Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
பொருளாதாரம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Wed, 01 Feb 2023 11:32:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 மோடியின் குஜராத் படுகொலைகள் குறித்த பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானியின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கிய நேர்காணல் https://may17iyakkam.com/89999/videos/important-videos/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/ https://may17iyakkam.com/89999/videos/important-videos/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/#respond Wed, 01 Feb 2023 11:32:32 +0000 https://may17iyakkam.com/?p=89999 மோடியின் குஜராத் படுகொலைகள் குறித்த பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானியின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்த ஹின்டன்பர்க் அறிக்கை போன்ற விவகாரங்கள் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் மின்னம்பலம் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

யூடியூப் இணைப்பு:

மே பதினேழு இயக்கம்
9884864010

]]>
https://may17iyakkam.com/89999/videos/important-videos/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/feed/ 0
அம்பலமான அதானியின் பங்குசந்தை மோசடிகள் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89996/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ https://may17iyakkam.com/89996/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#respond Wed, 01 Feb 2023 11:30:19 +0000 https://may17iyakkam.com/?p=89996 அம்பலமான அதானியின் பங்குசந்தை மோசடிகள்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மோடியின் தயவால் 20 மடங்கு அளவிற்கு வளர்ந்து உலகின் மூன்றாவது பணக்காரரானார் அதானி. மொரிஷியஸில் உள்ள 38 நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் ஷெல் நிறுவனங்களை நிறுவி, அதன் மூலமாக செய்த மோசடிகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது ஹிண்டன்பெர்க் ஆய்வு.

பொய்யான நிறுவனங்களை உருவாக்கி பல ஆயிரக் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம் நடத்தியிருக்கிறது அதானி நிறுவனம். இதில் பலவற்றிற்கு அதானியின் குடும்ப உறுப்பினர்களே இயக்குநர்களாக இருக்கின்றனர்.

அதானி அம்பலமானதும் இது இந்தியாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார் அதானி, மோசடிப் பேர்வழியான அதானி தேசபக்தியைப் போர்த்திக் கொண்டு தப்பிக்க நினைக்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அதானியே தடையாக இருக்கிறார் என ஹிண்டன்பெர்க் பதிலடி கொடுத்திருக்கிறது.

மேலும் வாசிக்க

]]>
https://may17iyakkam.com/89996/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 0
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுக அரசே கைவிடுக! முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்திடுக! https://may17iyakkam.com/89348/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/ https://may17iyakkam.com/89348/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/#respond Mon, 17 Oct 2022 16:20:22 +0000 https://may17iyakkam.com/?p=89348

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுக அரசே கைவிடுக! முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்திடுக! – மே பதினேழு இயக்கம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் விமான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக சென்னைக்கு இரண்டாவது புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அதனை அமைக்க ஒன்றிய-மாநில அரசுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இறுதி செய்தன. இதனால் அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் அடியோடு நசுக்கப்படும். வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த சுமார் 3,000 குடும்பங்கள் இப்பகுதியில் நடைபெறும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். மாற்று இடம் தருகிறோம், நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு விலை தருகிறோம் என்று கூறி அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தும் வேலையை அதிகாரிகளும் ஆளும் திமுகவினரும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்து பேச முற்படுவதை அவர்கள் காதுகொடுத்து கேட்கும் மனநிலையில் இல்லை. ஆகையால், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்களும் கடந்த 80 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய விமான நிலைய திட்டத்திற்காக 4,537 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இதில் ஏகனாபுரம் என்ற ஒட்டுமொத்த கிராமமுமே அழிவுக்குள்ளாகிறது. இவற்றில், புறம்போக்கு நிலம் என்று கூறப்படும் 1317 ஏக்கரில் 955 ஏக்கருக்கு மேல் ஏரி, குளம், குட்டைகள் நிறைந்த நீர்நிலை பகுதிகளாகும். 390 ஏக்கர் மேய்ச்சல் நிலப்பகுதி எனவும் மீதமுள்ள பகுதிகள் மக்கள் வசிப்பிடம் மற்றும் வேளாண்மை நிலம் என்றும் கூறப்படுகிறது. வேளாண்மையும், அதற்கான நீர்நிலைகளும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் என மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இதில் அடங்கிப்போகின்றன.

