யூடியூப் இணைப்பு:
மே பதினேழு இயக்கம்
988484010
விடுதலையடைந்த ஆறு தமிழர்களில் ஒருவரான இரா.பொ.இரவிசந்திரன் அவர்கள் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோரின் மரியாதை நிமித்தமான சந்திப்பு 22-11-2022 அன்று மாலை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திசை புத்தக நிலையத்தில் நடைபெற்றது. தோழர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>நீண்டகாலமாக சிறையில் வாடும் ஆறு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு விடுவிக்க கோரி, எஸ்டிபிஐ கட்சி சார்பாக செப் 8 வியாழன் காலை சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்றார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>நீண்டகாலமாக சிறையில் வாடும் ஆறு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு விடுவிக்க கோரி, எஸ்டிபிஐ கட்சி சார்பாக செப் 8 வியாழன் காலை 10 மணியளவில் நடைபெறும் சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டை பேரணியில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார். அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
மூவர் தூக்கை தடுத்து நிறுத்த தன்னுயிர் ஈந்த தழல் ஈகியர் தோழர் செங்கொடி அவர்களின் 11-வது நினைவுநாளில் (28-08-2011) வீரவணக்கம் செலுத்துவோம்! – மே பதினேழு இயக்கம்
இராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறைபட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி கிடைக்காமல் வாடிக்கொண்டிருக்கும் 7 நிரபாராதித் தமிழர்களின் விடுதலையை தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தது. 1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஏழு தமிழர்களில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு மட்டும் தூக்குத் தண்டனையும் இறுதியாக உறுதி செய்யப்பட்டது.
பலமுறை மூன்று தமிழர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட இந்திய ஒன்றியத்தால் முயற்சி எடுக்கப்பட்டாலும், மக்கள் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டங்களால் அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2011-ம் ஆண்டும் அவர்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விடவே செப்டம்பர் 9-ம் தேதி மூன்று நிரபராதித் தமிழர்களையும் தூக்கிலிடுவது என்று இந்திய ஒன்றிய அரசு முடிவெடுத்திருந்தது.
இதனை எதிர்த்து தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. காஞ்சிபுரத்தில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்ட காஞ்சி மக்கள் மன்ற தோழர்களில் ஒருவரான தோழர் செங்கொடி அவர்கள், தன் இன்னுயிரை தந்தாவது ‘மூன்று தமிழர்களின் தூக்குத்தண்டனையை தடுத்துவிட வேண்டும்’ என்று முடிவெடுத்து ஆகஸ்டு 28-ம் தேதி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்னால் உயிர் ஈகம் செய்தார். அவரது உயிர் பிரியும் வேளையிலும் “மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்! அவர்களை விடுதலை செய்!” என்று முழக்கமிட்டபடியே ஈகியரானார். அப்பொழுது அவர் இறுதியாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் “தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். – இப்படிக்கு தோழர் செங்கொடி” என்று பதிவிட்டிருந்தார்.
எந்த மூன்று தமிழர்களின் உயிர் காக்க தோழர் செங்கொடி அவர்கள் தழல் ஈகியரானாரோ, அவர்களில் ஒருவரான தோழர் பேரறிவாளன் அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தோழர் செங்கொடி அவர்களின் ஈகத்தை கொச்சைப்படுத்த நினைத்த பார்ப்பன ஊடகங்களின் பொய் முகங்களும் கிழிக்கப்பட்டுள்ளன. மீதம் இருக்கும் 6 நிரபாராதித் தமிழர்களும் விடுதலையாகும் பொன்னாளே தோழர் செங்கொடியின் ஈகத்திற்கு நாம் ஈடு செய்யும் நன்னாள்.
இன்னாளில், மூன்று நிரபராதி தமிழர்களின் தூக்குத் தண்டனையை தடுத்து நிறுத்த தழல் ஈகியரான தோழர் செங்கொடி அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
தோழர் பேரறிவாளன் விடுதலைக்கு பிறகான தொடர் பயணங்களுக்கு நடுவில், 25-05-2022 அன்று மாலை தோழர் பேரறிவாளன், அற்புதம்மாள் மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் நேரில் சந்தித்து உரையாடினர். அவர்களோடு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். எதிர்பாராத இச்சந்திப்பை ஏற்படுத்தி மகிழ்ச்சிக்குள்ளாக்கிய தோழர் டேவிட் பெரியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>யூடியூப் இணைப்பு
]]>காணொலி இணைப்பு:
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழீழ இனப்படுகொலைக்கான 13ஆம் ஆண்டு நினைவேந்தல் குறித்தும் பேரறிவாளன் அவர்கள் விடுதலை குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக இன்று (18-05-2022) மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
ஊடகவியலாளர்களிடையே பேசிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்த சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை ஒதுக்கிய அரசிற்கு நன்றி தெரிவித்து, வரும் மே 22 ஞாயிறு மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
மேலும், பேரறிவாளன் அவர்களின் விடுதலை மகிழ்ச்சியானது என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் அதிகாரத்தை எடுத்துக்கூறியுள்ளது என்றும், மற்ற 6 பேரின் விடுதலையையும் உறுதி செய்வதாக கூறிய முதலமைச்சரின் வாக்குறுதியை வரவேற்பதாகவும் தோழர் திருமுருகன் காந்தி பேசினார். ஊடகவியலாளர்களிடையே இனிப்பு பகிரப்பட்டு பேரறிவாளன் அவர்களின் விடுதலை கொண்டாடப்பட்டது.
