Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
வாழ்வாதாரம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Wed, 01 Mar 2023 09:56:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் https://may17iyakkam.com/90126/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ https://may17iyakkam.com/90126/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/#respond Tue, 28 Feb 2023 09:49:31 +0000 https://may17iyakkam.com/?p=90126

தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து, இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை இன்று (28-02-2023 செவ்வாய்) காலை மே பதினேழு இயக்கம் முற்றுகையிட்டது!

தமிழ் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்ய வேண்டும், மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசு கண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் காசி. புதியராஜா உள்பட, பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தோழர்கள் என பலர் பங்கேற்று கைதாகினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/90126/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்! https://may17iyakkam.com/90098/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/ https://may17iyakkam.com/90098/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/#respond Mon, 27 Feb 2023 06:57:18 +0000 https://may17iyakkam.com/?p=90098

தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து,

இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்!

நாளை (28-03-2023 செவ்வாய்) காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவோம்!

தமிழர்களே! நம் மீனவர்களுக்கு குரல் கொடுப்போம்!

* தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்!

* நம் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசை கண்டிப்போம்!

* தமிழக அரசே பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்கிடு!

மே பதினழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90098/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/feed/ 0
200-வது நாளை எட்டியுள்ள பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்! மக்கள்திரள் போராட்டத்திற்கு ஆதரவாக துணைநிற்போம்! https://may17iyakkam.com/90034/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/200-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d/ https://may17iyakkam.com/90034/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/200-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d/#respond Sat, 11 Feb 2023 17:56:30 +0000 https://may17iyakkam.com/?p=90034

200-வது நாளை எட்டியுள்ள பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்! மக்கள்திரள் போராட்டத்திற்கு ஆதரவாக துணைநிற்போம்! – மே பதினேழு இயக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்கபோவதாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய-மாநில அரசுகள் அறிவித்து அதற்கான நிலங்களை கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் அடியோடு நசுக்கப்படும் என்பதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து அம்மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் இன்றுடன் (11-02-2023 சனிக்கிழமை) 200-வது நாளை எட்டியுள்ளது. மக்களின் இந்த தொடர் போராட்டம் வெல்ல மே பதினேழு இயக்கம் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

விமான நிலைய அறிவிப்பு வெளியானது முதல் அரசு எதேச்சதிகாரமாக செயல்பட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலங்களை பல்வேறு வழிமுறைகளில் முறைகேடாக கையகப்படுத்தி வருகிறது. அப்போதே, முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்திட, விமான நிலையத் திட்டத்தை கைவிட மே பதினேழு இயக்கம் வலியுறுத்தியது. சுமார் 20,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 5000 ஏக்கர் நிலப்பரப்பில் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தினால், ஏகனாபுரம் கிராமம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலில் ஏற்படும் சீர்கேடு மற்றும் சென்னை நகருக்கு ஏற்படும் வெள்ள அபாயம் உள்ளிட்டவற்றை விளக்கி மே பதினேழு இயக்கம் எச்சரித்துள்ளது.

பரந்தூர் விமான நிலையம் சென்னையின் விமான நெரிசலுக்கு தீர்வாக அமையாது என்ற நிலையில் அதற்காக 13 கிராம மக்கள் கொடுக்கப் போகும் விலை மிக அதிகம் என்பதை உணர்ந்த அம்மக்கள், தீர்வு வழங்க முன்வராத அரசை கண்டித்தும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடக் கோரியும் போராட்டத்தை துவங்கினர். இதற்காக, பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர்-விவசாயிகள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 200 நாட்களாக போராடி வருகின்றனர்.

போராட்டம் துவங்கியது முதல் அப்பகுதி திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற அரசியல் கட்சிகள்-அமைப்புகளின் தலைவர்களை, செயற்பாட்டாளர்களை காவல்துறை தடுத்துநிறுத்தி கைது செய்தது. போராட்டக்களத்திற்கு செல்ல முயன்ற மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலை மே பதினேழு இயக்கம் அப்போதே கண்டித்தது. இப்போது வரை ஏகனாபுரம் பகுதியில் அத்தகைய சூழல் தான் நிலவுகிறது.

