Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
மனிதஉரிமை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Fri, 20 Jan 2023 06:01:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கொலை! குற்றவாளிகளையும் மூடி மறைக்க முயன்ற அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்! https://may17iyakkam.com/89909/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0/ https://may17iyakkam.com/89909/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0/#respond Thu, 19 Jan 2023 05:59:37 +0000 https://may17iyakkam.com/?p=89909

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கொலை! குற்றவாளிகளையும் மூடி மறைக்க முயன்ற அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்! – மே பதினேழு இயக்கம்

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ கடுமையாக தாக்கபட்டு உடல் முழுவதும் காயங்களுடன் இறந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிறுவனது தாயாரையும் மிரட்டியதோடு, குற்றச் செயலை மறைக்க அதிகாரிகள் முயன்றுள்ளனர். குற்றத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமல்லாது குற்றச்செயலை மறைக்க முயன்ற அனைவரையும் கைது செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தாம்பரம் கன்னடப்பாளையம் குப்பைமேடு பகுதியை சேர்ந்த 6 குழந்தைகளுக்கு தாயாரான கணவரை இழந்த பிரியா என்பவது மூத்த மகன் 17 வயது கோகுல்ஸ்ரீ என்பவரை கடந்த டிசம்பர் 30 அன்று தாம்பரம் ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். அவரது தாயாருக்கு அழைப்பு வந்து சென்று பார்த்த போது கோகுல்ஸ்ரீ நன்றாகவே பேசியுள்ளார். பின்னர் கோகுல்ஸ்ரீ செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட நிலையில், 31-ம் தேதி மாலையில் அவர் உடல்நிலை சரியில்லை என்று செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாகவும் பின்னர் இறந்துவிட்டதாகவும் அவர் தாயாருக்கு தகவல் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளதை அவரது தாயார் பார்த்துள்ளார். பின்னர் செல்போனை பிடுங்கிக்கொண்டு அவரது தாயாரையும் சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் அங்கு பணிபுரியும் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஜனவரி 2 அன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் நேரடியாக வந்து அவரை மிரட்டியுள்ளார். சூழலை பயன்படுத்தி அப்போது தப்பிய அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

சிறுவன் கோகுல்ஸ்ரீ திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவே அவரது தாயார் கருதுகிறார். கோகுல்ஸ்ரீ உடல் மீது இருந்த காயங்கள் அதனை உறுதிபடுத்துகிறது. செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் குற்றச் செயலை மூடி மறைக்க முயன்றுள்ளனர். DCPO சிவகுமார் பிரியாவின் மற்ற குழந்தைகள் படிப்பை தடுத்து தெருவுக்கு கொண்டுவந்துவிடுவேன் மிரட்டலும் விடுத்துள்ளார். இச்செயல் அப்பட்டமான அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றச் செயலுக்கு துணைபோவதாகும்.

இது தொடர்பாக இதுவரை செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்ல ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளும், குற்றத்தை மறைக்க முயன்ற சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள், DCPO சிவகுமார் உள்ளிட்டோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

எக்காரணம் என்றாலும் சிறுவனை தாக்கி கொலை செய்வது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். சிறைச்சாலை கொலைகள் வரிசையில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் கொலை நடைபெற்றுள்ளது அதிர்ச்சிக்குரியது. இத்தகைய செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89909/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0/feed/ 0
“மனித” மிருகக்காட்சி சாலைகள் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88955/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/ https://may17iyakkam.com/88955/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/#respond Sun, 11 Sep 2022 07:49:41 +0000 https://may17iyakkam.com/?p=88955 “மனித” மிருகக்காட்சி சாலைகள்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த பிரபுக்களுக்குக் கேளிக்கை காண்பிக்க ஆப்ரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் விலங்குகள் போல் வேட்டையாடப்பட்டு விற்கப்பட்டனர். அவர்களை அடிமைகளாக விலைக்கு வாங்கி வந்து அவர்களுடைய சடங்குகளை நடத்திக் காண்பித்தனர். இது 19-ஆம் நூற்றாண்டில் மக்களிடையே பிரசித்தி பெற்ற பொழுதுபோக்காகவும் பணம் கொழிக்கும் தொழிலாகவும் மாறியது.

“நாங்கள் நாகரிகம் அடைந்த விட்டோம்!” என்று கூறிய ஐரோப்பியச் சமூகம் மிருகங்களை அடைத்து வைப்பதைப் போல மனிதர்களை அடைத்து மனித காட்சி சாலைகளை உருவாக்கினார்கள். கண்காட்சி, திரையரங்கம், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பூர்வ குடிகள் நிலப்பரப்பில் வாழும் கிராமங்களைப் போல் உருவாக்கி அதில் அடைத்து வைத்து பணம் சம்பாதித்தனர்.

தோற்றத்தில் தங்களைக் காட்டிலும் மாறுபட்ட மனிதர்களைக் காண்பதிலும் ஆர்வம் காட்டியதன் விளைவாக மிருகக்காட்சி சாலைகளில் அவர்களை அடைத்து காட்சிப்பொருளாக்கினர். இது வெறும் வியாபார நோக்கோடு மட்டுமல்லாமல், வெள்ளையர்களின் தோல் நிற மேன்மையை உலகுக்குக் காட்டவே நடைமுறைப்படுத்தபட்டது.

