Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
சாதி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Fri, 10 Feb 2023 07:25:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 ‘கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுத்தல் மற்றும் கள ஆய்வு அறிக்கை வெளியீடு’ குறித்த ஊடகச் சந்திப்பு https://may17iyakkam.com/90021/protests/caste/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/ https://may17iyakkam.com/90021/protests/caste/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/#respond Thu, 09 Feb 2023 07:22:28 +0000 https://may17iyakkam.com/?p=90021

‘கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுத்தல் மற்றும் கள ஆய்வு அறிக்கை வெளியீடு’ குறித்த ஊடகச் சந்திப்பு 08-02-2023 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஊடகச் சந்திப்பில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி, அனைத்திந்திய சனநாயக மாதர் சங்கத்தின் தோழர் வாலண்டினா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தோழர் பா.சுகந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

அறிக்கை:

மூங்கில்துறைப்பட்டில் நடந்த சாதிய வன்முறை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு – 8/2/2023

அண்மை காலங்களில் ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் மீது நடைபெறும் சாதி ரீதியான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதை மே17 இயக்கம் போன்ற சனநாயக அமைப்புகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றோம். வீரளூர், வேங்கைவயல், கிளாமங்கலம் கிராமங்களில் நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகரில் ஆதிக்க சாதி வெறியர்கள் பட்டியலின மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி18 அன்று தொண்டமனூர் கிராமத்தில் நடந்த பொங்கல் கலை நிகழ்ச்சிகளைக் காண சென்ற அம்பேத்கர் நகர் இளைஞர்கள் மீது திட்டமிட்டு ஆதிக்க சாதியினர் வன்முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக அம்பேத்கர் நகர் இளைஞர்கள் அணிதிருந்த நீல நிற சட்டைகளை கழட்ட செய்து, ஆதிக்க சாதி சமூக விரோதிகள் தாங்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற சட்டைகளை வணங்கும்படி செய்து அவமானப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஜனவரி 19 அன்று ஆதிக்க சாதியினர் சாலை மறியல் செய்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் மது போதையில் அம்பேத்கர் நகருக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஆயுதங்களுடன் நுழைந்து, சாதிப் பெயரை இழிவாக கூச்சலிட்டபடியும் பெண்கள் குழந்தைகளை கொச்சையாகப் பேசியும் அச்சுறுத்தியுள்ளனர். கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் சூறையாடி மிரட்டல் விடுத்துள்ளனர்.

திட்டமிட்டு நடைபெற்ற இந்த வன்முறை தாக்குதல் குறித்து ஆதிக்க சாதியினர் முன்னரே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததும் அம்பேத்கர் நகர் மக்களை மிரட்டி உள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சாதி வெறி தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தற்போது இரு தரப்பிலிருந்தும் இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் இவ்வன்முறையைத் தூண்டிவிட்ட முக்கிய குற்றவாளிகளை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.

இந்த வன்முறைக்குத் தொடர்பில்லாத பட்டியலின இளைஞர்கள் மேல் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட ஆதிக்க சாதியினர் 200 பேரும் காணொளி உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வழக்கு பதிய வேண்டும். இவர்களைத் தூண்டிவிட்டு தவறாக வழிநடத்திய சமூக விரோத நபர் / நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திட வேண்டும். மேலும் வன்முறை தாக்குதலில் தங்கள் வீடு, வாகனம், குடிநீர் குழாய் போன்ற சொத்துக்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கவும் வலியுறுத்துகின்றோம். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சாதிய வன்முறை நிகழ்வுகளைத் தடுத்திட முடியும்.

