Warning: include_once(/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php): failed to open stream: No such file or directory in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21

Warning: include_once(): Failed opening '/home/may17iyakkam/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase1.php' for inclusion (include_path='.:') in /home/may17iyakkam/public_html/wp-content/advanced-cache.php on line 21
சந்திப்பு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement https://may17iyakkam.com Sat, 16 Apr 2022 14:16:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.1.6 பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் அதிகாரவர்க்கத்தால் சுரண்டப்படும் பழங்குடி மக்களின் கிராமங்களுக்கு மே 17 இயக்கத் தோழர்கள் சந்திப்பு https://may17iyakkam.com/87731/protests/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/ https://may17iyakkam.com/87731/protests/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/#respond Thu, 14 Apr 2022 14:08:28 +0000 https://may17iyakkam.com/?p=87731

அண்ணலின் பிறந்த நாளில் பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் அதிகாரவர்க்கத்தால் அல்லல்பட்டு, ஆதிக்க ஆற்றல்களால் சுரண்டப்படும் பழங்குடி மக்களின் கிராமங்களுக்கு மக்கள் விடுதலை முன்னனி இயக்கத்தின் தலைவர் தோழர் மாரிமுத்தோடும், கேரள தோழர் சிவகுட்டி மற்றும் மே 17 இயக்கத் தோழர்கள் சென்று சந்தித்தோம். மனிதபிமானமற்ற வகையில் நிராகரிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் கடும் துயரத்தை கொடுக்கிறது.

பொள்ளாச்சி, ஆனைமலை காளியாபுரம் ஊராட்சிக்குட்பட்ட காக்காகொத்திப்பாறை பகுதியில் வாழ்ந்து வருகின்ற எரவளா எனும் தொல்தமிழ் பழங்குடிகள் வசித்த 48 குடிசைகளை அகற்றி தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தங்கள் உடமைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் குடிசைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டியப்பகுதியில் இருக்கும் அரசு நிலத்தை பழங்குடி மக்களுக்கு ஒதுக்கித்தரக் கோரி பழங்குடி மக்கள் துணை ஆட்சியரை அணுகியுள்ளனர். இப்பகுதியில் இம்மக்களுக்கு வாழவழியில்லாமல் குழந்தைகளுடன் தவித்த நிலையில் பொள்ளாச்சி துணை ஆட்சியர் திரு.தாகரேசுபம் ஞானதேவ்ராவ் அவர்களை அணுகி தங்களுக்கு நிலப்பட்டா ஒதுக்க கோரிக்கை வைத்தபொழுது உதாசீனப்படுத்தியதாகவும், கண்ணியக்குறைவாக நடத்தியதாக மக்கள் புகார் தெரிவித்து பட்டியலினமக்கள் ஆணையத்திற்கு முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் துணை ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்களை திசைதிருப்பும் வகையில் ஆனைமலை தாசில்தார் திருமதி.பானுமதி தீர்வு அளிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அவரும் மக்களைச் சந்திக்கவில்லை. காக்காகொத்திப்பாறை பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ஒரு செண்ட், அரை செண்ட் என மனிதாபிமானமற்ற வகையிலேயே ஆட்சியர் கடந்த காலங்களில் நிலம் ஒதுக்கி உள்ளனர். இங்கு வீடுகள் போல தோற்றமளிக்கும்மனிதர் வாழவே இயலாத நிலையிலான குடியிருப்புகளில் குடும்பங்கள் வாழ்வது மிக துயரமாக உள்ளது. அரை செண்ட் நிலத்தில் கலெக்டரோ, தாசில்தாரோ குடும்பத்துடன் மலையடிவாரத்தில் வசிப்பார்களா என்பதை கலெக்டர் தான் சொல்லவேண்டும். இப்படியான வஞ்சகத்தை அதிகாரவர்க்கம் ஏழை பழங்குடி மக்களுக்கு நிகழ்த்திவருவது அருவருப்பான ஒன்று. அதிகாரவர்க்கம் மக்கள் மீதான எவ்வித அக்கரையற்று இருப்பது மட்டுமல்ல, மாறாக பழங்குடிகள் விரோதமாக செயல்படுகிறது. து.ஆட்சியர், தாசில்தார் என பலரால் புறக்கணிக்கப்பட்ட இப்பழங்குடிகள் இந்நிலத்தின் பூர்வகுடிகள். உழைக்கும் இப்பூர்வகுடிகள் இதற்கு பிறகும் புறக்கணிக்கப்படுவார்களெனில் சனநாயக விரோத நிலையை அதிகாரிகள் மேற்கொள்வதாகவே நாம் உணரவேண்டியவர்களாகிறோம். அப்படி தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு அலைக்கலைக்கப்பட்டால் மக்கள் விடுதலை முன்னணி தோழர்களுடன் இணைந்து மே 17 இயக்கம் மக்கள்திரள் போராட்டங்களில் பங்கேற்கும்.