கட்டுரையை வாசிக்க

]]>
https://may17iyakkam.com/88955/articles/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/feed/ 0
பீமா கோரேகான் வழக்கில் சிறைப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு https://may17iyakkam.com/87943/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%aa%e0%af%80%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/ https://may17iyakkam.com/87943/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%aa%e0%af%80%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/#respond Thu, 12 May 2022 16:50:46 +0000 https://may17iyakkam.com/?p=87943

பீமா கோரேகான் வழக்கில் சிறைப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டம் திரும்பப்பெறப்பட்டு, அந்த நிறுவனம் கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சனநாயக அமைப்புகள் சார்பாக இன்று (12-05-2022 வியாழன்) காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

“பீமா கோரேகான் வழக்கு என்ற பெயரில் பாஜக அரசு தீட்டியுள்ள சதியை அம்பலப்படுத்தவும் கேலிக்கூத்தாகியுள்ள நீதிக்கு பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொணரவும் ‘பீமா கோரேகான் அரசியல் சிறைபட்டோர் விடுதலைக்கான குழு’ உருவாக்கப்பட்டுள்ளது. எல்கர் பரிசத் வழக்கில் சிறைப்பட்டுள்ள அறிவாளிகள், வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்களின் அப்பழுக்கற்றத் தன்மையை வெகு மக்களிடையே பரப்புவதிலும் அவர்தம் உடனடி விடுதலைக்கான கோரிக்கையை எழுப்புவதும் இக்குழு நோக்கமாக கொண்டுள்ளது.” என பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

குறிப்பு: பத்திரிக்கை செய்தி வெளியீடு படங்களாக இணைக்கப்பட்டுள்ளது.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87943/activities/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/%e0%ae%aa%e0%af%80%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/feed/ 0
சென்னை ஆர்.ஏ.புரம் மக்களின் வீடுகளை இடித்த போது தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வு https://may17iyakkam.com/87920/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8f-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/ https://may17iyakkam.com/87920/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8f-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/#respond Wed, 11 May 2022 16:36:26 +0000 https://may17iyakkam.com/?p=87920

சென்னை இராஜா அண்ணாமலைபுரம் (ஆர்.ஏ.புரம்) கோவிந்தசாமி நகர் இளங்கோ தெரு பகுதி மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் போது தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வு 10-05-2022 செவ்வாய் அன்று நடைபெற்றது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தோழர்களுடன் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மேலும், இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் மே பதினேழு இயக்கம் இறுதி வரை நிற்கும் என்று உறுதி கூறினார். பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த தோழர் திருமுருகன் காந்தி, இறந்த கண்ணையாவிற்கு உரிய மரியாதை செலுத்துவதாகவும், அவரின் இறுதி விருப்பபடி அப்பகுதியிலேயே மீண்டும் வீடு கட்டி தர வேண்டும் என்று கூறினார். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சென்னை நகரிலிருந்து பூர்வகுடி மக்களை அகற்றும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது எனவும், மே 17 இயக்கம் நீண்டகாலமாக முன்வைத்து வரும், அகற்றப்படும் இடத்திலிருந்து 5 கிமீ சுற்றளவுக்குள் மக்கள் மறுகுடியமர்த்த வேண்டுமெனவும் கூறினார். மேலும், இப்பகுதி 1971-ல் அறிவிக்கப்பட்ட குடிசை மாற்றுவாரிய பகுதியாக இருப்பதால், இது ஆக்கிரமிப்பு அல்ல என்றும் இப்பகுதி மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டுமெனவும் கூறினார். இந்த விவகாரம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த பேசிய தோழர் திருமுருகன் காந்தி, உச்சநீதிமன்றத்தை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் அதிகாரமிக்கது எனவும், தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து பட்டா வழங்க முடியும் என்று கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தது போல, அப்பகுதி மக்களுக்கு அங்கேயே வீடுகட்டி தருவதை உறுதிபடுத்த வேண்டும் என்று கூறினார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87920/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8f-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/feed/ 0
காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த விக்னேஷூக்கு நீதி வழங்கு! காவல் மரணங்களை தடுத்து நிறுத்து! https://may17iyakkam.com/87791/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/ https://may17iyakkam.com/87791/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#respond Sat, 23 Apr 2022 13:31:28 +0000 https://may17iyakkam.com/?p=87791

காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த விக்னேஷூக்கு நீதி வழங்கு! காவல் மரணங்களை தடுத்து நிறுத்து! – மே பதினேழு இயக்கம்

சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவராக இருந்து வந்த விக்னேஷ் என்னும் இளைஞர் காவல்துறை விசாரணையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பதும், அதனை மூடி மறைக்கும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர் என்ற செய்தியும் அதிர்ச்சியளிக்கிறது. அந்த இளைஞரை கைது செய்ததிலிருந்து உடலை அடக்கம் செய்தது வரை காவல்துறையினர் எவ்வித சட்ட நடைமுறையையும் பின்பற்றவில்லை என்று தெரிய வருகிறது. சென்னை காவல்துறையின் இந்த சட்டவிரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் விக்னேஷ். இவர் மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவராக இருந்து வந்தார். கடந்த 18-ம் தேதி இரவு சுரேஷ் என்னும் தனது நண்பருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, கெல்லிஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு G5 தலைமைச்செயலக குடியிருப்பு காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரும் குடித்திருந்ததாகவும், கத்தி வைத்திருந்ததாகவும் பின்னர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில், வாகன சோதனையின் போதே ஒரு போலீஸ் தலைகவசத்தால் விக்னேஷ் தலையில் தாக்கியதாகவும், காவல் நிலையத்தில் விசாரணையின் போது கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். காலையில் மயக்கம் வருவதாக கூறிய விக்னேஷை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, அதன் பின்னர் அவரது தம்பியை கட்டுபாட்டில் வைத்து உடற்கூராய்வு செய்து உடலை எரிக்க முயன்றுள்ளனர்.

விக்னேஷை கைது செய்ததும் காவலர்கள் அவரது கைப்பேசியை பிடுங்கிவிட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் சொல்லாமல் இருந்துள்ளனர். அவர் இறந்த பிறகே அவரது தம்பியை தேடிப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அனைத்து செயல்களை மறைக்க முயன்றுள்ளனர். உடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பருக்கு கூட எந்த விசயமும் தெரியாமல் மறைத்துள்ளனர். உடற்கூராய்வின் போது விக்னேஷின் முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளதை அவரது தம்பி கவனித்துள்ளார். காவல்துறையின் உயர் அதிகாரிகள் முதற்கொண்டு அனைவரும் ஒன்றுகூடி அவர் உறவினர்கள் பத்திரிக்கையாளர்களிடம் பேசிவிடாதபடி கட்டுப்பாட்டில் வைத்து, உடற்கூராய்வு செய்து முடித்த கையோடு பிணத்தை எரிக்க முயற்சிக்க, நீதிபதியின் உத்தரவிற்கு பின்பு உடலை புதைத்துள்ளனர்.

ஒருவரை கைது செய்தால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் எதனையும் காவல்துறையினர் பின்பற்றாததோடு, உடற்கூராய்வு செய்து பிணத்தை உறவினர்களிடம் கூட ஒப்படைக்காமல், விக்னேஷ் முகத்தை கூட பார்க்க விடாமல் சட்டவிரோதமாக பிணத்தை எரிக்கவும் முயன்றுள்ளனர். மேலும், விக்னேஷ் குதிரையின் உரிமையாளர் மூலம் விக்னேஷ் குடும்பத்தாருக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து விசயத்தை மூடி மறைக்கவும் முயன்றுள்ளனர். உடற்கூராய்விற்கான மாற்றுக்கருத்து கேட்கவும், மறு உடற்கூராய்வு செய்ய முடிவெடுப்பதற்கு போதிய அவகாசம் வழங்கவும் மறுத்துள்ளனர். நீதிபதியும் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.

காவல்நிலைய மரணம் தமிழ்நாட்டில் அதிகளவில் நடைபெறும் சூழலில் இச்சம்பவம் அது குறைந்தபாடில்லை என்பதையே காட்டுகிறது. சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ், சேந்தமங்கலம் மாற்றுத்திறனாளி என காவல்நிலையக் கொலைகள் தமிழ்நாட்டையே உலுக்கினாலும் இது தொடர்கதையாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அதற்கு காவலர்களுக்கு உரிய உளவியல் பயிற்சியும் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் வேண்டுமென தமிழ்நாட்டு அரசை மே பதினேழு வலியுறுத்துகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் முதற்கொண்டு அனைத்து காவலர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவே உயிரிழந்த விக்னேஷிற்கு வழங்கப்படும் நீதியாக அமையும். மேலும், விக்னேஷ் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினர் மீதான காவல்துறையினரின் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படுவதும், காவல்நிலைய மரணங்கள் ஒழிக்கப்படுவதுமே சமூகநீதியை பாதுகாப்பதற்கு ஒப்பாக அமையும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/87791/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
‘தனிமனித உரிமையைப் பாதிக்கும் தமிழக காவல்துறையின் புகைப்பட செயலி’ – இணையத்தள கருத்தரங்கம் https://may17iyakkam.com/86428/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/ https://may17iyakkam.com/86428/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/#respond Fri, 15 Oct 2021 05:59:55 +0000 https://may17iyakkam.com/?p=86428

‘தனிமனித உரிமையைப் பாதிக்கும் தமிழக காவல்துறையின் புகைப்பட செயலி’ என்ற தலைப்பில் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக, இன்று (15-10-2021 வெள்ளி) மாலை 6.45 மணியளவில் நடைபெறும் இணையத்தள கருத்தரங்கில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றார். கீழ்க்கண்ட முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும்.

https://www.facebook.com/nchrotn

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/86428/activities/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/feed/ 0