பண்டோரா பேப்பர்ஸ்: தேசபக்தர்களின் தேசவிரோதம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
இந்த பட்டியலில் இடம்பெற்றவர்கள் அனைவரும் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாகவும், அரசுக்கு நெருக்கமானவர்களாகவும் உள்ளனர். இவர்கள் தான் தேசபக்தி பாடம் எடுபவர்களாகவும் உள்ளார்கள். இந்தியர்களின் பசி குறியீடு பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளை விடவும் இந்தியாவின் நிலை தரம்கெட்டு போயுள்ளது. தேசமக்களின் பெரும் விழுக்காடு மக்கள் பசியுடன் உறங்கச்செல்லும் சூழலில், தேசபக்தி வேடமிட்டு வரி ஏய்ப்பு உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் தேசபக்தி பற்றி விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பாடமெடுப்பது வெட்கக்கேடு!
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
தேசபக்தர்களை அம்பலப்படுத்திய பண்டோரா பேப்பர்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
மோடியின் நெருங்கிய நண்பரும் கொடையாளருமான அதானி குடும்பம் தொடங்கி அனில் அம்பானி, நீரவ் மோடி பெயர்கள் இந்த பண்டோரா பேப்பரில் வெளியாகி உள்ளது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் எலிகாப்டர் ஊழலில் சிக்கிய ராஜீவ் சக்சேனா, கவுதம் கைத்தான்; தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதாடிய ஹரிஷ் சால்வே, தில்லியில் போராடும் விவசாயிகள் இந்தியாவின் மரியாதையை சீர்குலைப்பதாக கருத்து கூறிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் என பட்டியல் நீளுகிறது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
கொள்ளை நோயிலும் கொள்ளையடித்த மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
பி.எம். கேர்ஸ் நிதியம் உருவாக்கப்பட்ட சமயத்தில் தான் இந்தியாவில் மிகப்பெரிய அளவில், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த இந்த மக்கள், பசியிலும், தாகத்திலும் பல தங்கள் சொந்த ஊரை அடைய பல மைல் தூரம் தினமும் நடந்தனர். இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியானார்கள். இந்த பி.எம் கேர்ஸ் நிதி அந்த புலம்பெயர் மக்களுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பி.எம்.கேர்ஸ் மூலமாக வாங்கப்பட்ட 10 ஆயிரம் வென்டிலேட்டர்களின் தரமற்ற முறையில் வாங்கி உபயோகப்படுத்தப்படாமல் வீணாகின. அதிலும் பெரும் ஊழல்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
]]>இன்றைய ஸ்பேஸஸ் அரங்கில்,
“ஊழலும் மின்சாரமும்”
என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற மின் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர்
சா. காந்தி அவர்கள்
உரையாற்றுகின்றார்.
மே 17 இயக்கக் குரல் இணையதளத்தில் இன்று வெளியான,
“மின்சார வாரியத்தை மூழ்கடிக்கும் ‘ஊழல் மின்சாரம்’! அதிமுகவின் தனியார்மய கொள்ளை.”
என்ற கட்டுரையின் பிண்ணனியிலான விரிவான உரை.
மே 17 இயக்க டிவிட்டர் அரங்கில் (https://twitter.com/May17Movement) அரங்கில் இன்று (28-06-2021) இரவு 9 மணிக்கு இணைந்திருக்கவும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
மின்சார வாரியத்தை மூழ்கடிக்கும் ‘ஊழல் மின்சாரம்’! அதிமுகவின் தனியார்மய கொள்ளை.
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை
ஜி.எம்.ஆர் நிறுவனத்திடமிருந்து 1998லிருந்து 2014 வரை மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளது. இந்த நிறுவனத்திடமிருந்து 196 மெகாவாட்டை வாங்கிக்கொண்டிருந்தது மின்சார வாரியம். அந்த சமயத்தில் இந்த ஜி.எம்.ஆர் நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.77 விலைக்கு விற்றது. ஆனால் அச்சமயத்தில் அரசின் உற்பத்தி-கொள்முதல் விலையோ யூனிட்டிற்கு ரூ2.20 என இருந்ததால், இந்நிறுவனத்திடம் கொள்முதல் செய்யவேண்டாமென்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 30-03-2012இல் சொன்னது. ஆனாலும் அதிமுக அரசு, ஆணையத்தின் தீர்ப்பிற்கு பின்னரும் மூன்றாண்டுகளுக்கு அதிக விலைகொடுத்து மின்சாரத்தை வாங்கியது.
