Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
மீனவர் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Wed, 01 Mar 2023 09:56:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் https://may17iyakkam.com/90126/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ https://may17iyakkam.com/90126/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/#respond Tue, 28 Feb 2023 09:49:31 +0000 https://may17iyakkam.com/?p=90126

தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து, இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை இன்று (28-02-2023 செவ்வாய்) காலை மே பதினேழு இயக்கம் முற்றுகையிட்டது!

தமிழ் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்ய வேண்டும், மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசு கண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் காசி. புதியராஜா உள்பட, பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தோழர்கள் என பலர் பங்கேற்று கைதாகினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/90126/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்! https://may17iyakkam.com/90098/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/ https://may17iyakkam.com/90098/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/#respond Mon, 27 Feb 2023 06:57:18 +0000 https://may17iyakkam.com/?p=90098

தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து,

இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்!

நாளை (28-03-2023 செவ்வாய்) காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவோம்!

தமிழர்களே! நம் மீனவர்களுக்கு குரல் கொடுப்போம்!

* தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்!

* நம் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசை கண்டிப்போம்!

* தமிழக அரசே பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்கிடு!

மே பதினழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90098/activities/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/feed/ 0
தமிழரை சுட்டுக்கொன்ற கர்நாடகா! கர்நாடக வனத்துறையினரின் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்! குற்றவாளி கர்நாடக வனத்துறையினரை உடனடியாக கைது செய்! https://may17iyakkam.com/90066/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/ https://may17iyakkam.com/90066/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 18 Feb 2023 08:40:51 +0000 https://may17iyakkam.com/?p=90066

தமிழரை சுட்டுக்கொன்ற கர்நாடகா! கர்நாடக வனத்துறையினரின் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்! குற்றவாளி கர்நாடக வனத்துறையினரை உடனடியாக கைது செய்! – மே பதினேழு இயக்கம்

சேலம் மாவட்டத்தின் கர்நாடக எல்லை அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்பவர் உயிரிழந்துள்ளார். மீன்பிடித்ததற்காக தமிழர்களை சுட்டுக்கொல்லும் அளவிற்கு கர்நாடக அதிகாரிகளிடம் இனவெறி போக்கு அதிகரித்துள்ளது வருந்தத்தக்கது. தமிழர்கள் மீது வன்மத்துடன் துப்பாக்கி சூடு நடத்தி தமிழரை கொலை செய்த கர்நாடகாவின் இந்த காட்டுமிராண்டி செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக எல்லைப்பகுதியதாக உள்ளது பாலாறு. இந்த பாலாறு காவிரியில் கலக்கும் நீர்ப்பகுதியில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாட்டு மீனவர்கள் காலங்காலமாக பரிசலில் மீன்பிடித்து வருவது வழக்கம். அப்படியாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இரவு கொளத்தூர் கோவிந்தப்பாடியை சேர்ந்த காரவடையான் என்ற ராஜா உள்ளிட்ட 7 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். அதில் ராஜா மட்டும் திரும்பவில்லை. இந்நிலையில், 16-ம் தேதி அவரது உடல் பாலாற்றங்கரையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக மீன்பிடிக்கும் எல்லை வனப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதும் அதில் ராஜா என்பவர் உயிரிழந்துள்ளதும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. கர்நாடக பகுதிக்குள் மீன்பிடிக்க தடையுத்தரவு உள்ள நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதில்லை. இருந்தும் தமிழர்கள் மீது எல்லைப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்துள்ளது கர்நாடக வனத்துறையினரின் தமிழர்கள் மீதான வன்மத்தையே காட்டுகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்திருந்தாலும் கொலை செய்யுமளவிற்கு கொடிய குற்றமல்லவே. மேலும், கர்நாடக வனத்துறையினர் இதற்கு முன்னரும் இதுபோல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என்ற தகவல், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடுஞ்செயல் என்பதையே காட்டுகிறது.

