Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
அணுசக்தி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Wed, 10 Aug 2022 15:27:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 கருப்பு வரலாறான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88807/protests/nuclear/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://may17iyakkam.com/88807/protests/nuclear/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Tue, 09 Aug 2022 15:25:56 +0000 https://may17iyakkam.com/?p=88807 கருப்பு வரலாறான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டு குறித்த செய்தி அமெரிக்காவில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமெரிக்காவின் போருக்கான செயலாளர் ஹென்ரி எல். ஸ்டிம்சன் (Henry L. Stimson), லட்சக்கணக்கான அமெரிக்கர்களைக் காப்பாற்றவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அந்தத் தாக்குதல் அவசியம் என்று தன் நாட்டின் போர்க்குற்றத்தை நியாயப்படுத்தினார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் (Harry S. Truman), “இந்த அணுகுண்டுவெடிப்பு சோவியத்திற்கு எதிரான ஒரு ஆயுதம் (Hammer)” என்று கூறினார்.

கட்டுரையை வாசிக்க

]]>
https://may17iyakkam.com/88807/protests/nuclear/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0
கூடங்குளம் அணுஉலை விரிவாக்க நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்தவும் ஆபத்தான அணுக்கழிவுகளை அங்கே புதைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு https://may17iyakkam.com/86814/protests/nuclear/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%89%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be/ https://may17iyakkam.com/86814/protests/nuclear/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%89%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be/#respond Mon, 13 Dec 2021 18:41:28 +0000 https://may17iyakkam.com/?p=86814

கூடங்குளம் அணுஉலை விரிவாக்க நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், ஆபத்தான அணுக்கழிவுகளை அங்கே புதைக்கக் கூடாது என்று மேதா பட்கர் அவர்கள் தலைமையில் பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளின் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (டிசம்பர் 13, 2021) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்றார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

பத்திரிக்கை செய்தி

————————–

கூடங்குளம் அணுஉலை விரிவாக்க நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், ஆபத்தான அணுக்கழிவுகளை அங்கே புதைக்கக் கூடாது!

மேதா பட்கர் அவர்கள் தலைமையில் பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளின் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை!

*****

இரண்டு பூதாகரமான தரமற்ற ரஷ்ய அணுஉலைகளே எதிர்காலத்தை அழித்துவிடும் என்று தமிழக மக்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் (2011 செப்-2014 இறுதி) தொடர்ச்சியாக, தீர்க்கமாகப் போராடியதைப் புறந்தள்ளி, இன்று கூடங்குளத்தில் 3, 4, 5, 6, என மென்மேலும் அணுஉலைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. அனைத்துமே 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட மிகப் பெரிய அணுஉலைகள்.

இவற்றுள் முதலிரண்டு உலைகளுமே இன்றுவரை திறம்பட இயங்கவில்லை; முழு அளவில் மின்சாரம் தயாரிக்கவில்லை. பல்வேறு குளறுபடிகளாலும், தொழிற்நுட்பக் கோளாறுகளாலும் அவை திணறிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் மேலும் 7, 8 அணுஉலைகளும், அணுக்கழிவு மையங்களும், அணுக்கழிவு மறுசுழற்சி மையமும் (reprocessing plant) அமைக்கப்படவிருப்பதாகச் செய்திகள் கசிகின்றன.

நடப்புக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடங்குளம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு 09/12/2021 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஜித்தேந்திரா சிங், சில உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

கூடங்குளம் உள்ளிட்ட அணுமின் நிலையங்களில் அமைக்கப்படும் அணுக்கழிவு மையங்கள் நிலநடுக்கங்களையும், சுனாமியையும்கூட எதிர்கொண்டு பாதுகாப்பாக இயங்க முடியுமென்றும், அணுக்கழிவு மையங்களால் அணுமின் நிலைய ஊழியர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் என யாருக்கும் எந்தவிதக் கேடும் உருவாகாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ‘பூவுலகின் நண்பர்கள்’ 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அணுக்கழிவு மையங்கள் (Away From Reactors –அணுஉலைக்கு அகலே) அமைப்பதற்கான தொழிற்நுட்பம் தங்களிடம் இல்லை என்று 2018-ஆம் ஆண்டு இந்திய அணுமின் கழகம் எழுத்துபூர்வமாக ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து, கூடுதல் கால அவகாசம் கோரியது. அந்தக் காலக்கெடு எதிர்வரும் 2022 மே மாதம் முடிவடைகிறது. ஒன்றிய அரசும், அதன் அணுசக்தித் துறையும் இப்படி முற்றிலுமாக திரித்துப் பேசுவது ஓர் அறமற்ற, ஆபத்தான மக்கள்விரோதச் செயல்.