]]>
https://may17iyakkam.com/90021/protests/caste/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/feed/ 0
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே பட்டியல் சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறி தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்! https://may17iyakkam.com/89925/protests/caste/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%af%81/ https://may17iyakkam.com/89925/protests/caste/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%af%81/#respond Wed, 25 Jan 2023 06:27:14 +0000 https://may17iyakkam.com/?p=89925

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே பட்டியல் சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறி தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுக்கா மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் மீது, மூங்கில்துறைப்பட்டு மற்றும் சுற்றியுள்ள ஏழு கிராமங்களை சேர்ந்த ஆதிக்க சாதியினர் 19-01-2023 அன்று இரவு ஒன்று திரண்டு சாதிவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். பட்டியல் சமூக மக்கள் மீதான ஆதிக்க சாதியினரின் இந்த சாதிவெறி தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, 18-01-2023 அன்று, ஆதிக்க சாதியினர் நிறைந்த தொண்டமனூர் கிராமத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை காண அம்பேத்கர் நகரை சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர்கள் 3 பேர் சென்றனர். அப்போது, அவர்களை நோக்கி ‘நீங்கள் எப்படி எங்கள் பகுதிக்குள் நுழையலாம்’ என்று கேள்வி கேட்டு அப்பகுதியை சேர்ந்த ஒரு சில சாதிவெறி இளைஞர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். இதன்பிறகு இருதரப்பு பெற்றோர்களும் பேசி சமாதானம் செய்துகொண்டனர். மறுநாள் அம்பேத்கர் நகருக்கு அருகிலுள்ள மதுபான கடைக்கு சென்ற வேறு சிலருக்கும் அம்பேத்கர் பகுதி இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மோதலில் ஈடுபட்ட இருதரப்பு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்களை பணம் கொடுத்து அம்பேத்கர் நகர் மக்களை தாக்குவதற்கு சாதிவெறியர்கள் திரட்டியுள்ளனர். மதுபோதையில் கத்தி, கம்புகளை வீசியவாறு நுழைந்து, நேரில் கண்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்ததாகவும், சாதி பெயர் சொல்லி இழிவாக கூச்சலிட்டு வசைபாடியதாகவும், பெண்களையும் குழந்தைகளையும் கொச்சையாக பேசி அச்சுறுத்தியதாகவும் அம்பேத்கர் நகர் மக்கள் கூறுகிறார்கள். மேலும், குடிநீர் குழாய்களை உடைத்துள்ளனர்; இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்; வீட்டு கதவுகள், பாத்திரங்கள், பூந்தொட்டிகள் என கண்ணில் தென்பட்டதை எல்லாம் சூறையாடியுள்ளனர். கடந்த 22-ஆம் தேதி கள ஆய்வுக்கு சென்ற மே பதினேழு இயக்கத் தோழர்களும் இந்த சேதங்களை நேரில் கண்டுள்ளனர்.

இந்த சாதிவெறி தாக்குதலால் அப்பகுதியை சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆதிக்க சாதியினரின் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பயிலும் பட்டியல் சமூக மாணவிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். அந்த அரசுப்பள்ளியில் சாதிய மோதல்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாகவே பொங்கல் கலை நிகழ்ச்சியில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்படுள்ளனர் எனவும் அம்பேத்கர் நகர் மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட நபர்களின் பிரச்சனை சாதியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை காண முடிகிறது.

மூங்கில்துறைப்பட்டு, தொண்டமானூர், பொரசப்பட்டு, வாழவச்சனூர் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரின் பல கிராமங்கள் சூழ்ந்துள்ள பகுதியில் மிக குறைவான எண்ணிக்கையில் வசித்து வரும் அம்பேத்கர் நகர் பட்டியல் சமூக மக்கள் மீது பல ஊர்களை சேர்ந்த சாதிவெறியர்கள் ஒன்று கூடி தாக்குதல் நிகழ்த்தியுள்ளது அதிர்ச்சிக்குரியதாகும். தஞ்சை ஒரத்தநாடு அருகிலுள்ள கிளாமங்களத்தில் இரட்டைக்குவளை முறை பின்பற்றுவது, புதுக்கோட்டை அருகிலுள்ள வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது என பட்டியல் சமூக மக்கள் மீது சாதிய வன்கொடுமை நிகழ்த்தப்படுவதன் தொடர்ச்சியாக, தற்போது கள்ளக்குறிச்சி அருகில் பட்டியல் சமூக மக்கள் மீது சாதிவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது சமூகத்தில் சாதிவெறி இன்னமும் கோரதாண்டவம் ஆடுவதையே காட்டுகிறது.