கட்டுரையை வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010
RBIஇன் முக்கிய பதவிக்கு ஊழல் குற்றச்சாட்டில் இருப்பவரை நியமிப்பதா?
பிஜேபி அரசு ஊழலுக்கெதிரான ஒரு கட்சியாக 2014இல் போலியாக சித்தரிக்கப்பட்டுதான் இந்திய ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வங்கியில் கடனை வாங்கிவிட்டு திருப்பி கட்டாமல் பெரும்பணக்காரர்களை பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தது, பணமதிப்பிழப்பின் போது குஜராத கூட்டுறவு வங்கியில் அமித்ஷா பணத்தை மாற்றியது. ரபேல் ஊழல் என ஊழலின் ஊற்றுக்கண்ணே அந்த கட்சி தான் என்பது வெட்டவெளிச்சமானது. அதன் தொடர்ச்சியாக தற்போது ரிசர்வ் வங்கியின் கடன் சீரமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் தலைவராக கே.வி.காமத் என்பவரை நியமித்திருக்கிறார்கள். (படம் 01இல் இருப்பவர்)
இந்த கே.வி.காமத் என்பவர் 23வருடங்களாக தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், கடன் ஒப்புதல் அளிக்கும் குழுவிலும் இருந்தவர். இவர் இந்த பதவியில் இருந்த சமயத்தில் தான் விடியோகான் நிறுவனத்திற்கு 3000கோடி ரூபாய் முறையான ஆவணங்கள் இல்லாமல் கடன் அளித்ததாக சிபிஐயால் வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது.. அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக செல்வி சாந்தா கோச்சரின் (படம் 2இல் இருப்பவர்) பெயரோடு இந்த கே.வி.காமத்தின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
இப்படி ஏற்கனவே கடன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஜயால் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை கொரோனா காலத்தில் யாருக்கு கடன் வழங்கவேண்டுமென்று முடிவு எடுக்கும் ரிசர்வ் வங்கியின் முக்கிய குழுவின் தலைவராக நியமித்திருப்பது மீண்டும் ஊழலுக்கு வழி வகுக்காதா? இது தான் பிஜேபியின் ஊழல் ஒழிப்பின் லட்சணமா என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி கேட்டுள்ளது. https://www.moneycontrol.com/news/business/bank-union-approaches-rbi-seeking-review-of-kv-kamaths-appointment-as-loan-restructuring-committee-head-5677211.html
மே17 இயக்கம்
9884072010
மோடி அரசின் மெகா வெண்டிலேட்டர் ஊழலுக்கு மேலும் ஓர் ஆதாரம் சிக்கியது.
இந்தியா நேபாளத்திற்கு 28மில்லியன் மதிப்புள்ள 10 வெண்டிலேட்டர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 09.08.20 அன்று கொடுத்திருக்கிறது. 28மில்லியனென்றால் 2.8கோடி. 10 வெண்டிலேட்டர்களின் விலை 2.8கோடி என்றால் ஒரு வெண்டிலேட்டரின் விலை 28லட்சம். ஆனால் இந்தியாவில் மோடி பிம்.எம் கேர் நிதியிலிருந்து வாங்கிய ஒரு வெண்டிலேட்டரின் விலை 4லட்சம்.
இப்படியாக 4லட்சம் பெறுமான வெண்டிலேட்டர்களை 24லட்சம் கூடுதலாக ஏன் மோடி அரசு வாங்கி நேபாளதுக்கு இலவசமாக கொடுதததாக கணக்கு காட்டியிருக்கு. அப்படியென்றால் மீதமிருக்கிற அந்த 24லட்சம் எங்கு போனது? ஏற்கனவே பி.எம்.கேரில் நடந்த ஊழல் குறித்து விரிவாக இரண்டு பதிவுக்கு முன்னால் எழுதியிருக்கின்றோம் படிக்க https://www.facebook.com/mayseventeenmovement/posts/3778028198881278
இப்படியான ஊழல்களை எல்லாம் யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மோடி அரசு ஏற்கனவே இருக்கிற பேரிடர் வங்கி கணக்கு இல்லாமல் பிரதமர் வங்கி கணக்கு என்ற ஒன்றை புதிதாக உருவாக்கி அதை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்றும் மாற்றியிருக்கிறார்கள். ஆனால் கெட்டிகாரன் புளுகு எட்டுநாளைக்கி தான் என்பது போல இப்போது மோடி அரசின் புளுகு வெளியே வந்துவிட்டது.