மிக ஆபத்தான அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் புதைத்து நெடுங்காலம் பாதுகாக்கும் ‘ஆழ்நிலக் கருவூலம்’ (Deep Geological Repository) நிர்மாணிப்பதைப் பொறுத்தவரை, இந்தியா ‘மூடப்பட்ட எரிபொருள் சுழற்சி’ (closed fuel cycle) முறையைப் பின்பற்றுவதால், அணுக்கழிவு ஒரு “வளப் பொருள்” (material of resource) என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர். மறுசுழற்சிக்குப் பிறகு குறைந்த அளவே உயர்நிலைக் கழிவுகள் இருக்குமென்றும், “அணுக்கழிவை தனிப்படுத்தல், பிரித்தல் மற்றும் எரித்தல் தொழிற்நுட்பங்களை” (technologies for separation, partitioning and burning of waste) இந்தியா உருவாக்கிக் கொண்டிருப்பதால், ஆழ்நிலக் கருவூலத்திற்கானத் தேவை அண்மைக்காலத்தில் எழாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பல பத்தாண்டுகளாக கல்பாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும், இதுவரை தொடங்கப்படாமலே தத்தளிக்கும், நிரூப்பிக்கப்படாத தொழிற்நுட்பமான “அதிவேக ஈனுலைகளை” (Fast Breeder Reactors) வெற்றிகரமாக இயக்கினால்தான், இந்தியா அணுஉலைக் கழிவுகளை ‘மூடப்பட்ட எரிபொருள் சுழற்சி’ (closed fuel cycle) முறையில் கையாள்கிறது என்று சொல்ல முடியும். அமைச்சர் சொல்லியிருப்பது முற்றிலும் தவறான, மக்களைத் திசைதிருப்பும் தகவல்.

இந்தியா பெரு புதிய தொழிற்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அமைச்சர் சொல்கிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டக் குழுவினர் மாண்புமிகு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் பார்த்து முறையிட்டபோது, அப்போதைய இந்திய அணுமின் கழக (NPCIL) தலைவர் திரு. எஸ். கே. ஜெயின் அணுக்கழிவுகளை உருக்கி கண்ணாடிப் பந்துகளாக மாற்றி நம் வீட்டு வரவேற்பறைகளில் வைக்கும் தொழிற்நுட்பம் நம்மிடம் இருப்பதாக பிரதமரிடமே உண்மைக்குப் புறம்பான தகவலைச் சொன்னார். இப்போது நாம் கேட்பது முற்றிலும் மாறுபட்ட தொழிற்நுட்பமாக இருக்கிறது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட இயக்கங்கள் கீழ்க்காணும் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் உறுதிபட முன்வைக்கின்றன:

[1] கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதல் இரண்டு அணுஉலைகளில் நடைபெற்றிருக்கும் மாபெரும் ஊழல்கள், முறைகேடுகள், ஆபத்துக்கள் பற்றியெல்லாம் ஒரு சார்பற்ற விசாரணை நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். முழு உண்மைகளை மக்களுக்குச் சொல்லும்வரை, விரிவாக்கப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும்.

[2] ரஷ்யாவோடான 1997 அக்டோபர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூடங்குளம் அணுஉலைகளில் எரிக்கப்படும் எரிகோல்களை ரஷ்யாவுக்கேத் திருப்பி அனுப்பவேண்டும்.

[3] இந்தியாவில் ‘ஆழ்நிலக் கருவூலம்’ எங்கேக் கட்டப்போகிறோம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகே, கூடங்குளத்தில் ‘அணுஉலைக்கு அகலே’ அமைப்பைக் கட்டுவது குறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்த வேண்டும். மேற்படி இடைநிலை அணுக்கழிவு மையங்களை நிர்மாணிக்கும் வரை, கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணுஉலைகள் கட்டுவதை நிறுத்திவைக்க வேண்டும்.

[4] தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைக்கப்படும் கூடங்குளம் அணுஉலைப் பூங்கா, வடக்குப் பகுதியில் நிறுவப்படும் கல்பாக்கம் அணுஉலைப் பூங்கா, மத்தியப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் தேவாரம் நியூட்ரினோத் திட்டம் போன்றவற்றைக் கைவிட்டு, நம் மாநிலத்தை “அணுத்தீமையற்றத் தமிழ்நாடு” (Nuclear-free Zone Tamil Nadu) என்று அறிவிக்க வேண்டும்.

மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு,

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,

பூவுலகின் நண்பர்கள்,

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

டிசம்பர் 13, 2021

]]>
https://may17iyakkam.com/86814/protests/nuclear/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%89%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be/feed/ 0
மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பேரா.செயராமன் அவர்களை மிரட்டிய நாம் தமிழர் கட்சியினரை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/86348/activities/protests-activities/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d-2/ https://may17iyakkam.com/86348/activities/protests-activities/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d-2/#respond Thu, 07 Oct 2021 05:58:34 +0000 https://may17iyakkam.com/?p=86348

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பேரா.செயராமன் அவர்களை மிரட்டிய நாம் தமிழர் கட்சியினரை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக 05-10-2021 செவ்வாய் மாலை 4 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

கண்டன உரை:

ஊடகவியலாளர் சந்திப்பு:

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/86348/activities/protests-activities/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d-2/feed/ 0
மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பேரா.செயராமன் அவர்களை மிரட்டிய நாம் தமிழர் கட்சியினரின் அரம்பத்தனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/86341/activities/protests-activities/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ https://may17iyakkam.com/86341/activities/protests-activities/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/#respond Tue, 05 Oct 2021 05:53:24 +0000 https://may17iyakkam.com/?p=86341

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பேரா.செயராமன் அவர்களை மிரட்டிய நாம் தமிழர் கட்சியினரின் அரம்பத்தனத்தை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக இன்று (05-10-21 செவ்வாய்) மாலை 4 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/86341/activities/protests-activities/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/ 0
கூடங்குளம் அணுமின்நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து சமூக வலைத்தள பிரச்சாரம் https://may17iyakkam.com/85885/protests/nuclear/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/ https://may17iyakkam.com/85885/protests/nuclear/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/#respond Fri, 06 Aug 2021 05:39:04 +0000 https://may17iyakkam.com/?p=85885

கூடங்குளம் அணுமின்நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து நாளை நடைபெறும் #StopKudankulamExpansion சமூக வலைத்தள பிரச்சாரத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. மிக முக்கியமான இந்த பரப்புரையில் அனைவரது பங்கேற்பும் பங்களிப்பும் மிக அவசியமானது. ஆகவே தோழர்களையும், ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் இப்பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக்கொள்ள மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.மே பதினேழு இயக்கம்9884864010

]]>
https://may17iyakkam.com/85885/protests/nuclear/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/feed/ 0
ஹிரோஷிமா – நாகசாகி பேரழிவை நினைவு கூறுவோம் (ஆகஸ்டு 6 மற்றும் ஆகஸ்டு 9, 1945) https://may17iyakkam.com/85879/protests/nuclear/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5/ https://may17iyakkam.com/85879/protests/nuclear/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5/#respond Fri, 06 Aug 2021 05:35:27 +0000 https://may17iyakkam.com/?p=85879

ஹிரோஷிமா – நாகசாகி பேரழிவை நினைவு கூறுவோம் (ஆகஸ்டு 6 மற்றும் ஆகஸ்டு 9, 1945)

“சமாதிகள் எழுப்படாத சுடுகாடுகள், ஹிரோஷிமா – நாகசாகி”

1945 ம் ஆண்டு ஆகஸ்டு 6 மற்றும் 9 ம் தேதிகளில் அமெரிக்கா வீசிய இரண்டு அணுகுண்டுகளினால் பேரழிவை சந்தித்த ஜப்பானின் இரு நகரங்களை பற்றி கூறப்படும் வாசகங்கள்தாம் இவை.

இரண்டாம் உலகப் போரின் இறுதி காலத்தில் தொடர்ச்சியாக போரை நடத்திய ஜப்பானை முழுவதும் அழிக்கப் போவதாக ‘நேச நாடுகள்’ அணி சார்பாக அமெரிக்கா அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு 6 ம் தேதி ‘சின்ன பையன் (Little Boy)’ என்ற பெயரை கொண்ட அணுகுண்டை ஹிரோஷிமா நகரில் வீசியது.

ஏறத்தாழ 16 கி.மீ சுற்றளவுக்கு அதன் பாதிப்பு இருந்தது. 3.5 லட்சம் மக்கள் வசித்து வந்த ஹிரோஷிமா நகரில், குண்டு வீசப்பட்ட மையப்பகுதியில் ஏறத்தாழ 60,000 மக்கள் உடனடியாக இறந்தனர். அணுகுண்டின் வெப்பத்தாலும், கதிரியக்கத்தாலும் உடல் உருகி இறந்தது போக, பலர் அருகில் இருந்த ஆற்றில் குதித்து வெப்பத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்தனர். ஆனால் ஆற்று நீரோ கொதித்து கொண்டிருந்தது. இது தவிர அடுத்த 1 வாரத்தில் மேலும் 70,000 பேர் கதிரியக்கப் பாதிப்புக்குள்ளாயினர்.

