மே 17 இயக்கம் இணையம் வழியாக ஒருங்கிணைக்கும் இரண்டாம் கட்ட தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாளான இன்று 04.07.2020 சனிகிழமை மாலை 7 மணிக்கு ’சுகாதாரம் – கல்வி உரிமை மீட்க எழுச்சி கொள்வோம்’ என்கிற தலைப்பில் மருத்துவர் தோழர். எழிலன் அவர்களும், ,மனித உரிமைக் காப்பாளர்களின் பங்கு, எனும் தலைப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் ஹென்றி டிபேன் அவர்களும், ’பறிபோகும் தொழிலாளர் உரிமைகள்’ எனும் தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கனகராஜ் அவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மே 17 இயக்கம்
9884072010
அதன்படி நேற்று 26.04.2020 ஞாயிறு அன்று மாலை 5மணிக்கு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் வீட்டில் இருந்தபடியே மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை பதாகை ஏந்தி மே 17 இயக்க தோழர்களும் பொது மக்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள்.
கவன ஈர்ப்புக் கோரிக்கைகள்
இந்திய அரசே!
கொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க.
1. உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு!
2. நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு!
3. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு!
4. தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு!
5. மருத்துவர்கள், செவிலியர்கள், நலவாழ்வுப்பணியாளர்களுக்கு உரியப் போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு!
மே17 இயக்கம்
9884072010