புதிய விமான நிலையத் திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிவதோடு, சுற்றுச்சூழலும் அழிந்துபோகும் என்பதையே இது காட்டுகிறது. ஏரி, குளங்கள் அழிவதன் மூலம் சூழலியல் பாதிக்கப்படுவதோடு, மழைக்காலங்களின் நீரை தேக்கி வைக்க இடமில்லாது அவை சென்னை நோக்கி பாய்ந்து ஒவ்வொரு மழைக்காலத்திலும் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுக்கும். மேலும், சென்னை பெருநகரத்திற்கான நீராதரமாக விளங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாகவும் இப்பகுதி விளங்குகிறது. நீர்வழித்தடங்கள் அழிவதன் மூலம் வெள்ளம் ஏற்பட்டு வீணாவதோடு, கோடையில் சென்னைக்கான குடிநீர் தட்டுப்பாட்டை அதிகரிக்க இத்திட்டம் வழிவகுக்கும். ஆக, சென்னையை அழிவிலிருந்து காக்க பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டு சுற்றுச்சூழலை காப்பாதே சிறந்த வழியாகும்.

தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் அடையாற்றின் மீது கட்டப்பட்டதால் 2015-இல் அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் அந்த விமான நிலையத்தையே மூழ்கடித்தது என்பதை நினைவுகூர வேண்டும். அதேபோல், பரந்தூரில் விமான நிலையம் நீர்நிலைகள் மீது அமைக்கப்பட்டால், அழிக்கப்படும் நீர்நிலைகளின் நீரானது விமான நிலையத்தை சூழ்ந்து அதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளிவிடும். மேலும், அந்த நீர்நிலைகளை நம்பி வேளாண்மையில் ஈடுபட்டு வரும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்துமே பாதிப்புக்குள்ளாகும்.

மீனம்பாக்கம் விமான நிலையம் விமான போக்குவரத்து நெருக்கடியை கையாள போதாது என்று உருவாக்கப்படும் புதிய பரந்தூர் விமான நிலையம், அதற்கான நோக்கத்தை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில், மீனம்பாக்கம் விமான நிலையத்தை பயன்படுத்தும் முக்கால்வாசி தமிழர்கள் சென்னையை சேராதவர்களே. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து சென்னை வந்து வெளிநாடு செல்பவர்களே ஏராளம். நாளடைவில் வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும். அப்போது பரந்தூர் விமான நிலையமும் போதாது என்ற சூழல் உருவாகும்.

மேலும், நகரிலிருந்து வெகுதொலைவில் அமைக்கப்படும் விமான நிலையங்கள் வரிசையில் பரந்தூர் விமான நிலையம் இந்தியாவிலேயே முதன்மையாக இருக்கும். இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பான்மை மக்கள் பரந்தூர் விமான நிலையத்தை பயன்படுத்துவதில் மேலும் சிரமம் ஏற்படும். ஒரு சில வெளிநாட்டு பெருநிறுவன முதலாளிகள் வந்து செல்வதற்கு வசதியாக உருவாக்கப்படும் இந்த புதிய விமான நிலையத்தை 80% தமிழ் நாட்டு விமானப் பயணிகள் பெரும் சிரமத்தை மேற்கொண்டு அடைய வேண்டிய சூழல் உருவாகும்.

இதற்கு தீர்வாக சென்னையை மையப்படுத்திய வளர்ச்சியை நிறுத்த வேண்டும். மாறாக, பரவலான நகரமயமாக்கலும், பிற நகரங்களை நோக்கிய தொழில் வளர்ச்சி கொள்கையும் உருவாக்கப்பட வேண்டும். இதனால் சென்னை பெருநகரமும் வளர்ச்சி வீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய விமான நிலையங்களை பன்னாட்டு விமான நிலையங்களாக தரம் உயர்த்தி உள்ளூர், வெளிநாடு விமான சேவைகளை அதிகப்படுத்தவும், ஏற்கனவே உள்ள சிறிய விமான ஓடுதளம் கொண்ட பகுதிகளில் பல புதிய சிறு விமான நிலையங்களை உருவாக்கி அதனை பன்னாட்டு விமான நிலையங்களோடு இணைக்கும் வகையில் விமான போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசே புதிய விமான சேவையை உருவாக்கி குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் விமான போக்குவரத்து சேவையை அளிக்க முன்வர வேண்டும்.

இந்தியாவின் பல முக்கிய விமான நிலையங்கள் அதானி போன்ற தனியார் நிறுவனங்களிடம் கையாளிக்கப்படுவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், புதியதாக உருவாக்கப்படும் பன்னாட்டு விமான நிலையங்கள் அனைத்தும் தனியாரிடம் அளிக்கும் விதமாகவே திட்டமிடப்படுகிறது. விமான நிலையத்தை இயக்கும் ஒன்றிய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அளிக்கப்படும் நிலங்கள் அனைத்தும், தனியார் நிறுவனங்கள் இலாபம் சம்பாதிக்க மட்டுமே பயன்படும்.

