பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சிப்பதில் வரும் சிக்கல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தாண்டி, எப்படி இந்த கடினமான கட்டத்தை எதிர் கொண்டு கடந்து வர வேண்டும் என்பது தான் இப்படத்தின் முக்கிய கரு.
“உயிரை விட மானம் பெருசு தான். ஆனா என்னை பொருத்த வரைக்கும் மானம்கிறது என் உடம்புலயும் நான் போடுற டிரஸ்லையும் இல்ல; நான் வாழுற வாழ்க்கைல தான் இருக்கு.” என்கிறது. இதனை பாதிக்கப்படும் பெண்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, இதுநாள் வரையில் கற்பிக்கப்பட்ட அனைத்து பிற்போக்கான கருத்துக்களையும் தூக்கியெறிந்து விட்டு இனி வரும் காலங்களில் எதற்கும் அஞ்சாமல் இது போன்ற அநியாயங்களை தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.
நம் சமூகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவர்களின் நிலையை புரிந்து உறுதுணையாக இருப்பதாக திரையில் ஒரு கதாப்பாத்திரம் தோன்ற 30 வருடங்கள் ஆகிறது. நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் ஒரு சாமானிய பெண்ணின் வாழ்வில் அப்படி ஒரு ஆதரவு சுலபத்தில் கிடைப்பதில்லை.
மேலும் வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9884864010
இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் பெரும்பாலாலும் ‘கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுவதாக’ பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக குடிபோதையில் பெண்களைக் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் அன்றாட நிகழ்வாகி விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மது அருந்தும் கணவனால் மனைவி படும் துயரங்கள் சொல்லி மாளாது. தினமும் அடி உதைகளைத் தாங்கிக் கொண்டு திருப்பி அடிக்க முடிந்தாலும் அடிக்காத ஒரு அடிமையாக, ஒரு குடி நோயாளியின் மனைவி ஆகி விடுகிறார்.
கணவன் குடிக்கக் கூடாது என்ற பதற்றம் ஒரு புறம், கணவனை யாரும் எதுவும் தவறாக பேசிவிடக் கூடாது என்ற சுய மரியாதை மறுபுறம். இவை அனைத்திலும் சோர்ந்து விடாது கணவனை மதுவிலிருந்து மீட்கவும், சமூகத்தில் நிமிர்ந்து நன்னடை போடவும் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் ஒரு வகையில் போராளிகளே.
மதுவினால் பெண்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்புகளுக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் மது குடிப்பதை அரசுகளும் சட்டபூர்வ அங்கீகாரம் அளித்து அரசின் வருமானத்திற்காக குடி மக்களின் வாழ்க்கை தரத்தையே சீரழிக்கின்றன.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
இரண்டாவது அறிக்கையின் படி மாணவியின் உடலில் பல்வேறு காயங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் அறிக்கையில் இல்லாத காயங்கள் பற்றிய குறிப்புகள் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்றன. எலும்பு முறிவு ஏற்பட்ட தடயங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவரங்கள் போராடிய பொதுமக்களின் கேள்வியை நியாயப்படுத்துவது போலவே அமைந்திருக்கிறது. முதலில் நடந்த பிணக்கூறாய்வில் பதிவு செய்யப்படாத தடயங்களை இரண்டாவது ஆய்வு வெளிப்படுத்துவதால் காவல்துறையின், மருத்துவத்துறையின் நேர்மை கேள்விக்குள்ளாகிறது. ஒரு இளம்மாணவிக்கு நிகழ்ந்த இந்த கொடூர மரணத்தை குறித்து ஏன் அதிகாரவர்க்கம் நேர்மையாக நடக்க மறுக்கிறது எனும் கேள்விக்கான பதில் என்னவாக இருக்க முடியும்?
வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
5 மாத கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து அவளின் 3 வயதுக் குழந்தையை சுவரில் அடித்துக் கொன்ற சனாதன பார்ப்பன காட்டுமிராண்டிகளை மாலை அணிவித்தது, இனிப்பு வழங்கி சிறை வாயிலில் வரவேற்றனர். இந்த, இந்துவெறி “குஜராத் மாடலை” தான் மோடி இந்தியா முழுவதும் நிறுவிடப் பதைக்கிறார்.
