ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்ய முயற்சிக்கும் பாஜக சதியினை முறியடிக்க, ‘ஜல்லிக்கட்டு உரிமைப் பாதுகாப்பு மாநாடு’ மே பதினேழு இயக்கம் சார்பாக ஜனவரி 7, 2023 சனிக்கிழமை மாலையில் தாம்பரம் மார்க்கெட் அருகில் நடைபெற்றது.பறையிசை முழங்க, மே பதினேழு இயக்கத் தோழர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்வை துவங்கினர்.தோழர் கொண்டல் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்வினை தொகுத்து வழங்கினார். தோழர் பரந்தாமன் துவக்க உரை நிகழ்த்தினார்.நிகழ்வில் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் தாம்பரம் முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம்.எச்.ஜவஹருல்லா, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு பசும்பொன் பாண்டியன்.மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொருளாளர் திரு ஹாருண் ரஷீத், இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் திரு முகமது முனீர், எஸ்டிபிஐ கட்சியின் திரு ஏ.கே.கரீம், விசிகவின் மாவட்டத் தலைவர் திரு தேவ அருள் பிரகாசம், மதிமுகவின் வழக்கறிஞர் திரு ஆவடி அந்தரிதாஸ், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் திரு குடந்தை அரசன்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் திரு கே.எம்.சரீப், மக்கள் கண்காணிப்பக்கத்தின் தோழர் திரு ஹென்றி திபேன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
ஜல்லிக்கட்டு உரிமை பாதுகாப்பு மாநாடு!
இன்று (07/01/23 சனி) மாலை 4 மணிக்கு, தாம்பரம் சண்முகம் சாலை பாரதி திடலில்
ஜல்லிக்கட்டை தடை செய்ய முயற்சிக்கும் பாஜக சதியினை முறியடிக்க ஒன்றுதிரள்வோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
தாம்பரத்தில் நாளை 07.01.23 சனிகிழமை மாலை 4மணிக்கு நடைபெறவிருக்கிற ஜல்லிக்கட்டு பாதுகாப்பு மாநாடு குறித்து இன்று 06.01.23 வெள்ளிகிழமை பத்திரிக்கையாளர் மன்றத்தில் திரைகலைஞர்கள் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு.
காணொளி
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தலைப்பு : ’சல்லிகட்டு எனும் ஏறுதழுவல்’ விளையாட்டை அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்பட்டதமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வு என ஒன்றிய அரசு அறிவித்து தமிழர்களின் சல்லிகட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும்.
பங்கேற்போர்:
திரு. அமீர் – திரைப்பட இயக்குநர்
திரு. வெற்றிமாறன் – திரைப்பட இயக்குநர்
திரு. கரு.பழனியப்பன் – திரைப்பட இயக்குநர்
திரு. மீரா கதிரவன் – திரைப்பட இயக்குநர்
திரு. யுகபாரதி – பாடலாசிரியர்
திரு. கவிதா பாரதி – நடிகர்
திரு. சினேகன் – பாடலாசிரியர்
திரு. பிரம்மா – திரைப்பட இயக்குநர்
திரு. திருமுருகன் காந்தி – ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்
இடம்: சென்னை பிரஸ் கிளப், சேப்பாக்கம், சென்னை
நேரம்: 06-01-2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00
அனைத்து ஊடகத்தினரையும் பங்கேற்க அன்போடு அழைக்கிறோம்.
ஒருங்கிணைப்பு
மே பதினேழு இயக்கம்
தொடர்புக்கு
9884864010
ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது ஒன்றிய பண்பாட்டு அமைச்சரான மீனாட்சி லேகி , “ஒரு தேசிய பாரம்பரிய விழாவிற்கு மாற்றாக மற்றொன்றைத் தேர்வு செய்ய முடியாது ” என்ற மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.
ஒருபுறம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டே மறுபுறம் தனது அரசின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க பாஜக முயல்கிறது. மேலும் பீட்டா அமைப்பிற்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இதன்மூலம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர் விரோத பாஜக இரட்டை வேடம் போடுவது அம்பலமாகியுள்ளது. மெரினா புரட்சியின் மூலம் தமிழர்கள் போராடிப் பெற்ற உரிமை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது பாஜக.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010