இந்த சாதிவெறி தாக்குதலை ஈடுபட்டவர்களையும், இதற்கு பின்னாலிருந்து திட்டமிட்டு தூண்டிய சாதிவெறியர்களையும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்திட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர் மக்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடுகளை வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசுப்பள்ளியில் நிலவிடும் சாதியப் பாகுபாடுகளை கலைந்து மாணவர்கள் அச்சமின்றி பயில உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89925/protests/caste/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%af%81/feed/ 0
சாதி ஒழிப்பு போராளி தோழர் சந்திரபோஸ் அவர்கள் மறைவு! மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்! https://may17iyakkam.com/89915/protests/caste/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0/ https://may17iyakkam.com/89915/protests/caste/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0/#respond Sun, 22 Jan 2023 15:51:26 +0000 https://may17iyakkam.com/?p=89915

சாதி ஒழிப்பு போராளி தோழர் சந்திரபோஸ் அவர்கள் மறைவு! மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்!

தமிழ்நாட்டின் சாதி ஒழிப்பு போராட்டக்களத்தில் நீண்டகாலமாக போராடி வந்த சாதி ஒழிப்பு போராளியும் தியாகி இம்மானுவேல் பேரவையின் நிறுவனத் தலைவருமான தோழர் பூ.சந்திரபோஸ் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சாதி ஒழிப்பு போராட்டக் களம் மாபெரும் தோழரை இழந்துள்ளது. தோழர் சந்திரபோஸ் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

சாதி ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் அவர்கள் பெயரில் அமைப்பை துவங்கி, சாதி ஒழிப்புப் போராட்டத்தில் நீண்டகாலம் அதிதீவிரமாக செயல்பட்டு வந்தவர் தோழர் சந்திரபோஸ். ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். பட்டியல் சமூகங்களிடையே ஒற்றுமையும் அவர்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வந்ததவர்.

தன்னலம் கருதாது தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல்கொடுத்து வந்தவர் தோழர் சந்திரபோஸ் அவர்கள். தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்கு சனநாயக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தவர். பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி கேட்டது உட்பட பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களிலும் முனநின்றவர். கொண்ட கொள்கையில் உறுதியுடன் இறுதிவரை நிற்பவர்.

சாதி ஒழிந்த தமிழின விடுதலையே தமிழ்த்தேசியம் என்று கருதியவர் தோழர் சந்திரபோஸ் அவர்கள். சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி, இடஒதுக்கீடு, தமிழ்த்தேசியம், தமிழீழ விடுதலை என பல்வேறு தளங்களில் பங்களித்தவர்.

தோழருடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மறக்க இயலா நிகழ்வுகளாகும். எம் தோழர்களுடனான அவரது கருத்தியல் பகிர்வுகள் எங்கள் தோழர்களுக்கு பல வரலாற்றுச் செய்திகளையும், போராட்ட உணர்வையும் கொடுத்தது என்பதனை இச்சமயத்தில் நினைவு கூர்கிறோம்.

இடஒதுக்கீடு உரிமையில் ‘பட்டியலின வெளியேற்றம்’ என்று பார்ப்பன பாஜக சதிவலையில் பட்டியலின மக்கள் வீழ்ந்துவிடாமல் இருக்க தோழர். சந்தரபோஸ் அவர்கள் மேற்கொண்ட கடும் பிரச்சாரம், போராட்டம் ஆகியன தமிழினம் முடியாத சமகால போராட்ட களங்களாகும். சனாதன ஆற்றல்களுக்கு சவால்விடும் தோழராக மக்களை அணிதிரட்டிய அவரது உழைப்பு போற்றுதலுக்குரியது.

