சாதி ஒழிப்பு போராளி தோழர் சந்திரபோஸ் அவர்கள் மறைவு! மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்!
தமிழ்நாட்டின் சாதி ஒழிப்பு போராட்டக்களத்தில் நீண்டகாலமாக போராடி வந்த சாதி ஒழிப்பு போராளியும் தியாகி இம்மானுவேல் பேரவையின் நிறுவனத் தலைவருமான தோழர் பூ.சந்திரபோஸ் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சாதி ஒழிப்பு போராட்டக் களம் மாபெரும் தோழரை இழந்துள்ளது. தோழர் சந்திரபோஸ் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
சாதி ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் அவர்கள் பெயரில் அமைப்பை துவங்கி, சாதி ஒழிப்புப் போராட்டத்தில் நீண்டகாலம் அதிதீவிரமாக செயல்பட்டு வந்தவர் தோழர் சந்திரபோஸ். ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். பட்டியல் சமூகங்களிடையே ஒற்றுமையும் அவர்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வந்ததவர்.
தன்னலம் கருதாது தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல்கொடுத்து வந்தவர் தோழர் சந்திரபோஸ் அவர்கள். தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்கு சனநாயக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தவர். பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி கேட்டது உட்பட பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களிலும் முனநின்றவர். கொண்ட கொள்கையில் உறுதியுடன் இறுதிவரை நிற்பவர்.
சாதி ஒழிந்த தமிழின விடுதலையே தமிழ்த்தேசியம் என்று கருதியவர் தோழர் சந்திரபோஸ் அவர்கள். சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி, இடஒதுக்கீடு, தமிழ்த்தேசியம், தமிழீழ விடுதலை என பல்வேறு தளங்களில் பங்களித்தவர்.
தோழருடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மறக்க இயலா நிகழ்வுகளாகும். எம் தோழர்களுடனான அவரது கருத்தியல் பகிர்வுகள் எங்கள் தோழர்களுக்கு பல வரலாற்றுச் செய்திகளையும், போராட்ட உணர்வையும் கொடுத்தது என்பதனை இச்சமயத்தில் நினைவு கூர்கிறோம்.
இடஒதுக்கீடு உரிமையில் ‘பட்டியலின வெளியேற்றம்’ என்று பார்ப்பன பாஜக சதிவலையில் பட்டியலின மக்கள் வீழ்ந்துவிடாமல் இருக்க தோழர். சந்தரபோஸ் அவர்கள் மேற்கொண்ட கடும் பிரச்சாரம், போராட்டம் ஆகியன தமிழினம் முடியாத சமகால போராட்ட களங்களாகும். சனாதன ஆற்றல்களுக்கு சவால்விடும் தோழராக மக்களை அணிதிரட்டிய அவரது உழைப்பு போற்றுதலுக்குரியது.
தோழர் சந்திரபோஸ் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவுடன் போராட்டக்களத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக 21-01-2023 சனிக்கிழமை அன்று மறைந்தார். தோழரின் இழப்பு தமிழினத்திற்கு மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைத்து தோழர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் மே பதினேழு இயக்கம் ஆறுதல்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் சந்திரபோஸ் அவர்களுக்கு வீரவணக்கம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாளையொட்டி, இன்று 24-12-2022) காலை, சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியாருடைய உருவ சிலைக்கு மே பதினேழு இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தந்தை பெரியாரின் கருத்துக்களை முழக்கமிட்டவாறு அணியாக சென்று மரியாதை செலுத்தினர். இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் புருசோத்தமன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>யூடியூப் இணைப்பு
மே பதினேழு இயக்கம்
9884864010
உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுக்கும் தீர்ப்பு! சமூகநீதி வரலாற்றில் கருப்பு நாள்! – மே பதினேழு இயக்கம்
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னும் இந்திய ஒன்றியத்திலிருக்கிற அனைவருக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் சரி சமமாக கிடைக்காத ஒரு சூழல் இன்றும் நிலவுகிறது. இந்நிலையில், ஏற்கனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும்பான்மை இடங்களை அபகரித்துக் கொண்டிருக்கும் உயர்சாதியினருக்கு, அவர்களின் மொத்த மக்கள்தொகையை விட இரண்டு மடங்காக, எந்தவித புள்ளிவிபரங்களும் இல்லாமல், பொருளாதாரரீதியிலான 10% இடஒதுக்கீட்டை 2019-ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்தது. இதன் மீதான வழக்கில், உச்சநீதிமன்றம் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துகளின் அடிப்படையில் 07-11-2022 அன்று இதனை உறுதி செய்திருப்பது சமூகநீதி வரலாற்றில் கருப்பு நாளாகும்.
இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே இங்கு வாழும் பெரும்பான்மை மக்களான எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.-இனருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் கிடைக்கவேண்டிய இடஒதுக்கீட்டை திட்டமிட்டே நடைமுறைப்படுத்தாது வஞ்சித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஏற்கனவே பொருளாதாரத்தில் தன்னிறைவாக இருக்கும், மாதம் ரூ 65,000 எனும் அளவில் பொருளீட்டும் உயர்சாதியினருக்கு, அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 10% இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது சட்டத்திருத்தை அரசியலமைப்புக்கு எதிராக கடந்த 2019-இல் பாஜக அரசு கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை கிட்டதட்ட மூன்றாண்டுகளாக எடுத்துக்கொள்ளாமல் இருந்த உச்சநீதிமன்றம், தற்போது பல்வேறு மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிற இந்த நேரத்தில் எடுத்து அவசரகதியில் அதனை உறுதியும் செய்திருக்கிறது.
இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, எனவே இடஒதுக்கீட்டுக்கு அளவுகோலாக பொருளாதாரத்தை வைக்கமுடியாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக உள்ளது. மேலும், இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்துள்ளது. இருந்தும், உயர்சாதி ஏழைகள் என்று பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்ததையும் அதனை உச்சநீதிமன்றத்தி ஐவர் நீதிபதி குழு ஏற்று அங்கீகரித்தது எதனடிப்படையில்?
சமீபத்தில் மராத்தா இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு பிரச்சனை சம்பந்தமாக உச்சநீதிமன்றம் சென்றபொழுது, சம்பந்தப்பட்ட பிரிவினரின் மக்கள் தொகை விவரங்கள், அவர்களின் சமூக பொருளாதார நிலைமை போன்ற புள்ளிவிபரங்களை கேட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இப்போது, அப்படிப்பட்ட எந்த புள்ளிவிபரங்களையும் உயர்சாதியினர் இடஒதுக்கீட்டின் வழக்கின் போது கேட்காமல் போனது ஏன்?
இந்த நாட்டில் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டின் போது, இடஒதுக்கீடு அளவு 50%-க்கும் மேல் இருக்கக்கூடாது என்று 27% மட்டுமே (பட்டியல் சமூக மக்களுக்கு 22.5%) ஒதுக்கிய நீதிமன்றம், இப்போது மக்கள்தொகையில் 5% கூட இல்லாத உயர்சாதியினருக்கு 50%-க்கும் மேல் கூடுதலாக 10% இடஒதுக்கீட்டை கொடுத்திருப்பது எப்படி? பொருளாதார அளவுகோல் உயர்சாதியினருக்கு மட்டும் பொருந்துமென்றால், அது ஏன் இந்த நாட்டில் வாழும் பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொருந்தாது?
இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்களில் ஒருவரான பர்தி வாலா, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது லஞ்சமும், இடஒதுக்கீடும் இந்த நாட்டை சீரழிக்கிறது என்று தீர்ப்புகொடுத்து அவர்மீது விமர்சனம் வந்தபோது அந்த தீர்ப்பையே இரத்து செய்தவர். இப்படி இடஒதுக்கீடு குறித்து ஏற்கனவே எதிர்கருத்தோடு இருப்பவர் எப்படி இந்த அமர்வுக்குள் இருக்கமுடியும்? இப்படி உச்சநீதிமன்றத்தின் இந்த முரணான தீர்ப்பு பல கேள்விகளுக்கு வழி வகுத்திருக்கிறது.
