எளிய மக்கள் மீதான காவல்துறையின் வன்முறைக்கு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு முடிவுகட்டாமல், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் செயலற்று நிற்பதை மக்கள்விரோத நடவடிக்கையாகவே பார்க்க இயலும். காவல்துறை நேரடியாக முதல்வர் கட்டுப்பாட்டில் இயங்கும் துறையாக இருக்கும் பட்சத்தில் இவ்வகையான தோல்வி நிர்வாகத் தோல்வியாக பார்க்க இயலாது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
இந்நாடு உண்மையான விடுதலையை போராடி பெற்றிருக்குமெனில் இந்த மெட்ராஸ் போலீஸ் கலைக்கப்பட்டு, இந்திய அரசியல் சாசனப் பயிற்சி பெற்ற, சொந்த மக்கள் மீது பரிவு கொண்ட, அடக்குமுறை மீது நம்பிக்கை வைத்திராத, அனைவரையும் சமமாக பாவிக்கும் மனநிலை கொண்ட காவல்துறை நமக்கு கிடைத்திருக்கும். ஆனால் இந்த மாற்றங்கள் சாத்தியமாகாது போனதாலேயே 1942-இல் வெள்ளையனே வெளியேறு என்று போராடிய போராளிகளை அடித்து கொலை செய்த அதே காவல் அதிகாரிகள் 1947-க்கு பின்னரும் அதிகாரத்தில் இருந்தார்கள் என்பது கசப்பான உண்மை தானே?
கட்டுரையை வாசிக்க
]]>அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் அவர்கள், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். இரவி குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு வலைத்தள ஊடகத்தில் பேசியதற்காக 23-04-2022 அன்று இரவு மதுரை மாநகர காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நள்ளிரவில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார். கருத்துரிமைக்கு எதிராக, ஜனநாயக விரோதமாக பசும்பொன் பாண்டியன் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஆரிய சனாதன எதிர்ப்பு, சமூகநீதி தளத்தில் பசும்பொன் பாண்டியன் அவர்கள் மதுரையை மையமாக கொண்டு ஆற்றலுடன் செயலாற்றி வருபவர். இந்துத்துவத்தை கடுமையாக விமர்சித்து ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து வீரியத்துடன் கருத்துக்களை முன்வைத்து வருபவர். அப்படியாக, தமிழர் இறையாண்மைக்கு எதிராக ஜனநாயக விரோத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆளுநரை விமர்சித்ததற்காக பசும்பொன் பாண்டியன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கருத்துரிமைக்கு எதிரானதாகும்.
ஜனநாயகத்திற்கு விரோதமாக நீட் விலக்கு உள்ளிட்ட தமிழ்நாடு சட்டமன்ற மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கும் ஆளுநருக்கு எதிராக இதுபோன்ற விமர்சனங்களை ஆளுங்கட்சியான திமுக உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள், இயங்கங்கள் தொடர்ந்து வைத்து வருகின்றனர். சமீபத்தில் ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதே போன்று எதிர்ப்பினை முன்வைத்த பசும்பொன் பாண்டியன் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும்.
ஆளுநர் மீதான திமுக உள்ளிட்ட கட்சிகளின் விமர்சனம் போன்றே பசும்பொன் பாண்டியன் அவர்கள் ஆளுநரை விமர்சித்ததற்காக அவரை சிறையிலடைத்த தமிழக திமுக அரசை கண்டிக்கின்றோம். சிறையிலடைக்கப்பட்டுள்ள அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் மீதான வழக்கை உடனடியாக இரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வரும் பசும்பொன் பாண்டியன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் துணை நிற்கும் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த விக்னேஷூக்கு நீதி வழங்கு! காவல் மரணங்களை தடுத்து நிறுத்து! – மே பதினேழு இயக்கம்
சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவராக இருந்து வந்த விக்னேஷ் என்னும் இளைஞர் காவல்துறை விசாரணையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பதும், அதனை மூடி மறைக்கும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர் என்ற செய்தியும் அதிர்ச்சியளிக்கிறது. அந்த இளைஞரை கைது செய்ததிலிருந்து உடலை அடக்கம் செய்தது வரை காவல்துறையினர் எவ்வித சட்ட நடைமுறையையும் பின்பற்றவில்லை என்று தெரிய வருகிறது. சென்னை காவல்துறையின் இந்த சட்டவிரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் விக்னேஷ். இவர் மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவராக இருந்து வந்தார். கடந்த 18-ம் தேதி இரவு சுரேஷ் என்னும் தனது நண்பருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, கெல்லிஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு G5 தலைமைச்செயலக குடியிருப்பு காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரும் குடித்திருந்ததாகவும், கத்தி வைத்திருந்ததாகவும் பின்னர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில், வாகன சோதனையின் போதே ஒரு போலீஸ் தலைகவசத்தால் விக்னேஷ் தலையில் தாக்கியதாகவும், காவல் நிலையத்தில் விசாரணையின் போது கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். காலையில் மயக்கம் வருவதாக கூறிய விக்னேஷை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, அதன் பின்னர் அவரது தம்பியை கட்டுபாட்டில் வைத்து உடற்கூராய்வு செய்து உடலை எரிக்க முயன்றுள்ளனர்.