தோழர் சந்திரபோஸ் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவுடன் போராட்டக்களத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக 21-01-2023 சனிக்கிழமை அன்று மறைந்தார். தோழரின் இழப்பு தமிழினத்திற்கு மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைத்து தோழர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் மே பதினேழு இயக்கம் ஆறுதல்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் சந்திரபோஸ் அவர்களுக்கு வீரவணக்கம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89915/protests/caste/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0/feed/ 0
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரகம் முன்பு செய்தியாளர்களிடையே உரையாடிய காணொளி https://may17iyakkam.com/89637/videos/important-videos/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-68/ https://may17iyakkam.com/89637/videos/important-videos/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-68/#respond Sun, 04 Dec 2022 13:50:39 +0000 https://may17iyakkam.com/?p=89637 கிளாமங்கலத்தின் நிலவும் சாதிய வன்முறை குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு.தினேஷ் பொன்ராஜ் அவர்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று நேரில் சந்தித்து எடுத்துரைத்த பின்பு, மாவட்ட ஆட்சியரகம் முன்பு செய்தியாளர்களிடையே உரையாடிய காணொளி.

யூடியூப் இணைப்பு

]]>
https://may17iyakkam.com/89637/videos/important-videos/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-68/feed/ 0
தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு.தினேஷ்பொன்ராஜ் அவர்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சந்திப்பு https://may17iyakkam.com/89631/protests/caste/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/ https://may17iyakkam.com/89631/protests/caste/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/#respond Sun, 04 Dec 2022 13:47:22 +0000 https://may17iyakkam.com/?p=89631

தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு.தினேஷ்பொன்ராஜ் அவர்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று நேரில் சந்தித்து கிளாமங்கலத்தின் சாதிய வன்முறையையும், அதை பாதுகாக்கும் அதிகாரவர்க்க போக்குகளையும் விளக்கமாக எடுத்துரைத்து அவற்றை களைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள தோழர்கள் அரங்ககுணசேகரன், குடந்தை அரசன், பாரதி ஆகியோருடன் கோரிக்கை வைத்தார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89631/protests/caste/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
சமூகநீதியை காக்க குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் https://may17iyakkam.com/89622/protests/caste/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be/ https://may17iyakkam.com/89622/protests/caste/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be/#respond Fri, 02 Dec 2022 05:36:10 +0000 https://may17iyakkam.com/?p=89622

கிளாமங்கலம் சாதிய வன்கொடுமை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த இன்று (02-12-2022) இருதரப்பினரையும் பாப்பாநாடு காவல்நிலையம் அழைக்கப்பட்டிருந்தனர். பிரதிநிதிகள் மட்டும் அழைக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து 10 பேர் வந்திருந்த போது, குற்றமிழைத்தவர்கள் தரப்பில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். தங்கள் ஆதிக்கத்தை காட்ட வேண்டும், அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும், அமைதி பேச்சு வார்த்தையை நடத்தவிடக் கூடாது என்ற நோக்கமுமே குற்றமிழைத்தவர்கள் திரண்டு வந்ததில் இருந்தது. காவல்துறையினரும் நூற்றுக்கணக்கானோரை எப்படி பேச்சுவார்த்தைக்கு அனுமதித்து என்ற கேள்வியும் எழுகிறது.

மே 17 இயக்கத் தோழர் ராஜேந்திரன் கூட்டத்தை புகைப்பட எடுக்க முயன்ற போது மிரட்டியுள்ளனர். அடிக்கவும் பாய்ந்துள்ளனர். பாதுகாப்பற்ற சூழலில் பேச்சு வார்த்தையை சுமூகமாக நடத்திவிட முடியாது என்பதை உணர்ந்து தோழர் அரங்க குணசேகரன் மற்றும் ஊர் மக்கள் தோழர்களுடன் அவ்விடத்திலிருந்து வெளியேறினர். பின்னர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் அரங்க குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட ஊர்மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊர் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டுமென காவல்துறையினரிடம் வலியுறுத்தப்பட்டது. நீதி கிடைக்கும் வரை மே பதினேழு இயக்கம் மக்களுடன் களத்தில் நிற்கும் என தோழர் திருமுருகன் காந்தி ஊர் மக்களிடம் உறுதியளித்தார்.