விமான நிலைய திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் கிராம சபை இதுவரை 4 முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்தை கைவிட வேண்டி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். பெரும்பான்மை மக்கள் ஒத்துக்கொண்டால் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலங்களை முறைகேடாக கையகப்படுத்தும் வேலையிலும், தொழிற்துறை அமைச்சகம் திட்டப்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தீர்வு வழங்காமல் போராடும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளை திமுக அரசு தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 200 நாட்களாக போராடி வரும் மக்களின் கோரிக்கைக்கு திமுக அரசு செவிசாய்க்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென 200 நாட்களாக போராடி வரும் மக்களின் சார்பாக மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

ஜனநாயக வழியில் 200 நாட்களாக போராடி வரும் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தன் முழு ஆதரவை அளிக்கிறது. இந்நாளில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் தோழர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பங்கேற்கும் 200-வது நாள் பொதுக்கூட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 200 நாட்களாக மன உறுதியோடு தொடர்ந்து போராடி வரும் மக்களின் போராட்டம் வெல்ல முற்போக்கு ஜனநாயக அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவளித்து துணைநிற்போம் என மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

]]>
https://may17iyakkam.com/90034/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/200-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d/feed/ 0
ஆன்லைன் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/89789/activities/protests-activities/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%9a/ https://may17iyakkam.com/89789/activities/protests-activities/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%9a/#respond Wed, 04 Jan 2023 12:36:54 +0000 https://may17iyakkam.com/?p=89789

ஆன்லைன் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை திரும்பப் பெறக் கோரி, (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட) தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக, 03-01-2023 செவ்வாய் மாலை தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் தாம்பரம் முருகன் அவர்கள் தலைமையில் பல்வேறு கட்சிகள், அமைப்பில் பங்கேற்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89789/activities/protests-activities/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%9a/feed/ 0
நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் நோக்கி உழவர்கள் பேரணி! அனைவரும் பங்கேற்க அறைகூவல் விடுக்கிறோம்! https://may17iyakkam.com/89538/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be/ https://may17iyakkam.com/89538/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be/#respond Fri, 25 Nov 2022 04:33:01 +0000 https://may17iyakkam.com/?p=89538

நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் நோக்கி உழவர்கள் பேரணி! அனைவரும் பங்கேற்க அறைகூவல் விடுக்கிறோம்! – மே பதினேழு இயக்கம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர்கள் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டை குறிக்கும் விதமாகவும் மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் 26-11-2022 அன்று நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக உழவர்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதனை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. இந்த பேரணியில் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்.

அம்பானி-அதானி லாபமடையும் வகையில் வேளாண் தொழிலை கார்ப்பரேட்மயமாக்கும் வண்ணம் மோடியின் தலைமையிலான பாஜக அரசு அரசு கடும் எதிர்ப்புகளுக்கிடையே மூன்று உழவர் விரோத வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள உழவர்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை துவங்கினார். ஓராண்டிற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் விளைவாக அந்த 3 சட்டங்களை திரும்பப் பெற்றதோடு, உழவர்களின் முக்கிய கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றுவதாக மோடி அரசு உறுதி அளித்திருந்தது.

ஆனால், போராடிய உழவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறாதது, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாதது, மின்சார மசோதாவை திரும்பப் பெறாதது என எழுத்துப்பூர்வமாக மோடி அரசு உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மீறி வருகிறது. போராட்டம் துவங்கிய இரண்டாம் ஆண்டை குறிக்கும் வகையிலும், போராட்டத்தின் ஓராண்டு வெற்றியை கொண்டாடும் வகையிலும், மோடி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நவம்பர் 26 அன்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணி சென்று, குடியரசுத்தலைவரிடம் கொண்டு செல்ல ஆளுநரிடம் மனு அளிக்க உழவர் சங்கங்களின் கூட்டமைப்பான ஐக்கிய விவசாயிகள் முன்னணி (Samyukt Kisan Morcha) உழவர்களை அழைத்துள்ளது.

‘கடனிலிருந்து விடுதலை, முழு லாப விலை (freedom from indebtedness and full remunerative price)’ உள்ளிட்ட உழவர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்ல வேண்டுமென உழவர்களின் இந்த ஆளுநர் மாளிகைகள் நோக்கிய பேரணியை மே பதினேழு இயக்கம் வாழ்த்தி வரவேற்கிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் இந்த பேரணிக்கு ஆதரவளித்து பங்கேற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89538/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be/feed/ 0
பொதுமக்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையை குறைத்த இலாபவெறி கொண்ட GVK-EMRI நிறுவனத்திடமிருந்து பாதுகாத்திட நடைபெற்ற மாநாடு https://may17iyakkam.com/89352/protests/privatization/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-108-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2/ https://may17iyakkam.com/89352/protests/privatization/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-108-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2/#respond Tue, 18 Oct 2022 17:44:08 +0000 https://may17iyakkam.com/?p=89352

