தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து, இலங்கை தூதரகத்தை இழுத்து மூடக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை இன்று (28-02-2023 செவ்வாய்) காலை மே பதினேழு இயக்கம் முற்றுகையிட்டது!
தமிழ் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்ய வேண்டும், மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசு கண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் காசி. புதியராஜா உள்பட, பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், தோழர்கள் என பலர் பங்கேற்று கைதாகினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை அரசை கண்டித்து,
இலங்கை தூதரம் முற்றுகைப் போராட்டம்!
நாளை (28-03-2023 செவ்வாய்) காலை 10 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவோம்!
தமிழர்களே! நம் மீனவர்களுக்கு குரல் கொடுப்போம்!
* தரங்கம்பாடி, காரைக்கால் மீனவர்களை எல்லை கடந்து தாக்கிய இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்!
* நம் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையுடன் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் இந்திய மோடி அரசை கண்டிப்போம்!
* தமிழக அரசே பாதிக்கப்பட்ட நமது மீனவர்களுக்கு உடனே இழப்பீடு வழங்கிடு!
மே பதினழு இயக்கம்
9884864010
தமிழ் நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆந்திர மாநில வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்ட தமிழ் நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக, செங்கல்பட்டு சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்றார்.
முற்றுகை போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்ற போது, ஊடகவியலாளர்களிடையே உரையாற்றிய காணொளி.
மாலைமுரசு காணொளி :
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தமிழ் நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆந்திர மாநில வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்ட தமிழ் நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக, செங்கல்பட்டு சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் 28-10-2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>திருக்குறளை அவமதித்து, தொடர்ந்து மாநில உரிமைகளுக்கு எதிராக செயலாற்றி வரும் தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை கண்டித்து, தமிழர் தேசிய முன்னணி சார்பாக ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் செப்டம்பர் 11 ஞாயிறு காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். தலைவர்கள், தோழர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
]]>ஈழத் தமிழர்களை சித்திரவதை செய்யும் திருச்சி சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைத்த திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் இன்று (29-06-2022 புதன்) காலை நடைபெற்றது. நீதிமன்ற காவலாகவும் இல்லாமல், சிறைத்துறையின் கீழும் வராத சட்டவிரோதமானதாக செயல்படும் முகாமை இழுத்து மூடி, ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் கே.எம்.சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன் ஆகியோருடன் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் இம்முற்றுகை போராட்டத்தில் கைதாகினர்.
போராட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி.
Channel 7 India இணைப்பு
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் ஈழத்தமிழர்களுக்கான தனி சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டுமென கடந்த 20-05-2022 முதல் தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் உச்சகட்டமாக கடந்த ஜூன் 24 அன்று உமாரமணன் என்ற ஈழத்தமிழர் தீக்குளித்துள்ளார். அவர்களது ஒரே கோரிக்கை, சித்திரவதை கூடமாக இருக்கும் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்பதே.
போராடும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு ஆதரவாக, ஈழத் தமிழர்களை சித்திரவதை செய்யும் திருச்சி சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைக்கும், திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் வரும் புதன் (29-06-2022) காலை நடைபெறுகிறது.
* ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்யும் திருச்சி சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூடு!
* 40 நாட்களாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபடும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக விடுதலை செய்!
* போராட்டத்தில் தீக்குளித்த ஈழத்தமிழரான உமாரமணன் என்பவருக்கு உரிய நீதியை வழங்கிடு!
* தமிழ்நாட்டை நம்பி வந்த தொப்புள்கொடி உறவுகள் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்திடு!
இடம்: திருச்சி சிறப்பு முகாம்
நேரம்: 29-06-2022 புதன் காலை 10 மணி
ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு வலுவூட்ட அனைவரும் ஒன்றுதிரள்வோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழக நலன்களுக்கு எதிராக, ஜனநாயக மரபுகளுக்கு முரணாக செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர். என். ரவியை தமிழகத்தை விட்டு வெளியேறக் கோரியும், தருமை ஆதீனம் ஆளுநர் ரவியை அழைத்து இந்நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஏற்பாடு செய்த “பல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் ஞான ரத யாத்திரையை ” தொடங்கி வைப்பதற்காக இன்று (19-04-2022 செவ்வாய்) மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் மேற்ககொண்ட இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. ஆளுநரை முற்றுகையிட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும், தமிழர் உணர்வுகளுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டியும், திராவிடத் தமிழர் கட்சி சார்பாக 28-02-2022 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகையில், தோழர் விடுதலை ராஜேந்திரன், அப்துல் சமது உள்ளிட்டவரோடு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் கலந்துகொண்டார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, மனிதநேய சனநாயகக் கட்சி சார்பாக இன்று (08-01-2022) காலை 11 மணியளவில், கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>