காவிரி நீர் பிரச்சனையில் தமிழர்கள் மீது கர்நாடகா நீண்டகாலமாகவே வன்மத்துடன் தாக்குதல் நடத்திவந்துள்ளது. காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்யும் அதிகப்படியான மழை காரணமாக இப்பிரச்சனை சில ஆண்டுகளாக இல்லாத நிலையில், தமிழ்நாடு-கர்நாடக இடையே புதியதொரு பிரச்சனையை ஆளும் கர்நாடக பாஜக அரசின் மூலம் ஒன்றிய பாஜக அரசு உருவாக்க முனைகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கை வளர்ப்பதன் மூலம் மாநிலங்களிடையே ஒற்றுமையை தடுத்து, மாநிலங்கள் மீது ஒன்றிய அரசு அதிகாரத்தை செலுத்த முனைகிறது.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்வதை வேடிக்கை பார்க்கும் இந்திய ஒன்றிய அரசு, சமீபத்தில் தனது கடற்படையை கொண்டே தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது கர்நாடக வனத்துறையினர் மூலம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, கர்நாடக எல்லைப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை உருவாக்க நினைக்கிறது. தமிழர்கள் மீதான வெறுப்பை வளர்த்தெடுப்பதன் மூலம் கர்நாடகாவில் பாஜக அரசியல் லாபம் அடைய முயற்சிக்கிறது. இந்திய ஒற்றுமை பேசும் பாஜக அரசு, தமிழர்கள்-தமிழ்நாட்டுடன் மட்டும் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன, தமிழர்களை இந்தியர்களாக கருதுவதில்லையா, தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதுவதில்லையா என்ற கேள்வி எழுகிறது.

கர்நாடக வனத்துறையினரின் இந்த போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலில் உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த கர்நாடக வனத்துறையினரை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தமிழ்நாட்டு வனப்பகுதி நீர்நிலைகளில் தமிழர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிப்பதை உறுதி செய்திட வேண்டும். எல்லைப்பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க நிரந்தரத் தீர்வை கண்டறிய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/90066/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
மின்சார துறையை தனியார் மையமாக்குவதை கண்டித்தும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடிப்பது, துன்புறுத்துவதை தடுக்கத் தவறும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/89610/protests/power-energy/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae/ https://may17iyakkam.com/89610/protests/power-energy/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae/#respond Fri, 02 Dec 2022 09:11:15 +0000 https://may17iyakkam.com/?p=89610

மின்சார துறையை தனியார் மையமாக்குவதை கண்டித்தும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடிப்பது, துன்புறுத்துவதை தடுக்கத் தவறும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக, இன்று (02-12-2022 வெள்ளி) மாலை 5 மணி அளவில், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89610/protests/power-energy/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae/feed/ 0
தமிழக மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை காத்திட உலக மீனவர் தினத்தில் உறுதியேற்போம்! https://may17iyakkam.com/89520/protests/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ https://may17iyakkam.com/89520/protests/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#respond Mon, 21 Nov 2022 05:15:50 +0000 https://may17iyakkam.com/?p=89520

தமிழக மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை காத்திட உலக மீனவர் தினத்தில் உறுதியேற்போம்! – மே பதினேழு இயக்கம்

ஆண்டுதோறும் நவம்பர் 21-ஆம் தேதி உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகின் பரந்து விரிந்த கடற்கரையை கொண்டுள்ள நாடுகள் அனைத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய வணிகமாகவும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் மீனவர்களின் பங்கு முக்கியமானதாகவும் உள்ளது. இதனை பறைசாற்றுவதற்கு இந்த நாள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

உலகமயமாக்கல் தீவிரமடைந்த 90-களில் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக கடலும், மீன்பிடி தொழிலும் செல்ல, பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்படைந்தது. இதனை எதிர்த்தும், மீனவர்களின் உலகளாவிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விதமாக, 40 நாடுகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் நவம்பர் 21, 1997-இல் டில்லியில் ஒன்றுகூடி உலக மீன்பிடித் தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த நாளே உலக மீனவர்கள் தினமாக உலகம் முழுவதும் மீனவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அதே வேளை, இந்நாளுக்கான ஐநாவின் அங்கீகாரத்தை பெற மீனவர்கள் இன்றளவும் போராடி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரியது.

