யூடியூப் காணொளி:
மே பதினேழு இயக்கம்
9884864010
தியாகி இம்மானுவேல் பேரவையின் ஆதிக்க எதிர்ப்புப் போராளி மறைந்த தோழர் புலிப்பாண்டியன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு இன்று (17-06-2022) வெள்ளி மாலை 4 மணிக்கு, இளையான்குடி ஆயிர வைசிய மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
யூடியூப் இணைப்பு
]]>தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை மே 22 ஞாயிறு மாலை 4 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த மே பதினேழு இயக்கம் திட்டமிருந்தது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், அடக்குமுறையை மீறி தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் என்றும் எந்நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்றும் உறுதிபட அறிவித்திருந்தோம். இதற்காக, சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையில் அருகில் ஒன்றுகூடி கடற்கரையை நோக்கி நினைவேந்த செல்வோம் என்று மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுத்திருந்தது.
அதன்படி, மே 22 மாலை 4 மணியளவில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பமாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே ஒன்றுகூடினர். தோழர்கள் பறையிசைமுழங்க, கூடியிருந்த மக்கள் தமிழீழ விடுதலைக்கான முழக்கங்களை எழுப்பினர். நினைவேந்தல் நிகழ்த்துவதற்காக மக்கள் கடற்கரையை நோக்கி அணிவகுத்து செல்கையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஊடகவியலாளர்களிடையே ஈழம் குறித்த திமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலத்தினார். தடையை மீறி நினைவேந்தல் நடத்த சென்றதாக பெண்கள், குழந்தைகள் என அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
அடக்குமுறைக்கு மத்தியில் கைதாகிய நூற்றுக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மண்டபத்திலேயே நடத்தினர். நினைவேந்தல் நடத்த தடை இருப்பதை அறிந்திருந்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்தோடு பங்கேற்று கைதாகினார்.
மே பதினேழு இயக்கத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்று மக்களுடன் கைதாகினர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வன்னியரசு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தோழர் கே.எம்.சரீப், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் பொழிலன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தமிழ்தேச நடுவத்தின் தோழர் கண குறிஞ்சி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் இளமாறன், திராவிடர் விடுதலை கழகத்தின் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடுதலை கழத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, ஆம் ஆத்மி கட்சியின் தோழர் வசீகரன், தோழர்கள் ரசாக், கெளஸ், நிலவழகன், கயல், மகிழினி மணிமாறன், புலவர்.ரத்தினவேலு, வழ.ரஜினிகாந்த், எழுத்தாளர் மஞ்சுளா உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் பங்கேற்று அடக்குமுறைக்கு எதிராக நின்றார்கள்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஊடகவியலாளர்களிடையே பேசிய காணொலி.
யூடியூப் இணைப்பு
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தடையை மீறி நினைவேந்துவோம். இது எம் அடிப்படை உரிமை. – மே பதினேழு இயக்கம்
அமைதியான முறையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி ஆண்டுதோறும் நடத்தி வந்த நினைவேந்தல் நிகழ்வு 2017ல் தடுக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு 17 தோழர்கள் சிறைப்பட்டனர். நான்கு தோழர்கள் குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்டனர். தொடர்ச்சியாக 2018, 2019-லும் தடையை மீறி நினைவேந்த சென்ற காரணத்தினால் வழக்குகள் பதியப்பட்டன.
இந்நிலையில் கடந்த மே 2-ம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் நினைவேந்தல் நடத்த மெரினா, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் நடத்த அனுமதி கோரினோம். நீண்ட ஆலோசனைக்கு பின் கடந்த வாரம் காவல்துறையே நினைவேந்தல் நடத்த பெசன்ட் நகர் கடற்கரையை தேர்ந்தெடுத்து ஒதுக்கிக் கொடுத்தது.
அனைத்துக் கட்சி தலைவர்கள், ஆளுமைகள் பங்கேற்பதாக அறிவித்த பின்னர், நேற்று மே 21 2022 பின்னிரவில் அனுமதி கொடுப்பது இயலாது என காவல்துறை அறிவித்தது. இதற்கான அனுமதி மறுப்பு கடிதத்தை பின்பு அளித்தனர்.
இறந்தவர்களுக்கு நினைவேந்துவது அடிப்படை உரிமை. இதை எந்த சட்டத்தின் மூலமாகவும் தடுக்க இயலாது. இந்நிலையில் இப்பண்பாட்டு நிகழ்வை நடப்பதற்கு அனுமதி மறுப்பது சனநாயக விரோதம் மட்டுமல்ல, தமிழின விரோத அடக்குமுறையாகும்.