இந்த மரண ஓலங்கள் முடியும் முன்னரே ஜப்பானின் இன்னொரு நகரமான நாகசாகியில் ஆகஸ்டு 9 ம் தேதி ‘குண்டு மனிதன் (Fat Man)’ என்ற பெயரை கொண்ட மற்றொரு அணுகுண்டை வீசியது. இதில் ஏறத்தாழ 70,000 பேர் உடனடியாக மரணமடைந்தனர். அந்த நேரத்தில் அந்நகர்களின் மீது பெய்த மழை கூட கதிரியக்க தன்மை கொண்ட அமில மழையாக பொழிந்து மக்களை வாட்டியது.

ஆனால் அமெரிக்க ஏகாதிபதியமோ இரண்டாம் உலகப் போரை நிறுத்தியதே தாங்கள் வீசிய அணுகுண்டுகள் தான் என்று அவர்களின் கொலை பாதகத்தை நியாயப்படுத்தியது. ஆம், உலக வல்லரசுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் நாடுகளின் அறம் இதுவாகத்தான் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளும் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டன. அதற்கு உறுதுணையாக அணு சக்தி ஆய்வுகளையும், உறங்கும் அணுகுண்டுகளான அணு மின்நிலையங்களையும் நிறுவி வருகின்றன. குறிப்பாக நவீன மின் தயாரிப்பு முறையாக அணு மின்நிலையங்கள் மக்கள் நெருக்கம் மிகுந்த வாழ்விடங்களில் நிறுவப்படுகின்றன. தொழிற்நுட்ப மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்ற பல காரணங்களால் இந்த அணு மின்நிலையங்களில் பல ஆபத்துக்கள் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளன.

எடுத்துக்காட்டாக 2011-ம் ஆண்டு தெற்காசியாவை உலுக்கிய சுனாமி பேரழிவில் ஜப்பான் புகுஷிமா அணு மின்நிலையம் நேரடியாக பாதிக்கப்பட்டு அணு கதிரியக்கம் கடல் நீரில் கலந்த பேராபத்து உண்டானது. ஆனாலும் மற்ற உலக நாடுகள் இதிலிருந்து பாடம் கற்றுகொண்டபாடில்லை.

குறிப்பாக இந்திய ஒன்றியம் தனது கடற்கரை எல்லை மாநிலங்களில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் தமிழர் கடற்கரை பிரதேசங்களில் அணு மின்நிலையங்களை அமைத்து வருகிறது. சென்னை கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணு மின்நிலையங்கள் இது போன்ற கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ளது. சமூக செயல்பாட்டாளர்களும், அரசியல் இயக்கங்களும், சூழியல் வல்லுனர்களும் தங்கள் கடுமையான எதிர்ப்புகளை காட்டி போராடுகின்ற போதும் ஒன்றிய அரசு அதை பற்றி பொருட்படுத்தாமல், மேலும் பல அணு உலைகளை அங்கு அமைப்பதிலேயே குறியாய் இருக்கிறது.

தன் சமகால வரலாற்றில் அணு ஆயுத மற்றும் அணு உலை அழிவுகளை கண்ட பின்னும், ஏகாதிபதிய நாடுகளின் வற்புறுத்தலின் பேரிலும், அவர்களது காலாவதியான தொழிற்நுட்பத்தை மூன்றாம் உலக நாடுகளில் விற்க நடக்கும் பொருளாதார சுரண்டல்களுக்கு அடிபணிந்தும் இந்திய ஒன்றியம் உள்ளிட்ட வளரும் நாடுகள் தங்கள் சொந்த மண்ணின் மக்கள் வாழ்வாதாரத்தை உறங்கும் அணு ஆயுதங்கலான ‘அணு உலைகளின்’ நடுவில் புதைக்கின்றன.

அடுத்த தலைமுறையின் அமைதியான வாழ்விடத்தை உறுதி செய்யும் பொருட்டு ஹிரோஷிமா – நாகசாகி நகரங்களில் படுகொலை செய்யப்பட்ட அம்மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதுடன், அனைத்து விதமான அணு ஆயுதங்கள், அணு உலைகளை உடனே களைந்திட வேண்டும் எனும் கோரிக்கையை வலுப்படுத்துவோம். அணு கதிர்வீச்சற்ற உலகை படைத்திடுவோம் என மே பதினேழு இயக்கம் உறுதிமொழி ஏற்க அழைக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

]]>
https://may17iyakkam.com/85879/protests/nuclear/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5/feed/ 0
கூடங்குளத்தில் 5, 6வது அணு உலைகள் மற்றும் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! https://may17iyakkam.com/85597/protests/nuclear/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-5-6%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81-%e0%ae%89/ https://may17iyakkam.com/85597/protests/nuclear/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-5-6%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81-%e0%ae%89/#respond Fri, 02 Jul 2021 05:52:59 +0000 https://may17iyakkam.com/?p=85597

