இலட்சத்தீவில் என்ன நடக்கிறது? காவிப்பேரலையில் மூழ்கடிக்கப்படும் இலட்சத்தீவின் பூர்வகுடிகள்!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை
மாட்டிறைச்சிக்கு தடை, மதுவிற்கு அனுமதி, இஸ்லாமியர்களின் நிலங்களை கையகப்படுத்துதல், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை நாசம் செய்வது… இது ஏதோ ஒரு பாஜக ஆளும் வடஇந்திய மாநிலத்தில் செயல்படுத்தப்படுபவை அல்ல. எந்த செய்திகளிலும் அடிபடாத, அமைதியான இலட்சத்தீவுகளில் ஒன்றிய பாஜக அரசு செய்யும் அடவாடி தான் இது.
கட்டுரையை வாசிக்க:
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010
மறைக்கப்பட்ட கும்பமேளாவும், பலியாக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தும்!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
தப்லீக் ஜமாத்தை வைத்து ஆதாரமின்றி இசுலாமியர் வெறுப்பை வளர்த்த பாஜக, கும்பமேளாவிற்கு பின்பான வடமாநில கொரொனோ சாவுகளை மூடிமறைக்கிறது. தப்லீக்கை குற்றவாளிபோல் அன்றாட செய்திவாசித்த ப்யூலா ராஜேஸ் போன்ற சங்கிகள் விசாரணையின்றி தப்பிக்கிறார்கள்.
விரிவாக வாசிக்க:
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010
]]>
ரெம்டெசிவர், வரமா வணிகமா?
– மே பதினேழு இயக்கக் குரல் இணயத்தள கட்டுரை
“ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தல்ல” என்று உலக சுகாதார கழகம் அறிவித்ததனால் இதன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. உற்பத்தியும் குறைக்கப்பட்ட சூழலில் பெரும்பான்மை தனியார் மருத்துவமனைகள் அதிகமாக ரெம்டெசிவரை பரிந்துரைத்ததின் காரணம் என்ன? இவ்வளவு ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக இருந்த பின்னும் இதனைப் பரிந்துரைத்ததின் பின்னணியில் இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றனவா? ரெம்டெசிவர் குறித்த உண்மை நிலவரத்தை தெரியப்படுத்தாமல் மக்களை இந்த மருந்துக்காக அலைக்கழிக்க வைத்ததில் அரசிற்கும் பங்கிருக்கிறதா?
கட்டுரையை வாசிக்க:
]]>
பெட்ரோல்-டீசல் விலை ஏன் உயர்ந்தன?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
மோடி அரசு கடந்த வருடம் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோலின் கலால் வரியை 20 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக உயர்த்தியது. அதாவது 65% அதிகமாக கலால் வரியை உயர்த்தியது. அதே போல், ஒரு லிட்டர் டீசலுக்கு 79% அதிகமாக கலால் வரியை உயர்த்தியிருக்கிறது.
ஒன்றிய அரசின் இந்த கலால் வரி ஏற்றம் தான் இன்றைய பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இதை கண்டித்து பலர் கேள்வி எழுப்பினர். ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பு பல்வேறு அமைப்பினர் ஒன்றிய மோடி அரசை கண்டித்து வரிவிகிதத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
முழு கட்டுரையை வாசிக்க:
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010
சந்தையா.. சனநாயகமா.. எதை தேர்ந்தெடுக்கும் ட்விட்டர் ?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
ட்விட்டர் நிறுவனம் தனது கொரோனா நிவாரண நிதி எதற்காக பயன்படுத்தப்படும் என்று தீர ஆராயாமல் வழங்கிட வாய்ப்பில்லை. சேவா இன்டர்நேஷனல் இந்துத்துவ பேரினவாதத்தை இந்தியாவில் வளர்த்திடும் என்று அறிந்தே நிதி வழங்கியுள்ளது.