இதே நிலையில் வெப்பாரை, மேற்குபாறைமேடு, செல்லப்பிள்ளை கரடு, சுள்ளொமேட்டுபதி, மாணிக்கம்மூலை, KPM காலனி ஆகிய இதேபகுதியில் இருக்கும் இரவாள பிரிவு பழங்குடி மக்கள் போதிய போக்குவரத்து, சாலை , குடியிருப்பு, விவசாய நிலமற்ற நிலையில் வாழ்கிறார்கள். ஆகவே இம்மக்கள் சுயமரியாதையோடு வாழும் வகையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் பின்வரும் கோரிக்கைகளை வைக்கிறோம். குறைந்தபட்சம் 2 ஏக்கர் விவசாய நிலமும், 5 செண்ட் குடியிருப்பு நிலத்தையும் வழங்க தமிழக திமுக அரசும், மாண்புமிகு முதல்வர் அவர்களும் ஆவண செய்யவேண்டுமென கோரிக்கை வைக்கிறோம்.அண்ணலின் 131வது பிறந்தநாளான சமத்துவநாளிலாவது விடியலை ஏற்படுத்தி மகிழ்ச்சியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டுமென அம்மக்களின் கோரிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இச்செய்தியை தோழமைகள் பகிர வேண்டுகிறோம்

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்

]]>
https://may17iyakkam.com/87731/protests/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/feed/ 0
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு ஐயா. கி. வீரமணி அவர்களை, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்திப்பு https://may17iyakkam.com/87616/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86/ https://may17iyakkam.com/87616/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86/#respond Fri, 25 Mar 2022 07:50:44 +0000 https://may17iyakkam.com/?p=87616

‘நீட் எதிர்ப்பு’ பிரச்சாரத்தை தமிழ்நாடெங்கும் மேற்கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு ஐயா. கி. வீரமணி அவர்களை, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தும், பிரச்சார பயணம் வெற்றி பெறவும் மே பதினேழு இயக்கம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் பெரியாரின் பன்முக ஆளுமை நூல் தொகுப்பு உள்ளிட்ட இதர நிமிர் நூல் வெளியீடுகளையும் ஆசிரியர் அவர்களிடத்தில் அளித்தார்.

மே பதினேழு இயக்கம்

9884864010

]]>
https://may17iyakkam.com/87616/protests/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86/feed/ 0
பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும், பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் டாக்டர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களை தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் குடந்தை அரசன் சந்திப்பு https://may17iyakkam.com/84328/protests/caste/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95-2/ https://may17iyakkam.com/84328/protests/caste/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95-2/#respond Sat, 07 Nov 2020 07:51:45 +0000 https://may17iyakkam.com/?p=84328

