தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து, இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை இன்று (28-02-2023 செவ்வாய்) காலை மே பதினேழு இயக்கம் முற்றுகையிட்டது!
தமிழ் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்ய வேண்டும், மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசு கண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் காசி. புதியராஜா உள்பட, பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தோழர்கள் என பலர் பங்கேற்று கைதாகினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து,
இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்!
நாளை (28-03-2023 செவ்வாய்) காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவோம்!
தமிழர்களே! நம் மீனவர்களுக்கு குரல் கொடுப்போம்!
* தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்!
* நம் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசை கண்டிப்போம்!
* தமிழக அரசே பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்கிடு!
மே பதினழு இயக்கம்
9884864010
திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.
அரங்கு எண்: 83
அரசியல், சமுகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அரங்கில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருக.
தொடர்புக்கு: 8939782116
]]>மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு மு. கருணாநிதி அவர்களுக்கு வங்கக்கடலில் தமிழ்நாடு அரசு சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரி 31 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அந்த கூட்டத்தின் குறிப்புகள் (Minutes of Meeting) என்று ஓர் ஆவணம் வெளியாகியது. அதில் மே பதினேழு இயக்கம் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு, பேனா சின்னம் அமைக்க ஆதரவளிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, பேனா சின்னத்தை கடலில் அமைக்க மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கவில்லை என்னும் நிலைப்பாட்டை விளக்கி, சென்னை மாவட்ட ஆட்சியர் திருமிகு அமிர்தஜோதி அவர்களை 24-02-2023 வெள்ளி அன்று தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நேரில் சந்தித்து, கருத்துக்கேட்பு கூட்டத்தின் கருத்தை திருத்திக்கொள்ளுமாறு கடிதம் அளித்தார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>“தேசியத் தலைவரும் தமிழீழமும்: அரசியலும் தீர்வும்” என்னும் கருத்தரங்கம் கடந்த 19-02-2023 ஞாயிறு மாலை சைதாப்பேட்டை அண்ணாமலை மகாலில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள், மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்கள் கருத்துரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>“தேசியத் தலைவரும் தமிழீழமும் – ஈழம் அரசியலும் தீர்வும்” என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்.
நாள்: பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு
இடம்: அண்ணாமலை மகால், ரெட்டிக்குப்பம் ரோடு,
சைதாப்பேட்டை, (அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில்)
சென்னை
தேசியத்தலைவரைப் பற்றிய போலிகளின் சினிமா கதைகளையும், மாயாவி கதைகளையும் கடந்து ஈழ அரசியல் பேசுவோம்.
போராளிகளுக்கும், ஈழத்திற்கும் எதிராக அவதூறுகளை மார்க்சியத்தின் (அல்லது மா-லெ) பெயரில் வெளிப்படுத்தப்படும் பார்ப்பனிய குடுமிகளின் வன்மத்தை எதிர்கொள்ளும் தர்க்கத்தை நிகழ்த்துவோம்.
‘இலங்கைத்தமிழருக்கு அதிகாரப்பகிர்வு’ என்று வட்டுக்கோட்டை தீர்மானத்தையும், திராவிடர் இயக்க கொள்கையையும் நிராகரிக்கும் திட்டங்களையும் புரிந்து கொள்வோம்.
இனப்படுகொலைக்கு நீதி கேட்போம்.
இன விடுதலைக்கு குரல் கொடுப்போம்.
தமிழீழத்தை நேசிக்கும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனைவரும் வருக!
மே பதினேழு இயக்கம்
9884864010
“வடவர் வருகையும் தமிழ்நாடும்” – என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி (செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் ) இன்று (14-02-2023 செவ்வாய்) மாலை 6 மணியளவில், தாம்பரம் SGS மஹாலில் ஒருங்கிணைத்துள்ளது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றுகிறார். அனைவரும் வருக.
மே பதினேழு இயக்கம்
9884864010
அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும்
காதலும் கலைஞனும் – புத்தகமும் வாசிப்பும் – உரையாடல்
சிறப்புரை – சாகித்திய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்.