இப்பிரச்சனையின் ஆரம்பம் முதலே காவல்துறையினர் குற்றமிழைத்த ஆதிக்க சாதியினருக்கு சார்பாக செயல்பட்டு வருகின்றனர். இது பட்டியல் சமூக மக்கள் மீதான சாதிய தீண்டாமையை ஊக்குவிப்பது போல் அமைந்துவிடக் கூடும் என்று திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து எச்சரிக்கிறோம். அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். சமூகநீதியை காக்க திமுக அரசு முன்வர வேண்டும்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89622/protests/caste/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be/feed/ 0
ஆதிக்க சாதியினருக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மே 17 இயக்கத் தோழர் ராஜேந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பு காணொளி https://may17iyakkam.com/89613/videos/may17-in-media/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf/ https://may17iyakkam.com/89613/videos/may17-in-media/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf/#respond Fri, 02 Dec 2022 04:44:05 +0000 https://may17iyakkam.com/?p=89613 ஒரத்தநாடு அருகேயுள்ள கிளாமங்கலம் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் மீது தீண்டாமையை ஏவும் ஆதிக்க சாதியினருக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மே பதினேழு இயக்கத் தோழர்களில் ஒருவரான தோழர் ராஜேந்திரன் ஊடகவியலாளர்களிடம் சூழலை விளக்கி கூறிய காணொளி.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89613/videos/may17-in-media/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf/feed/ 0
சாதிய முதன்மை குற்றவாளிகள் மீது இன்னமும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை https://may17iyakkam.com/89607/protests/caste/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95/ https://may17iyakkam.com/89607/protests/caste/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95/#respond Thu, 01 Dec 2022 08:54:27 +0000 https://may17iyakkam.com/?p=89607

இரட்டைக்குவளையையும், முடித்திருத்தம் செய்யக்கூடாது என்றும், மளிகையில் பொருள் தரகூடாது என்றும் சாதிய அழுத்தம் கொடுக்கும் முதன்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை பாயவில்லை. இதே ஒரத்தநாடு தாலுகாவில் வரவிருந்த மீத்தேன் திட்டத்தை தடுக்க பிரச்சாரம் செய்த என் மீது இதே பாப்பாநாடு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பொய்குற்றச்சாட்டில் அடக்குமுறையை 2018ல் ஏவியது. ஆனால் சாதிய வன்மம் எனும் கொடுங்குற்றத்தை செய்தவர்களை கைகட்டி காத்துக்கொண்டிருக்கிறது.

தலித்துகள் மீது வீரத்தை காட்டுபவர்கள் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக நிற்கும் துணிவுகொண்டவர்களல்ல. சாதிக்கு எதிராக போராடும் ராஜேந்திரன் போன்ற எம் தோழர்களே மண்ணை காக்கும் போராட்டத்திலும் நிற்கிறார்கள். கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொண்டு சாதிக்கு எதிராகவும், மண்காக்கவும் (சாதியவன்மம் கக்குபவர்கள் நிலங்களுக்கும் சேர்த்தே) மே17 போராட்டம் தொடர்கிறது.

பொது எதிரியை அறியாமல் சாதியாக நம்மை பிரித்து தமிழர் ஒற்றுமையை சிதறடிப்பவர்களை தனிமைபடுத்துங்கள். இல்லையேல் எந்த உரிமையையும் நாம் காக்க இயலாது. தமிழ் மண்ணை காக்க, மீத்தேனுக்கு எதிராக பேசினால், காவல்துறை கைது செய்கிறது. ஆனால் தமிழரை பிரிக்கும் சாதிவெறி கொண்டவனை பாதுகாக்கிறது.

