2009-ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை கண்டித்து ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர்நீத்த தழல் ஈகியர் முருகதாசன் அவர்களின் 14-வது நினைவு நாள். முருகதாசன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!
மே பதினேழு இயக்கம்
9884864010
தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதியும், உழைப்பாளர் நாளை முதன் முதலில் முன்னெடுத்தவருமான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 77-வது நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
சென்னை பள்ளிக்கரணை தெப்பக்குளம் அருகில், மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் – ஈகியர் முருகதாசன் நினைவு வீரவணக்கக் கூட்டம், இன்று (10-02-2023 வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. அனைவரும் வருக.
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தன்னுயிர் நீத்த மாவீரர் முத்துக்குமாரின் நினைவுநாளான 29-01-2023 ஞாயிறு அன்று கொளத்தூரில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் தோழர்கள் அனைவரும் முழக்கங்கள் இட்டவாறு அணிவகுத்து சென்று முத்துக்குமார் நினைவுத்தூண் முன் அமைக்கப்பட்டிருந்த முத்துக்குமார் சிலை மற்றும் ஈகியர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம், 28-01-23 சனிக்கிழமை மாலை சைதாப்பேட்டை குயவர் வீதியில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்புக்குழு சார்பாக, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், 27-01-2023 வெள்ளிக்கிழமை மாலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கௌரி திரையரங்கம் நெடுஞ்சாலைப் பாலம் அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மாவீரன் கிட்டு அவர்களின் 30ஆம் ஆண்டு நிறைவு நாள், ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் இந்த முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு 14ஆம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (29-01-2023 ஞாயிறு) மாலை 5 மணி அளவில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமையகமான தாயகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழீழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையை தடுக்கக் கோரி உயிர் நீத்த மாவீரர் முத்துக்குமார் அவர்களின் 14-ம் ஆண்டு நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884864010
சனிக்கிழமை 28 சனவரி மாலை 5:00 மணிக்கு சைதை , குயவர் சாலையில் ‘மொழிப்போர் ஈகியர், மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்’. தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
– மே 17 இயக்கம்
தோழர் திருமுருகன் காந்தி, தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றும்,
மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்
இன்று (28-01-23 சனி) மாலை 5 மணிக்கு, சைதாப்பேட்டை குயவர் வீதியில்…
அனைவரும் வருக…
மே பதினேழு இயக்கம்
9884864010
சனவரி 25 – மொழிப்போர் ஈகியர் நாள்
ஆரிய-பார்ப்பனியத்தின் இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான மொழிப்போரில் தன்னுயிரை ஈந்து தாய்மொழி தமிழை காத்திட்ட மொழிப்போர் ஈகியருக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்!
மே பதினேழு இயக்கம்
9884864010