பொதுமக்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையை குறைத்த இலாபவெறி கொண்ட GVK-EMRI நிறுவனத்திடமிருந்து பாதுகாத்திட, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக, 16-10-2022 அன்று சென்னை தேனாம்பேட்டையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89352/protests/privatization/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-108-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2/feed/ 0
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுக அரசே கைவிடுக! முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்திடுக! https://may17iyakkam.com/89348/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/ https://may17iyakkam.com/89348/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/#respond Mon, 17 Oct 2022 16:20:22 +0000 https://may17iyakkam.com/?p=89348

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுக அரசே கைவிடுக! முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்திடுக! – மே பதினேழு இயக்கம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் விமான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக சென்னைக்கு இரண்டாவது புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அதனை அமைக்க ஒன்றிய-மாநில அரசுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இறுதி செய்தன. இதனால் அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் அடியோடு நசுக்கப்படும். வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த சுமார் 3,000 குடும்பங்கள் இப்பகுதியில் நடைபெறும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். மாற்று இடம் தருகிறோம், நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு விலை தருகிறோம் என்று கூறி அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தும் வேலையை அதிகாரிகளும் ஆளும் திமுகவினரும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்து பேச முற்படுவதை அவர்கள் காதுகொடுத்து கேட்கும் மனநிலையில் இல்லை. ஆகையால், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்களும் கடந்த 80 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய விமான நிலைய திட்டத்திற்காக 4,537 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இதில் ஏகனாபுரம் என்ற ஒட்டுமொத்த கிராமமுமே அழிவுக்குள்ளாகிறது. இவற்றில், புறம்போக்கு நிலம் என்று கூறப்படும் 1317 ஏக்கரில் 955 ஏக்கருக்கு மேல் ஏரி, குளம், குட்டைகள் நிறைந்த நீர்நிலை பகுதிகளாகும். 390 ஏக்கர் மேய்ச்சல் நிலப்பகுதி எனவும் மீதமுள்ள பகுதிகள் மக்கள் வசிப்பிடம் மற்றும் வேளாண்மை நிலம் என்றும் கூறப்படுகிறது. வேளாண்மையும், அதற்கான நீர்நிலைகளும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் என மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இதில் அடங்கிப்போகின்றன.

புதிய விமான நிலையத் திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிவதோடு, சுற்றுச்சூழலும் அழிந்துபோகும் என்பதையே இது காட்டுகிறது. ஏரி, குளங்கள் அழிவதன் மூலம் சூழலியல் பாதிக்கப்படுவதோடு, மழைக்காலங்களின் நீரை தேக்கி வைக்க இடமில்லாது அவை சென்னை நோக்கி பாய்ந்து ஒவ்வொரு மழைக்காலத்திலும் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுக்கும். மேலும், சென்னை பெருநகரத்திற்கான நீராதரமாக விளங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாகவும் இப்பகுதி விளங்குகிறது. நீர்வழித்தடங்கள் அழிவதன் மூலம் வெள்ளம் ஏற்பட்டு வீணாவதோடு, கோடையில் சென்னைக்கான குடிநீர் தட்டுப்பாட்டை அதிகரிக்க இத்திட்டம் வழிவகுக்கும். ஆக, சென்னையை அழிவிலிருந்து காக்க பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டு சுற்றுச்சூழலை காப்பாதே சிறந்த வழியாகும்.

தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் அடையாற்றின் மீது கட்டப்பட்டதால் 2015-இல் அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் அந்த விமான நிலையத்தையே மூழ்கடித்தது என்பதை நினைவுகூர வேண்டும். அதேபோல், பரந்தூரில் விமான நிலையம் நீர்நிலைகள் மீது அமைக்கப்பட்டால், அழிக்கப்படும் நீர்நிலைகளின் நீரானது விமான நிலையத்தை சூழ்ந்து அதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளிவிடும். மேலும், அந்த நீர்நிலைகளை நம்பி வேளாண்மையில் ஈடுபட்டு வரும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்துமே பாதிப்புக்குள்ளாகும்.

