எரிக் சொல்ஹெய்ம், தமிழ் நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் நியமிக்கப்படுவதற்கு முன்பாக, இலங்கையின் அதிபரான இரணில் விக்ரமசிங்கேவின் காலநிலை மாற்ற சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது மிகவும் குறி்ப்பிடத்தக்கது.
எரிக் சொல்ஹெய்ம் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை முன்னெடுத்த அந்த காலகட்டத்தில் விடுதலை புலிகளை சுற்றிக் கடுமையான புலனாய்வு வலையமைப்பு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பின்னப்பட்டது. அந்த வலையத்திற்குள் சிக்கிக் கொண்டதால் தான் புலிகள் பின்நாட்களில் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது.
“இந்தியப் பிரதமர் ஒருவர் வெளிநாட்டு சக்தியால் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. இதுபோல அமெரிக்காவின் ஜனாதிபதி மெக்சிகோவின் படையால் கொல்லப்பட்டதை சற்று நினைத்துப் பாருங்கள். இதற்காக அமெரிக்கர்கள் நிச்சயமாக ஒரு வலுவான வகையில் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகத்தான எதிர்வினையாற்றி இருப்பார்கள்” என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் இவர் மறைமுகமாக கூறுவது இந்தியாவும் ராஜீவ் கொலைக்கு இலங்கையுடன் இணைந்து தமிழீழத் தமிழர்களை கொன்று குவித்தது சரிதானே என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நார்வே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே, எரிக்கிடம் கோரிக்கை விடுத்தததும், அதற்கு நார்வே உதவிகளை வழங்கும் என எரிக் அவரிடம் உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றி எரிக் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். இவ்வாறான பின்னணியில் தான், மீண்டும் ரணில் விக்கிரமசிங், எரிக் சொல்ஹெய்ம்க்கு காலநிலை ஆலோசகராகப் பதவி கொடுத்து இருக்கிறார்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு தற்போது 6850 கோடி ரூபாய் (730 மில்லியன் பவுண்டுகள்) என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினார்களிலேயே அதிக செல்வம் உடையவராக உள்ளார். பிரித்தானிய பேரரசின் (UK) அரசரான சார்லசின் ஆபரணங்கள் தவிர்த்த சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு சொத்து மதிப்பு இவருடையது.
ரிஷி சுனக் தனது முழுமையான சொத்துக்களை அறிக்கையிடாமல், தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை மறைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் தற்போது எழுகின்றன. இத்தகைய வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளோடு நாம் அதிகம் கவனிக்க வேண்டியது அரசியலில் இவர் கொண்டுள்ள வலதுசாரி கண்ணோட்டமே.
கடந்த ஜூலை மாதம் நெருக்கடியின் போது ரிஷி சுனக் தனது நிதியமைச்சர் பதவியை முதலில் ராஜினாமா செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து பல அமைச்சர்கள் வெளியேறினர். இறுதியில் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு, தன்னை வளர்த்துவிட்டவரையே முதுகில் குத்தியவர் தான் ரிஷி சுனக்.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழையபடி கொண்டு செல்ல கடுமையான முடிவுகள் எடுப்பேன் என்கிறார் ரிஷி சுனக். ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த ஜெரமி கோர்பைன் உட்பட பலர், இது 1% செல்வந்தர்களை காப்பாற்ற 99% மக்கள் பொருளாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளிவிடும் என்கின்றனர்.
சீக்கியர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர் பிரீத்தி படேல். இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் பதவியில் இருந்த பிரீத்தி படேல் ஆர்.எஸ்.எஸ்.-ன் வெளிப்படையான ஆதரவாளர் என்று தெரிந்தும் அவரை ஆதரித்தவர் ரிஷி சுனக்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
மேற்கு ஆசியக் கடற்பகுதியில் சீனாவை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆபிரகாம் உடன்படிக்கைகள் போன்று இஸ்ரேல், இந்தியா, USA, UAE ஆகிய நாடுகளை கொண்டு அமெரிக்கா முன்னகர்த்திய அமைப்புதான் I2U2.