மற்றொரு புறம், உலக மீனவர்கள் தினமானது மீன்வள தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இலாபத்தை அள்ளிகொடுக்கும் மீன்களின் வளத்தை கொண்டாடும் தினமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி தொழிலை அழித்து, கடல் மற்றும் கடற்சார் பகுதியிலிருந்து மீனவர்களை வெளியேற்றி, கடல்வளத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையளிக்கும் திட்டத்தை உலக வர்த்தகக் கழகம் (WTO) முன்மொழிவதை 2017-ம் ஆண்டிலேயே மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தி, தொடர்ந்து இன்றுவரை அதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

உலக வர்த்தக கழக்கத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவின் பாஜக அரசு, அதனை நடைமுறைப்படுத்தும் விதமாகவே இயற்கை பேரழிவில் அதிகம் பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. ஒக்கி புயலின் போது கன்னியாகுமரி மீனவர்களை காக்க ஒன்றிய பாஜக அரசு நடவடிக்கை எடுக்காதது மீனவர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியது. அப்போது, குளச்சல் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் நேரடியாக மக்களுடன் பங்கேற்று அரசின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தியது.

தொடர்ந்து நடைபெற்ற Oceans Forum மாநாட்டில் WTO ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டு, அதீத மீன்பிடித்தலை குறைத்து, முறையற்ற மீன்பிடித்தலை தடுத்து கடல்வளத்தை காப்பது என்ற குறிக்கோளை முன்வைத்தது. அதாவது, கடலில் மீன்வளம் குறைவதற்கு மீன்பிடித்தலே காரணம் என்றும், இதை பெரும்பாலும் பாரம்பரிய மற்றும் சிறு-குறு மீனவர்களே செய்கிறார்கள் என்றும், இவர்களை மீன்பிடித்தலில் இருந்து நீக்குவதன் மூலமாக கடலை காப்பாற்றமுடியுமென கூறின. இதனடிப்படையிலேயே தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டத்தை கடந்தாண்டு மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்தது.

மீனவர் அமைப்புக்களோடு கலந்து ஆலோசிக்காமல் இம்மசோதாவினை நிறைவேற்றிய பாஜகவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள், கடல் வளம் இல்லாத வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் என பெரும்பாலான மீனவர்கள் வாழும் நீண்ட கடற்கரை மாநிலங்களில், சொல்லுமளவிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிராத பாஜக கட்சியினால் இம்மசோதா கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் மீன் மற்றும் மீன் பொருட்கள் பங்கு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. 2019-20-ஆம் ஆண்டில் சுமார் 12.90 லட்சம் டன்கள் மீன் மற்றும் மீன் பொருட்களின் ஏற்றுமதி மூலம் ரூ.46,662.85 கோடி மதிப்பில் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 10%, வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 20 விழுக்காடும் ஆகும். அதேபோல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஆகும்.ஆனால் இது வரை ஒன்றிய அரசில் மீனவர் நலனிற்காக தனி அமைச்சரவை இல்லை. மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைத்திட வேண்டுமென தொடர்ந்து மீனவர்கள் போராடி வருகின்றனர்.

அதேபோல் மீன்பிடி தொழில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1.10 லட்சம் டன் கடல் பொருள் ஏற்றுமதி மூலம் 2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சுமார் ரூ. 5,565.46 கோடிக்கு அந்நியச் செலாவணி ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 7.23 இலட்சம் டன். இம்மீன் உற்பத்தி 10.48 இலட்சம் கடல் சார் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக உள்ளது. ஆனால், இதனை மீனவர்களிடமிருந்து பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