மீனம்பாக்கம் விமான நிலையம் விமான போக்குவரத்து நெருக்கடியை கையாள போதாது என்று உருவாக்கப்படும் புதிய பரந்தூர் விமான நிலையம், அதற்கான நோக்கத்தை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில், மீனம்பாக்கம் விமான நிலையத்தை பயன்படுத்தும் முக்கால்வாசி தமிழர்கள் சென்னையை சேராதவர்களே. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து சென்னை வந்து வெளிநாடு செல்பவர்களே ஏராளம். நாளடைவில் வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும். அப்போது பரந்தூர் விமான நிலையமும் போதாது என்ற சூழல் உருவாகும்.

மேலும், நகரிலிருந்து வெகுதொலைவில் அமைக்கப்படும் விமான நிலையங்கள் வரிசையில் பரந்தூர் விமான நிலையம் இந்தியாவிலேயே முதன்மையாக இருக்கும். இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பான்மை மக்கள் பரந்தூர் விமான நிலையத்தை பயன்படுத்துவதில் மேலும் சிரமம் ஏற்படும். ஒரு சில வெளிநாட்டு பெருநிறுவன முதலாளிகள் வந்து செல்வதற்கு வசதியாக உருவாக்கப்படும் இந்த புதிய விமான நிலையத்தை 80% தமிழ் நாட்டு விமானப் பயணிகள் பெரும் சிரமத்தை மேற்கொண்டு அடைய வேண்டிய சூழல் உருவாகும்.

இதற்கு தீர்வாக சென்னையை மையப்படுத்திய வளர்ச்சியை நிறுத்த வேண்டும். மாறாக, பரவலான நகரமயமாக்கலும், பிற நகரங்களை நோக்கிய தொழில் வளர்ச்சி கொள்கையும் உருவாக்கப்பட வேண்டும். இதனால் சென்னை பெருநகரமும் வளர்ச்சி வீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய விமான நிலையங்களை பன்னாட்டு விமான நிலையங்களாக தரம் உயர்த்தி உள்ளூர், வெளிநாடு விமான சேவைகளை அதிகப்படுத்தவும், ஏற்கனவே உள்ள சிறிய விமான ஓடுதளம் கொண்ட பகுதிகளில் பல புதிய சிறு விமான நிலையங்களை உருவாக்கி அதனை பன்னாட்டு விமான நிலையங்களோடு இணைக்கும் வகையில் விமான போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசே புதிய விமான சேவையை உருவாக்கி குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் விமான போக்குவரத்து சேவையை அளிக்க முன்வர வேண்டும்.

இந்தியாவின் பல முக்கிய விமான நிலையங்கள் அதானி போன்ற தனியார் நிறுவனங்களிடம் கையாளிக்கப்படுவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், புதியதாக உருவாக்கப்படும் பன்னாட்டு விமான நிலையங்கள் அனைத்தும் தனியாரிடம் அளிக்கும் விதமாகவே திட்டமிடப்படுகிறது. விமான நிலையத்தை இயக்கும் ஒன்றிய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அளிக்கப்படும் நிலங்கள் அனைத்தும், தனியார் நிறுவனங்கள் இலாபம் சம்பாதிக்க மட்டுமே பயன்படும்.

பரந்தூர் விமான நிலையப் பகுதிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள எண்ணூர் அதானி துறைமுகம் அதன் முழு கொள்ளளவில் இதுவரை பாதிகூட கையாளளதை காண்கிறோம். விமான நிலையமும் கையாளிக்கப்படும் பட்சத்தில், விமான நிலையமும் பயனற்றதாகி போய்விடும். இதற்காக 3000 தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டுமா என்பதை தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும்.

புதிய விமான நிலையத்திற்கான தேவையை மாற்றுவழிகளில் ஈடு செய்வதே சிறந்த வழிமுறையாக அமையும். ஆகையால், போராடும் 13 கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதே தற்போதைய சூழலில் சிறந்த தீர்வாக அமையும். பாதிக்கப்படும் மக்களின் குரலுக்கு திமுக அரசு செவிசாய்க்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதையும், அம்மக்கள் சுரண்டப்படுவதையும், இத்திட்டத்தினால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் ரியல் எஸ்டேட் மோசடிகளை தடுத்து நிறுத்தவும் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், போராடும் மக்களுக்கு கட்சியினர் மூலம் நெருக்கடிகள் கொடுப்பதையும், ஆசை வார்த்தைகள் மூலம் மக்களை பிளவுபடுத்துவதையும் திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். போராடும் மக்களுக்கு ஆதரவளிக்க செல்லும் அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்களை தடுத்து நிறுத்துவதையும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். ஜனநாயக முறையில் ஆதரவளிக்க செல்வதை தடுத்து நிறுத்துவது ஜனநாயக விரோத செயலாகும்.