கூடங்குளத்தில் 5, 6வது அணு உலைகள் மற்றும் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தமிழர்களின் கடும் எதிர்ப்பை மீறி கொண்டுவரப்பட்ட முதல் 2 அணு உலைகள் சரிவர செயல்படாத நிலையில், மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு 3 மற்றும் 4வது என மேலும் இரண்டு உலைகளுக்கு அனுமதியளித்து அதன் கட்டுமானப்பணிகள் பாதியளவு நிறைவடைந்துள்ளன. இது தென் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், தற்போது கூடங்குளம் அணு உலை வளாகத்தில் 5வது 6 வது என மேலும் இரண்டு அணு உலைகளை அனுமதித்து அதற்கான கட்டுமானப்பணிகள் துவங்கியுள்ளனர். மக்களின் பாதுகாப்பு குறித்து கவலைகொள்ளாமல், மக்களின் குரலை உதாசீனப்படுத்தி, அணு உலைகளை அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்திய ஒன்றிய அரசின் போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கூடங்குளத்தில் அணு உலை அமைக்க ரசியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்ட நாள் முதல் இன்று வரை கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக அதன் சுற்றுவட்டார மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். மக்களின் கடும் எதிர்ப்பை மீறி முதல் அணு உலைகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் வேளையில் இந்த எதிர்ப்பு உச்சநிலையை அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் அணு உலையை திறப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. மே பதினேழு இயக்கம் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியும், பல போராட்டங்களில் பங்கேற்கவும் செய்தது. அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் சார்பாக இடிந்தகரையில் 1000 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடைபெற்றது. அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளிய இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும், அணு உலைகளை திறந்ததோடு, 3வது 4வது அணு உலைகளுக்கும் அனுமதியளித்து கட்டுமானப் பணிகளை துவங்கியது.

முதல் இரண்டு அணு உலைகள் முறையே 2013 மற்றும் 2016-இல் மின் உற்பத்தியை துவங்கியது முதல் இன்று வரை அதன் முழு கொள்ளளவில் இயக்கப்பட்டதே இல்லை. மேலும், பல முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல மாதங்கள் வரை இயக்கப்படாமல் இருந்துள்ளன. அணு உலை தொழில்நுட்பத்தை அளித்த ரசியா, அதன் பாதுகாப்பு பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள, இந்திய அரசோ பொறுப்பை எடுத்துக்கொள்ள சிரத்தை எடுக்கவில்லை. அணு உலை கழிவுகளை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் கூடத்தை இதுவரை அமைக்காததும், AFR எனப்படும் அணு உலைக்கு அருகில் அமைக்கப்படக் கூடாது என்ற முக்கிய பாதுகாப்பு விதியை மீறி, கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே அணுக்கழிவு சேமிப்பு கூடம் அமைக்கப்படும் என்று இந்திய அணுசக்திக் கழகம் கூறியுள்ளது. மேலும், அணுக்கழிவு கூடம் அமைத்தல், அணுக்கழிவை கையாளுதல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றிற்கான தொழில்நுட்ப அறிவு இந்திய அறிவியலாளர்களுக்கு இல்லை என்று இந்திய அணுசக்திக் கழகமே உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இப்படியாக முதல் இரண்டு அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த குளறுபடிகளே தீர்க்கப்படாத நிலையில், 3வது 4வது என மேலும் இரண்டு அணு உலைகளுக்கு அனுமதியளித்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், தற்போது 5வது 6வது அணு உலைகளுக்கு அனுமதி அளித்து கட்டுமானப்பணிகள் துவங்கியுள்ளன. ஜப்பானின் ஃபுகிஷிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய தாக்கமும், கதிரியக்கம் பாதித்த பொருட்களை கையாள முடியாமல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஜப்பான் நாடே இன்று வரை திணறுவதை காண்கிறோம். அந்நிகழ்விற்கு பிறகு, அணு உலை தொழில்நுட்பத்தை மறுத்து உலக நாடுகள் இயற்கை முறையிலான மறுசுழற்சி ஆற்றலை நோக்கி செல்ல துவங்கிவிட்டது. ஆனால், இந்தியாவோ அணு உலைகளை அதிகரித்துக்கொண்டே செல்வது, ஒன்றிய அரசிற்கு மக்கள் மீது, குறிப்பாக தமிழர்கள் மீது அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இது போன்று ஒரே இடத்தில் பல அலகுகளை கொண்ட அணு உலைப் பூங்கா அமைப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலானது. தென் தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு இதன்மூலம் கேள்விக்குறியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் அமையவிருந்த 6000 மெகாவாட் அணு உலை பூங்கா, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஆந்திரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், தமிழர்கள் எவ்வளவு போராடினாலும் கூடங்குளத்தில் அணு உலைகளை ஒன்றிய அரசு அதிகரித்துக்கொண்டே செல்வது உள்நோக்கம் உடையதாக தெரிகிறது. “ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் போன்ற அணுஉலைகள், சேலம் 8 வழிச்சாலை இதையெல்லாம் மத்திய அரசு தமிழகத்தின் மீது நடத்தக்கூடிய ரசாயன தாக்குதலாக அமைந்திருக்கிறது” என்று, கடந்த மார்ச் 28 அன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.

