாரம்’! அதிமுகவின் தனியார்மய கொள்ளை.”
என்ற கட்டுரையின் பிண்ணனியிலான விரிவான உரை.
மே 17 இயக்க டிவிட்டர் அரங்கில் (https://twitter.com/May17Movement) அரங்கில் இன்று (28-06-2021) இரவு 9 மணிக்கு இணைந்திருக்கவும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
மின்சார வாரியத்தை மூழ்கடிக்கும் ‘ஊழல் மின்சாரம்’! அதிமுகவின் தனியார்மய கொள்ளை.
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை
ஜி.எம்.ஆர் நிறுவனத்திடமிருந்து 1998லிருந்து 2014 வரை மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளது. இந்த நிறுவனத்திடமிருந்து 196 மெகாவாட்டை வாங்கிக்கொண்டிருந்தது மின்சார வாரியம். அந்த சமயத்தில் இந்த ஜி.எம்.ஆர் நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.77 விலைக்கு விற்றது. ஆனால் அச்சமயத்தில் அரசின் உற்பத்தி-கொள்முதல் விலையோ யூனிட்டிற்கு ரூ2.20 என இருந்ததால், இந்நிறுவனத்திடம் கொள்முதல் செய்யவேண்டாமென்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 30-03-2012இல் சொன்னது. ஆனாலும் அதிமுக அரசு, ஆணையத்தின் தீர்ப்பிற்கு பின்னரும் மூன்றாண்டுகளுக்கு அதிக விலைகொடுத்து மின்சாரத்தை வாங்கியது.
கட்டுரையை வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010
தமிழ்நாடு மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது, ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது! – மே பதினேழு இயக்கம்
மின் பகிர்மான வட்டத்தின் பிரிவு அலுவலகத்தின் மூலம், மின் நுகா்வோருக்குத் தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமாக மேற்கொள்வது தொடா்பான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் செயலின் ஒரு பகுதியாக மின்வாரிய பணிகளை தனியாருக்கு வழங்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!
இந்த அறிவிப்பின் படி, ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்தின் பிரிவு அலுவலகமும் ஒரு நாளைக்கு 412 ரூபாய் கூலியாக வழங்கக்கூடிய ஒப்பந்த பணிக்கு, 20 பேருக்கு குறையாமல் ஒப்பந்த தொழிலாளர்களை எடுத்துக்கொள்ளலாம். இதன்படி, குறைந்தபட்சம் 500 மின் பகிர்மான வட்டப் பிரிவுகள் ஒப்பந்த பணியாளர்களை எடுத்தால் குறைந்தது 10,000 புதிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
ஏற்கனவே பணியாற்றி வருகிற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நீண்ட கால ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஏற்கனவே உள்ள இந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், ஒப்பந்ததாரர்கள் மூலம் மேலும் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே உள்ள ஒப்பந்த பணியாளர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபாய் பெற்று வந்தார்கள் என்றால், புதிதாக பணியமர்த்தப்படும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்து 412 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூலியிலும் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதென்பது அரசே தொழிலாளர்களை சுரண்டுவற்கு ஒப்பாகும்.
மின் மீட்டர்களை மாற்றுவதற்கே இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பெருமளவில் பணியமர்த்தப்படப் போகிறார்கள். இதில் கணக்கீடுகள் செய்ய முடியாது. பொய்யான கணக்குகள் காட்ட முடியும். இது மிகப்பெரிய ஊழலுக்கு தான் வழிவகுக்கும். தனியார் முதலாளிகள் பெருமளவில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒப்பந்தராரர்களாக நியமிக்கப்படுவார்கள். ஒப்பந்ததாரர்களோ ஒப்பந்த பணியாளர்களிடம் அரசு வேலை, பணி நிரந்தரம் தொடர்பாக பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றவே செய்வார்கள்.
மேலும், அரசியல்வாதிகளும், அரசியல் செல்வாக்கு, அதிகார பலம் உடையர்களை ஒப்பந்தராரர்களாக நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஒப்பந்தத்த தொழிலாளர்களுக்கான 412 ரூபாய் கூலியை கணக்கில் காட்டிவிட்டு, தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே வழங்குவார்கள். ஆக, அரசும், தனியார் முதலாளிகளும் தொழிலாளர்களை சுரண்டும் வழிமுறையை தான் மின்சார வாரியம் தற்போது ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பொறியாளர் பணிகளுக்கு வெளிமாநிலத்தாரை மாநில அரசே நியமித்துள்ளது. தற்போது இந்த ஒப்பந்த பணிகளும் குறைந்த கூலிக்காக வெளிமாநில தொழிலாளர்களை கொண்டு நிரப்பப்படும். இது தமிழர்களுக்கான வேலைவாய்ப்பினை முற்றிலும் முடக்கும். கொரானா கால இடர்களுக்கு பிறகு வேலை தேடுவோர்களின் சூழலை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் உழைப்பை உறிஞ்சும் செயலை இது ஊக்குவிக்கும்.
அதேவேளை, ஏற்கனவே உள்ள ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வதன் மூலம் மின்வாரிய பணிகளை மிகசிறப்பாக கையாள முடியும். ஆனால் தொழிலாளர் பணி நியமனம் தொடர்பான பிரச்சனைகளை மின்சார வாரியம் மேலும் சிக்கலாக்குகிறது. மேலும், மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களின் மின் பகிர்மானம் அதானி நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ளது போல், சென்னையை தாரை வார்க்கும் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.