மீனவர்களை மீன்பிடித் தொழிலை விட்டு அப்புறப்படுத்தும் விதமாகவே தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கினாலும், கொலை செய்தாலும், படகுகளை சேதப்படுத்தினாலும், கைது செய்தாலும் இந்தியா ஒன்றிய அரசு அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. கடந்தாண்டு புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினத்தின் மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்டதற்கு பிறகு மே பதினேழு இயக்கம் போராடி மறு உடற்கூராய்வு மேற்கொள்ள வைத்தது. இதன்பிறகு இலங்கையின் தாக்குதல் குறைந்த நிலையில், கடந்த மாதம் இந்திய கடற்படையினரே தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இவ்வாறு மீனவர்களின் துயரம் சொல்லிமாளாது. மீனவர்கள் கடல்சார் பழங்குடிகள். அவர்களை பிற பழங்குடிகளை போல் அங்கீகரித்து, அவர்களது வாழ்விடத்தையும், வாழ்வாதாராத்தையும் வெளிப்புற சக்திகளிடமிருந்து காக்க அரசு முன்வர வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டியது அரசின் கடமை. இதற்கு மீனவர் சமுதாயத்தை பழங்குடி சமூகமென அரசு அறிவிக்க வேண்டும்.

பாரம்பரிய மீன்பிடித் தொழில் காக்கப்படுவதன் மூலமே மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மீன்பிடித்து வரும் பாரம்பரிய பகுதியில் தொடர்ந்து மீன்பிடிப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும். மேலும், சிறுகுறு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். மீனவ சமுதாயம் பயன்பெறும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மீன்வளம் குறித்த உயர் படிப்புகளையும் உருவாக்கிட வேண்டும். மீனவ கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்திட வழிவகை செய்திட வேண்டும்.

மீனவர் விரோத மீன்வள மசோதாவை மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். WTO ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதே மக்களுக்கு அனைத்து வகையிலும் நன்மைபயக்கக் கூடியதாக இருக்கும். தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காத்திட தமிழர்கள் அனைவரும் இந்த நாளிள் உறுதியேற்போம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89520/protests/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/ 0
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையினரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் https://may17iyakkam.com/89399/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/ https://may17iyakkam.com/89399/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/#respond Tue, 25 Oct 2022 10:29:03 +0000 https://may17iyakkam.com/?p=89399

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தி மயிலாடுதுறை மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்தார். கடற்படையினரின் இந்த செயலை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக மதுரை ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் 25-10-2022 செவ்வாய் காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/89399/activities/protests-activities/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/feed/ 0
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது தொடர்பாக தொலைகாட்சி விவாத நிகழ்ச்சி https://may17iyakkam.com/89385/videos/may17-in-media/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/ https://may17iyakkam.com/89385/videos/may17-in-media/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/#respond Sat, 22 Oct 2022 13:34:56 +0000 https://may17iyakkam.com/?p=89385

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது தொடர்பாக, இன்று (22-10-2022 சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெறும் விவாத நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் காணவும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89385/videos/may17-in-media/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/feed/ 0
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம்! தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கடற்படையினரை கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்துக! காவல் காக்க வேண்டிய கடற்படையினர் சொந்த நாட்டு மீனவர்களை தாக்கியது தமிழின விரோத செயலே! https://may17iyakkam.com/89379/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae-2/ https://may17iyakkam.com/89379/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae-2/#respond Sat, 22 Oct 2022 13:30:21 +0000 https://may17iyakkam.com/?p=89379

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம்! தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கடற்படையினரை கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்துக! காவல் காக்க வேண்டிய கடற்படையினர் சொந்த நாட்டு மீனவர்களை தாக்கியது தமிழின விரோத செயலே! – மே பதினேழு இயக்கம்

மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தாக்கியுள்ளனர். இதில் ஒரு மீனவர் மீது குண்டு பாய்ந்து கடுமையான காயங்களுடன் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். சொந்த நாட்டு மீனவர்களையே கடற்படையினர் தாக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய கடற்படையினரின் இந்த தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மயிலாடுதுறையை சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் இணைந்து 21-10-2022 வெள்ளி அன்று இராமநாதபுரம் பகுதியை அடுத்த தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் தங்கள் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். பங்காரம் என்ற கப்பல் தமிழக மீனவர்கள் மீதான இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் என்ற மீனவர் இந்திய கடற்படையினர் நடத்திய இந்த தாக்குதலில் துப்பாக்கி குண்டு உடலில் பாய்ந்து கடுமையாக காயமடைந்துள்ளார். இவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.