மே 17 இயக்கம்
9884072010
பிஜேபி மோடியின் பி.எம் கேர் ஊழல் அம்பலம்
கொரோனா பெரும்தொற்றில் இந்தியாவே நிலைகுலைந்துபோயிருக்கும் வேளையில் எரிகிற வீட்டில் கிடைப்பது லாபமென்கிற ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க நிதி தாருங்களென்று ஏற்கனவே இருக்கும் அரசு கணக்கை தவிர்த்துவிட்டு மோடி புதிய கணக்கில் நிதி கேட்டார். மேலும் இந்த கணக்கை தணிக்கை செய்யமுடியாதென்றும், எவ்வளவு பணம் வருகிறது என்ன செலவு செய்திருக்கிறோமென்ற கணக்கையும் காட்டதேவையில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தது மோடி அரசு. இந்த செயல்பாட்டை அப்போதே பலரும் இது ஊழலுக்குத்தான் வழிவகுக்குமென்று எச்சரித்தனர். இப்போது முன்பு சொன்னது போல பி.எம் கேரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. அதாவது
ஆகஸ்ட் 06’2020அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பி.எம்.கேர் நிதியிலிருந்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாநில மருத்துவமனைகளுக்கு 18,000 வெண்டிலேட்டர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வாங்கி அனுப்பப்பட இருக்கிறதென்றும் மொத்தம் 60,000வெண்டிலேட்டர்கள் இன்னும் சில மாதங்களில் உள்நாட்டிலேயே தயாரித்து கொடுக்கப்படுமென்றும் அதில் 50,000 வெண்டிலேட்டர்கள் பிஎம்.கேர் நிதியிலிருந்தும் 10,000வெண்டிலேட்டர் மத்திய அரசு நிதியிலிருந்தும் கொடுக்கப்படுமென்று அறிவித்தது. https://www.hindustantimes.com/india-news/indian-ventilators-will-be-geo-tagged-to-prevent-misuse-health-ministry/story-YelSyGN6mv8W56qCXlyJ4L.html
இந்நிலையில் முன்று நாட்களுக்கு பிறகு நேற்று ஆகஸ்ட் 09’2020இல் பிஜேபியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பிஜேபியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா சொன்னதாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் ”இன்று 50,000வெண்டிலேட்டர்கள் பி.எம்,கேர் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் இன்னும் 20,000வெண்டிலேட்டர் விரைவில் கொடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது”. (இணைப்பை 2ஜ பார்க்க)
அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பானசுகாதாரத்துறை 18,000வெண்டிலேட்டர்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதென்று சொல்லும்போது, பிஜேயின் தலைவர் ஏன் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிமாக்கி 50,000என்று சொல்ல வேண்டும்.அப்படியானால் மீதமிருக்கிற 32,000வெண்டிலேட்டர்கள் எங்கே? இதற்கான பணம் எங்கே? ஏற்கனவே 2.5லட்சம் பெருமானமுள்ள வெண்டிலேட்டர்களை 4லட்சம் கொடுத்து மோடி அரசு வாங்குவதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இப்போது எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவது எதனால்? அதேபோல மொத்தமே 60,000 வெண்டிலேட்டர்கள் தான் என்று அரசு சொல்கிறது. ஆனால் பிஜேபியோ 70,000கணக்கு சொல்கிறது.