இந்தோ-பசிபிக் பகுதிக்கு குவாட் இருப்பது போல, மேற்கு ஆசிய பகுதிக்கு I2U2 “ஒரு முக்கிய விடயமாக” மாற முடியும் என்று அமெரிக்கா அண்மையில் கூறியது. குவாட் அமைப்பில் ஆஸ்திரேலியாவை முன்னிலைப்படுத்தி தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டது போல, இஸ்ரேலை முன்னிலைப்படுத்தி, இந்தியாவை பயன்படுத்தி அமெரிக்கா தனது விருப்பங்களை நிறைவேற்றக்கொள்ள முயற்சிக்கிறது. அமெரிக்காவின் விருப்பங்கள் முதன்மையாக்கப்படும் நிலையில், குவாட் போலவே I2U2-வில் இந்தியாவின் முக்கியத்துவம் கேள்விக்குறியாகவே உள்ளது.
I2U2 மூலம் இந்தியா அடையப்போகும் நன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. சீனாவிற்கு எதிரான ஒரு பகடைக் காயாக இந்தியாவை பயன்படுத்தும் நோக்கமே அமெரிக்காவிற்கு உண்டு. குவாட் துவங்கப்பட்ட போது இந்தியாவிற்கு இருந்த முக்கியத்துவம் நாளடைவில் குறைந்தது. இந்த நிலையில், I2U2-வில் இந்தியாவின் முக்கியத்துவம் எந்தவிதத்திலும் மேம்பட்டிருக்காது என்றே தெரிகிறது.
மேலும் வாசிக்க
]]>உத்தரகாண்ட் மாநிலத்தில் 2022 அக்டோபரில் நடக்க இருக்கும் யுத் அப்யாஸ் என்னும் இராணுவ கூட்டுப்பயிற்சி சீனா-இந்திய எல்லையில் நிகழ்கிறது. இதை சீனா தனக்கு எதிரான இராணுவ வியூகமாகவே எதிர்கொள்ளும். இப்படியாக சீனா-இந்தியா எல்லையில் உருவாகும் இராணுவ நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அமெரிக்க நலனுக்காக உருவாகக்கூடியவே அன்றி இந்தியாவின் தனிப்பட்ட நலன்கள் இதில் அடங்கவில்லை. இந்த அமெரிக்க சார்பு நிலையும், சீன எதிர்ப்பு நிலையும் இந்தியாவின் வடக்கு எல்லையில் மட்டும் போர் பதட்டத்தை உருவாக்காது. தமிழ்நாட்டின் கடற்கரையும், நிலப்பரப்பும் இந்த போட்டி அரசியலுக்குள்ளாக சிக்கிக்கொள்ளும்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
…உளவுபார்க்கும் திறன் வாய்ந்த யுவான்வாங்-5 எனும் சீன கண்காணிப்புக் கப்பல் 2022 ஆகஸ்டு 11, 12 தேதிகளில் இலங்கை துறைமுகத்தை வந்தடைய இருக்கிறது… இலங்கையின் கடற்பகுதியில், பொருளாதாரத்தில், பாதுகாப்பில் நடைபெறும் ஒவ்வொரு சிறிய மாற்றங்களும் இக்கடல் பிராந்தியத்தை பாதிக்கும். அவ்வாறு நடக்கும் மாற்றங்கள் இக்கடல்பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர்களின் வாழ்வை நேரடியாக, மறைமுக பாதிக்கவே செய்யும் என்பதை தமிழர்கள் மறக்கக்கூடாது.
வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9884864010
ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த வேண்டும், நேட்டோ அமைப்பை கலைக்க வேண்டும், உக்ரைனின் இனவெறி-வலதுசாரி-நாஜிக்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை முன்வைத்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, 01-03-2022 செவ்வாய் மாலை மே பதினேழு இயக்கம் சார்பாக ஒன்றுகூடல் நடைபெற்றது.