பரந்தூர் விமான நிலையப் பகுதிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள எண்ணூர் அதானி துறைமுகம் அதன் முழு கொள்ளளவில் இதுவரை பாதிகூட கையாளளதை காண்கிறோம். விமான நிலையமும் கையாளிக்கப்படும் பட்சத்தில், விமான நிலையமும் பயனற்றதாகி போய்விடும். இதற்காக 3000 தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டுமா என்பதை தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும்.

புதிய விமான நிலையத்திற்கான தேவையை மாற்றுவழிகளில் ஈடு செய்வதே சிறந்த வழிமுறையாக அமையும். ஆகையால், போராடும் 13 கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதே தற்போதைய சூழலில் சிறந்த தீர்வாக அமையும். பாதிக்கப்படும் மக்களின் குரலுக்கு திமுக அரசு செவிசாய்க்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதையும், அம்மக்கள் சுரண்டப்படுவதையும், இத்திட்டத்தினால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் ரியல் எஸ்டேட் மோசடிகளை தடுத்து நிறுத்தவும் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், போராடும் மக்களுக்கு கட்சியினர் மூலம் நெருக்கடிகள் கொடுப்பதையும், ஆசை வார்த்தைகள் மூலம் மக்களை பிளவுபடுத்துவதையும் திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். போராடும் மக்களுக்கு ஆதரவளிக்க செல்லும் அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்களை தடுத்து நிறுத்துவதையும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். ஜனநாயக முறையில் ஆதரவளிக்க செல்வதை தடுத்து நிறுத்துவது ஜனநாயக விரோத செயலாகும்.

ஜனநாயக வழியில் போராடும் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தன் முழு ஆதரவை அளிக்கிறது. போராடும் மக்களுக்கு உறுதுணையாக நின்று, புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதை மே பதினேழு இயக்கம் உறுதி செய்யும் என்பதையும் இந்நேரத்தில் உறுதி அளிக்கின்றோம். போராடும் மக்கள் சாதி, மத வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடும் பட்சத்தில் மக்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படும் என்று கூறுவதோடு, போராடும் மக்களுக்கு வாழ்த்துகளை கூறிக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010
17/10/2022

]]>
https://may17iyakkam.com/89348/may17/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e2%80%8b/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/feed/ 0
மேற்காசிய குவாட் I2U2: இந்தியாவை ஆட்டுவிக்கும் அமெரிக்கா – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/89071/protests/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-i2u2-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/ https://may17iyakkam.com/89071/protests/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-i2u2-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/#respond Wed, 21 Sep 2022 06:19:00 +0000 https://may17iyakkam.com/?p=89071 மேற்காசிய குவாட் I2U2: இந்தியாவை ஆட்டுவிக்கும் அமெரிக்கா – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

மேற்கு ஆசியக் கடற்பகுதியில் சீனாவை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆபிரகாம் உடன்படிக்கைகள் போன்று இஸ்ரேல், இந்தியா, USA, UAE ஆகிய நாடுகளை கொண்டு அமெரிக்கா முன்னகர்த்திய அமைப்புதான் I2U2.

இந்தோ-பசிபிக் பகுதிக்கு குவாட் இருப்பது போல, மேற்கு ஆசிய பகுதிக்கு I2U2 “ஒரு முக்கிய விடயமாக” மாற முடியும் என்று அமெரிக்கா அண்மையில் கூறியது. குவாட் அமைப்பில் ஆஸ்திரேலியாவை முன்னிலைப்படுத்தி தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டது போல, இஸ்ரேலை முன்னிலைப்படுத்தி, இந்தியாவை பயன்படுத்தி அமெரிக்கா தனது விருப்பங்களை நிறைவேற்றக்கொள்ள முயற்சிக்கிறது. அமெரிக்காவின் விருப்பங்கள் முதன்மையாக்கப்படும் நிலையில், குவாட் போலவே I2U2-வில் இந்தியாவின் முக்கியத்துவம் கேள்விக்குறியாகவே உள்ளது.

I2U2 மூலம் இந்தியா அடையப்போகும் நன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக் காயாக இந்தியாவை பயன்படுத்தும் நோக்கமே அமெரிக்காவிற்கு உண்டு. குவாட் துவங்கப்பட்ட போது இந்தியாவிற்கு இருந்த முக்கியத்துவம் நாளடைவில் குறைந்தது. இந்த நிலையில், I2U2-வில் இந்தியாவின் முக்கியத்துவம் எந்தவிதத்திலும் மேம்பட்டிருக்காது என்றே தெரிகிறது.

