யூடியூப் இணைப்பு
மே பதினேழு இயக்கம்
9884864010
அரசியல் சட்டத்தின் 14-வது விதியின்படி யாரையும் சாதி, மதம், இருப்பிடம் இந்த வகையில் பிரிவுபடுத்தக் கூடாது என்பது தான். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு 28-07-1950 அன்று சென்னை மாகாணத்தில் 1927 மற்றும் 1940-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்த வகுப்புவாரி இடப்பங்கீட்டு முறை ஆணை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
இடப்பங்கீட்டுக்கு எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து பெரியார் பெரியதொரு மக்கள் கிளர்ச்சியை நடத்தினார். 06-08-1950 சென்னை மாகாண மக்கள் மன்றத்தில் பறிக்கப்பட்ட உரிமையை மீட்க பெரியார் அழைப்பு விடுக்கிறார். 14-08-1950 அன்று பெரியார் தலைமையில் சென்னை மாகாணம் தழுவிய பெருந்திரளான மக்கள் அந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். அதிலிருந்து தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது.
தமிழக நிலைமை டில்லியில் எதிரொலித்தது. இதனால் 18 ஜூன் 1951 அன்று பிரதமர் நேரு மற்றும் சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை (சட்ட பிரிவு 15(4)) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினர்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
கல்வி, வேலைவாய்ப்பு, சட்டமன்றம், நாடாளுமன்றம் இவற்றில் முஸ்லீம்களுக்கு 10% இடஓதுக்கீடு கோரி, 17-09-2021 அன்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.எம்.சரீப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளரும், பெரியாரின் அருந்தொண்டருமான அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் மறைந்ததை அடுத்து, இறுதி மரியாதை செலுத்துவதற்காக 07-04-2021 அன்று சென்னை இரும்புலியூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே17 இயக்கத்தோழர்கள் திரளாக நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மே பதினேழு இயக்கம்
9884072010
]]>இந்திய ஜனத்தொகையில் முக்கால்வாசிக்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய ஒளி விளக்கு அணைந்தது. அய்யா ஆனைமுத்து மறைந்தார்.
மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு கொண்ட சனாதானத்தை இந்திய சமூக நிலபரப்பில் விதைக்க நினைத்த சக்திகளை எதிர்த்து ஒரு புரட்சியை செய்திட்ட திராவிட இயக்கத்தின் மூலவரான தந்தை பெரியாரை தலைமை ஏற்று களத்திற்கு வந்த களப்போராளி அய்யா ஆனைமுத்து.
எத்தனையோ போராட்டங்கள் எத்தனையோ இன்னல்கள் போராட்டத்தை தனது வாழ்க்கையாக வறிந்துகட்டிக்கொண்ட மாமனிதர். பெரியாரின் எழுத்துக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அயராது பாடுபட்டவர். இது அனைத்தையும் தாண்டி தமிழகத்தில் பரவி இருந்த சமூக நீதி அரசியலின் அவசியத்தை இந்தியா முழுக்க புரிய வைத்ததில் அய்யா ஆனைமுத்து அவர்களும் அவரின் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியின் பணியும் மறுக்கமுடியாதது.
ஐயா அவர்களின் இந்த பணிதான் மண்டல் கமிஷனின் பரிந்துரையை வி.பி.சிங்கை ஏற்க வைத்தது. சட்டமியற்றிய விபி சிங்கிற்கு எதிராக நடந்த அனைத்து கொடுமைகளையும் தடுக்க வைத்தது. இதன் விளைவாக இந்திய நிலப்பரப்பில் வாழும் முக்கால்வாசி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்விலும் ஒளி ஏறியது.
தனது இறுதிக்காலம் வரை தமிழ் தமிழர் தமிழர் நலம் என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த ஐயா வே ஆனைமுத்து மறைந்தார் என்பது தமிழ்ச் சமூகத்திற்கும், திராவிட சித்தாந்தத்திற்கும் பேரிழப்பாகும். மறைந்த ஐயா ஆனைமுத்து அவர்களின் கனவை இளம் தோள்களில் சுமப்போம். தமிழர்களின் சுயமரியாதையை வென்றெடுப்போம்.