இதில் சிபிஐ மாநில துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் தோழர் ஐ.ஆறுமுகநயினார், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தோழர் தமிமுன் அன்சாரி, விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் வன்னியரசு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தோழர் தனியரசு, தமிழக மக்கள் புரட்சிக் கழகம் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், திவிக தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினா் தோழர் புதுமடம் ஹலீம், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் தோழர் முஹம்மது உசேன், தமிழர் விடுதலை கழகம் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, திராவிடத் தமிழர் கட்சி தோழர் சங்கர், பூவுலகின் நண்பர்கள் தோழர் வெற்றிச்செல்வன், சம்யுக்த கிசான் மோர்ச்சா மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணனன், திரைப்பட கலைஞர் தோழர் கவிதா பாரதி, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>காணொலி இணைப்பு:
மே பதினேழு இயக்கம்
9884864010
ரசியா-உக்ரைன் இடையேயான
போரை நிறுத்து!
* அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையை கலைத்திடு.
* ரசியாவினை முற்றுகையிடும் நேட்டோ-அமெரிக்க படை குவிப்பை நிறுத்து.
* உக்ரைனின் இனவெறி-வலதுசாரி-நாஜி படைகளை கைது செய்திடு.
* ரசிய படைகளை உக்ரைனிலிருந்து வெளியேறட்டும்.
போர் அழிவையே கொடுக்கும். அப்பாவிகளை அழிக்கும். மனித நேயத்திற்கும், போரை நிறுத்தவும் ஒன்று கூடுவோம்.
நாள: 01-03-2022 செவ்வாய் மாலை 4 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம் அருகே, சென்னை
STOP THE WAR
Dismantle NATO
Ban Racist NEO-NAZIS of UKRAINE
Withdraw RUSSIAN Forces
Let us challenge US-UK hegemonic imperialist expansion
Implement MINSK Agreement &
End the Suffering of Innocents
#StopWar#BanNATO#UkraineNazisRT
மே பதினேழு இயக்கம்
9884864010
யுக்ரென் பலியாக்கப்படுவதாக மட்டுமே செய்தியை ஊடகங்கள் பரப்புவதை பார்க்கமுடிகிறது. இந்நிலையில் மேலதிக தகவல்கள் நமக்கு சூழலை புரிய உதவும்.
யுக்ரேனின் கிழக்குப்பகுதியின் டான்பாஸ், லுகான்ஸ்க் பகுதி பெரும்பான்மை ரசிய இனமக்களைக் கொண்டது. இப்பகுதியிலிருந்து அதிபரானவரை 2014ல் அமெரிக்கா சார்பு, நாஜிக்குழுக்கள், பாசிஸ்டுகள், மேற்குலக ஆதரவு ஆற்றல்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வெளியேற்றினார்கள். மேலும் ரசிய இனமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு 14,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் 2015ல் உக்ரேன் அரசுடன் ரசிய பேச்சுவார்த்தை நடத்தி ஜெர்மனி, ப்ரான்ஸ் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் ரசிய இனமக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படுவது முதல் அம்மக்களின் தன்னாட்சி கோரிக்கையை ஏற்று உக்ரேனுடன் இணைந்த பகுதியாகவும், பாதுகாப்புடன் ரசிய இனமக்கள் வாழும் வகையில் எல்லைப்புறக்கொள்கையை உருவாக்க வேண்டுமெனும் ரசியாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
தன் இனமக்கள் வாழும் பகுதிக்கான பாதுகாப்பையும் பாரம்பரியமாக ரசியா-யுக்ரேன் நாடுகளுக்கிடையேயான உறவினை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்த வேண்டுமென ஒப்பந்தத்தின் நோக்கமாக அமைந்தது. இதை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்ட Organization for Security and Cooperation (OSCE) எனும் குழு மேற்பார்வையிட வேண்டுமெனப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை யுக்ரேனின் பாசிச, இனவெறி, நாஜிக்குழுக்கள் தடுத்தன. இதன் பின்னனியில் நேட்டோ, அமெரிக்க-இங்கிலாந்து தலையீடுகள் இருந்தன.