ஆக எப்படிப்பார்த்தாலும் கொரோனா தொற்றை பயன்படுத்தி வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழலை பிஜேபி அரசு செய்திருக்கிறது என்பது மேற்கூறிய அவர்களின் அறிக்கையின் வாயிலாகவே அறியமுடிகிறது. இதன் உண்மை தன்மையை அறிய பி.எம்.கேர் நிதியை உடனடியாக அரசின் வரம்பிற்குள் கொண்டுவந்து முறையான தணிக்கை செய்து உண்மையை நாட்டுமக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
மே17 இயக்கம்
9884072010
சரியாக 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த நிகழ்வு. 1999 டிசம்பர் மாதம் 24ம் தேதி காத்மண்டுவில் இருந்து புதுடெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC814 ல் கடத்தப்பட்டு முதலில் அமிர்தசரசில் தரையிறக்கப்பட்டு பின் துபாய் இறுதியாக தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்த கந்தகார் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அமிர்தசரசில் தரையிறக்கப்பட்டபோது ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலமாக பயணிகளை காப்பாற்றமுடியும் என்ற சூழல் இருந்தபோதும் அன்றைய பா.ஜ.க அரசு அதை தவிர்த்தது. அதற்கு காரணம் அந்த விமானத்தில் பயணிகளுடன் இந்திய உளவு அமைப்பின் மிக முக்கியமான அதிகாரி சசி பூசன்சிங் இருந்ததுதான் என்றனர். இறுதியாக கந்தகாரில் பேச்சுவர்த்தையின் அடிப்படையில் மூன்று தீவிரவாதிகளை விடுவித்து, பயணிகளையும் இந்திய அதிகாரியையும் காப்பாற்றினார்கள். தீவிரவாதிகளுடனான பேச்சுவார்த்தையை முன்நின்று நடத்தியவர் அன்றைய இந்திய உளவுத்துறையின் தலைவர் அஜித் தோவல். இவர் விடுவித்த மூன்று தீவிரவாதிகள்தான் பின்நாளில் ஜெயிஸ் இ முகமது எனும் அமைப்பை துவங்கி இந்தியாவில் பாராளுமன்ற தாக்குதல் முதல் புல்வாமா வரை அனைத்து தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள்.
இவ்வளவு பெரிய பாதுகாப்பு தோல்வியை நிகழ்த்திய அஜித் தோவலுக்கு 2014ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவின் அதி உயர் பொறுப்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை கொடுத்தது மோடி அரசு. தோல்வியுற்ற அதிகாரிக்கு எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை மோடி அரசு கொடுத்தது?? யார் இவருக்கு சிபாரிசு செய்திருப்பார்கள் என்று தேடினால் 1999ம் ஆண்டு கடத்தப்பட்ட IC814 விமானத்தில் நடு இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்த அந்த 50வயது முதியவர்தான். கந்தகாரில் அந்த விமானம் நின்றபோது சுவிஸ்ரலாந்து அரசும் இத்தாலி அரசும் தனது சிறப்பு அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி தீவிரவாதிகள் என்ன கேட்டாலும் கொடுத்துவிடுங்கள், எப்படியாவது நாங்கள் அவரை பத்திரமாக மீட்டெடுக்கவேண்டும் அவருக்கு ஏதாவது ஆனால் உலகத்தில் பெறும் நிதிநெருக்கடி ஏற்படும் என்று நெருக்கினார்கள். அன்றைய சுவிஸ் வெளியுறவு அமைச்சர் ஜோசப் தெசி இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந் சிங்கிற்கு தொலைபேசியில் விடாமல் தெந்தரவு செய்தார். அதுமட்டுமல்லாது சிறப்பு அதிகாரி ஹன்ஸ் தலைமையில் ஒரு குழு இந்தியாவிற்கு தனிவிமானத்தில் பறந்து வந்தது. தீவரவாதிகளுடம் சுமூகமாக பேசி இந்தியா சார்பாக ஒரு பெரும் தொகையை அஜித் தோவல் தீவிரவாதிகளுக்கு கொடுத்து அந்த 50வயது முதியவரை மீட்டு சுவிஸ் அதிகாரிகளுடன் அனுப்பி வைத்தார்.
அவ்வளவு முக்கியமான அந்த நபரின் பெயர் ராபட் கியோரி (Robert Giori). உலகத்தில் உள்ள 90% பணத்தை அச்சடித்து தரும் DE LA RUE நிறுவனத்தின் தலைவர். இவரை உலக நிதி நிறுவனங்கள் கரன்சி கிங் (currency king) என்று அழைப்பார்கள். உலகநாடுகளுக்கு தேவைப்படும் பணத்தை அச்சடிப்பது, அச்சு இயந்திரங்களை தயாரிப்பது, அச்சு மை தயாரிப்பது, பணம் அச்சடிக்க பயிற்சி கொடுத்து கைதேர்ந்த ஆட்களை உருவாக்குவது போன்ற பெரும் சாம்ராஜ்யத்தையே நடத்துபவர். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். உலக பெருமுதலாளிகள் தனது கருப்பு பணத்தை வரிகளற்ற சொர்க்கம் (Tax heaven) என்றழைக்கப்படும் தீவுகளில் பதுக்கி மணி லான்டரிங் (money laundering) செய்வதற்கு உதவி செய்பவர். பல தீவிரவாத அமைப்புகளுக்கு கள்ளநோட்டு அச்சடித்துத் தருபவர், பல நாடுகளை நிதிநெருக்கடியில் தள்ளுவதற்கு துணைநின்றவர். இவ்வளவு பெரிய இந்த ஜாம்பவானை காப்பாற்றுவதற்காக இந்தியா தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு அன்று தலைவணங்கியது. இந்த ராபட் கியோரியின் நிறுவனமான DE LA RUE கடந்த 100 ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு பணத்தை அச்சடித்து தருகிறது. இந்தியாவிற்கு பணத்தை அச்சடித்துத் தரும் மிகமுக்கியமான நான்கு கம்பெனிகள் UK based De LA Rue, Australia based Innovia, Munich based Giesecke & Devrient and Swiss company Landquart.
