இன்று மாலை 3 மணியளவில், அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ்நாட்டு அரசிற்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழர் விரோத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சி சார்பாக பனகல் மாளிகை அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும், தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆளுநரை வெளியேற்றக் கோரி நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திலும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>ஆன்லைன் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை திரும்பப் பெறக் கோரி, (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட) தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக, 03-01-2023 செவ்வாய் மாலை தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் தாம்பரம் முருகன் அவர்கள் தலைமையில் பல்வேறு கட்சிகள், அமைப்பில் பங்கேற்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>டிசம்பர் 6, பாபர் மசூதி அராஜகமாக இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமுமுக ஒருங்கிணைத்த வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் 06-12-2022 செவ்வாய் மாலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>டிச 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை பாசிச எதிர்ப்பு தினமாக அறிவித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் 06-12-22 செவ்வாய் காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் கொண்டல் சாமி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை பாசிச எதிர்ப்பு தினமாக அறிவித்து, மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (06-12-2022 செவ்வாய்) காலை எஸ்டிபிஐ கட்சி சார்பாக நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மே பதினேழு இயக்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 05-12-2022 திங்கள் கிழமை மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும், இந்தியை திணிக்கும் மோடி அரசை கண்டித்து தன்னுயிர் நீத்த ஐயா தாழையூர் தங்கவேல் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் திரு ஆர்.எஸ். பாரதி, மதிமுகவின் திரு வந்தியத்தேவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வன்னியரசு, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் புழல் சேக், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தோழர் உமர் பாரூக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் முஹம்மது முனீர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், தமிழக மக்கள் முன்னணியின் பாவேந்தன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சௌ சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, ஆலந்தூர் சங்கர நேத்ராலயா அருகில், இன்று (06-12-2022 செவ்வாய்) காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, ஆலந்தூர் சங்கர நேத்ராலயா அருகில், இன்று (06-12-2022 செவ்வாய்) காலை 10:30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
டிசம்பர் 6, பாபர் மசூதி அராஜகமாக இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமுமுக ஒருங்கிணைக்கும் வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் 06-12-2022 செவ்வாய் மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். தோழர்களை அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இன்று (05-12-2022 திங்கள்) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கட்சி, சாதி, மத எல்லை கடந்து இந்தியை விரட்டுவோம்!
தமிழ் மீது பற்று கொண்ட அனைவரையும் அழைக்கிறோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010