சாதியவாதிகளை வளர்ப்பதில் இதுபோன்ற அரச அமைப்புகள் முனைந்து பணியாற்றுவது தலைகுனிவானது. தலித் அல்லாதவர்களே சாதிக்கு எதிராக போராட முன்வரவேண்டும். சாதியின் அவமானகரமான செயல்களை மெளனத்தின் மூலமாக நீங்களே பாதுகாக்கிறீர்கள். உங்கள் மெளனம் வெட்ககரமானது.

அடக்குமுறை சுரண்டலை எதிர்க்க இணைந்து பணிசெய்ய தொடர்புகொள்ளுங்கள்

– மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பதிவு

]]>
https://may17iyakkam.com/89607/protests/caste/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95/feed/ 0
பட்டியலின மக்களுக்கு கடைகளில் தடைவிதித்த ஆதாரங்கள் https://may17iyakkam.com/89599/protests/caste/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88/ https://may17iyakkam.com/89599/protests/caste/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88/#respond Wed, 30 Nov 2022 18:04:06 +0000 https://may17iyakkam.com/?p=89599 ஒரத்தநாடு கிளாமங்கலம் (தெ) கிராமத்தில் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பின் பட்டியலின மக்களுக்கு கடைகளில் தடைவிதித்த ஆதாரங்கள் உரிய அதிகாரிகளிடத்தில் மே17 கொடுத்துள்ளது. அப்பட்டமான சாதிய காட்டுமிராண்டித்தனத்தினை மேற்கொண்டவர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனே கைது செய்யப்பட வேண்டும். இக்கொடுமையை செய்பவர்களை மே 17 இயக்கம் துணிந்து எதிர்த்து நிற்கும். ஆழ வேரோடி நிற்கும் சாதிய இழிவை துடைத்து தமிழ்த்தேசியம் படைப்போம். சாதியை குடி என்று திரிப்பதால் சாதி நியாயமாகாது. இக்குற்றம் செய்தவர்களை கைது செய்யும்வரையில் மே 17 இயக்கம் தொடர்ந்து போராடும். கைகோர்ப்போம்.

]]>
https://may17iyakkam.com/89599/protests/caste/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88/feed/ 0
பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து மே17 இயக்கம் போராட்டம் https://may17iyakkam.com/89592/protests/caste/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f/ https://may17iyakkam.com/89592/protests/caste/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f/#respond Tue, 29 Nov 2022 16:12:00 +0000 https://may17iyakkam.com/?p=89592 தஞ்சை ஒரத்தநாடு தாலுகா பகுதிகளில் பட்டியலினத்தவருக்கு இரட்டைகுவளையும், முடிவெட்ட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தகவலறிந்து கடந்த அக் 27ம் தேதி மே 17 இயக்க தோழர்களுடன் நானும், தோழர்.அரங்க குணசேகரனும் கள ஆய்விற்கு சென்றோம். அப்பகுதியில் இருக்கும் மே 17 தோழர்களுடன் சென்று ஆய்வு செய்ததில் இரட்டைக்குவளை முறை கிளாமங்கலம் தெற்கு எனும் கிராமத்தில் வழக்கத்தில் இருப்பதும், முடிவெட்ட அனுமதி மறுப்பதையும் அந்த ஊர் மக்கள் தெரிவித்தார்கள். இதனடிப்படையில் தஞ்சை ஆட்சியாளரிடம் முறையிடுவது என்றும், இதற்கு முன் புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையை கவனத்தில் கொண்டு செல்வது பற்றியும் முடிவெடுத்தோம்.

நவ 14ம் தேதி ஆட்சியாளரை சந்திக்க முடிவெடுத்ததை அறிந்து இரட்டைகுவளை, முடிவெட்டுதலில் ஒதுக்குதல் ஆகியவற்றை கைவிடுவதாக சம்பந்தப்பட்டவர்கள் எழுத்துபூர்வமாக ஊர்மக்களிடம் தெரியப்படுத்தியதை அறிந்தோம். இதனால் ஆட்சியாளர் சந்திப்பை தள்ளிவைத்த நிலையில் நேற்று நவ 28 காலையில் ஒடுக்குமுறையை ஏவுகிறவர்கள்.