மேலும் வாசிக்க

]]>
https://may17iyakkam.com/89071/protests/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-i2u2-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
பருத்தி விலையால் பாழாகும் திருப்பூர் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் https://may17iyakkam.com/88943/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/ https://may17iyakkam.com/88943/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/#respond Tue, 06 Sep 2022 08:08:14 +0000 https://may17iyakkam.com/?p=88943 பருத்தி விலையால் பாழாகும் திருப்பூர்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

திருப்பூரில் உள்ள 10 சதவீத பெரிய நிறுவனங்களினால் இந்த பருத்தி விலையேற்றம், நூல் விலையேற்றத்தை ஈடுசெய்ய இயலுகிற நிலையில் 90 சதவீத சிறு-குறு தொழில்கள் நசிந்து போகின்றன என்பது மிகப்பெரும் கவலைக்குறியதே.

வடநாட்டில் துணி உற்பத்திக்கு பதிலாக நூல் ஏற்றுமதியில் நிறுவனங்கள் ஈடுபட ஆரம்பித்துள்ளன. நூல் ஏற்றுமதி செய்வதால் லாபத்தில் இழப்பை சம்பாதிப்பதில்லை. மாறாக ஆடை உற்பத்திக்கான அடிப்படை கச்சாப்பொருட்களை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு ஊக்குவிக்கிறது. இதற்கான வரி குறைப்பு மட்டுமல்லாமல் வரி திரும்பப்பெரும் ஊக்கத்தொகையும் உள்ளதால் நூல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. …பருத்தியை இறக்குமதி செய்வதற்கான வரியை குறைத்த போதிலும் நூல் விலையில் மாற்றமில்லாமல் மேலும் அதிகமாக உயரவே செய்தது.

நேரடியாக எவ்வளவு உற்பத்தி நடந்துள்ளது என்பதைப் பற்றிய தொடர்பும் இல்லாமலேயே பொருட்களின் விலையை ஏற்றி இறக்கக்கூடிய வணிக பரிமாற்றமும், உண்மைக்கு மாறான உற்பத்தி அளவும் வைத்து பங்குச் சந்தையில் சூதாட்டத்தை பனியா எனும் குஜராத் மார்வாடி சமூகங்கள் செய்து வருகின்றன.

நூறாண்டுகளுக்கு முன்பே யூக வணிகத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் லட்சம் ரூபாய் பணத்தை ஈட்டிய இந்த பனியாக்களே இன்றும் இத்தொழிலின் மூலப்பொருட்களின் வணிகத்தை கட்டுப்படுத்துகின்றனர். இந்த நிலையே இன்று திருப்பூர் போன்ற தமிழ்நாட்டின் ஆடை உற்பத்தியை நெருக்கடிக்குள் தள்ளி இருக்கின்றன.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

]]>
https://may17iyakkam.com/88943/protests/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b4%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/feed/ 0
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாளில் (செப்டம்பர் 5, 1872) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்! https://may17iyakkam.com/88940/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5-%e0%ae%89-%e0%ae%9a%e0%ae%bf/ https://may17iyakkam.com/88940/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5-%e0%ae%89-%e0%ae%9a%e0%ae%bf/#respond Mon, 05 Sep 2022 08:05:54 +0000 https://may17iyakkam.com/?p=88940

ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு அடங்க மறுத்து, ஆங்கிலேய அரசுக்கு எதிராக கப்பல் தொழில் தொடங்கி சிறைபட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாளில் (செப்டம்பர் 5, 1872) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்! – மே பதினேழு இயக்கம்

‘சாதியெனும் பொய்க்கொண்டுந் தன்சமயப் பேய்கொண்டு
மாதினது நோய்கொண்டும் வாழுயிர்க – ளாதி
மகவென்று நோக்காது மாணாத செய்வர்
தகவென்றும் பேணா தவர்’
– வ.உ.சி அவர்கள், மெய்யறிவு-74

(பொருள்: பெருமை மிகுந்த வாழ்வை பேணாதவரே, சாதி மதம் போன்றவற்றை கடைபிடித்து அனைவரும் ஒரு ஆதியில் பிறந்தவர்கள் என்பதை மறந்து வாழ்வார்)