இதில் உலக அளவில் பெரும் அதிக்கம் செலுத்தும் கம்பெனி De LA Rue. இந்த De LA Rue கம்பெனியை இந்தியா 2011ம் ஆண்டு தடைசெய்தது. இந்தியா – நேபாள பகுதிகளில் மத்திய புலனாய்வுக் குழு 2009-10 இடைப்பட்ட காலத்தில் 70வதுக்கும் அதிகமான வங்கிக் கிளைகளை சோதனையிட்டபோது 500, 1000 ரூபாய் அடங்கிய பலகோடி கள்ளநோட்டுக்கள் கிடைத்தது. அதைப்பற்றி வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியபோது ரிசர்வ் வங்கிதான் இவற்றை கொடுத்தது என்று தகவல் கொடுத்தனர். அதேபோல் இந்தியா பாகிஸ்தான் இடைப்பட்ட பகுதிகளில் செயல்படும் தீவிரவாதிகளிடத்திலும் கள்ளநோட்டுகள் சிக்கியது. இந்த கள்ளநோட்டுகள் தத்ரூபமாக இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிப்பதைப் போலவே இருந்தது. இவை அனைத்தையும் கைப்பற்றிய இந்திய புலனாய்வு அமைப்பு ரிசர்வு வங்கியிடம் விளக்கம் கேட்டது. மறைமுக ஒப்பந்தங்கள் மூலமாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அச்சடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிற விடயத்தை இந்திய புலனாய்வுத் துறை கண்டுபிடித்தது. இந்தியாவின் பொருளாதார இறையாண்மை கேள்விக்குள்ளாகிவிட்டது என்று பத்திரிக்கைள் எழுதின. இதனை தொடர்ந்து பாராளுமன்றக் குழு அமைத்து ரிசர்வ் வங்கியிடமிருந்து உரிய விளக்கத்தை கேட்டறிந்தது. ஏறத்தாள ஒரு லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளிநாட்டு கம்பெனிகளிடம் டெண்டர் முறையில் ஒப்பந்தம் கொடுத்து அச்சடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதில் பெரும்பங்கு DE LA RUE கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது. இந்த கம்பெனிகள் கள்ளநோட்டு அடிப்பவர்களுக்கு, தீவிரவாதிகளுக்கு இதுபோன்ற தொழில்நுட்பத்தை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா மட்டுமில்லாமல் பலநாடுகளின் பண அச்சடிப்பு நுட்பத்தை வெளியிட்டது. தரமற்ற காகிதங்களை விற்றது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து அரசின் SERIOUS FRAUD OFFICE அம்பலப்படுத்தியது. இதனை தொடர்ந்து DE LA RUE கம்பெனி இந்தியாவில் 2011ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. DE LA RUE கம்பெனி தடை செய்யப்படும்போது பண உற்பத்திக்காக வைத்திருந்த 2000 மெட்ரிக் டன் காகிதங்கள் கிடங்கில் எடுக்கமுடியாமல் தடைசெய்யப்பட்டு இருந்தது. இது அந்த கம்பெனிக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது. அதோடு இந்தியாவின் பண அச்சடிக்கும் ஒப்பந்தம் ரத்தானதாலும் தடை செய்யப்பட்டதாலும் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. அதனை ஏற்கும் முகமாக DE LA RUE கம்பெனி அப்போதைய CEO ஜெம்ஸ் ஹசி ராஜினாமா செய்தார். இவ்வளவு பெரிய சதியில் ஈடுபட்ட DE LA RUE கம்பெனி KBA GIORI என்று தன் புதுவடிவத்தில் சுவிஸ் நாட்டின் ஆதரவுடன் இந்தியாவில் காய் நகத்தியது. கடந்த சில ஆண்டுகளில் தான்விட்ட லாபத்தை சம்பாதிப்பதற்காக டெல்லியில் உள்ள சில ஏஜென்சிகளுக்கு கமிசன் கொடுத்து ரிசர்வ் வங்கி ஒப்பந்தத்தை 2014ம் ஆண்டு பெற்றது.
