விசிக-கம்யூனிஸ்ட் கட்சிகளின் அறைகூவலுக்கு தமிழ் நாட்டில் முதன் முதலாக பதிலளித்த முதல் அமைப்பு மே பதினேழு இயக்கம் ஆகும். இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் இந்த மனித சங்கிலி நிகழ்விற்கு ஆதரவளித்து தம்மை இணைத்துக் கொண்டன.
அக்டோபர் 11 அன்று மாலை 4 மணி அளவில் தமிழ் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி ஒருங்கிணைக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள்-கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதிமுக, இ.யூ.முஸ்லீம் லீக், மமக, தவாக உள்ளிட்ட 33-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் மே 17 இயக்கம், திராவிடர் கழகம் உள்ளிட்ட 44 இயக்கங்களும் என 80-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழ் நாடு முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்றனர்.
பத்திரிக்கையாளர்களிடையே பேசிய தோழர் திருமுருகன் காந்தி, “தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்பதை இந்தப் பேரணி எடுத்துரைக்கின்றது. பிரிவினைவாதத்தை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற இந்துத்துவ அமைப்புகளின் அரசியலை எதிர்த்து வெற்றிகரமாக இந்த மனித சங்கிலிப் பேரணி நடந்து கொண்டிருக்கிறது. சாதி மத எல்லை கடந்து மக்கள் வீதிக்கு வந்து இந்துத்துவ அரசியலுக்கு எதிராக கரம் கோர்த்து நிற்கின்றார்கள். இதுதான் இந்த மண்ணின் அரசியல். இதுதான் பெரியாரின் அரசியல். மார்க்சின் அரசியல். அண்ணல் அம்பேத்கரின் அரசியல். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மத வெறியை மாய்ப்போம்.” என்று கூறினார்.
மேலும் வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
மே பதினேழு இயக்கம்
9884864010
சமூக நல்லிணக்க மனித சங்கிலி – தமிழ் நாடு முழுவதும் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு. தற்போது நடைபெற்று வரும் மனித சங்கிலியில் தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.
கோவையில் நடைபெற்று வரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள்.
]]>அக்டோபர் 11 மனித சங்கிலி வெற்றி பெற வாழ்த்துகள். தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.
]]>]]>
]]>
அற்புதம் அம்மாள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்த மனித சங்கிலியில்,
அனைத்து இடங்களிலும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ் உணர்வாளர்கள், நீதியின்பால் அக்கறை கொண்டவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று வலுசேர்ப்போம்.
மார்ச் 9, சனி மாலை 4 மணி முதல் 6 மணி வரை.
நடைபெறும் இடங்கள்:
* சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை.
* கோவை, அசோகா பிளாசா, காந்திபுரம்
* மதுரை, மாவட்ட நீதிமன்றம் முன்பு
* திருச்சி, ஆர்.சி ஸ்கூல் ஜங்சன் அருகில்
* சேலம், அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம்
* திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை அருகில்
* புதுவை, அண்ணா சிலை முன்பாக.
ஆளுநரே தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கி உடனே கையெழுத்திடு!
அனைவரும் கூடுவோம்! 28 ஆண்டுகளாய் சிறையில் வாடும் ஏழு நிரபராதி தமிழர்களை மீட்போம்.
– மே பதினேழு இயக்கம்
]]>ராஜீவ் கொலையின் பெயரால் ஏழு நிரபராதித் தமிழர்கள் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ வாதங்கள், எத்தனையோ போராட்டங்கள் எல்லாம் நடந்து தற்போது உச்சநீதிமன்றமும் இவர்களின் விடுதலைக்கு வழிவிட்டுவிட்டது. ஏழ்வரை விடுவிப்பதில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்பதையும் சொல்லிவிட்டது. தமிழக அரசும் தனது அமைச்சரவையைக் கூட்டி விடுதலைக்கான தீர்மானத்தினை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவிட்டது.
பாஜகவின் பிரதிநிதியைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரையில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஒரு அமைச்சரவையின் முடிவை மீறி தடுத்து வைப்பதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லாத போதிலும் சட்ட விரோதமாக தடுத்து வைத்திருக்கிறார்.
இந்த நேரத்தில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை விடுவிக்க தமிழ்நாட்டு மக்கள் அவர்களின் பின்னால் இருக்கிறோம் என்பதை மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும் நாம் காண்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அற்புதம் அம்மாள் அவர்கள் ஒருங்கிணைக்கிற இந்த நீதிக்கான மனித சங்கிலியில் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாய் திரள்வோம்.
நண்பர்கள், குடும்பத்தினர் எல்லோரையும் அழைத்து வாருங்கள்! நம் ஏழு நிரபராதிகளின் விடுதலையைக் கோரி கைகோர்த்து நிற்போம்!
– மே பதினேழு இயக்கம்
9884072010