இந்நிலையில், ரசிய இனமக்கள் வாழும் பகுதியில் பெருமளவு யுக்ரேன்-நாஜிப்படை ராணுவம் குவிக்கப்பட ஆரம்பித்தது. ரசிய இனமக்கள் 60 லட்சம் பேர்வசிக்கும் இப்பகுதியை காக்கவேண்டுமென தொடர்ந்து ரசியா வலியுறுத்தியதை யுக்ரேன் செவிமெடுக்கவில்லை. இந்த மக்களில் 12 லட்சம் பேர் ரசிய குடியுரிமைக்கு கோரும் நிலை உருவானது. ஏனெனில் டான்பாஸ் பகுதி மக்கள் 1990களில் தம் பகுதிக்கு உரிய ஆட்சி அதிகாரப்பகிர்வு கோரி இருந்தனர். தங்கள் மொழி ஆட்சிமொழியாக வேண்டுமென்றனர். கூட்டாட்சி கொண்டு வரப்பட வேண்டுமென்றனர். இதற்கான பொதுவாக்கெடுப்பில் 90% மக்கள் ஆதரவாக வாக்களித்த போதும், இவை புறக்கணிக்கப்பட்டது.
மாறாக, இதன் பொருளாதார வளர்ச்சி நிராகரிக்கப்பட்டது. அரசு திட்டங்கள் புறக்கணிக்கபட்டன. வளமான இப்பகுதி கடும் நெருக்கடியை சந்தித்தது. இதற்கு யுக்ரேனின் தேசியவாத, பெரும்பான்மை மன ஆதிக்க நிலையே காரணமானது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தோன்றி இம்மக்களை அச்சுறுத்தியது. இச்சூழலில் யுக்ரேனின் ராணுவம்-நாஜி-பாசிச படைகளால் டான்பாஸ் பகுதி மக்கள் இனப்படுகொலையாகும் நிலை வந்த சமயத்திலேயே ரசியா படையை எல்லையில் குவித்தது. யுக்ரேன் படைக்குவிப்பை சொல்லாத நம் ஊடகங்கள் ரசியாவின் படை நகர்வினை மட்டுமே காட்டின.
இப்படியான மோசமான மனித உரிமை மீறல் ரசிய இனமக்கள் மீது நடக்க இருக்கும் நிலையை அமெரிக்கா-இங்கிலாந்து மறைத்து ரசியாவின் படைக்குவிப்பை மட்டுமே மையப்படுத்தி போர் பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்கினார்கள். OSCE குழுவின் தோல்வியே இந்நிலைக்கு காரணம் என்பதால் இதில் பொறுப்பு வகித்த ஜெர்மன், பிரான்ஸ் அரசுகள் அமைதிகாத்தன. பிரான்ஸ் ஒருபடி மேலே சென்று, அமெரிக்கா தவிர்த்த முடிவுகளை நாம் எடுக்கவேண்டுமென ஐரொப்பிய ஒன்றியத்தில் பேசியது. ரசியாவின் படையெடுப்பின் பின்னால் இருக்கும் இந்த அரசியலை மறைத்தே ஊடகங்கள் இங்கு யுக்ரேன் ஆதரவு குரலை எழுப்புகிறது.