மீனவர்களை பாதுகாக்க வேண்டிய கடற்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது மீனவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இலங்கை கடற்படையினர் நம் மீனவர்களை தாக்கி கொலை செய்வதும் படகுகளை, வலைகளை சேதப்படுத்துவதும் கைது செய்வதுமான செயல்களில் ஈடுபட்டு வந்தது. அதற்கான ஒரு தீர்வை வழங்கக்கோரி ஒவ்வொரு முறையை இந்திய ஒன்றிய அரசை தமிழ் நாடு அரசை நாடி வந்த நிலையில், இந்திய கடற்படையே அது போன்ற ஒரு செயலில் தற்போது ஈடுபட்டுள்ளது.

இலங்கை அரசிற்கு இருக்கும் தமிழின விரோத மனப்பான்மையே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமாக இருந்தது. அப்போதெல்லாம் தமிழக மீனவர்களை காக்கவும் பாதுகாப்பு வழங்கவும் இந்திய கடற்படை தவறியது, அவர்களிடையே அதே மனப்பான்மை நிலவுவதையே காட்டியது. இன்று இலங்கையை போன்று தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது, இந்திய கடற்படையினருக்கும் தமிழர் விரோத மனப்பான்மை இருப்பதை உறுதி செய்கிறது.

தமிழக மீனவர்களை, இந்திய கொடி கட்டிய அவர்களது படகுகளை அடையாளம் காண முடியாமல் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கடற்படையினர் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. சொந்த நாட்டு மீனவர்கள் மீதான இந்த தாக்குதலை எளிமையாக கடந்து விட முடியாது. தமிழக கடற்பகுதியிலிருந்து தமிழக மீனவர்களை அப்புறப்படுத்தும் இந்திய ஒன்றிய அரசியன் சூழ்ச்சியாகவே இதனை பார்க்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட இந்திய கடற்படையினர் மீது தமிழ் நாடு அரசு உடனடியாக கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இந்திய கடற்படையினரின் கடமை. பாதுகாப்பு தர வேண்டிய கடற்படையினர் சொந்த நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கான தகுதியை இழந்துவிட்டதையே காட்டுகிறது. அவர்கள் உடனடியாக தமிழக கடற்பகுதியை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமெனவும், மாற்று பாதுகாப்பு வழிமுறைகளை தமிழ் நாடு அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழ் நாடு அரசு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டுமென கோருகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010
22/10/2022

]]>
https://may17iyakkam.com/89379/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae-2/feed/ 0
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னால் உள்ள அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல் https://may17iyakkam.com/87656/videos/may17-in-media/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4/ https://may17iyakkam.com/87656/videos/may17-in-media/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4/#respond Mon, 04 Apr 2022 15:34:31 +0000 https://may17iyakkam.com/?p=87656 இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னால் இலங்கை அரசின் சிங்களப் பேரினவாத கொள்கையும், தமிழர்களுக்கு எதிராக குவிக்கப்பட்ட இராணுவ பலமும் காரணமாக இருப்பது குறித்தும், தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்து வரும் இலங்கை அரசிற்கு இந்தியா இராணுவ உதவி செய்வது குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அரண் செய் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

யூடியூப் காணொலி

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87656/videos/may17-in-media/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4/feed/ 0
நிமிர் பதிப்பகத்தின் வெளியீடு – “கொள்ளை போகும் கடல் வளம்: மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கும் மீன்வள மசோதா” நூல், சென்னை புத்தக கண்காட்சி – நிமிர் அரங்கில் கிடைக்கும் https://may17iyakkam.com/87364/protests/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86-4/ https://may17iyakkam.com/87364/protests/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86-4/#respond Thu, 24 Feb 2022 10:23:40 +0000 https://may17iyakkam.com/?p=87364

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக,

“கொள்ளை போகும் கடல் வளம்: மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கும் மீன்வள மசோதா”

நூல், சென்னை புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கில் கிடைக்கிறது. கடற்கரையிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்தி கடல்வளத்தை கார்பரேட்களிடம் கையளிக்கும் மோடி அரசின் திட்டத்தை விளக்குகிறது இந்நூல்.

நிமிர் அரங்கு எண்: 51, 52

நிமிர் பதிப்பகம்
8939782116

]]>
https://may17iyakkam.com/87364/protests/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86-4/feed/ 0