மெரினா கடற்கரையில் மட்டுமல்லாமல் அனைத்து நீர் நிலைகளில் தமிழர்கள் இறந்தோருக்கு நினைவேந்துவது இன்றளவும் நடக்கும் நிலையில் எவ்வித அடிப்படையுமின்றி இந்நிகழ்வினை தடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
திமுக அரசு இதற்கு முந்தைய அதிமுக அரசின் நிலையையே தொடர்வது சனநாயகவிரோதமாகும். ஒன்றிய அரசின் உள்துறை, ஒன்றிய உளவுத்துறையின் அழுத்தத்தின் காரணமாகவும் நிகழ்வு தடை செய்யப்பட்டதாகவும் எமக்கு சொல்லப்பட்டது. எக்காரணமாயினும், தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்விற்கான உரிமையை தமிழக திமுக அரசு உறுதி செய்யாதது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழீழ இனப்படுகொலை மற்றும் அதற்கான நினைவேந்தல் நடத்துவது தொடர்பாக திமுக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
அடக்குமுறையை மீறி தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும். எந்நிலையிலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என உறுதிபட தெரிவிக்கிறோம். அடக்குமுறையை சனநாயக ரீதியில் எதிர்கொண்டு அம்பலப்படுத்த அனைத்து சனநாயக ஆற்றல்களையும் அழைக்கிறோம். *பெசன்ட் நகர் பேருந்து நிலையம் முன்பு மாலை 4 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி, கடற்கரையை நோக்கி நினைவேந்த செல்வோம்!*
மே பதினேழு இயக்கம்
9884864010
மதுரையில், தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகிலுள்ள இராமசுப்பு அரங்கத்தில், மே 20, 2022 வெள்ளிக்கிழமை மாலை மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும், மறைந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மதுரை மாவட்ட பொறுப்பாளர் தோழர் கிட்டு ராசா அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பிரவீன் குமார் மற்றும் தோழர் புருசோத்தமன் ஆகியோர் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பேரறிவாளன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>ஈரோட்டில் தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், பெரியார் மன்றத்தில் மே 20, 2022 வெள்ளிக்கிழமை மாலை மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன், மதிமுகவின் மேற்கு மண்டல செயலாளர் தோழர் கந்தசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வெ. பொன்னையன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல்! கொல்லப்பட்ட தமிழர்களுக்காக குடும்பத்துடன் நினைவேந்த மே 22-ல் சென்னையில் ஒன்றுகூடுவோம்! – மே பதினேழு இயக்கம்
2009-இல் சிங்களப் பேரினவாதம் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளோடு இணைந்து ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது. இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு கடந்த 13 ஆண்டுகளாக உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் போராடி வருகின்றனர். தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. அதுவே இனப்படுகொலைக்குள்ளான தமிழர்களுக்கு நீதியாக அமையும்.
அதனை நினைவில் ஏந்தும் வகையிலும், கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையிலும் இனப்படுகொலையின் இறுதி நாட்களான மே மாதம் 15-18 வரை உலகத்தின் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் கொல்லப்பட்ட நமது உறவுகளை நெஞ்சில் ஏந்தியும், தமிழீழ விடுதலைப்புலிகள் விட்டுச் சென்ற தமிழீழ கோரிக்கையை உயர்த்திப்பிடிக்கும் விதமாகவும் மே பதினேழு இயக்கம் ஆண்டுதோறும் மே மாதம் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை சென்னையில் நடத்தி வருகிறது.
2009-க்கு முன் தமிழீழ விடுதலை எந்த அளவிற்கு அவசியமாக ஈழத்தமிழர்களுக்கு இருந்ததோ அதனை விட பல மடங்கு தற்போது உள்ளது. இன்னும் சொல்லப்போனால், தெற்காசிய பிராந்தியத்தில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்புமே இன்று ஈழ விடுதலை அரசியலில் உள்ளது. ஏனென்றால், இன்று மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் மூழ்கித் தவிக்கும் இலங்கையை, தனது புவிசார் அரசியல் நலனுக்காக உலக வல்லாதிக்க நாடுகள் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றன. தமிழீழ இனப்படுகொலைக்கான காரணமும் அதுவே. இலங்கையை கட்டுப்படுத்தி தெற்காசிய பிராந்தியத்தை தனது கோரப் பிடிக்குள் வைக்கத் துடிக்கின்றன. எனவே ஈழ விடுதலை அரசியல் என்பது இன்று ஈழத்தமிழர்கள் என்பதையும் தாண்டி, தெற்காசிய மக்களுக்கான அரசியலாக மாறி நிற்கிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தமிழீழ இனப்படுகொலையை நடத்திய இராஜபக்சே குடும்பத்தின் கோர முகத்தை சிங்கள மக்களுக்கும் காட்டுகிறது. சிங்கள இனவெறியாளர்களின்-ஆட்சியாளர்களின் அடக்குமுறை சிங்கள மக்களை நோக்கியும் திரும்பியுள்ளது. இது, தமிழீழ மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை சில சிங்கள மக்களுக்கு உணரச் செய்துள்ளது. இவ்வேளையில், தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மூலம் உலகின் கவனத்தை பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது என்பதை உலகிற்கு உரக்க சொல்ல வேண்டிய வேளை இது.
இந்த நிலையில், தமிழநாட்டில் ஈழ விடுதலை அரசியலை உயர்த்திப்பிடிக்க வேண்டியதன் அவசியம் தமிழர்களாகிய நமக்கு முதன்மையாக இருக்கிறது. அதனை உணர்த்தும் விதமாக தமிழீழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தலை இந்தாண்டு மே 22 ஞாயிறு மாலை சென்னையில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கிறது. தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான இந்த நினைவேந்தலில் தமிழர்கள் நாம் கொல்லப்பட்ட நமது உறவுகளுக்காக நினைவேந்துவோம். சென்னையில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று மெழுவர்த்தி ஏந்தி நினைவேந்த மே பதினேழு இயக்கம் அழைக்கிறது. கட்சி, சாதி, மத வேறுபாடு கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
திருச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம், காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில், மே 21, 2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றுகிறார்.
நினைவேந்தல் உரையாற்றுபவர்கள்:
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
தோழர் குடந்தை அரசன்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
தோழர் உ.தனியரசு
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
நாகை.திருவள்ளுவன்
தமிழ்ப்புலிகள் கட்சி
கே.எம்.செரிஃப்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
உ.இளமாறன்
தமிழர் விடியல் கட்சி
பிரபாகரன் வீரஅரசு
முன்னாள் மாணவ செயல்பாட்டாளர்
ஒருங்கிணைப்பு:
மே பதினேழு இயக்கம்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழர் விடியல் கட்சி
இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 1.5 இலட்சம் ஈழத் தமிழர்களை நினைவில் ஏந்துவோம்!
சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்றுகூடுவோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010