விக்னேஷை கைது செய்ததும் காவலர்கள் அவரது கைப்பேசியை பிடுங்கிவிட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் சொல்லாமல் இருந்துள்ளனர். அவர் இறந்த பிறகே அவரது தம்பியை தேடிப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அனைத்து செயல்களை மறைக்க முயன்றுள்ளனர். உடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பருக்கு கூட எந்த விசயமும் தெரியாமல் மறைத்துள்ளனர். உடற்கூராய்வின் போது விக்னேஷின் முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளதை அவரது தம்பி கவனித்துள்ளார். காவல்துறையின் உயர் அதிகாரிகள் முதற்கொண்டு அனைவரும் ஒன்றுகூடி அவர் உறவினர்கள் பத்திரிக்கையாளர்களிடம் பேசிவிடாதபடி கட்டுப்பாட்டில் வைத்து, உடற்கூராய்வு செய்து முடித்த கையோடு பிணத்தை எரிக்க முயற்சிக்க, நீதிபதியின் உத்தரவிற்கு பின்பு உடலை புதைத்துள்ளனர்.
ஒருவரை கைது செய்தால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் எதனையும் காவல்துறையினர் பின்பற்றாததோடு, உடற்கூராய்வு செய்து பிணத்தை உறவினர்களிடம் கூட ஒப்படைக்காமல், விக்னேஷ் முகத்தை கூட பார்க்க விடாமல் சட்டவிரோதமாக பிணத்தை எரிக்கவும் முயன்றுள்ளனர். மேலும், விக்னேஷ் குதிரையின் உரிமையாளர் மூலம் விக்னேஷ் குடும்பத்தாருக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து விசயத்தை மூடி மறைக்கவும் முயன்றுள்ளனர். உடற்கூராய்விற்கான மாற்றுக்கருத்து கேட்கவும், மறு உடற்கூராய்வு செய்ய முடிவெடுப்பதற்கு போதிய அவகாசம் வழங்கவும் மறுத்துள்ளனர். நீதிபதியும் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.
காவல்நிலைய மரணம் தமிழ்நாட்டில் அதிகளவில் நடைபெறும் சூழலில் இச்சம்பவம் அது குறைந்தபாடில்லை என்பதையே காட்டுகிறது. சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ், சேந்தமங்கலம் மாற்றுத்திறனாளி என காவல்நிலையக் கொலைகள் தமிழ்நாட்டையே உலுக்கினாலும் இது தொடர்கதையாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அதற்கு காவலர்களுக்கு உரிய உளவியல் பயிற்சியும் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் வேண்டுமென தமிழ்நாட்டு அரசை மே பதினேழு வலியுறுத்துகிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் முதற்கொண்டு அனைத்து காவலர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவே உயிரிழந்த விக்னேஷிற்கு வழங்கப்படும் நீதியாக அமையும். மேலும், விக்னேஷ் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினர் மீதான காவல்துறையினரின் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படுவதும், காவல்நிலைய மரணங்கள் ஒழிக்கப்படுவதுமே சமூகநீதியை பாதுகாப்பதற்கு ஒப்பாக அமையும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
கொரானா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும். பேரணிகள் நடத்துவது வழக்கமாக நடைபெறும் ஓர் அரசியல் நிகழ்வாகும். அதுவும் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் விதமாக மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒற்றுமை அணிவகுப்பை நடத்த பிஎஃப்ஐ கட்சி முயன்றுள்ளது. அதனை காவல்துறை மறுத்துள்ளது ஜனநாயக விரோத செயலாகும்.