சேவா இன்டர்நேஷனலுக்கு ட்விட்டர் நிவாரண நிதி வழங்கியதை நாம் இந்தியாவில் நிலவும் பாஜக அரசுடனான மோதல் போக்கையும் அதே நேரம் இந்தியாவில் ட்விட்டரின் எதிர்கால வளர்ச்சியும் கருத்தில் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பாஜக மோடி அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ட்விட்டர் தனது இந்திய சந்தையை தக்க வைத்துக் கொள்ள தனக்கான இந்துத்துவ ஆதரவு தளத்தையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
கட்டுரையை முழுமையாக வாசிக்க:
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010
“பிணத்தில் மிதக்கும் கங்கை, மயானத்தில் எழும்பும் பாராளுமன்றம்!”
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
நீரோவின் கதைக்கும் மோடியின் [சென்ட்ரல்] விஸ்டா திட்டத்திற்கும் ஏதாவது வேற்றுமை உள்ளதா? தற்போது டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதை கட்டுபடுத்த கடுமையான ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்த புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி மிகஅவசியம் என்று கூறி தொடர்ந்து வருகிறது.
கட்டுரையை முழுமையாக வாசிக்க:
]]>
பாலஸ்தீனம் – மேற்காசியாவின் தமிழீழம்!
– மே 17 இயக்கக் குரல் இணைய கட்டுரை
“தொடர் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் இஸ்ரேல் அரசாங்கம், தனது அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளில் உள்ள செல்வாக்கால் தான் செய்யும் குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களும் மனிதகுலத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் கண்டிக்கப்படாமலும், தண்டிக்கப்படாமலும் ஊக்குவிக்கப்படுகின்றன.
குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஏகாதிபத்திய நாடுகள் தொடர்ச்சியாக இஸ்ரேலுடன் ராணுவ ஒப்பந்தம், ஆயுத வணிகம், ராணுவ பயிற்சிகள், அதிநவீன தொழில்நுட்ப பகிர்வு, உளவு தகவல் பரிமாற்றம் மற்றும் அரசியல் பாதுகாப்பு போன்றவற்றை அளித்து வருகின்றன.”
மே 17 இயக்கக் குரல் கட்டுரையை மேலும் விரிவாக படிக்க…
]]>மோடியின் முகமூடியை கிழிக்கும் சர்வதேச ஊடகங்கள்!
கொரானா நோய்த்தொற்றை கையாள்வதில் மோடியின் தோல்வி குறித்து சர்வதேச ஊடகங்கள் கடும் குற்றச்சாட்டுக்களை வைத்து மோடியை அம்பலப்படுத்தியுள்ளன.
மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை:
]]>நவம்பர் 27 மாவீரர் நாளை முன்னிட்டு, இன்று முதல் மே பதினேழு இயக்கக் குரல் இணையத்தளம் வெளியிடப்படுகிறது. இதில் மே பதினேழு இயக்கக் குரலில் வெளிவரும் கட்டுரைகளோடு, பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவரும். அனைவரும் இணைந்திருங்கள்.
]]>தமிழர் கடலில் நடந்த மிக முக்கிய மாற்றம்: தெற்காசிய பிராந்தியத்தின் சமநிலை மாறுகிறது
தென் சீன கடல் பகுதியில் உள்ள மிக முக்கியமான கடல்வழி பகுதி இருக்கக்கூடிய நாடு கம்போடியா. அந்த நாடு கடந்த வாரத்தில் அதிரடியான சில வேலைகளை செய்தது. அந்த செயலானது தெற்காசிய பிராந்தியத்தின் சமநிலையை மாற்ற கூடியதாகவும், குறிப்பாக அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு சவால்விடும் வண்ணமாகவும் அமைந்திருக்கிறது.
