“என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்கள் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்”, என்று தன் மரண சாசனத்தில் தமிழீழ மக்களின் குரலாக ஒட்டு மொத்த உலக சமூகத்தையும் கேள்வி எழுப்பினார் ஈகைப்பேரொளி முருகதாசன்.
“எனது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்கும் சிங்கள அரசுடன் சேர்ந்து இணைத்தலைமை நாடுகள் இன அழிப்பிற்கு துணைபோனதற்கும் சாட்சியாக ஐ.நா மன்றத்தின் முன் இந்தத் தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்ற வரலாறும் சேரட்டும்.”
மேலும் வாசிக்க
]]>மோடியின் தயவால் 20 மடங்கு அளவிற்கு வளர்ந்து உலகின் மூன்றாவது பணக்காரரானார் அதானி. மொரிஷியஸில் உள்ள 38 நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் ஷெல் நிறுவனங்களை நிறுவி, அதன் மூலமாக செய்த மோசடிகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது ஹிண்டன்பெர்க் ஆய்வு.
பொய்யான நிறுவனங்களை உருவாக்கி பல ஆயிரக் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம் நடத்தியிருக்கிறது அதானி நிறுவனம். இதில் பலவற்றிற்கு அதானியின் குடும்ப உறுப்பினர்களே இயக்குநர்களாக இருக்கின்றனர்.
அதானி அம்பலமானதும் இது இந்தியாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார் அதானி, மோசடிப் பேர்வழியான அதானி தேசபக்தியைப் போர்த்திக் கொண்டு தப்பிக்க நினைக்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அதானியே தடையாக இருக்கிறார் என ஹிண்டன்பெர்க் பதிலடி கொடுத்திருக்கிறது.
மேலும் வாசிக்க
]]>பாகிஸ்தான் கோரிக்கையை முஸ்லீம் லீக் கட்சியின் முகமது அலி ஜின்னா 1940-ம் ஆண்டில் தான் முன் வைத்தார். ஆனால் 1924-லிலேயே இந்து மகாசபையின் சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ்.-இன் கோல்வால்கர் போன்ற சனாதனவாதிகள் மத ரீதியான இரு தேசக் கோட்பாட்டை முன்னிறுத்தினர். 1937-ல் இரு நாடு கொள்கையை இந்துமகா சபையின் தலைமை உரையில் கூறியவர் சவர்க்கார். அதற்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பே 1923-ல் யார் இந்து? (Who is Hindu) என்ற புத்தகத்தில் இந்துக்கள் ஒரே இனம், ஒரே மொழியான சமஸ்கிருதத்தைக் கொண்டவர்கள் என்று எழுதியவர்.
இந்தியா பாகிஸ்தானாக இரு தேசமாகப் பிரிய முதலில் காரணமானவர் சாவர்க்கர். தீவிரமான தேசபக்தராக இருந்திருந்தால் இரு தேசப் பிரிவினையை முதலில் கையிலெடுத்த சாவர்க்கரைத் தான் கோட்சே கொன்றிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரிவினைக்காக காந்தியைக் கொன்றதாக கோட்சே கூறியது முற்றிலும் பொய் என்பதே உறுதியான ஆதாரமாக இருக்கிறது.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9884864010
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஈழ அரசியலை பேசவைத்தவர் முத்துக்குமார். எப்போதுமே தமிழர்கள், தமிழினம் என்று மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர். “மாணவர்கள் உண்ணாநிலை போரட்டத்தை விடுத்துக் களம் காணுங்கள்” என்று கூறினார். “மாணவர்களே! உங்கள் போராட்டத்தின் வடிவத்தை மாற்றுங்கள், எந்த தலைவர்களின் பின்னாலும் உங்கள் போராட்டத்தை தொடராதீர்கள். அந்த மரபை அடித்து உடைத்து உங்களில் ஒருவனை தலைவனாக்குங்கள்!!” என்றும் முழங்கினார் முத்துக்குமார்.
புலிகளின் அரசியல் தலைவர் நடேசன் அவர்கள் “உலகத் தமிழர் வரலாற்றில் வீரத் தமிழ் மகன் முத்துக்குமார் நிரந்தர இடத்தைப் பெறுவார்” என்று கூறினார்.
மேலும் வாசிக்க
]]>1938 ஏப்ரலில் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கு இராஜாஜி ஆணையிட்டார். இதனை எதிர்த்து பெரும் போராட்டங்களை தனித் தமிழ் இயக்கங்களும், தந்தை பெரியாரும் மேற்கொண்டனர். பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இந்திக்கு எதிராக மறியல் போராட்டங்கள் நடந்த நிலையில், 1940-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்தின்போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
“நாம் (இந்து மகா சபையினர்) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நடத்தும் இந்தப் போருக்கு எதிராக இருக்க வேண்டும். நாம் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும். எனவே, இந்து மகாசபைகள், குறிப்பாக வங்காள மற்றும் அசாம் மாகாணங்களில் உள்ள இந்துக்கள், ஒரு நிமிடம் கூட தாமதியாமல், ஆங்கிலேய இராணுவப் படைகளில் சேர, முடிந்தவரை இந்துக்களைத் தூண்ட வேண்டும்.”
இவ்வாறு இந்துத்துவ வெறியும் சூழ்ச்சியும் பிணைந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைக்கு எதிராக, இந்துக்களை பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர வேண்டுமென்று சாவர்க்கர் அழைப்பு கொடுத்தார். ஏனெனில் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இந்துக்கள் சேர்ந்தால், போருக்குப் பிந்தைய நாட்களில் ஏதேனும் உள்நாட்டு சிக்கலோ அல்லது நெருக்கடியோ ஏற்பட்டால் அதையே காரணியாகக் கொண்டு, இசுலாமிய சிறுபான்மையினரை முற்றிலும் ஒடுக்கி விடலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது ஒன்றிய பண்பாட்டு அமைச்சரான மீனாட்சி லேகி , “ஒரு தேசிய பாரம்பரிய விழாவிற்கு மாற்றாக மற்றொன்றைத் தேர்வு செய்ய முடியாது ” என்ற மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.