கட்டுரையை வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010
அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படும் தருவாயில், நேரடியாக களத்தில் இறங்கிய மே 17 இயக்கத் தோழர்கள், நிகழ்வுகளை மிகவும் நுணுக்கமாக கண்காணித்து புலப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவதை உறுதி செய்தனர்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
சென்னை ஐஐடியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் மாணவிக்கு நீதி வழங்கிடு! ஐஐடி நிர்வாகம், பேராசிரியர்கள், காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடு! – மே பதினேழு இயக்கம்
மேற்கு வங்கத்தை சேர்ந்த தலித் மாணவி ஒன்றிய அரசின் உயர் தொழிற்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பிஎச்டி படிப்பை கடந்த 2017 முதல் மேற்கொண்டு வருகிறார். இவர் சக மாணவர்களால் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத ஐஐடி நிர்வாகம், ஓராண்டிற்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறை, மாணவர்களின் பாலியல் சுரண்டலுக்கு துணை போன பேராசியர்கள் என அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
அதே மேற்கு வங்கத்தை சேர்ந்த முதல் குற்றவாளியான உயர்சாதியை சேர்ந்த கிங்ஷீக்தேவ் ஷர்மா மற்றும் சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் தலித் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தவறான முறையில் புகைப்படம் எடுத்து அவரை தொடர்ந்து பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் அந்த மாணவி 3 முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தனது பிஎச்டி இணை வழிகாட்டியிடம் புகாரளித்த போது அவர் மாணவியை சாதிரீதியாக கொச்சைப்படுத்தியதோடு, மாணவர்களின் பாலியல் சுரண்டலுக்கு துணை போயுள்ளார். மேலும், மாணவி தனது ஆய்வை தொடர்வதற்கும் தடையாக இருந்துள்ளார்.
பல்வேறு தரப்பிலிருந்து ஊக்கம் கிடைத்ததால் ஐஐடி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அதனை ஐஐடி நிர்வாகம் முறையாக விசாரிக்காததோடு, மாணவி தனது ஆய்வை சமர்ப்பிக்கும் வரை குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் தமது ஆய்வை சமர்ப்பிக்கவும், ஐஐடி வளாகத்திற்குள் நுழையவும் தடை விதித்தது. ஆனால், மாணவர்கள் தொடர்ந்து இணையம் வழியாக அதே மாணவியின் வகுப்பில் கலந்துகொண்டு ஆய்வை தொடர்ந்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து மாணவி ஆய்வகத்தை பயன்படுத்துவதற்கும், ஆய்வுக்கான வேதிப்பொருட்களை பெறவும் தடை ஏற்படுத்தியுள்ளனர்.
இறுதியாக அந்த மாணவி மயிலாப்பூர் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ளாமலும், குற்றத்திற்கு ஆதாரமான மாணவர்களின் செல்ஃபோன்களை கைப்பாற்றாமலும் காலம் தாழ்த்தியுள்ளனர். ஓராண்டிற்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதிலும் பாலியல் வன்கொடுமை பிரிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட பின்பு, 9 மாதங்களுக்கு பிறகும் நடவடிக்கை எதுவும் எடுக்காதது தற்போது தெரிய வந்துள்ளது. காவல்துறையினரின் விசாரணையை காட்டி ஐஐடி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
கடந்த 4 ஆண்டுகளாக மாணவி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐஐடி நிர்வாகம், வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர்கள், காவல்துறை என அனைத்து தரப்பிலிருந்தும் நீதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதன்மை காரணமாக இருப்பது மாணவியின் சாதி. பட்டியல் சமூகத்தவர்கள், சிறுபான்மையினர்கள் மீது உயர்சாதி பார்ப்பனர்களால் நிரம்பியுள்ள ஐஐடியின் ஒடுக்கமுறை பலமுறை நடந்தேறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாத்திமா லத்தீப் என்னும் மாணவி தனது மரணத்திற்கு உயர்சாதி பார்ப்பனரான சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர் தான் காரணம் என்று கூறியும் இன்றளவும் பெரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
ஐஐடியில் தொடரும் சாதிய பாகுபாடும், அதனால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் மரணிப்பதும் தொடர் நிகழ்வாகி போனது. குற்றச்செயல்களில் உயர்சாதி பார்ப்பனர்கள் ஈடுபடுவதால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாதது இதற்கு காரணமாக அமைகிறது. தற்போது மேற்கு வங்கத்தை சேர்ந்த தலித் மாணவியின் புகாரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததோடு, குற்றச்செயலுக்கு உடந்தையாகவும் இருந்துள்ளனர். காவல்துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றத்தை மூடி மறைக்க முயன்றுள்ளனர்.