ஜனநாயக வழியில் போராடும் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தன் முழு ஆதரவை அளிக்கிறது. போராடும் மக்களுக்கு உறுதுணையாக நின்று, புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதை மே பதினேழு இயக்கம் உறுதி செய்யும் என்பதையும் இந்நேரத்தில் உறுதி அளிக்கின்றோம். போராடும் மக்கள் சாதி, மத வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடும் பட்சத்தில் மக்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படும் என்று கூறுவதோடு, போராடும் மக்களுக்கு வாழ்த்துகளை கூறிக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010
17/10/2022

]]>
https://may17iyakkam.com/89348/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
சுரண்டப்படும் ஸ்விகி ஊழியர்களின் உழைப்பு – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89104/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf/ https://may17iyakkam.com/89104/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf/#respond Thu, 22 Sep 2022 17:05:36 +0000 https://may17iyakkam.com/?p=89104 சுரண்டப்படும் ஸ்விகி ஊழியர்களின் உழைப்பு
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

ஸ்விகி நிறுவனம் இவ்வளவு நாள் தங்களுக்காக உழைத்துக் கொட்டிய உழைப்பாளர்களின் ஊதியத்தை குறைப்பதுடன், வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளதாக அத்தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஊக்கத்தொகை வழங்கப்படுவதும் நிறுத்தப்படுகிறது. இதனால், வாரம் ரூ. 5000 அளவிற்கு வருமானம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆகையால், இத்தொழிலை முழு நேர வேலையாக பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்ற நிலையில், கடந்த செப்டம்பர் 20 முதல் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக 180 முறை விநியோகம் செய்தால் அதிகபட்சம் ரூ. 11,500 ஊதியமாக பெற முடியும். இதற்கு ஒரு நாளைக்கு 26 முறை விநியோகிக்க வேண்டும். அதுவும் 16 மணி நேரம் வேலை பார்த்தால் மட்டுமே. இது சாத்தியமில்லாத ஒன்று என கூறுகின்றனர்.

மேலும், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் ஒரு நாளைக்கு 200-250 ரூபாய் அதற்காகவே செலவிடும் நிலையில் பெட்ரோலுக்கான அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ.24 மட்டுமே வழங்குகிறது. இதுவரை, வாரம் ரூ.3,500 சம்பாதித்தால் ஊக்கத்தொகையாக ரூ.1,500 வழங்கி வந்ததையும் புதிய முறையில் நிறுத்துகிறது.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010

]]>
https://may17iyakkam.com/89104/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf/feed/ 0
சென்னையில் நடைபெற்ற தமிழ் நாட்டின் நிலம், தொழில், வணிகம், கல்வி வேலை வாய்ப்பு இறையாண்மை பாதுகாப்புப் பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/89074/activities/public-meetings/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf-2/ https://may17iyakkam.com/89074/activities/public-meetings/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf-2/#respond Wed, 21 Sep 2022 06:23:02 +0000 https://may17iyakkam.com/?p=89074

தமிழ் நாட்டின் நிலம், தொழில், வணிகம், கல்வி வேலை வாய்ப்பு இறையாண்மை பாதுகாப்புப் பொதுக்கூட்டம், தமிழர் விடுதலைக் கழகம் சார்பாக 19-09-2022 திங்கள் கிழமை மாலையில், சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89074/activities/public-meetings/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf-2/feed/ 0
தமிழ் நாட்டின் நிலம், தொழில், வணிகம், கல்வி வேலை வாய்ப்பு இறையாண்மை பாதுகாப்புப் பொதுக்கூட்டம் https://may17iyakkam.com/89062/activities/public-meetings/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4/ https://may17iyakkam.com/89062/activities/public-meetings/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4/#respond Mon, 19 Sep 2022 06:13:28 +0000 https://may17iyakkam.com/?p=89062

தமிழ் நாட்டின் நிலம், தொழில், வணிகம், கல்வி வேலை வாய்ப்பு இறையாண்மை பாதுகாப்புப் பொதுக்கூட்டம் தமிழர் விடுதலைக் கழகம் சார்பாக 19-09-2022 திங்கள் மாலை 6:00 மணி அளவில் சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89062/activities/public-meetings/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4/feed/ 0