தமிழக வரலாற்றில் கப்பலோட்டிய தமிழர் என்றும், செக்கிழுத்த செம்மல் என்றும் புகழாரம் சூட்டப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் தமிழர்களின் வீரத்திற்கும், அறத்திற்கும், ஆதிக்க எதிர்ப்பு குணத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். பெரும் செல்வந்தராகவும், வழக்கறிஞராகவும் இருந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள், ஆலைத் தொழிலாளர்களின் நேர்மையான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிய காரணத்திற்காகவும், ஆங்கிலேயே ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக இந்தியா-இலங்கை இடைப்பட்ட தமிழர் கடற்பகுதியில் கப்பல் செலுத்தி தற்சார்பான பொருளாதாரத்தை முன்னெடுத்த காரணத்திற்காகவும் ஆங்கிலேய காலனி அரசால் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு உள்ளானவர். தன் இறுதி காலத்தில் ஏழ்மையின் பிடியில் இருந்தபோதும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் ஒருபொழுதும் தனது விடுதலை வேட்கையை விட்டுக்கொடுத்ததில்லை.

1906-ம் ஆண்டு ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற பெயரில் அவர் தொடங்கிய சரக்குகள் கப்பல் போக்குவரத்து நிறுவனம் அதுவரை அன்றைய ஆங்கிலேய இந்திய ஒன்றியத்தில் எந்த ஒரு தனி நபரும் முன்னெடுக்காத ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையாகும். அந்த கப்பல் நிறுவனத்தை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று உள்ளூர் பங்குதார்களும், ‘தங்கள் இலாபம் பறிபோகிறது எனவே இந்நிறுவனத்தை அழித்துவிடவேண்டும்’ என்று ஆங்கிலேய முதலாளிகளும் பெரும் முயற்சியை எடுத்த பொழுதும் அந்த நிறுவனம் வெற்றிகரமாக பீடு நடை போட்டது என்றால் அது வ.உ.சிதம்பரனார் அவர்களின் இடையறாத உழைப்பினால் மட்டுமே.

நேரடியாகவோ, மறைமுகமாகவோ வ.உ.சிதம்பரனார் அவர்களை மிரட்டுவது மூலம் நம்மால் இந்நிறுவனத்தை மூட இயலாது என்பதை ஆங்கிலேய முதலாளிகள் புரிந்து கொண்டனர். எனவே கயமைத்தனமாக வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்நின்று நடத்திய அரசியல் கூட்டம் ஒன்றில் காவல்துறையை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தியதன் மூலம் அப்பாவி மக்களை பலி கொண்டனர். மேலும் வ.உ.சிதம்பரனார் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனைகள் தரப்பட்டன. ஓர் அரசியல் கைதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை தந்தது இதுவே உலக வழக்கில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு ஆங்கிலேயர்களின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்திருந்தது வ.உ.சிதம்பரனார் அவர்களின் கப்பல் நிறுவனம்.

இதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி பகுதியில் அப்பொழுது இயங்கி வந்த கோரல் மில் என்ற நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆங்கிலேயே முதலாளிகளால் மிகக் கடுமையாக சுரண்டப்படுவதை அறிந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்னிலை ஏற்க, 1908-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ‘ஆங்கிலேயர்களுக்கும், அல்லது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேறு யாருக்கும் முடிதிருத்தவோ முகச்சவரம் செய்யவோ மாட்டோம்’ என முகச்சவரம் தொழிலாளர்களால் முடிவெடுக்கப்பட்டது.

“இரங்கசாமி ஐயங்கார் என்னும் ஆங்கிலேயே ஆதரவு நிலைகொண்ட பார்ப்பனர், முகச்சவரம் செய்துகொள்ள வந்தபொழுது ‘கோரல் மில் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆங்கிலேயே அரசு சிறப்பு காவல்துறையை வரவழைத்திருக்கிறது’ என்ற செய்தியை கூறி ‘போராட்டம் மிக விரைவில் ஒடுக்கப்படும்’ என்று அதிகாரத் திமிருடன் பேசிய காரணத்திற்காக அவரது முகச்சவரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அத்தொழிலாளி சென்று விட்டார்” என்ற செய்தி பத்திரிக்கைகளில் வரும் அளவிற்கு இப்போராட்டம் வீரியம் அடைந்து இருந்தது. வேறு வழியில்லாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்திற்கு ஆங்கிலேய முதலாளிகள் தள்ளப்பட்டனர்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே பொய் வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள், திருநெல்வேலி, கோயமுத்தூர், கண்ணனூர் ஆகிய சிறைகளுக்கு அலைக்கழிக்கப்பட்ட வேலையில் தான், அவரது மன உறுதியை உடைக்க மாடுகளால் இழுக்கப்படும், செக்கை இழுக்க செய்ய ஆங்கில சிறை அதிகாரிகள் கட்டளையிட்டனர். அந்நிகழ்வை பற்றி தனது தன்வரலாற்றில்,

“திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன், அவனுடை அன்புதான் என்னே !”