அதேவேளை தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனையின் இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐஎம்ஏ) சார்பாக ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பேரணிக்கு அனுமதி அளித்ததோடு, தாம்பரம் ஆணையர் இரவி கொடியசைத்து துவக்கி வைத்தும் உள்ளார். இதே போல், இதற்கு முன்னரும் ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கில், சமூகத்தில் பிளவை உண்டாக்கும் பேரணிகளுக்கு அனுமது அளிப்பதும், ஜனநாயக சக்திகளின் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பதும், காவல்துறையின் ஜனநாயக விரோத போக்கை காட்டுகிறது.
காவல்துறையின் இத்தகைய ஜனநாயக விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சமூகநீதியை, மத நல்லிணக்கத்தை முன்னெடுத்து செல்லும் தமிழ்நாட்டில், காவல்துறையின் போக்கு அதற்கு எதிர்மறையாக அமைவது தமிழ்நாட்டை பின்னோக்கி தள்ளும். தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
98848641010
]]>மே பதினேழு இயக்கம்
9884864010
]]>முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தொடர்பாக அவரின் பெற்றோரை சந்தித்தோம். உடல்நலமற்ற பெற்றோர், இளைய தம்பிகளை கரையேற்றவும், வறுமையிலிருந்து மீளவும் போராடி கல்வி கற்ற மாணவன் மணிக்கண்டன் இறப்பு அக்குடும்பத்தை மீளமுடியாத நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. காவல்துறையின் அத்துமீறும் வன்முறைகள் எளியவர்கள் வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. வரம்பற்ற இந்த வன்முறைகள் கேள்வி எழுப்பப்படவில்லையெனில் இந்த அரச வன்முறை அனைவரின் மீதும் பாயும் நாள் வெகுதொலைவில் இல்லை.
-தோழர் திருமுருகன் காந்தி
]]>காணொலி உதவி: India Ahead News
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாணவர் மணிகண்டன் மரணம்! தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! – மே பதினேழு இயக்கம்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள நீர்க்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர் வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றதாக கீழத்தூவல் காவல்நிலையத்துக்கு கடந்த 4-ம் தேதி அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை முடிந்து வீடு திரும்பிய மணிகண்டன் 5ம் தேதி அதிகாலையில் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். விசாரணையின் போது காவல்துறையினரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்திருக்கக் கூடும் என்று உறவினர்கள் போராடி வருகின்றனர்.
காவல் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலைக்கு பிறகு காவல்நிலைய மரண மரணங்கள் மக்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், மாணவர் மணிகண்டனது மர்ம மரணம் மக்களிடையே கேள்வியை உண்டாக்கியுள்ளது. மணிகண்டன் உயிரிழப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த பின்பு மர்மமான முறையில் மரணமடைந்தது, விசாரணையின் போது காவல்துறையினர் கடுமையாக தாக்கியதே காரணம் என்று கூறுகின்றனர்.
மாணவர் மணிகண்டன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரின் உறவினர்கள், காவல்துறை விசாரணையினால் தான் மணிகண்டன் இறந்தார் எனக்கூறி அவரின் உடலை வாங்க மறுத்து தற்போது வரை போராடி வருகின்றனர். உண்மை கண்டறியும் விதமாக மானவரது உடலை மறு உடற்கூராய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நல்ல உடல்நிலையில் காவல் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாணவரின் மரணத்திற்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சியும், உளவியல் ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எளிய மக்கள் மீது தொடரும் காவல்துறையினரின் இத்தகைய அராஜக போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினரை பணியிலிருந்து நீக்கி, கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இது போல தொடரும் காவல்நிலைய சித்திரவதைகள், கொலை ஆகியவை குறித்த உரிய கவனமெடுத்து அனைவர் மீதும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசுப்பணியும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
30 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளான இஸ்லாமியர்களையும், தமிழின உணர்வாளர்களையும் விடுவிக்க கோரி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக 15-08-2021 ஞாயிறு மாலை சட்டமன்றம் நோக்கிய பேரணி சென்னையில் நடைபெற்றது. இதில், மே 17 இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
மே 17 இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு ஆற்றிய உரை.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>