ஒருபுறம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டே மறுபுறம் தனது அரசின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க பாஜக முயல்கிறது. மேலும் பீட்டா அமைப்பிற்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இதன்மூலம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர் விரோத பாஜக இரட்டை வேடம் போடுவது அம்பலமாகியுள்ளது. மெரினா புரட்சியின் மூலம் தமிழர்கள் போராடிப் பெற்ற உரிமை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது பாஜக.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
குஜராத் மாடலை ஊக்குவிக்க ஒன்றிய அரசிடமிருந்து நேரடியாக தனியார் நிறுவனங்களுக்கு 2019-20 ல் வழங்கப்பட்ட தொகை ரூ.837 கோடி நிதி என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.
தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசுத் துறை நிறுவனங்களுக்கும் சட்டமன்றத்தின் வரவு செலவு அறிக்கைகளில் வராமல் நிதிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசிடம் இருந்து நேரடியாக பெருமளவு நிதியைப் பெற்ற குஜராத்தில் செயல்படுத்தும் நிறுவனங்களில், மாநில அரசு நிறுவனங்கள் (ரூ. 3,406 கோடி), மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (ரூ. 3,389 கோடி), மத்திய அரசு நிறுவனங்கள் (ரூ. 1,826 கோடி) ஆகியவை அடங்கும். மற்றும் அரசு மற்றும் தன்னாட்சி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் (ரூ. 1,069 கோடி) ஆகியவை அடங்கும்.
ரூ.16500 கோடி அளவிற்கான திட்டங்களை குஜராத் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணத்தின் போது அறிவித்தார் மோடி. அதற்குப் பிறகே தேர்தல் நாளை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
உயர் ஆதிக்க சாதியினரின் கடைகளில் 96.8% பேர் தலித்துகளுக்கு தேநீர், உணவுப் பொருள் பரிமாற தனித்தனி பாத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். மாநிலம் முழுவதும் தலித்துகளுக்கு எதிராக 98 வகையான தீண்டாமை உயர்சாதி சமூகங்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தலித் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு 53.8% அரசு தொடக்கப் பள்ளிகளில் அதிகமாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது.
இலவசங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சி சீரழிவதாக மிகவும் வருந்தியவர் தான் மோடி. அது மட்டுமல்லாமல் இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாசகவின் வழக்கறிஞரே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வளவு கடுமையாக எதிர்த்தவர்கள் தான் தேர்தல் அறிக்கையில் இலவசக் கல்வி, கிரைண்டர், சிலிண்டர், மருத்துவம், பெண்களுக்கு இலவச பைக், குறைந்த விலை எண்ணெய் என இலவசங்களை அள்ளியிறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டது. கொஞ்சமும் கூச்சமேயில்லாமல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டே இருக்கும் மோடியும், பாசகவினரும் எழுப்பும் வீர முழக்கமே குஜராத் மாடல்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சிப்பதில் வரும் சிக்கல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தாண்டி, எப்படி இந்த கடினமான கட்டத்தை எதிர் கொண்டு கடந்து வர வேண்டும் என்பது தான் இப்படத்தின் முக்கிய கரு.
“உயிரை விட மானம் பெருசு தான். ஆனா என்னை பொருத்த வரைக்கும் மானம்கிறது என் உடம்புலயும் நான் போடுற டிரஸ்லையும் இல்ல; நான் வாழுற வாழ்க்கைல தான் இருக்கு.” என்கிறது. இதனை பாதிக்கப்படும் பெண்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, இதுநாள் வரையில் கற்பிக்கப்பட்ட அனைத்து பிற்போக்கான கருத்துக்களையும் தூக்கியெறிந்து விட்டு இனி வரும் காலங்களில் எதற்கும் அஞ்சாமல் இது போன்ற அநியாயங்களை தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.
நம் சமூகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவர்களின் நிலையை புரிந்து உறுதுணையாக இருப்பதாக திரையில் ஒரு கதாப்பாத்திரம் தோன்ற 30 வருடங்கள் ஆகிறது. நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் ஒரு சாமானிய பெண்ணின் வாழ்வில் அப்படி ஒரு ஆதரவு சுலபத்தில் கிடைப்பதில்லை.
மேலும் வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9884864010
“வழக்கறிஞராக பணி செய்வதில் எந்தப் பயனும் இல்லை, ஏனென்றால் அது உயர்சாதி சமூகத்திற்கு சாதகமாக உள்ளது. ஆனாலும் சமூகப் பணிகளைச் செய்வதற்காக சட்டப் பயிற்சியைத் தேர்ந்தெடுத்தேன்” என்று கூறினார் அண்ணல்.
“அனைவருக்கும் சமமான களம் இங்கில்லை” என்பதை உணர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்காடும் ஒரு வழக்கறிஞராக அண்ணல் அம்பேத்கர் தனது சமூகப் பணியைத் தொடங்கினார்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள மஹத் எனும் இடத்தில், உயர் சாதியினர் மட்டுமே பயன்படுத்தி வந்த சாவதர் குளத்தில் அனைத்து மக்களும் நீர் எடுப்பதற்காக நடந்தது இந்தப் போராட்டம். அந்தக் குளம் சட்டப்பூர்வமாக அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்றும், “அது தனிப்பட்ட சொத்து அல்ல, மஹத் நகராட்சியின் சொத்து” என்றும் அவர் வெற்றிகரமாக நிறுவினார்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010