என்று பாடி வெளிப்படுத்துகிறார் வ.உ.சி அவர்கள்.

ஆனாலும் சிறையில் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடவில்லை. ஆங்கிலேய ஆதரவு ஏற்கவும் இல்லை.

காட்சன் என்கின்ற ஆங்கிலேய சிறை அதிகாரி வ.உ.சி. அவர்களிடம் ‘கான்விக்ட் வார்டன்’ என்கிற சிறை கைதியே காவலர் பணியை செய்யும் கங்காணி வேலையை அவருக்கு தருவதாகவும், அதை ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் அவரது சிறை தண்டனை ஆண்டில் ஒவ்வொரு வருடமும் மூன்று மாதம் குறையும் என்றும், உறவினர்களை சந்திப்பதும், அவர்களுக்கு கடிதம் எழுதவும், பெறவும் எளிமையாக இருக்கும் என்றும், மாத விடுப்பு கிடைக்கும் என்றும், அதற்கும் மேலாக நல்ல உடையும் உணவும் கிடைக்கும் என்றும் கூறியபொழுது, “நான் சிறை வந்தது சிறை அதிகாரிகளின் கையாளாக பணியாற்ற அல்ல” என்று அவ்வேலையை மறுதலித்து தனது முழு தண்டனையும் அனுபவிக்க தயாராகவே இருந்தார் என்றால் அவரது மன உறுதி எத்தகையது என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

வ.உ.சி. அவர்களின் ஈகம் திட்டமிட்டு தமிழ்நாட்டில் மறைக்கப்பட்டதில் ஆரிய பார்ப்பனக் கும்பலுக்கு பெரும்பங்குண்டு. வ.உ.சி அவர்கள் தொழில் தொடங்கிய காலத்திலிருந்தே ஆரியப் பார்ப்பனர்கள் அவருக்கு எதிராகவும் அவர் மீது பொறாமையும் கொண்டிருந்தனர் என்பதை அவருடைய சுய சரிதையில் இருக்கும் பின்வரும் வரிகளிலிருந்து கண்டுகொள்ள முடியும்.

“பொருடந்த சிற்சிலர் பொறாமைமேற் கொளீஇ
நம்மில் எளியன் நம்மிற் சிறியன்
தம்மினும் புகழினை நண்ணுதல் என்னோ?
அவனை ஒழித்தெலாம் ஆள்வேம்’ என்றே
எமனவர் போல என்மேல் வந்தனர்.”

என்று எழுதிய இந்த வரிகளில் மேற்குறியிட்டு ‘இப் பொறாமை கொண்ட நபரின் பெயராக’ அவரது சுயசரிதையில் ‘நெல்லை பகுதியில் வழக்கறிஞராக இருந்த குருசாமி அய்யர் முதலானோர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்னெடுத்த கப்பல் நிறுவன தொழிலானாலும் சரி, கோரல் மில் போராட்டம் ஆனாலும் சரி ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. தன் சொந்த மண்ணின் வளங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்படுவதை கண்டு மனம் பொறுக்காமல் அதை முறியடிக்க வ.உ.சிதம்பரனார் முன்னெடுத்த வேலை திட்டங்களால் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். அவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டதை அறிந்த கணத்திலிருந்து தன் இறுதி காலம் வரை அவரது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். சிறை மீண்ட பின் கடும் ஏழ்மையில் சிக்கிக் கொண்டிருந்தார் வ.உ.சிதம்பரனார் அவர்கள். ஆயினும் தன் இறுதி காலத்தை தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் அர்ப்பணித்து பெரும் பணிசெய்து தமிழர் வரலாற்றில் அழியாப் புகழை பெற்றுச் சென்றார்.

வ.உ.சி அவர்களின் தமிழ்த் தொண்டும் அளப்பரியதே. தமிழில் திருக்குறளின் அறக்கருத்துக்களை ‘வலிந்து பொருள் திரித்து’ சிதைத்த பரிமேலழகரின் உரைக்கு மாற்றாக மற்ற உரையாசிரியர்களின் உரைகளை தேடிச்சென்று இறுதியாக மணக்குடவரின் அறத்துப்பால் உரையினை முதலில் பதிப்பித்தவர் வ.உ.சி அவர்களே. அதன்பின் அவரே திருக்குறளுக்கு உறையும் எழுதினார். அவரது கூற்றுபடி திருக்குறளின் முதல் நான்கு அத்தியாயங்களும் பின்னால் சிறப்புப்பாயிரமாக எழுதி இணைக்கப்பட்டுள்ளது என்றும், அவை திருவள்ளுவாரால் ஆக்கப்பட்டதல்ல என்றும் பொருளாகிறது. திருக்குறள் உரை மட்டுமல்லாமல் பல்வேறு பாக்களையும், மொழிபெயற்புகளையும் தமிழுக்கு தந்தருளிச்சென்றுள்ளார்.

