அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?
8 வழிச்சாலை என்னும் எமன்: விளைஞ்ச நிலத்தை அழிச்சி ரோடு போடும் ஏழை விவசாயி மகன்.
விவசாய நிலங்களை பிடிங்கி, காட்டை அழித்து, சுற்றுச்சூழலை கெடுத்து, அம்பானி, அதனி போன்றவர்கள் தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க சேலம், சென்னை இடையே 8 வழிச்சாலையை மோடி அரசு கொண்டு வர, அதில் அமைச்சர்கள் கொள்ளையடிக்க அதிமுக அரசு அனுமதிக்கிறது.
#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு
மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010
தமிழர் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் தான் ஜல்லிக்கட்டு தடை. அதுவே தமிழர்களை ஒன்றிணைத்து தடைக்கு எதிராக போராட வைத்தது. சென்னை மெரினா கடற்கரை துவங்கி, தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் தன்னியல்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடினர். ஜல்லிக்கட்டு போராட்ட களம் என்பது வெறும் போராட்டக்களமாக மட்டுமல்லாமல் அரசியல் பயிலும் களமாக மாறியது. இதனால் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசுகளுக்கு எதிராக மக்கள் வெல்ல முடிந்தது. அதனாலேயே போராடிய மக்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவியது. காவல்துறையே கலவரங்களை உண்டாக்கி மக்கள் மீது பழியை போட்டது. போராடிய மக்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவளித்த மக்கள் மீதும், உறுதுணையாக நின்ற அரசியல் இயக்கங்கள் மீதும் அரசு பொய் வழக்குகளை பதிந்துள்ளது
இந்திய அரசு தமிழின அழிப்பை நேரடியாக மேற்கொண்ட ஒரு செயல் தான், காவிரி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டங்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை வட இந்திய பார்ப்பன-பனியா கூட்டம் கொள்ளையடிக்க கொண்டு வந்ததோடு, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை அழிப்பதன் மூலம் தமிழ்நாடு தன்னிறைவு அடைவதை தடுத்து, இந்தி ஒன்றிய அரசின் தயவில் செயலாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டதாகும். வீரு கொண்ட விவசாய பெருங்குடி மக்கள் டெல்டா முழுவதும் போராட்டத்தை துவங்க, தமிழ்நாடு முழுக்க மக்கள் ஆதரவாக போராட துவங்கினர். இந்த போராட்டத்தையும் நசுக்க அரசு போராடியவர்கள் மீது எண்ணற்ற வழக்குகளை பதிந்தது. மக்கள் போராட்டத்தின் விளைவாக திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், வழக்குகள் மட்டும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டிற்காக போராடிவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக திருப்பிப் பெற வேண்டும்.
தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழர்கள் ஒன்றிணைந்து போராடிய வேளையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை துவங்க வைத்தது அன்றைய காங்கிரஸ்-திமுக அரசுகள். 1000 நாட்களை கடந்த மிக அமைதியான அறவழி போராட்டத்தை தமிழர்கள் நடத்தி காட்டினர் தலைமுறைகளை பாதித்திடும் அணு உலைக்கு எதிராக போராடிய கூடங்குளம் கிராம மக்கள் மீது உலகிலேயே மிக அதிக வழக்குகள் பதியப்பட்டன. வழக்குகளை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும், இன்றும் பல வழக்குகளை சந்தித்து வருகின்றனர். இன்று மேலும் மேலும் அணு உலைகள் வந்துகொண்டே உள்ளன. ஆட்சி மாறியும் மக்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறையவே இல்லை. இந்த வழக்குகள் காரணமாக வேலைவாய்ப்புக்காக அந்த மக்கள் வெளிநாடு செல்வது தடைபட்டுள்ளது. இந்த வழக்குகளை நீக்குவதே அம்மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தரும்.
இது போன்ற பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி உழவர் திடலில் மார்ச் 6 சனிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு மேல், மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாடு நடைபெறுகிறது. மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த மாநாட்டில், கட்சி, சாதி, மாத எல்லை கடந்து தமிழினத்தின் உரிமைக்காக போராடிய அனைவரும் திரள்வது மட்டுமல்ல, போராட்டங்களுக்கு ஆதரவளித்த வெகுமக்களும் குடும்பத்தினரோடு பங்கேற்க வேண்டுமென, மே பதினேழு இயக்கம் சார்பாக தோழமையுடன் அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884072010
தமிழகத்தின் விலை உயர்ந்த இயற்கை வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்க இந்திய அரசு பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பினையும், கடலையும் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றி வருகிறது. இதனை உணர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடி வருகின்றார்கள். இதனை தடுக்க தமிழகத்தில் இருக்கும் அடிமை அரசைக் கொண்டு போராடுகிறவர்களை சுட்டுத் தள்ளுவதும், எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிறையில் அடைப்பதும், வழக்குகள் போடுவதும் என பாசிச நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியிருக்கிறது.