திரைப்பட வசனகர்த்தா,
லட்சுமி சரவணகுமார் அவர்கள்
தேதி : 14-02-2023, செவ்வாய்
இடம் : திசை புத்தக நிலையம், ஆவின் பால் நிலையம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், தேனாம்பேட்டை, சென்னை.
தொடர்புக்கு : 98840 82823
]]>‘கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிய தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுத்தல் மற்றும் கள ஆய்வு அறிக்கை வெளியீடு’ குறித்த ஊடகச் சந்திப்பு 08-02-2023 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஊடகச் சந்திப்பில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி, அனைத்திந்திய சனநாயக மாதர் சங்கத்தின் தோழர் வாலண்டினா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தோழர் பா.சுகந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
மூங்கில்துறைப்பட்டில் நடந்த சாதிய வன்முறை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு – 8/2/2023
அண்மை காலங்களில் ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் மீது நடைபெறும் சாதி ரீதியான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதை மே17 இயக்கம் போன்ற சனநாயக அமைப்புகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றோம். வீரளூர், வேங்கைவயல், கிளாமங்கலம் கிராமங்களில் நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகரில் ஆதிக்க சாதி வெறியர்கள் பட்டியலின மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி18 அன்று தொண்டமனூர் கிராமத்தில் நடந்த பொங்கல் கலை நிகழ்ச்சிகளைக் காண சென்ற அம்பேத்கர் நகர் இளைஞர்கள் மீது திட்டமிட்டு ஆதிக்க சாதியினர் வன்முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக அம்பேத்கர் நகர் இளைஞர்கள் அணிதிருந்த நீல நிற சட்டைகளை கழட்ட செய்து, ஆதிக்க சாதி சமூக விரோதிகள் தாங்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற சட்டைகளை வணங்கும்படி செய்து அவமானப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஜனவரி 19 அன்று ஆதிக்க சாதியினர் சாலை மறியல் செய்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் மது போதையில் அம்பேத்கர் நகருக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஆயுதங்களுடன் நுழைந்து, சாதிப் பெயரை இழிவாக கூச்சலிட்டபடியும் பெண்கள் குழந்தைகளை கொச்சையாகப் பேசியும் அச்சுறுத்தியுள்ளனர். கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் சூறையாடி மிரட்டல் விடுத்துள்ளனர்.
திட்டமிட்டு நடைபெற்ற இந்த வன்முறை தாக்குதல் குறித்து ஆதிக்க சாதியினர் முன்னரே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததும் அம்பேத்கர் நகர் மக்களை மிரட்டி உள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சாதி வெறி தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தற்போது இரு தரப்பிலிருந்தும் இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் இவ்வன்முறையைத் தூண்டிவிட்ட முக்கிய குற்றவாளிகளை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை.
இந்த வன்முறைக்குத் தொடர்பில்லாத பட்டியலின இளைஞர்கள் மேல் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட ஆதிக்க சாதியினர் 200 பேரும் காணொளி உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வழக்கு பதிய வேண்டும். இவர்களைத் தூண்டிவிட்டு தவறாக வழிநடத்திய சமூக விரோத நபர் / நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திட வேண்டும். மேலும் வன்முறை தாக்குதலில் தங்கள் வீடு, வாகனம், குடிநீர் குழாய் போன்ற சொத்துக்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கவும் வலியுறுத்துகின்றோம். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சாதிய வன்முறை நிகழ்வுகளைத் தடுத்திட முடியும்.
]]>“போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, சுற்றுச்சூழலைக் காப்பாற்ற, விபத்தைக் குறைக்க பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூவுலகின் நண்பர்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மினி மராத்தானை பல்வேறு ஊர்களில் ஒருங்கிணைக்கிறது. இந்த நிகழ்வு சென்னை பெசன்ட் நகரில் வரும் ஞாயிறு காலை 6:30-க்கு நடைபெறுகிறது. பொதுப்போக்குவரத்தை ஊக்கப்படுத்துவதன் அடிப்படையில் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கிட முனையும் இந்த முன்னெடுப்பை மே பதினேழு இயக்கம் ஆதரிக்கிறது. சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் நடைபெறும் நிகழ்வுகளில், அப்பகுதியை சேர்ந்த மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010