முதல் இரண்டு அணு உலைகளே பாதுகாப்பற்ற சூழலை உண்டாக்கியுள்ள நிலையில், கூடங்குள அணு உலை வளாகத்தில் மேற்கொண்டு அணு உலைகள் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். 5வது, 6வது அணு உலை கட்டுமானப்பணிகளை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதி முடிக்கப்பட்ட 3வது 4வது அணு உலை கட்டுமானப் பணிகளையும் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. பாதுகாப்பற்ற முறையில், தமிழ்நாட்டை மேலும் வஞ்சிக்கும் வகையில் அணு உலை வளாகத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.

கூடங்குளம் அணு உலை வளாகம் மூடப்படுவதே தமிழர்களுக்கு பாதுகாப்பான சூழலை கொடுக்கும். இந்தியாவில் அதிக காற்றாலைகள் கொண்ட இப்பகுதியில், காற்றாலைகள் மூலம் அதே அளவிலான மின்சாரத்தை மறுசுழற்சி ஆற்றலாக பெற முடியும் எனும் போது, ஆபத்தான அணு உலைகள் ஏன் தேவை என்ற கேள்வி எழுகிறது. உலகம் மறுசுழற்சி ஆற்றலை நோக்கி செல்லும் போது, நாம் எதிர் திசையில் பயணிப்பது அறிவியல்பூர்வ செயலாகவோ, சுற்றுச்சூழலுக்கு நன்மைபயக்கக்கூடிய செயலாகவோ இருக்க முடியாது. மக்களின் நீண்டகால போராட்ட உணர்விற்கு மதிப்பளித்து, கூடங்குளம் அணு உலை வளாகத்தை இழுத்து மூட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

]]>
https://may17iyakkam.com/85597/protests/nuclear/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-5-6%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81-%e0%ae%89/feed/ 0
“ப்ளாச்சிமடா” மையிலம்மா, “இடிந்தகரை” சுந்தரி : சூழலியல் போராட்டத்தில் பெண்கள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை https://may17iyakkam.com/85485/protests/nuclear/%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/ https://may17iyakkam.com/85485/protests/nuclear/%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/#respond Sun, 06 Jun 2021 07:47:06 +0000 https://may17iyakkam.com/?p=85485

“ப்ளாச்சிமடா” மையிலம்மா, “இடிந்தகரை” சுந்தரி : சூழலியல் போராட்டத்தில் பெண்கள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை

சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக எத்தனையோ சட்டங்களும் கட்டுப்பாடுகளும் விதிக்கபட்டாலும், இன்றும் தாராளமயம் தனியார்மயம் என்ற பெயரால் நாட்டின் வளங்கள் பெரும் முதலாளிகளால் சுரண்டப்பட்டு வருகின்றன. அவர்களை எதிர்த்து அழிவில் இருந்து இயற்கையை காப்பாற்ற மக்கள் தன்யெழுச்சியாக நடத்திய சில போராட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கட்டுரையை வாசிக்க:

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

]]>
https://may17iyakkam.com/85485/protests/nuclear/%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/feed/ 0
மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாடு https://may17iyakkam.com/84909/videos/important-videos/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://may17iyakkam.com/84909/videos/important-videos/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Mon, 08 Mar 2021 05:59:53 +0000 https://may17iyakkam.com/?p=84909

உரிமைகள் கோரும் அறவழி போராட்டங்களின் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு அதிமுக-பாஜக அரசுகளை வலியுறுத்தி மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பின் சார்பில் திருச்சி உழவர் சந்தை திடலில் 06-03-2021 சனி அன்று நடைபெற்ற மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாட்டுத் தீர்மானங்கள்

வீர வணக்கத் தீர்மானங்கள்:

1) தமிழ்மொழிகாப்பு போராட்டம், சாதி ஒழிப்புப் போராட்டம், மக்கள் வாழ்வுரிமைக்கான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தீரத்துடன் கலந்துகொண்டு அரச அடக்குமுறையால் உயிரிழந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி தூத்துக்குடி ஸ்னோலின், நீட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த அனிதா போன்ற ஈகியர்களுக்கு மக்கள் இயக்கங்களின் உரிமைகளுக்கான கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது.

