குஜராத்தில் மோடியின் ஆட்சியின் கீழ் இந்துத்துவ பயங்கரவாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பில்கிஸ் பானுவிற்கு நீதி கேட்டு, தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக தோழர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் செப்டம்பர் 12 திங்கள் காலை 11 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரையும் அவசியம் பங்கேற்க மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
ஆதிக்க சாதிவெறி கொண்ட மிருகங்களால் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணிற்காக, அந்தப் பெண்ணிற்கான நீதியைப் புதைக்க அவசரமாக எரியூட்டிய அரச அதிகார மட்டங்கள் செய்த கொடூரத்தை வெளிக் கொண்டு வருவதற்காக, ஊடக அறம் கொண்டு செய்திகளைச் சேகரித்து, நீதிக்காக இணைய தளம் வழியாக மக்களின் பரப்புரை செய்து யோகியின் பாஜக அரசை அம்பலப்படுத்தினார் சித்திக் கப்பான். இந்த காரணத்திற்காகவே தடை செய்யப்படாத ஒரு அமைப்புடன் தொடர்புபடுத்தி, மதக் கலவரம் தூண்டுபவராக, இந்து விரோத மனநிலை கொண்டவராக சித்தரித்து இரண்டு வருடங்களாக பிணை கூட வழங்காமல் நீரிழிவு நோயாளியான சித்திக் கப்பானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது யோகி அரசு.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010