ஐஐடியில் தொடரும் சாதி அடிப்படையிலான குற்றச்செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு மேற்கு வங்க தலித் மாணவியின் புகாரை கொண்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ள ஐஐடி நிர்வாகத்தினர் மீதும், குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள் மீதும், தகுந்த நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
கோவை சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியரின் தொடர் பாலியல் தொல்லை மற்றும் பள்ளி நிர்வாகத்தினால் இழைக்கப்பட்ட அநீதியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பொன் தாரணியின் மரணத்திற்கு நீதி கேட்டு, அனைத்து முற்போக்கு அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று (14-11-2021) மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றனர். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு பள்ளியின் சார்பாக இழப்பீடு வழங்க வேண்டும், பள்ளிகளில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகாரளிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>இன்று (ஞாயிறு) மாலை 3:30க்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கோவை மாணவி மரணத்திற்கு நீதி கோரி கட்சி, இயக்கம், சாதி, மதம் கடந்து ஒன்றிணைவோம்.
நம் வீட்டு குழந்தைகளின் பாதுகாப்பிற்காக குரல் கொடுக்க வீதிக்கு வாருங்கள்.
மே பதினேழு இயக்கம்
9884864010
கோவை சின்மயா பள்ளியின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி பலி! பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடு! – மே பதினேழு இயக்கம்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் தொடர்ந்து கொடுத்து வந்த பாலியல் தொல்லை காரணமாக அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த பொன் தரணி என்ற பெண் குழந்தை உயிரை மாய்த்துள்ளார். மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு காரணம், பாலியல் புகார் அளித்தும் மிதுன் சக்கரவர்த்தி மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததே என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்தும், அரசியல் தொடர்புகள் மூலம் தப்பிக்க முயலும் பள்ளி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மே பதினேழு வலியுறுத்துகிறது.
இறந்து போன பொன் தரணி என்கிற மாணவி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் 12-ஆம் வகுப்பிற்கு இயற்பியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பொன் தரணிக்கு இயற்பியல் பாடம் எடுக்கும் மிதுன் சக்கரவர்த்தி கடந்த மார்ச் மாதம் முதல் பொன் தரணியிடம் தொடர்ந்து தவறாக நடந்துள்ளார். சிறப்பு வகுப்பு என அழைத்து வகுப்பு முடிந்ததும் மற்ற மாணவ மாணவிகளை அனுப்பிய பின்னர் பொன் தரணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பள்ளி முதல்வர் மீரா அவர்களிடம் பொன் தரணி புகாரளித்தும் அவர் மிதுன் சக்கரவர்த்தி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக மாணவி மீது தான் தவறு உள்ளது என்று கூறி அவருக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியும் அதே பள்ளியில்தான் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் இது குறித்து மாணவி தெரிவித்தபோது அவர் என் கணவர் அப்படிப்பட்டவர் அல்ல என்று கூறி மாணவி சொல்வதை ஏற்க மறுத்துள்ளார். நீ தான் மிதுன் சக்கரவர்த்தியுடன் பழகி இருக்கிறாய் என்று கூறி பொன் தரணியை பள்ளி முதல்வர் மிரட்டி இருக்கிறார். நீதி கிடைக்காத நிலையில் மாணவி பள்ளியைவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளியேறி வேறு பள்ளியில் படித்து வந்திருக்கிறார். பள்ளியை விட்டு நின்ற பின்பும் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்திருக்கிறார். பள்ளியினால் அநீதி இழைக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்த பாலியல் தொல்லை காரணமாக பொன் தரணி தற்கொலை செய்து கொண்டார்.