இச்சந்திப்பின் போது, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் தோழர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>இராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர் உண்ணாவிரதம்! அரசே உடனடியாக பரோல் வழங்கிடு! – மே பதினேழு இயக்கம்
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு அப்பாவி தமிழர்களில் ஒருவர் முருகன். நீண்டகாலமாக சிறையில் வசித்து வரும் முருகன் அவர்கள், சிறை விடுப்பு (பரோல்) கேட்டு பலமுறை மனு அளித்தும் அவரது மனு நிராகரிக்கப்படுகிறது. இதனால் தனக்கு பரோல் வழங்கக் கோரி கடந்த மே 1 முதல் வேலூர் சிறையில் தொடர் உண்ணாநோன்பு இருந்து வருகிறார். இந்நிலையில் 16 நாட்களை கடந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
முருகன் உள்ளிட்ட எழுவர் மீது முன்பு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தற்போது ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உரிமையான அரசியலமைப்பு உறுப்பு 161-ன் கீழ் முருகன் உள்ளிட்ட எழுவரையும் தமிழ்நாடு அமைச்சரவை விடுவிக்க தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய ஆளுநர், அதனை நீண்ட காலம் கிடப்பில் வைத்திருந்து பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவரும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் முருகன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.
30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முருகன் அவர்கள், 6 நாட்கள் சிறை விடுப்பு கோரி சிறை நிர்வாகத்திடம் பல முறை விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதற்கு முன்னர் பாகாயம் காவல்நிலையத்தில் பொய்யாக அவர் மீது புனையப்பட்ட இரண்டு வழக்குகளை காரணம் காட்டி முருகன் அவர்களின் விண்ணப்பத்தை பல முறை சிறை நிர்வாகம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசு விடுவித்தும், விடுவிப்பதற்கான அதிகாரம் யாரிடம் உள்ளது என்ற அரசியலமைப்புச் சட்ட சிக்கலில் சிறைபட்டிருக்கும் முருகன் அவர்களுக்கு 6 நாட்கள் சிறை விடுப்பு கூட அளிக்க அரசு முன்வராததால், வேலூர் சிறையிலேயே தொடர் உண்ணாநோன்பு இருக்க முடிவு செய்து கடந்த 16 நாட்களாக தொடர் உண்ணாநோன்பில் உள்ளார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து சிறையிலே மயக்கமடைந்து படுத்த படுக்கையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தோழர் புகழேந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். முருகன் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், சிறை அதிகாரிகள் அவரது ஆபத்தான உடல் நிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், உடனே தலையிட்டு முருகனின் உயிரை காப்பாற்ற வேண்டுமென வழக்கறிஞர் தோழர் புகழேந்தி அவர்கள் சிறை கைதிகள் உரிமை மையத்துக்கு விண்ணப்பம் வைத்துள்ளார்.
விடுதலை என்று அறிவித்துவிட்டு 6 நாட்கள் சிறைவிடுப்பு கூட வழங்காமல் இருப்பது அரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. பேரறிவாளன், முருகன் அவர்களின் மனைவி நளினி, இரவிச்சந்திரன் போன்றோருக்கு தமிழ்நாடு அரசு சிறை விடுப்பு அளித்துள்ளது போன்று முருகன் அவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு உடனடியாக நீண்டகால சிறைவிடுப்பு வழங்க வேண்டுமென திமுக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. செய்யாத குற்றத்திற்காக யாரும் அனுபவிக்காத 30 ஆண்டுகளுக்கும் மேலான இருண்ட சிறைவாசத்தை அனுபவித்து வரும் முருகன் அவர்களின் நியாயமான, மனிதாபிமானமிக்க சிறைவிடுப்பு கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
மே பதினேழு இயக்கம்
9884864010