அதாவது கம்போடியாவில் கடந்த பல வருடங்களாக இயங்கி கொண்டிருந்த அமெரிக்காவின் கடற்படை தளத்தை மீண்டும் அந்த நாட்டு அரசிற்கு கொடுக்க கம்போடிய அரசு மறுத்திருக்கிறது. அதோடு சமீபத்தில் அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி அமெரிக்க கடற்படை தளத்தை வெடிவைத்து தகர்த்து விட்டது. அதோடு அந்த இடத்தை மறு சீரமைப்பு செய்யும் வேலையையும், அந்த இடத்தை நிர்வகிக்கும் வேலையையும் அடுத்த முப்பது வருடங்களுக்கு சீனாவிடம் கொடுத்துவிட்டது. கம்போடியாவில் இந்த செயல் அமெரிக்காவின் இராஜதந்திர தோல்வியாகவும், சீனாவின் மிக முக்கியமான வெற்றியாகவும் அரசியல் அரங்கில் கருதப்படுகிறது.
ஏனென்றால் சீனா தற்போது தங்களுக்கு தேவையான எண்ணெயை ஈரானிலிருந்து இந்தியப்பெருங்கடல் என்கிற தமிழர் கடலில் இலங்கைக்கு கீழாக அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக மலேசியா சிங்கப்பூர் இடையே இருக்கிற ‘மலாக்கா நீரிணை’ வழியாக தென்சீனக்கடலுக்குள் புதுந்து சீனாவை அடைகிறது.
இந்த வழித்தடம் சீனாவிற்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை தரக்கூடியது என்பதை சீனா உணர்ந்தே இருக்கிறது. ஆகவே இதற்கு மாற்றாகத்தான் மலேசியாவிற்கு மேலே தாய்லாந்துக்கு சொந்தமான இடத்தில் ‘கே ஆர். ஏ கால்வாய்’ (KRA canal) என்னும் ஒரு செயற்கை கப்பல் செல்லும் பாதையை வெட்டி அதன் மூலம் நேரடியாக தென் சீனக் கடல்க்குள் நுழையும் திட்டத்தை சீனா முன்மொழிந்தது. இது பொருளாதார ரீதியிலும் சீனாவுக்கு பயன்தரக்கூடியது. ஆகவே இதனை செயல்படுத்த சீனா முனைந்த போது அமெரிக்கா உள்ளே நுழைந்து தாய்லாந்திடம் பேசி இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து விட்டது.
ஆனால் இன்று சீனாவின் இந்த திட்டம் நிறைவேறுவதற்கு முன்னேற்பாடாக இந்த திட்டம் அமைய இருக்கும் கடல் பகுதிக்கு அருகில் இருக்கிற கம்போடியாவில் கடற்படைதளத்தை சீனா கைப்பற்றியுள்ளது. இது அமெரிக்காவின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என்று பார்க்க முடியும்.
அதோடு இந்தோனேசியாவில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை பெருமளவில் இப்போது சீனா தான் அந்த நாட்டிற்கு வழங்கி வருகிறது. இதுவும் இந்தோனேசியா முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து சீனாவை நோக்கி நகர்ந்து வருவதாக ஒரு கருத்தும் இருக்கிறது.
ஆக தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கி வருகிற சூழல் உருவாகி இருக்கிறது. இதை தடுப்பதற்காகவும் அல்லது தனது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காகவும் தான் அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா ஜப்பான் இணைந்து ராணுவ பயிற்சி என்கிற பெயரில் கடற்படை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இப்படி ஏகாதிபத்திய நாடுகள் தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய போர் பதட்டத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். நாம் இன்னொன்றையும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். மேற்ச்சொன்ன அனைத்து நாடுகளிலும் பரவி வாழும் ஒரே இனம் தமிழினம் ஆக இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டால் இந்த ஏகாதிபத்திய நாடுகளில் போர்ச்சூழல் யாரை பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நமக்கென்று இருந்த ஒரே அரணும் 2009 அழிக்கப்பட்டிருக்கிற நிலையில் தமிழினம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வி.
மே17 இயக்கம்
9884072010