பாலியல் தொல்லை காரணமாக பொன் தரணி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வெளிவந்து பல்வேறு சனநாயக அமைப்புகளின் போராட்டத்தின் விளைவாக காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதிலும் பள்ளி நிர்வாகம் குறித்து கூறப்பட்ட பல்வேறு புகாரை தவிர்த்துவிட்டு வழக்கு பதிவு செய்து மிதுன் சக்கரவர்த்தியை மட்டும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாஜக தலைவர்களுடன் பள்ளி நிர்வாகிகள் கொண்டுள்ள அரசியல் தொடர்பு காரணமாக, இந்த பிரச்சனையில் பள்ளி நிர்வாகிகளை தப்ப வைக்கும் முயற்சிகளில் காவல்துறை ஈடுபடுகிறது. இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் வந்து சென்ற பின்பு பொன் தரணி குடும்பத்தினரை காவல்துறையினர் மிரட்டியதாக கள ஆய்வில் ஈடுபட்ட தோழர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக் குழந்தைகள் மீது பள்ளியில் நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் சமீபகாலமாக அதிகரித்தவண்ணம் உள்ளன. சில மாதங்கள் முன்பு சென்னை பத்மா சேசாத்திரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் குற்றச் சம்பவம் வெளிவந்து குற்றச்செயலில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்ததோடு முடிந்தது. தொடர்ந்து வெளிவந்த பல்வேறு பள்ளிகளின் பாலியல் குற்றச் சம்பவங்களின் இன்றைய நிலை என்னவென்று தெரியவில்லை. அனைத்து குற்றச்சாட்டுகளிலும் பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தது அம்பலமாகியும், பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. அப்போதே பத்மா சேசாத்திரி பள்ளி உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் இப்படியான பாலியல் குற்ற சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு மீண்டும் அதே தவறு நடைபெறுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு பள்ளி நிர்வாகம் கொண்டுள்ள அரசியல் தொடர்புகள் மிக முக்கிய காரணியாக உள்ளன. குறிப்பாக சென்னை பத்மா சேசாத்திரி மற்றும் கோவை சின்மயா வித்யாலயா பள்ளிகளின் நிர்வாகிகள் பாஜக தலைவர்களுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளனர். பெண் கல்வியை மறுக்கும், பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும், ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான உயர்சாதி ஆண்களின் பாலியல் குற்றங்களை நியாயப்படுத்தும் பார்ப்பனிய சிந்தனையோட்டத்தை கொண்ட இத்தகைய பள்ளி நிர்வாகிகள், தங்கள் பள்ளிகளில் நிகழும் பாலியல் குற்றங்களை ஒரு போதும் தடுக்கப்போவதில்லை. மாறாக, பள்ளியின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று குற்றச்செயலை மூடிமறைக்கும் செயல்களிலேயே ஈடுபடுகின்றனர்.
சின்மயா பள்ளியில் நடைபெற்ற பாலியல் குற்றம் ஒரு குழந்தையின் உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இதனை மிதுன் சக்கரவர்த்தி என்ற குற்றவாளியுடன் முடித்துவைப்பது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற ஊக்குவிக்கும். பொன் தரணி தற்கொலை வழக்கில் சின்மயா பள்ளி நிர்வாகிகள் மீது, குறிப்பாக முதல்வர் மீரா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இறந்த பொன் தரணியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
பள்ளிகளிலேயே பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க பாதுகாப்பு குழு ஏற்படுத்தும் வகையிலும், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையிலும் பள்ளிகளில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும். சென்னை பத்மா சேசாத்திரி பள்ளி, கோவை சின்மயா வித்யாலயா உட்பட பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பள்ளியை கைப்பற்றி அரசே நடத்த வேண்டும். தனியார் பள்ளிகள், குறிப்பாக சிபிஎஸ்சி பள்ளிகள் தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்படுவதையும், நிர்வாகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதையும் உறுதி செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
கோவை சின்மயா பள்ளியின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி பலியான மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்போம்!
தமிழக அரசே!
* பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும். பள்ளியை உடனடியாக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
* பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.
* மதத்தின் பெயரால் பள்ளிகள் தொடங்கி மாணவர்களை தொடர் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
* அனைத்து பள்ளிகளில் இருந்தும் பயிற்சி என்ற பெயரில் மதவெறி தூண்டி பாலியல் கொடுமைகளுக்கு மாணவிகளை பலிகடா ஆக்கும் இந்துத்துவ கும்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.
மே பதினேழு இயக்கம்
9884864010