கிராம கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற பெயரில் தனித்து செயல்பட்டு, பட்டியலின மக்களுக்கு ஊருக்குள் மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுக்கக்கூடாது என கடைகளுக்கு தடை விதித்தனர். இதை மீறுபவர்களுக்கு அபராதம் எனவும் முடிவெடுத்ததாக அறிவித்தனர்.

இதை ஊர்மக்கள் மே 17 தோழர் ராஜேந்திரனுக்கு தெரிவித்து, எனக்கும் அரங்க குணசேகரனுக்கும் தகவல் தெரிவித்தனர். பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்துவோமென சிலர் தெரிவித்ததை உடனடியாக திமுக அரசின் கவனத்திற்கும், தஞ்சை ஆட்சியாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். மாலையில் பதட்டமேற்படுத்தும் சில இளைஞர்களை திரட்ட முயன்றதை காவல்துறைக்கு தெரிவித்ததையடுத்து இரவு 10 மணிக்கு காவலர்கள் கிராமத்திற்கு சென்று கூடியவர்களை கலைத்தனர்.

இது போன்ற சாதிய வன்மத்துடன் இன்றளவும் தொடரும் போக்கினை எதிர்கொள்ளும் வகையில் நேரடியாக செல்வதென முடிவெடுத்திருந்தோம். ஆட்சியாளர் அவர்கள் இன்று களஆய்விற்காக அதிகாரிகளை அனுப்பி வைத்துவிட்டு என்னை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.

ஆய்வு மேற்கொண்டிருக்கும் அதிகாரிகள் இந்த சாதிய வன்மத்தினை தொடருவதும், தூண்டுவதுமாக இருக்கும் நபர்கள் மீது உடனடியாக சட்டரீதியாக வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதும், பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதும், இரட்டைக்குவளையை கடைபிடிக்கும் கிராமங்களை கண்டறிந்து களைந்தால் மட்டுமே இதை நிரந்தரமாக தடுக்கலாம். சாதிய வன்முறையாளர்களை தனிமைப்படுத்தி சட்டத்தின் கீழ் தண்டித்திட வேண்டும்.

பட்டியல் மக்களை மேலும் சாதிய வன்மத்துடன் சாதி ஆதிக்க நபர்கள் அணுகுவார்களெனில் அதற்கு எதிராக மே17 இயக்கம் சமரசமில்லாமல் உறுதியாக போராடும். பட்டியலின மக்களுக்கு கடைகளி்ல் பொருட்கள் விற்க தடை, முடிவெட்ட தடை, இரட்டைக்குவளை ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முனையும் நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்ய வேண்டுமெனும் கோரிக்கையை மே17 இயக்கம் எழுப்புகிறது.

இச்சாதிய நபர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் சாதி வன்முறை மீண்டும் எழுமெனில் காவலர்கள், அதிகாரிகள், இன்று கிராமத்திற்கு சென்றவர்கள் என அனைவருமே பொறுப்பிற்குள்ளாக்கப்பட்டு துறைரீதியான நடவடிக்கைக்கு மே17 இயக்கம் தனது போராட்டத்தினை முன்னெடுக்கும்.

ஆதிக்க உணர்வோடு பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து மே17 இயக்கம் தொடர்ந்து போராடும். இச்சிக்கலை தொடர்ந்து கண்காணித்து நிரந்தர தீர்வு எட்டும் வரை மே17 இயக்கம் ஓயாது. சுயமரியாதை உணர்வின் அடிப்படையில் சாதியம் ஒழிக்க கைகோர்ப்போம்.

– மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களது பதிவு

]]>
https://may17iyakkam.com/89592/protests/caste/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f/feed/ 0