2014-16 இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்ட ஒரு கம்பெனிக்கு மோடி அரசு பணம் அச்சடிக்க ரகசிய டெண்டர் கொடுத்தது. DE LA RUE கம்பெனி தடையை குறித்தான ஆவணங்களை அழித்துவிட்டு அந்த கம்பெனியின் தடையை விலக்கி இந்த ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவெளியிலோ பாராளுமன்றத்திலோ இவ்வொப்பந்தம் குறித்து விவாதிக்கப்படவில்லை. நவம்பர் 2015ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து இடையே போடப்பட்ட (UK INDIA DEFENCE & INTERNATIONAL SECURITY PARTNEERSHIP AGREEMENT ) ஒப்பந்தத்தை மையமாக வைத்து மேக்இன் இந்தியா திட்டத்தின் பெயரில் இந்தியாவில் திரும்பவும் தனது ஆதிக்கத்தை துவங்கியது. தடைநீக்கப்பட்ட ஆறு மாதத்தில் DE LA RUE கம்பெனியின் பங்கு 33.33% உயர்ந்தது. மோடியின் தயவால் சர்வதேச சந்தையில் திரும்பவும் கொடி கட்டிப் பறக்கத் துவங்கியது. மோடியின் தயவால் அரசு பத்திரங்கள் அச்சடிக்க மத்திய பிரதேசத்தில் security papers mills என்ற புது கம்பெனியை துவங்க 10 ஏக்கர் நிலம் அவுரங்காபாத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதை சிவசேனா MP ஹெமந் கோட்சே வெளிப்படையாக கூறியுள்ளார்.
2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் panama papers எனும் கருப்புபண முதலைகளின் ரகசிய ஆவணம் வெளிவந்த போது DE LA RUE கம்பெனி டெல்லியில் இயங்கும் ஒரு ஏஜென்சிக்கு 15% கமிசன் கொடுத்து ரிசர்வ் வங்கியின் ஒப்பந்தத்தை பெற்றது என்ற விபரம் வெளியானது. அதேபோல் ரிசர்வ் வங்கிக்கு 40மில்லியன் பவுண்டு கொடுக்கப்பட்டதும் அறிக்கைகளில் வாயிலாக வெளிவந்தது. இதனை எதிர்பார்க்காத மோடி அரசு DE LA RUE கம்பெனியை ஏப்ரல் 2016ம் ஆண்டு மீண்டும் தடைசெய்தது. 2016 நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு தடைவிதிப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே 2000 ரூபாய் நோட்டுக்களை உர்ஜித் பட்டேலின் கையெழுத்துடன் DE LA RUE கம்பெனி துணையுடன் அச்சடிக்கத் துவங்கியது. 2016 ஆகஸ்ட் மாதத்தில் 480 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளும் அதற்கு இணையான 500ரூபாய் நோட்டுகளும் அச்சடித்து முடிக்கப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதில் பா.ஜ.க அரசு DE LA RUE கம்பெனியுடன் சேர்ந்து ஏதோ பெரும் சதித்திட்டத்தல் ஈடுபட்டு பல லட்சம் கோடிகள் ஆதாயம் அடைந்துள்ளது.
இந்த சதித்திட்டத்தை வடிவமைத்து செயல்பட்டதில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பெரும்பங்கு இருக்க வேண்டும். இவர்தான் DE LA RUE கம்பெனியின் தலைவர் ராபட் கியோரியை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தவர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அஜித் தோவலின் மகன் விவேக் தோவல் மற்றும் சௌரியா தோவர் வரியில்லா சொர்க்கம் என்றழைக்கப்படும் கேமன்தீவில் GNY ASIA என்ற போலி கம்பெனியை துவங்கி பல்லாயிரம் கோடி பணத்தை அந்நிய முதலீடு என்ற போர்வையில் இந்தியாவிற்குள் கொண்டுவந்து கருப்பை வெள்ளையாக மாற்றி கமிசன் அடித்தனர்.