தமிழ்நாடு அரசின் இது போன்ற செயல்கள் தற்போது ஐடிஐ, பட்டயப்படிப்பு படித்த பல்லாயிரக்கணக்கான வேலை இல்லா இளைஞர்களின் கனவை தகர்த்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ஏற்கனவே உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து, மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது!
மே பதினேழு இயக்கம்
9884072010
மின்சாரத்துறையை முழுமையாக தனியாருக்கு கொடுத்துவிடவேண்டுமென்பதில் ஆளுகிற மோடி அரசு மிகத்தீவிரமாக வேலைசெய்துவருகிறது. அதன்படித்தான் மின்சாரத்திருத்தச் சட்டம் 2020ஐ சுற்றுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த மசோதாவை சட்டமாக்கியே தீருவது என்கிறமுனைப்பில் இருக்கும் மோடி அரசு அதற்கான முதல்கட்டவேலையில் இருக்கிறது. அதாவது இரண்டு தினங்களுக்கு முன் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்சாரத் திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதித்திருக்கிறார்கள். அதில்
1.இந்தியா முழுமையும் மின்சார கட்டணங்கள் ஒரே மாதிரியாக கொண்டுவரவேண்டும்.
2.உலக நாடுகளில் இந்தியாவில் தான் மின்சார மானியங்கள் அதிகமாக கொடுக்கப்படுகிறது ஆகவே அதனை 20%ற்கும் கீழே குறைக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார்கள்.https://economictimes.indiatimes.com/…/article…/76143537.cms
இந்தியா முழுமையும் ஒரே கட்டணமென்றால் இனி தமிழகத்தில் 100யூனிட்க்கு மின்சாரம் இலவசம் அடுத்த 100யூனிட்டுக்கு இவ்வளவு, அடுத்த 100யூனிட்டுக்கு இவ்வளவு என்று இருக்கும் முறைகளெல்லாம் அடிப்பட்டுப்போகும். இலவச மின்சாரம் என்பதை தமிழக மக்கள் மறந்துவிடவேண்டியது தான்.இதனால் மின்சார கட்டணம் இரண்டுமடங்கு உயரும். அடுத்து மானியங்களை குறைத்தால் சிறு குறு விவசாயம் தொழில்துறை முற்றிலும் சிதைந்து போகும். குறிப்பாக தமிழகத்தில் தஞ்சை டெல்டா முற்றிலும் விவசாயத்தை சார்ந்தது அங்கு விவசாயமில்லையென்றால் அந்த நிலம் எதற்கு பயன்படும் அரசு அதை எதற்கு பயன்படுத்தும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. இபப்டி மிகமோசமான பாதிப்புகளை உருவாக்கக்கூடிய சட்டத்தைத்தான் நிறைவேற்ற மோடி அரசு துடிக்கிறது. மாநில அரசுகளும் இதனை நிறைவேற்றும் வேலைகளை கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் மின்சாரத்துறையில் பொறியாளர்கள், போர்மென், லைன் இன்ஸ்பெக்டர்ஸ் போன்ற பிரிவுகளில் பல ஆயிரம் இடங்கள் காலியாகவுள்ளன அதனை நிரப்பாமல் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களையே மீண்டும் குறைந்த சம்பளத்திற்கு ஒருநாளைக்கி 500ருபாய்க்கு மீண்டும் அமர்த்த நேற்று முந்தினம் 01.06.20 தமிழக மின்சாரவாரியம் முடிவு செய்திருக்கிறது. https://timesofindia.indiatimes.com/…/articles…/76150621.cms இவர்களால் வயது முதிர்வின் காரணமாக வேலை விரைவாக முடிக்கமுடியாமல் போனால் மக்கள் மத்தியில் மின்சாரவாரியத்தின் மேல் அவநம்பிக்கை வரும். அதை தனக்கு சாதகமாக பயனபடுத்திக்கொள்ளவும் முடியும் தனியாரை நோக்கி மின்சாரவாரியத்தை நகர்த்தினால் ஊழியர்களால் எந்தசிக்கலும் வராது என்ற சதியோடு இந்த வேலையை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மீண்டும் நியமிப்பது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மீண்டும் நியமிப்பது என்று செய்துவந்த தமிழக அரசு இப்போது மின்சாரத்துறையிலும் இதனை செய்கிறது.
ஆக மொத்தம் மத்திய அரசின் வழிகாட்டுதலில் அனைத்து அரசு துறைகளையும் தனியாருக்கு கொடுக்கும் வேலையை செவ்வனே தமிழக அரசு தொடங்கிவிட்டதைத்தான் இது காட்டுகிறது. மின்சாரத்துறை தனியார்மயமானால் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் சமூக நலன்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் தமிழ்நாடு 100ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் அபாயம் இருக்கிறது ஆகவே இந்த வீபரீதத்தை உணர்ந்து மக்கள் ஒன்றுபட்டு மத்திய மாநில அரசுகளின் மின்சார தனியார்மய சட்டத்தை எதிர்க்கவேண்டும்.
மே17 இயக்கம்
9884072010