தமிழகத்தை எப்படியாகினும் கலவர காடாக மாற்றி விடவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அவதூறுகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தமிழகமெங்கும் பரப்பி வருகிறது. அதனை தொடர்ந்து நாளை நவம்பர் 6 ஆம் தேதியிலிருந்து வேல் யாத்திரை என்கிற பெயரில் ஒரு கலவர நிகழ்ச்சியையும் நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதனை தமிழகத்தில் இருக்கிற முற்போக்கு சக்திகள் அனைவரும் இணைந்து தடுத்திட வேண்டும் என்று பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும், பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாகவும் நேற்று (04.11.2020) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் டாக்டர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களை கூட்டமைப்பின் சார்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியும், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசனும் அவர்களும் சந்தித்து பேசினார்கள்.

]]>
https://may17iyakkam.com/84328/protests/caste/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95-2/feed/ 0
மறவபட்டி கிராமத்தில் பிளேடால் முதுகில் கிழிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் சரவணக்குமார் மற்றும் குடும்பத்தினரை மருத்துவமனையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் சந்தித்து ஆறுதல் https://may17iyakkam.com/81419/protests/caste/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3/ https://may17iyakkam.com/81419/protests/caste/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3/#respond Tue, 15 Oct 2019 17:09:44 +0000 http://may17iyakkam.com/?p=81419 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட மறவபட்டி கிராமத்தில் பிளேடால் முதுகில் கிழிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் சரவணக்குமார் மற்றும் குடும்பத்தினரை மருத்துவமனையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இங்குள்ள ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் தொடர்ச்சியாக சாதிய ரீதியாக பல்வேறு கொடுமையினை அனுபவித்து வந்திருக்கின்றனர். ஆதிக்க சாதியினரின் பகுதிக்குள் செருப்பு அணிந்து செல்லக்கூட அனுமதி மறுக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இத்தடை நீக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தார்கள்.

அந்த ஊரைச்சார்ந்த அனைவரும் பாலமேடு அரசுப்பள்ளியில் ஒன்றாகவே படிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த 11/10/2019 அன்று சரவணக்குமார் என்ற ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூகத்து மாணவனை, உடன் படிக்கும் ஆதிக்கசாதியை சேர்ந்த சக மாணவன் சாதிய ரீதியில் திட்டி முதுகில் பிளேடினை வைத்து தாக்கியுள்ளான்.

சாதிப்பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்து சாதிவெறியைத் தூண்டும் வேலையினை பல்வேறு சாதிய அமைப்புகளும் செய்து வருகின்றன. கடந்த தலைமுறையோடு சாதி என்ற கொடூரத்தினை ஒழித்துவிட வேண்டும் என ஜனநாயக விரும்பிகள் அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கும்போது சாதிய அமைப்புகள் அடுத்த தலைமுறைகள் மாணவர்களிடம் சாதிவெறியை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய சாதிய அமைப்புகள் மீது அரசு கடுமையான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். அடுத்த தலைமுறை மாணவர்கள் மனதில் சாதிவெறி எனும் நஞ்சு விதைக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.

இந்து மதத்தின் கொடிய நோயான இந்துத்துவ சாதிய மனப்பான்மை கிராமங்களை தாண்டி பள்ளி மாணவர்களின் பள்ளிக்கூடம் வரை நீண்டுள்ளதையும், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பது இன்னமும் வெறும் வாசகங்களாக பள்ளிக்கூட புத்தகங்களில் மட்டுமே உள்ளன என்பதையுமே இக்கொடிய சம்பவம் காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவனுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பக்கபலமாக இருப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

அதே நேரத்தில் சமூகத்தில் புரையோடியிருக்கும் இந்துத்துவ-சாதிய மனப்பான்மையினை ஒருங்கிணைந்த சமூக நடவடிக்கையின் மூலமே நீக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசானது பள்ளிகளிலும் பெற்றோர் தங்களது வீட்டிலும் தொடங்க வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

]]>
https://may17iyakkam.com/81419/protests/caste/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3/feed/ 0