தனிதமிழின் மீது பெரும் பற்று கொண்ட வ.உ.சி அவர்கள், தமிழில் இருந்து வடமொழியாம் சமசுகிருத சொற்கள் நீக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். “சமஸ்கிருத சொற்களை உபயோகிக்க நேரும் இடங்களில் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு சொற்களையும், அவற்றின் பக்கங்களில் அவற்றுக்குரிய சமஸ்கிருத சொற்களையும் உபயோகித்து தற்கால தமிழ் நாட்டில் வழங்கி வரும் சமஸ்கிருத சொற்களுக்கு எல்லாம் சரியான தமிழ்ச் சொற்களை நம் தமிழ் மக்களுக்குக் கற்பித்து, நாளடைவில் சமஸ்கிருத சொற்களை தமிழில் இருந்து வேரோடு களைந்து விடலாம்” என்று 1915-ஆம் ஆண்டு குமரி மலரில் எழுதி இருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிநிலப்பரப்பு இருக்கவேண்டும் என்ற அவாவும் அவருக்கு இருந்திருக்க கூடும் என்பதை அவருடைய மெய்யறம் என்ற பாத்தொகுப்பில் 76-வது அதிகாரமாகிய நாடு என்ற தலைப்பில் ‘ஒரு மொழி வழங்குவ தொருதனி நாடு’ என்ற யாப்பில் இருந்து புரிந்து கொள்ளலாம். இங்கனம் தமிழின்பாலும், தமிழ்நாட்டின் பாலும் அன்பு கொண்டவராக விளங்கியவர் வ.உ.சி. அவர்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பும், தற்சார்பு பொருளாதார செயல்திட்டமும் முன்நிறுத்திய தொழிலாளர் உரிமைகள் போராளியும், தமிழ்ப்பற்றாளருமான வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்த நாளான இன்று மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

]]>
https://may17iyakkam.com/88940/may17/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5-%e0%ae%89-%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0
மோடி-அதானி: நாட்டை நாசமாக்கும் நட்பு – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88928/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/ https://may17iyakkam.com/88928/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/#respond Fri, 02 Sep 2022 07:22:28 +0000 https://may17iyakkam.com/?p=88928 மோடி-அதானி: நாட்டை நாசமாக்கும் நட்பு
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

2006-ம் ஆண்டு தனது முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 8.6% பங்குகளை விற்றதில் குறைந்தபட்சம் 200 கோடி அதானி இலாபம் அடைந்தார். இது முந்த்ரா துறைமுகத்தின் பங்குகளுக்கு குஜராத் அரசு வழங்கிய விலையை விட 14 மடங்கு அதிகமாகும்.

2012-ல் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து CAG ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது, குஜராத் அரசு பெட்ரோலிய நிறுவனத்திடமிருந்து இயற்கை எரிவாயுவை வெளி சந்தையில் வாங்கி, வாங்கிய விலையை விட குறைந்த விலைக்கு அதானி நிறுவனத்திற்கு விற்றது. இதன் மூலம் அந்நிறுவனம் 70.5 கோடி ரூபாய் லாபமடைந்தது. 2009-12 இடையே ஒப்பந்தபடி குஜராத் அரசு மின் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய மின்சாரத்தை அதானி மின் நிறுவனம் வழங்காததால், 240 கோடி தண்டம் வசூல் செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 79.8 கோடி மட்டுமே மோடி அரசு வசூல் செய்தது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88928/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/feed/ 0
நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது சமூகநலத் திட்டங்களா பெருநிறுவனங்களின் கடனா? – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை https://may17iyakkam.com/88916/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f/ https://may17iyakkam.com/88916/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f/#respond Tue, 30 Aug 2022 07:11:23 +0000 https://may17iyakkam.com/?p=88916 நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது சமூகநலத் திட்டங்களா பெருநிறுவனங்களின் கடனா?
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 12 லட்சம் கோடியை வராக்கடனான தள்ளுபடி செய்திருக்கிறார்கள். பெருநிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வரிகளை குறைத்து இப்போது 15% வரையிலும் வரிச்சலுகை அளித்திருக்கிறார்கள். அதனால் ஒரு வருடத்தில் அரசிற்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் 1.45 லட்சம் கோடி. இவ்வாறு கடன் தள்ளுபடி, வரிச் சலுகை என அனுபவித்தது குஜராத்தி பனியா, மார்வாடிகளால் நடத்தப்படும் பெருநிறுவனங்களே. இந்தியாவின் வெறும் 5,000-க்கும் குறைவாகவே இருக்கும் பெருநிறுவனங்களால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி. ஆனால் மாத வருமானம் ரூ.10,000 கூட ஈட்ட முடியாத நிலையில் இருக்கும் சாமானிய மக்களுக்கு வழங்கப்பட்ட சொற்பத் தொகைகளான சில ஆயிரம் கோடிகளில் வளர்ச்சி தடைபட்டு விட்டதாக மோடி சொல்கிறார்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88916/protests/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f/feed/ 0
நிதியை இழந்த தென்னிந்தியா நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்கிறது! – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் https://may17iyakkam.com/88912/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/ https://may17iyakkam.com/88912/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/#respond Mon, 29 Aug 2022 17:05:28 +0000 https://may17iyakkam.com/?p=88912 நிதியை இழந்த தென்னிந்தியா நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்கிறது!
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