GNY ASIA கம்பெனியின் இன்னொரு இயக்குனர் டான் டபுள்யூ ஈபாங்ஸ்( Don W Ebanks) இவர் வரி ஏய்ப்பு செய்து பல தீவுகளில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்திருப்பதை பனமா பேப்பர் எனும் ரகசிய ஆவணத்தல் வெளியிட்டது. விவேக் தோவலின்(Vivek Doval) அண்ணன் சௌரியா தோவல் ஜெமினி பினான்சியல் சர்வீசஸ் (Gemini financial services) எனும் நிதிநிறுவனத்தை நடத்திவருகிறார். அதன் மற்ற இரு இயக்குனர்களில் ஒருவர் பாகிஸ்தானி சையத் அலி அப்பாஸ் (Syed Ali Abbas) மற்றொருவர் சவுதி இளம் மன்னர் மிச்சல் ( Prince Mishaal Bin Abdullah Bin Turki Bin Abdullaziz Al-Saud) இவர் ஐஎஸ்ஐஎஸ்(ISIS) தீவிரவாத குழுவிற்கு நிதி உதவி செய்துவருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்து.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 08,2016இல் மோடி அரசு அறிவிப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் DE LA RUE கம்பெனி துனையுடன் புதிய 2000ரூபாய் நோட்டுகளை அமித் ஷா தலைமையில் இந்திய ஒன்றியத்தில் இருக்கிற பல்வேறு துறைகளை சார்ந்த 26பேர் சேர்ந்து அச்சடித்திருக்கிறார்கள். பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபின் பெரிய பெரிய முதலாளிகளிடமிருந்த கருப்பு பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் அச்சடித்த புதிய 2000ரூபாய் நோட்டுகளை 15 இருந்து 45% வரை கமிசன் பெற்றுக்கொண்டு கைமாற்றியுள்ளனர். இப்படியாக குறைந்தபட்சம் 3லட்சம் கோடி பணத்தை கைமாற்றினோமென்று இந்த சதிகளில் முக்கிய பங்காளியாக இருந்த இந்திய உளவுதுறையான ’ரா’(RAW) அமைப்பை சேர்ந்த ராகுல் ராத்னேக்கர் பார்க்க படம் 01 என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
https://www.nationalheraldindia.com/…/randaw-field-assistan…
மேலும் இந்த ஊழலில் இந்திய ஒன்றியத்திலிருக்கிற பல்வேறு துறைகளையும் சட்டத்தை மீறி பயன்படுத்தியிருக்கின்றனர். அதாவது வெளிநாடுகளில் அச்சடித்த பணத்தை இந்திய இராணுவ விமானம் மூலம் டெல்லி எல்லையிலுள்ள ஹிண்டன் என்ற இராணுவ விமான படைதளத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து முதலாளிகளுக்கு சப்ளை செய்திருக்கிறார்கள். இதில் உச்சபட்ச மோசடி என்னவென்றால் வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்ட புதிய 2000ரூபாய் நோட்டுகளில் கவர்னர் கையொப்பம் இருக்குமிடத்தில் உர்ஜித் பட்டேல் அவரின் கையெழுத்து இருக்கிறது. ஆனால் அப்போது கவர்னராக இருந்தவர் இராகுராம் ராஜன் ஆவார். உர்ஜித் பட்டேல் பதவியேற்றதே செப்டம்பர் 04,2016அன்றுதான் ஆனால் புதிய நோட்டு அச்சடித்ததாக சொல்லப்படுவது ஏப்ரல் 2016 ஆக ஆறுமாதத்திற்கு முன்பே இராகுராம் ராஜனை தூக்கிவிட்டு அந்த இடத்தில் உர்ஜித் பட்டேலை கொண்டுவரவேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்த மெக ஊழலை செய்திருக்கிறார்கள். அதற்கேற்றார் போல நவம்பர் 08,2016 அன்று புதிய கவர்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அதரவு தெரிவித்தார்.
இப்படி இவ்வளவு பெரிய ஒரு ஊழலை அரசின் அத்துணை துறைகளையும் கையில் போட்டுக்கொண்டு செய்திருக்கிறது பிஜேபியின் மோடி அரசு.
]]>
மே பதினேழு இயக்கம் 2 ஆண்டுகளாக போராடி உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று கோவையில் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறது.
நாள்: 13 ஏப்ரல் சனி மாலை 5 மணிக்கு
இடம்: விகேகே மேனன் சாலை, புதுசித்தாபுதூர், கோவை