2) தமிழகத்திற்கு வெளியே இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து தீரத்துடன் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்நீத்த விவசாயிகள் 163 பேருக்கும் இந்த மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

கொள்கைத் தீர்மானங்கள்

3) ஸ்டெர்லைட் எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, குடியுரிமை சட்ட எதிர்ப்பு, தமீழீழ இனப்படுகொலை எதிர்ப்பு, உயர்மின் அழுத்த கோபுர எதிர்ப்பு, கெயில் குழாய் எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு மீட்பு, எட்டுவழிச்சாலை எதிர்ப்பு, காவேரி உரிமை மீட்பு, நீட் எதிர்ப்பு, சாதி வன்கொடுமை எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, தமிழ்நாடு நாள் கொண்டாட்டவிழா, எழுவர் விடுதலை, அத்திகடவு- அவினாசி கூட்டு குடிநீர் திட்ட ஆதரவு, நீயூட்ரினோ எதிர்ப்பு என பலவகைப்பட்ட சனநாயக மக்கள் எழுச்சி போராட்டங்களில் அமைதி வழியில், அறவழியில் போராடிய பொதுமக்களை, அரசியல்- சமூக போராளிகளை, மனித உரிமையாளர்களை பல்வேறு பொய் வழக்குகள், கொடும் சிறைகள், விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு சனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் முடக்க நினைக்கும் அதிமுக – பாஜகவை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது. உடனடியாக இவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4) தமிழகத்தில் பாசக அரசுக்கு ஏதிராக சனநாயக வழியில் தேர்தலில் வேலை செய்ய கூட்டமைப்பு உருவாக்கினார்கள் என்பதற்காக வேறு காரணங்களை சொல்லி தோழர் பாலன், கோ.சீனிவாசன், தோழர் அனுப்பூர் செல்வராஜ், தோழர் விவேக், தோழர் தருமபுரி சித்தானந்தம், தோழர் சுரேஷ் விஜயராசன் மற்றும் தோழர் கோவை மருத்துவர் தினேஷ் ஆகியோரை ஊபா சட்டத்தில் கைது செய்ததை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5) தமிழகத்திற்கு வெளியே பீமாகோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டுவருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் வர வர ராவ், ஆனந்த் டெல்டும்டே, சுஜா பரத்வாஜ், கவுதம் நவ்லகா உள்ளிட்ட அறிவுசீவிகளையும், குடியுரிமை திருத்தச்சட்ட போராட்டத்தின் போது கலவரம் செய்ய தூண்டுதலாக இருந்ததாக போலியாக வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டிருக்கிற உமர் காலித் உள்ளிட்டவர்கள் மீதான வழக்கையும், சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த காரணத்திற்காக தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இளம் சூழலியல் போராளி திசா ரவி உள்ளிட்ட அனைவர் கைதையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது, இவர்கள் மீதான வழக்கை உடனடியாக திரும்ப பெறுவதோடு இவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6) போராடுகின்ற உரிமை அமைதி வழியின் ஒன்று கூடும் உரிமை ஆகியன சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் கீழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளாக வரையறை செய்யப்பட்டு, அதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இந்த உரிமைகளின் அடிப்படையில் போராடுவது என்பது நமது அடிப்படை உரிமை. இந்த உரிமையை நிலைநாட்ட தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

7) உரிமை போராட்டங்களில் பங்குகொண்டு அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி, குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளுக்கு தக்க இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8) மக்களின் வாழ்வாதார போராட்டங்களில் பங்கெடுத்ததால் அரசினால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று, வேலைவாய்ப்பை இழந்து, கடவு சீட்டு இழந்து நிற்கும் போராளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

9) அரசியல் செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் வகையில் – மாநில அரசுகளுக்குள்ள சட்டம் ஒழுங்கு அதிகார வரம்புகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய புலனாய்வு (NIA) முகமையை இரத்து செய்ய வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

10) அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருக்கும் கொடிய மக்கள் விரோத சட்டங்களான குற்றத் தடுப்புச் சட்டம் (UAPA), தேசத்துரோகச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் போன்ற சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மாநாட்டில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை

]]>
https://may17iyakkam.com/84909/videos/important-videos/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0
போராட்டங்களை ஆதரித்த நீங்கள், போராடும் தோழர்களையும் ஆதரித்து மாநாட்டில் கைகோர்த்து நிற்க வாருங்கள் https://may17iyakkam.com/84898/protests/nuclear/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99/ https://may17iyakkam.com/84898/protests/nuclear/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99/#respond Fri, 05 Mar 2021 07:13:15 +0000 https://may17iyakkam.com/?p=84898 தமிழ்நாட்டின் அரசியலை நிர்ணயிப்பவை மக்கள் போராட்டங்களே!போராடி நெருக்கடிக்குள்ளாகி நிற்கும் எண்ணற்ற தோழமைகள் ஒன்றிணையும் மாநாடு திருச்சியில் நடக்கிறது. போராட்டங்களை ஆதரித்த நீங்கள், போராடும் தோழர்களையும் ஆதரித்து மாநாட்டில் கைகோர்த்து நிற்க வாருங்கள்.நம் கோரிக்கைகளே நம் அரசியல்!

தமிழர் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் தான் ஜல்லிக்கட்டு தடை. அதுவே தமிழர்களை ஒன்றிணைத்து தடைக்கு எதிராக போராட வைத்தது. சென்னை மெரினா கடற்கரை துவங்கி, தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் தன்னியல்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடினர். ஜல்லிக்கட்டு போராட்ட களம் என்பது வெறும் போராட்டக்களமாக மட்டுமல்லாமல் அரசியல் பயிலும் களமாக மாறியது. இதனால் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசுகளுக்கு எதிராக மக்கள் வெல்ல முடிந்தது. அதனாலேயே போராடிய மக்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவியது. காவல்துறையே கலவரங்களை உண்டாக்கி மக்கள் மீது பழியை போட்டது. போராடிய மக்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவளித்த மக்கள் மீதும், உறுதுணையாக நின்ற அரசியல் இயக்கங்கள் மீதும் அரசு பொய் வழக்குகளை பதிந்துள்ளது

இந்திய அரசு தமிழின அழிப்பை நேரடியாக மேற்கொண்ட ஒரு செயல் தான், காவிரி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டங்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை வட இந்திய பார்ப்பன-பனியா கூட்டம் கொள்ளையடிக்க கொண்டு வந்ததோடு, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை அழிப்பதன் மூலம் தமிழ்நாடு தன்னிறைவு அடைவதை தடுத்து, இந்தி ஒன்றிய அரசின் தயவில் செயலாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டதாகும். வீரு கொண்ட விவசாய பெருங்குடி மக்கள் டெல்டா முழுவதும் போராட்டத்தை துவங்க, தமிழ்நாடு முழுக்க மக்கள் ஆதரவாக போராட துவங்கினர். இந்த போராட்டத்தையும் நசுக்க அரசு போராடியவர்கள் மீது எண்ணற்ற வழக்குகளை பதிந்தது. மக்கள் போராட்டத்தின் விளைவாக திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், வழக்குகள் மட்டும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டிற்காக போராடிவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக திருப்பிப் பெற வேண்டும்.

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழர்கள் ஒன்றிணைந்து போராடிய வேளையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை துவங்க வைத்தது அன்றைய காங்கிரஸ்-திமுக அரசுகள். 1000 நாட்களை கடந்த மிக அமைதியான அறவழி போராட்டத்தை தமிழர்கள் நடத்தி காட்டினர் தலைமுறைகளை பாதித்திடும் அணு உலைக்கு எதிராக போராடிய கூடங்குளம் கிராம மக்கள் மீது உலகிலேயே மிக அதிக வழக்குகள் பதியப்பட்டன. வழக்குகளை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும், இன்றும் பல வழக்குகளை சந்தித்து வருகின்றனர். இன்று மேலும் மேலும் அணு உலைகள் வந்துகொண்டே உள்ளன. ஆட்சி மாறியும் மக்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறையவே இல்லை. இந்த வழக்குகள் காரணமாக வேலைவாய்ப்புக்காக அந்த மக்கள் வெளிநாடு செல்வது தடைபட்டுள்ளது. இந்த வழக்குகளை நீக்குவதே அம்மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தரும்.

இது போன்ற பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி உழவர் திடலில் மார்ச் 6 சனிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு மேல், மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாடு நடைபெறுகிறது. மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த மாநாட்டில், கட்சி, சாதி, மாத எல்லை கடந்து தமிழினத்தின் உரிமைக்காக போராடிய அனைவரும் திரள்வது மட்டுமல்ல, போராட்டங்களுக்கு ஆதரவளித்த வெகுமக்களும் குடும்பத்தினரோடு பங்கேற்க வேண்டுமென, மே பதினேழு இயக்கம் சார்பாக தோழமையுடன் அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/84898/protests/nuclear/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99/feed/ 0