ஐயாவிற்கு மே 17 இயக்கத்தின் செம்மார்ந்த வீரவணக்கம்.
மே17 இயக்கம்
9884072010
வரும் மார்ச் 13, 2021 சனி அன்று “சமூக நீதி காக்கும் இட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு”, மே பதினேழு இயக்கம் சார்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த தலைவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கால சூழல் கருதி அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. மாநாட்டிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மே பதினேழு இயக்கம்
9884072010
சமூகநீதி காக்கும் ‘இட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு’ விளக்க கூட்டம், ‘தமிழின உரிமை மீட்போம்’ – எழுச்சிப் பொதுக்கூட்டமாக 27-02-2021 சனிக்கிழமை மாலை தாம்பரம் சண்முகம் சாலையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற்றது. பறையிசை முழங்க துவங்கிய இக்கூட்டத்தை தோழர் கொண்டல்சாமி ஒருங்கிணைக்க, துவக்க உரையாக தமுமுக பொதுச்செயலாளர் முனைவர் பேரா.ஹாஜாகனி, தொடர்ந்து இந்திய தேசிய லீக் இளைஞரணி செயலாளர் அசாருதீன் , எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A.K.கரீம், தமுஎகச மாநில துணைச் செயலாளர் பேரா.சுந்தரவள்ளி மற்றும் இறுதியாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் உரையாற்றினர்.
பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை
மே பதினேழு இயக்கம்
9884072010
மே பதினேழு இயக்கம் சார்பாக, சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து சென்னையில் தொடர் பரப்புரையை நடைபெற்று வருகிறது. தொடர் பரப்புரையின் 3ம் நாளான 24-02-2021 அன்று , ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததை இந்த தொடர் பிரச்சாரத்தின் மூலம் கண்டறிந்துள்ளனர். பாஜகவின் மோடி அரசினால் சமூகநீதிக்கான தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு, உயர் சாதி பார்ப்பனர்கள் பயன்பெறும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்படுவதை மக்களால் புரிந்துகொள்ள முடிவதை காண முடிந்தது.
மே பதினேழு இயக்கம்
9884072010
சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு குறித்த தொடர் பரப்புரையை பிப்ரவரி 22 முதல் சென்னை நகரில் மே பதினேழு இயக்கம் நடத்தி வருகிறது. அதன் இரண்டாம் நாளான 23-02-2021 செவ்வாய் அன்று, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு பரப்புரை தொடர்ந்தது.பரப்புரையின் போது, இட ஒதுக்கீடு குறித்த தோழர்களின் விளக்கத்தை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடனே கவனித்தனர். பரப்புரைக்கான பொதுமக்களின் ஆர்வத்தை காணும் போது, பரப்புரையில் ஈடுபட்ட தோழர்கள் களைப்பறியாமல் மிகுந்த உற்சாகத்துடன் தொடர்ந்தனர். மார்ச் 13ல் நடைபெறவிருக்கும் இட ஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு மாநாடு குறித்த தூண்டறிக்கைகள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டன.
மே பதினேழு இயக்கம்
9884072010
]]>தமிழின உரிமை மீட்போம் – எழுச்சிப் பொதுக்கூட்டம்
வரும் சனி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில், சமூகநீதி காக்கும் ‘இட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு’ விளக்க கூட்டம்.
BC, MBC, SC, ST மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை காப்போம்!
தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்போம்!
அரசியல் பேசுவோம்.
தமிழர் உரிமையை உரக்க பேசுவோம்.
மெளனம் கலைக்கும் உரிமையை பேசுவோம்.
தமிழினத்தின் இன்றய அரசியல் தேவையை அச்சமின்றி பேசுவோம்.
பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கும் தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாய் நண்பர்கள், குடும்பத்தினரோடு பங்கேற்க வாருங்கள்!
நேரம்: பிப்ரவரி 27, சனிக்கிழமை மாலை 5 மணி
இடம்: சண்முகம் சாலை, தாம்பரம், சென்னை
செய்தியை பகிர்ந்து உதவுங்கள்
மே பதினேழு இயக்கம்
9884072010