இவையனைத்தையும் கடந்து பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு என்பதே இந்த நாட்டில் இதுகாறும் இருந்துவரும் சமூகநீதியின் படியான இடஒதுக்கீட்டு முறையை நீர்த்துபோகச் செய்யும் வழிமுறை. பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நீதியை கெடுக்கின்ற வகையில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட சங்பரிவார் இந்துத்துவ குழுக்கள் இந்த பொருளாதார அளவுகோலை எப்படியாகினும் புகுத்திவிட வேண்டுமென்று முயற்சி செய்து, இன்று நீதிமன்றம் வாயிலாக வெற்றியும் பெற்றியிருக்கிறார்கள். எனவே, சமூகநீதியின் அடித்தளத்தையே அடிசாய்க்கும் இந்த நடவடிக்கையின் ஆபத்தை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வோம். தந்தை பெரியார் ஏற்கனவே இதனை செயல்படுத்தியிருகிறார். அவர் வழியில் மக்களை ஒன்றுதிரட்டுவோம். சமூகநீதிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை தடுப்போம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
காணொளி உதவி: நீர்த்திரை
மே பதினேழு இயக்கம்
9884864010
காணொளி உதவி: நீர்த்திரை
மே பதினேழு இயக்கம்
9884864010
தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு, “இன உணர்வு கொள் தமிழா!!” – சுயமரியாதை கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், மே பதினேழு இயக்கம் சார்பாக சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் 27-09-2022 செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்வில் மே பதினேழு இயக்கத் தோழர்களின் பறையிசை விண்ணதிரச் செய்தது. தொடர்ந்து தோழர் கீதா, தோழர் கணேசன், தோழர் அனு ஆகியோர் பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் பாடல்களை பாடினர். இடையே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் மாவீரன் திலீபன் ஆகியோருக்கு மேடையில் மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தோழர் சௌந்திரபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்த, தோழர் தம்பி பிரபாகரன் துவக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து, தோழர் கொண்டல் சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் ஆகியோர் தமிழர் விரோத மனுதர்மத்தை விளக்கி சிறப்புரையாற்றினர். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், இந்துத்துவ ஆர்எஸ்எஸ் தூக்கிபிடிக்கும் மனுதர்ம கொள்கைகள் எவ்வாறு தமிழர்களை இழிவுபடுத்துகிறது என்பதை விளக்கி விரிவுரையாற்றினார். தோழர் ஜெயக்குமார் அவர்களின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.
மே பதினேழு இயக்கம்
9884864010
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அக்டோபர் 2 சமூக நல்லிணக்க பேரணி வெற்றி பெற வாழ்த்துகள்! பாசிசத்திற்கு எதிரான இப்பேரணியில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது! – மே பதினேழு இயக்கம்
காந்தியாரின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்த இந்துத்துவ பயங்கரவாத ஆஎஸ்எஸ் கும்பலுக்கு காவல்துறை அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், காவல்துறை அதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் கோரிக்கை விடுத்துள்ளன.
அதே வேளை, அக்டோபர் 2 அன்று தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறும் என அதன் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறிவித்திருந்தார். அதன்படி 25-09-2022 அன்று தமிழ் நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அவர்களை நேரில் சந்தித்து பேரணிக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைத்திருந்தார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக 26-09-2022 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், கட்சி வேறுபாடு பார்க்காமல் ஜனநாயக சக்திகள் அனைவரும் சமூக நல்லிணக்கப் பேரணியில் பங்கேற்க வேண்டுமென தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறைகூவல் விடுத்திருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாசிசத்திற்கு எதிரான இந்த முன்னெடுப்பை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. இந்துத்துவ பயங்கரவாத ஆஎஸ்எஸ்-பாஜக கும்பலின் தமிழ் நாட்டை சீர்குலைக்கும் சதி முறியடிக்கப்பட சமூக நல்லிணக்கப் பேரணி வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறோம்.
அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழ் நாட்டில் நாள்தோறும் வன்முறைகள் அரங்கேற்றும் நிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சென்றுள்ளது. ஆர்எஸ்எஸ்-பாஜக செல்வாக்கு மிகுந்த இடங்கள் அனைத்தும் இன்று பதட்டத்திற்குரிய இடமாக மாறியுள்ளது. ஆர்எஸ்எஸ்-பாஜக வட இந்திய மாநிலங்களில் மேற்கொள்ளும் வன்முறை கலாச்சாரத்தை சமூக நல்லிணக்க மாநிலமாக திகழும் தமிழ் நாட்டில் இறக்குமதி செய்வதே காரணமாகும். இதன் மூலம் சாதி மத அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தி தமிழர் விரோத அந்நிய இந்துத்துவ கருத்தியலை தமிழ் நாட்டில் திணிக்கும் வேலையை ஆர்எஸ்எஸ்-பாஜக முன்னெடுக்கிறது.
அதன் ஒரு பகுதியாக காந்தி பிறந்த நாளில் காந்தியை கொன்ற கூட்டம் தமிழ் நாடு முழுவதும் பேரணி நடத்த முயலுகிறது. காந்தியை கொன்றதை கொண்டாடும் வன்ம மனநிலையே இந்துத்துவ பயங்கரவாத ஆர்எஸ்எஸ்-பாஜகவிடம் தெரிகிறது. இதனை முறியடிக்கும் நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்கப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயலும் இந்துத்துவ பயங்கரவாத ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலுக்கு எதிராக தமிழ் நாட்டின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணையும் வகையில் சமூக நல்லிணக்கப் பேரணி அமையும் என மே பதினேழு இயக்கம் கருதுகிறது.
அந்த வகையில், தமிழ் நாடு முழுவதும் நடைபெறும் சமூக நல்லிணக்கப் பேரணியில் பங்கெடுப்பதென மே பதினேழு இயக்கம் முடிவு செய்துள்ளது. ஆகையால், சமூக நல்லிணக்கப் பேரணி எங்கெங்கு நடைபெறுகிறதோ அப்பகுதிகளை சேர்ந்த மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் அப்பேரணியில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், சமூக நல்லிணக்கப் பேரணி வெற்றி பெற அனைத்து உதவிகளையும் அளிக்க முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாசிச பயங்கரவாத ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிரான சமூக நல்லிணக்கப் பேரணியில், தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கட்சி வேறுபாடுகள் கடந்து ஓரணியில் பெருந்திரளாக பங்கேற்று, பேரணியை வெற்றிபெற செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.
மே பதினேழு இயக்கம்
988464010
புதுச்சேரியில், சம்பூகன் சமூகநீதிக் கூட்டியக்கம் சார்பாக, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வருணாசிரம எதிர்ப்பு மாநாடு, 24-09-2022 சனிக்கிழமை மாலையில், சுதேசிப் பஞ்சாலை அருகில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு மே பதினேழு இயக்கம் நடத்தும் சுயமரியாதை கொள்கை விளக்கக் கூட்டம்!
“இன உணர்வு கொள் தமிழா!!” பொதுக்கூட்டம்
நாள்: 27-09-2022 செவ்வாய் மாலை 5 மணிக்கு
இடம்: எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில், சென்னை
தமிழர்களை சூத்திரர்கள் என இழிவுபடுத்தியது யார்? தமிழர்களைப் பற்றி இந்துமத நூல் மனுஸ்மிருதி என்ன சொல்கிறது? அப்படியென்ன சொல்லிவிட்டார் ஆ.ராசா?
விளக்கமாக விவாதிப்போம்! மதவெறி மாய்ப்போம்!
நாளை (27-09-22) செவ்வாய் மாலை 5 மணிக்கு சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், மற்றும் தோழர் கொண்டல் சாமி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
அனைவரும் வருக! இன உணர்வு பெருக!
மே பதினேழு இயக்கம்
9884864010