ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உட்பகுந்து ஜனநாயக சக்திகளை கொடூரமாக தாக்கிய ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்! – மே பதினேழு இயக்கம்
நேற்று (12.02.2023) ஞாயிற்றுக்கிழமை ஒரிசா மாநிலம் புவனேஸ்வரியில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் அமைப்பு சட்டமும் கல்வியும்’ என்கிற தலைப்பில் அரைநாள் கருத்தரங்கை ஒரிசாவை மையமாகக் கொண்ட குடிமக்கள் இயக்கமும், தமிழகத்தின் வான்முகில் அமைப்பும் இணைந்து நடத்தி இருக்கிறது.
இந்த கருத்தரங்கில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்த்த பேராசிரியர் சுர்ஜித் மஜீம்தார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி இருக்கிறார். அவர் பேச ஆரம்பிக்கும் பொழுது வேண்டுமென்றே அரங்கிற்குள் இருந்த சிலர் கூச்சலிட்டு கருத்தரங்கில் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.
உடனே பேராசிரியர் சுர்ஜித் மஜிம்தார் அவர்கள் உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் கேளுங்கள் பதில் சொல்கிறேன். ஏன் தேவையில்லாமல் கூச்சலிடுகிறீர்கள் என்றும், கேள்வி பதில் என்ற ஒரு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது அதில் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.
இதனால் சந்தேகமடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் கூச்சலிட்டவர்களிடம் உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள் நீங்கள் எந்த கல்லூரி மாணவர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் அடையாள அட்டையை கொடுக்காமல் விழா ஏற்பாட்டாளர்களை தாக்கி ஆரம்பித்து அரங்கையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களை தடுக்க முயன்ற வான்முகில் அமைப்பின் செயற்பாட்டாளர் தோழர் பிரிட்டோ உட்பட, வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
தோழர் பிரிட்டோ தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்தவர். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயல்படுபவர். நீண்டநாள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டிலிருந்து சென்ற தோழர் பிரிட்டோ வன்முறையாளர்களை தடுக்கமுயன்ற போது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
இறுதியில் கூச்சலிட்டவர்களை விசாரிக்கும் பொழுது அவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் மற்றும் ஆர்எஸ்எஸ்சின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-ஐ சேர்ந்தவர்கள் என்றும், இந்த கருத்தரங்கை நடக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு உள்ளே நுழைந்தவர்கள் என்றும் அதில் பெரும்பாலானவர்கள் மாணவர்களே இல்லை என்பதும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் இந்த கொடூர தாக்குதலில் விழா ஏற்பாட்டுளர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பேர் மருத்துவமனையில் சேரும் அளவிற்கு கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். கலவரம் செய்த இரண்டு பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது என்றாலும் கலவரத்தை தூண்டிய ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களில் நடைபெறும் இது போன்ற கருத்தரங்குகளை நடத்தவிடாமல் செய்வதே ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் நோக்கமாக உள்ளது. முற்போக்கு கருத்துக்கள் மாணவர்கள் மத்தியில் விவாதிக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. டில்லி நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என இவர்கள் தொடர்ச்சியாக கலவரங்களை உண்டுபண்ணி வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ்-ஏபிவிபி-யின் இத்தகைய அராஜக போக்கு உடனடியாக தடுத்துநிறுத்தப்பட வேண்டும். இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் ஏபிவிபி தடை செய்யப்பட வேண்டும். ஒரிசாவில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அதற்கு பின்னணியாக செயல்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தாக்கப்பட்ட தோழர் பிரிட்டோ உள்ளிட்டவர்களுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக நிற்கும் என கூறிக்கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
பிபிசி ஆவணப்பட திரையிட மே 17 இயக்கத்திற்கு அனுமதி மறுத்த திமுக, காவல்துறையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை. அனைவரும் மெளனம் கலைப்போம். இசுலாமியர் இனப்படுகொலை ஆவணத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்.
]]>பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று (04-02-2023 சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் சென்னை ஆலந்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
யூடியூப் இணைப்பு:
மே பதினேழு இயக்கம்
9884864010
“நாம் (இந்து மகா சபையினர்) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நடத்தும் இந்தப் போருக்கு எதிராக இருக்க வேண்டும். நாம் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும். எனவே, இந்து மகாசபைகள், குறிப்பாக வங்காள மற்றும் அசாம் மாகாணங்களில் உள்ள இந்துக்கள், ஒரு நிமிடம் கூட தாமதியாமல், ஆங்கிலேய இராணுவப் படைகளில் சேர, முடிந்தவரை இந்துக்களைத் தூண்ட வேண்டும்.”
இவ்வாறு இந்துத்துவ வெறியும் சூழ்ச்சியும் பிணைந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைக்கு எதிராக, இந்துக்களை பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர வேண்டுமென்று சாவர்க்கர் அழைப்பு கொடுத்தார். ஏனெனில் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இந்துக்கள் சேர்ந்தால், போருக்குப் பிந்தைய நாட்களில் ஏதேனும் உள்நாட்டு சிக்கலோ அல்லது நெருக்கடியோ ஏற்பட்டால் அதையே காரணியாகக் கொண்டு, இசுலாமிய சிறுபான்மையினரை முற்றிலும் ஒடுக்கி விடலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
டிச 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை பாசிச எதிர்ப்பு தினமாக அறிவித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் 06-12-22 செவ்வாய் காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் கொண்டல் சாமி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>“வழக்கறிஞராக பணி செய்வதில் எந்தப் பயனும் இல்லை, ஏனென்றால் அது உயர்சாதி சமூகத்திற்கு சாதகமாக உள்ளது. ஆனாலும் சமூகப் பணிகளைச் செய்வதற்காக சட்டப் பயிற்சியைத் தேர்ந்தெடுத்தேன்” என்று கூறினார் அண்ணல்.
“அனைவருக்கும் சமமான களம் இங்கில்லை” என்பதை உணர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்காடும் ஒரு வழக்கறிஞராக அண்ணல் அம்பேத்கர் தனது சமூகப் பணியைத் தொடங்கினார்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள மஹத் எனும் இடத்தில், உயர் சாதியினர் மட்டுமே பயன்படுத்தி வந்த சாவதர் குளத்தில் அனைத்து மக்களும் நீர் எடுப்பதற்காக நடந்தது இந்தப் போராட்டம். அந்தக் குளம் சட்டப்பூர்வமாக அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்றும், “அது தனிப்பட்ட சொத்து அல்ல, மஹத் நகராட்சியின் சொத்து” என்றும் அவர் வெற்றிகரமாக நிறுவினார்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை பாசிச எதிர்ப்பு தினமாக அறிவித்து, மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (06-12-2022 செவ்வாய்) காலை எஸ்டிபிஐ கட்சி சார்பாக நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, ஆலந்தூர் சங்கர நேத்ராலயா அருகில், இன்று (06-12-2022 செவ்வாய்) காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, ஆலந்தூர் சங்கர நேத்ராலயா அருகில், இன்று (06-12-2022 செவ்வாய்) காலை 10:30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010