இதன்படி தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக 100 நாட்கள் அறவழியில் போராடிய மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டை நடத்தி, 13உயிர்களை காவு வாங்கியதும், சேலத்திற்கும் சென்னைக்கும் இடையில் சாலை போடுகிறோமென்று விவசாயிகளின் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை பிடுங்குவதை கண்டித்த பியூஷ் மனுஷ், மாணவி வளர்மதி, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் கெளதமன் உள்ளிட்ட எண்ணற்றவர்கள் மீது போலி வழக்குகளை போட்டு சிறையில் அடைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று ஒரு வழக்கில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் சேலத்தில் கையெழுத்திடுவதற்காக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் சேலத்திலுள்ள ஒரு கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து பேசிக்கொண்டிருந்த போது காவல்துறையின் அனுமதியில்லாமல் கூட்டம் போட்டார் என்று கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர் போகும்போது அவர்களை சூழ்ந்துகொண்டு மக்கள் தங்களது கோரிக்கைகளை சொல்வது என்பது இயல்பான செயலாகும். அதனை ஒரு குற்றச்செயலாக மாற்றி பொய்வழக்கில் திரு.சீமான் மற்றும் அவருடைய கட்சியினர் சிலரை கைது செய்திருப்பது என்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களின் மீது அவர் 29.10.1991ல் பேசிய ஒரு பேச்சிற்காக 27 வருடங்களுக்கு பிறகு இப்போது ஒரு வழக்கும் அதைனையொட்டி அவருக்கு பிடிவாரண்டும் போட்டிருக்கிறது தமிழக அரசு.
அதேபோல தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் அவர்கள் மீது 1988ஆம் ஆண்டில் போடப்பட்ட வழக்கில் அவர் ஜனநாயகப்படி நீதிமன்றத்தில் வாதாடி தன்மீது குற்றமில்லை என்று நிருபித்து விடுதலை ஆகிவிட்டார். ஆனால் அந்த வழக்கை தற்போது தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் யாரும் தமிழர் உரிமை மற்றும் வாழ்வாதாரம் குறித்து பேசிவிடாக்கூடாது என்று இந்திய பாஜக அரசு போட்டுகொடுத்த வேலைதிட்டத்தின் படி தமிழக அரசு வேலை செய்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களின் உரிமைப் போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட முடிந்ததாக வரலாறு இல்லை. சிறைக்கூடங்கள் மக்கள் போராட்டங்களை முடக்கி விடாது. தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் அனைவரும் இந்த ஒடுக்குமுறைகளை கண்டித்திட வேண்டும். நமக்குள் இருக்கிற முரண்பாடுகளைக் கடந்து அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இணைந்து நிற்போம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010
இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து போராடுகின்ற மக்களை ஒடுக்கி வருகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?
பெங்களூரில் இதற்கான அரங்கக் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறோம். அனைவரும் வாருங்கள்.
ஜூலை 8, 2018 ஞாயிறு காலை 10 மணிக்கு,
16, ஜெய்பீம் பவன் (கனரா வங்கி SC/ST அசோசியேசன்) 1st க்ராஸ் நியூ மிஷன் ரோடு, JC சாலை, பெங்களூர்
– மே பதினேழு இயக்கம்
+91-9916752167
Contact.may17@gmail.com
எட்டு வழி சாலைக்கு எதிராக மக்கள் தினம் தினம் அந்தந்த பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்கொலை முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். கண்முன்னே நம் சொந்த உறவுகள் கதறி அழுவதைப் பார்த்து, அவர்களுக்கு ஆதரவாக கேள்வி கேட்டால் சிறை என்று மிரட்டுகிறது இந்திய பாஜக அரசும், தமிழக எடப்பாடி அரசும்.
அந்த மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு முழுவதும் எங்கேயும் அனுமதி தரப்படுவதில்லை. போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், கருத்துரிமை அடிப்படையில் பிரச்சாரம் செய்கிற தோழர்களையும் காவல்துறை கைது செய்து வருகிறது.
ஒரு திட்டம் குறித்து பேசவே கூடாது என்பது, ஜனநாயகம் பாசிஸ்டுகளால் களவாடப்பட்டு விட்டது என்பதையே காட்டுகிறது. எங்கள் மக்களின் நிலத்தை அவர்களின் அனுமதியின்றி பிடுங்குவதற்கும், எங்கள் மக்கள் பாதுகாத்த காடுகளை அவர்களின் அனுமதியின்றி அழிப்பதற்கும், எங்கள் மக்களைப் பாதுகாக்கும் மலைகளை அவர்களின் அனுமதியின்றி உடைப்பதற்கும் மோடிக்கும், எடப்பாடிக்கும் யார் உரிமையைத் தந்தது?
துண்டறிக்கைகளை விநியோகிக்கும் முன்பாகவே துண்டறிக்கை வைத்திருந்தார்கள் என்று சொல்லி வேனை பறிமுதல் செய்திருக்கிறார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம், திராவிடர் விடுதலைக் கழகம், பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் மற்றும் விவசாய அமைப்பைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 19 பேர் கடுமையான வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தோழர்கள்:
ச.தீனன் என்ற தினேஷ், மகேஷ், ஜெசி குளோரி, ரேச்சல் என்ற கனல்விழி, யோகநாதன் என்ற காஞ்சி அமுதன், அர்விந்த், ஜெயராமன் என்ற உலக ஒளி, சாந்தி, ஆனந்தி, முருகானந்தம், வெற்றித்தமிழன் என்ற விஜயகுமார், தாண்டவமூர்த்தி, பழனி, ரவி பாரதி, செல்வராஜ், சுப்பிரமணி, சந்திரன், அல்லி மற்றும் எழிலரசன்
இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து இயக்கங்களுக்கும், மக்களும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தினைக் காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது.
இந்த அடக்குமுறைகளை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மோடி அரசே! எடப்பாடி அரசே! அத்துமீறாதே! இவர்கள் மக்களின் தோழர்கள்! உடனே விடுதலை செய்! மக்களின் குரலுக்கு மதிப்பு கொடு!
– மே பதினேழு இயக்கம்
9884072010
]]>