டான்பாஸ் நிலையே 2007இல் ஈழத்திலும் இருந்தது. இலங்கை-தமிழீழ அமைதி ஒப்பந்தத்தை மேற்பார்வையிடும் நார்வே-ஸ்வீடன் நாடுகளின் பிரதிநிதிகள் கண்முன்னே இலங்கை ஒப்பந்தத்தை மீறி ஈழத்தின் மீது போர் தொடுத்தது. அச்சமயத்தில் போர் நிறுத்தத்தை பலமுறை ஈழ தன்னாட்சி அரசு கோரியது. இனப்படுகொலை நிகழ வாய்ப்பிருப்பதை அமைதிக்குழு Sri Lankan Monitoring Mision (SLMM), ஐ.நா-யுனிசெப், செஞ்சிலுவை உள்ளிட்ட அமைப்புகள் அறிந்திருந்தன. இதனாலேயே புலிகள் தலைமையிலான தமிழீழ தன்னாட்சி அரசு இந்த அமைப்புகள் வெளியேற வேண்டாமென கோரிக்கை வைத்தும், போர்நிறுத்தத்தை இலங்கையிடம் வலியுறுத்துமாறு சர்வதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளை கோரியது.
தன்னாட்சி பிரதேசமானது இலங்கை தீவிக்குள்ளாக தமிழர்களின் பாதுகாப்பையும், சுயாட்சியையுமே முன்வைத்தது. இலங்கை அமைதி ஒப்பந்தத்தை முறித்தால் தமிழர் இனப்படுகொலை நடக்குமென அறிந்தும் SLMM இலங்கையை தடுக்காமல் அமைதிகாத்தது. குரல் எழுப்பி இருக்க வேண்டிய நார்வேயின் எரிக்சோல்ஹேம் இன்றுவரை கள்ளமெளனம் காக்கிறார். தமிழினப்படுகொலையை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு இருந்தது.
2009 மே15ம் தேதி இனப்படுகொலை தடுப்பு ஐநா தலைமை பொறுப்பாளர் எச்சரிக்கை அறிக்கையை உலகிற்கு கொடுக்கிறார். மே14ம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு ஐ.நா அதிகாரியும் இவ்வாறே எச்சரிக்கை வெளியிடுகிறார். இது போன்ற நிலையே கிழக்கு உக்ரேனில் டான்பாஸில் இருக்கும் ரசிய இனமக்களுக்கு நிகழும் நிலை என்பதால் ரசியா அரசு, இந்தியாவை போல, எரிக்சோல்ஹேம் போல இனப்படுகொலை நடக்க அனுமதிக்காமல் முன்னகர்கிறது. இலங்கைக்கு பின்னே அமெரிக்கா-இங்கிலாந்து நின்றது. இன்று யுக்ரேன் பின்னால் நிற்கிறது.
இதை உணரவேண்டுமெனில் பாலஸ்தீனத்திற்கு நார்வேயால் முன்னெடுக்கப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம் குப்பையில் போடப்பட்டது. ஈழத்திற்கு நார்வே முன்னெடுப்பால் ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம் இனப்படுகொலையில் முடிந்து இன்றும் தொடர்கிறது. டான்பாஸ் மக்களுக்காக மின்ஸ்க்கில் போட்ட ஒப்பந்தம் குப்பையில் போட முடியாதவாறு யுக்ரேன் மீது போர் நடக்கிறது. இந்த அடிப்படைகளை ஊடகம் மறைக்கிறது. இந்த உண்மைகளை மறைக்கவே பாலஸ்தீனர்கள் தீவிரவாதிகள் எனப்பட்டார்கள், யாசர் அரபாத் படுகொலையானார். இதனாலேயே புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள், சுப.தமிழ்ச்செல்வவன், நடேசன், புலித்தேவன், இசைப்பிரியா, பாலச்சந்திரன் உள்ளிட்டோர் படுகொலையானார்கள்.
வரலாறை அறியாமல் உண்மை விளங்காது. உண்மை விளங்காமல் அரசியல் பிடிபடாது. அரசியல் பிடிபடவில்லையெனில் பாசிஸ்டுகளோடு நம்மையறியாமல் ஒன்றுசேறும் துயரம் நிகழும். இதற்கான அடிப்படைகளை அறியும் நூல்களை நிமிர் அரங்கில் வைத்திருக்கிறோம். வாருங்கள், வாசித்து வரலாறு அறியுங்கள்.
– தோழர் திருமுருகன் காந்தி
]]>காணொலி இணைப்பு:
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>