இந்தியாவின் மக்கள் தொகையில் தென்னிந்திய மக்கள் தொகை என்பது 1951-ல் 26.2 சதமாக இருந்தது. இது 2022-ல் 19.8 சதமாக குறைந்திருக்கிறது. இதற்கு அடிப்படை காரணியாக இருப்பது 1970-களில் கொண்டுவரப்பட்ட மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை தென்னிந்திய மாநிலங்கள் முறையாக கடைப்பிடித்ததே ஆகும். அதே சமயம் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத இந்தி பேசும் மாநிலங்களின் மக்கள் தொகை இந்திய அளவில் 39% அளவிலிருந்து தற்போது 43% அதிகரித்திருக்கிறது. இதே நிலை தொடருமெனில் அடுத்த 20 ஆண்டுகளில் தென்னிந்தியாவின் மக்கள்தொகை இந்திய அளவில் வெறும் 12-15 சதமாக குறைந்து போகும். அதாவது இந்தியாவில் சிறுபான்மை சமூகமாக மாற்றப்படுவார்கள்.

இப்படியான கணக்கீட்டை மோடி அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அளவீடை கைகழுவி 2011 ஆண்டு மற்றும் அதற்கு பின்பான மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்கிறது.

இப்படியாக இந்திய நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் நான்கில் ஒருவீதம் அல்லது கிட்டதட்ட 25 சதம் குறைக்கப்படுமானால் தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரம் கேள்விகுறியாகும். ஆனால் அதே சமயம் இந்தியாவின் நாடாளுமன்ற தொகுதிகள் மக்கள்தொகை அதிகரிப்பின் காரணமாக அதிகரிக்கும். அப்படியான அதிகரிப்பில் வட மாநிலங்கள் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்கள் பெருத்த லாபமடையும். இந்தியாவின் ஆகப்பெரும்பான்மையை இந்தி பேசும் மாநிலங்கள் பெற்றுவிடும்.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88912/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
இலவசங்கள் இல்லையெனில், வரியும் கொடுப்பதில்லை என்போம்!! – மே 17 இயக்கக் குரல் தலையங்கம் https://may17iyakkam.com/88885/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/ https://may17iyakkam.com/88885/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/#respond Thu, 25 Aug 2022 16:19:35 +0000 https://may17iyakkam.com/?p=88885 இலவசங்கள் இல்லையெனில், வரியும் கொடுப்பதில்லை என்போம்!!
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

மக்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச மானியங்கள், சலுகைகள் என்பது அவர்கள் தங்கள் கடுமையான உழைப்பினால் ஈட்டியவை. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில், அம்மக்களின் உழைப்பில் மிகுந்த உபரியே நிதியாக வங்கிகளில் குவிக்கப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. தனியார் பெரு நிறுவனங்களுக்கு மூலதனமாக அளிக்கப்படும் இந்த நிதிமூலதனத்தின் அடிப்படை உரிமையாளர்கள் இந்த பாட்டாளிகளே. இம்மக்களை ஏமாற்றி சில சலுகைகளையும், மானியங்களையும் ‘இலவசமாக’ கொடுக்கப்படும் திட்டங்கள் என்று மலினப்படுத்தி வஞ்சிக்க விரும்புகிறது கார்ப்பரேட் இந்தியா.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

]]>
https://may17iyakkam.com/88885/protests/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/feed/ 0