“போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, சுற்றுச்சூழலைக் காப்பாற்ற, விபத்தைக் குறைக்க பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூவுலகின் நண்பர்கள் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து மினி மராத்தானை பல்வேறு ஊர்களில் ஒருங்கிணைக்கிறது. இந்த நிகழ்வு சென்னை பெசன்ட் நகரில் வரும் ஞாயிறு காலை 6:30-க்கு நடைபெறுகிறது. பொதுப்போக்குவரத்தை ஊக்கப்படுத்துவதன் அடிப்படையில் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கிட முனையும் இந்த முன்னெடுப்பை மே பதினேழு இயக்கம் ஆதரிக்கிறது. சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் நடைபெறும் நிகழ்வுகளில், அப்பகுதியை சேர்ந்த மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தன்னுயிர் நீத்த மாவீரர் முத்துக்குமாரின் நினைவுநாளான 29-01-2023 ஞாயிறு அன்று கொளத்தூரில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் தோழர்கள் அனைவரும் முழக்கங்கள் இட்டவாறு அணிவகுத்து சென்று முத்துக்குமார் நினைவுத்தூண் முன் அமைக்கப்பட்டிருந்த முத்துக்குமார் சிலை மற்றும் ஈகியர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>அவையம் வாசிப்பு வட்டம் வழங்கும்
“புத்தகமும் வாசிப்பும் – உரையாடல்”
சிறப்புரை – திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்.
தேதி : 01-01-2023, ஞாயிறு.
இடம் : திசை புத்தக நிலையம், ஆவின் பால் நிலையம் அருகில், காமராசர் அரங்கம் எதிரில், தேனாம்பேட்டை, சென்னை.
தொடர்புக்கு : 98840 82823
]]>தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாளையொட்டி, இன்று 24-12-2022) காலை, சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியாருடைய உருவ சிலைக்கு மே பதினேழு இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தந்தை பெரியாரின் கருத்துக்களை முழக்கமிட்டவாறு அணியாக சென்று மரியாதை செலுத்தினர். இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் புருசோத்தமன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக, 06-12-2022 செவ்வாய் காலை சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அண்ணலின் உருவ சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17 அன்று சென்னையின் பல்வேறு இடங்களில் மே பதினேழு இயக்கம் சார்பாக தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில், கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் எதிரில், முகப்பேர் கிழக்கு பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, சேத்பட் பகுதி, அண்ணா சாலை அரசினர் தோட்டம் அருகில் ஆகிய இடங்களில் உள்ள பெரியாரின் சிலைக்கு பறையிசையுடன் முழக்கங்கள் இட்டவாறு அணிவகுத்து சென்று மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் பிரவீன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் தி நகரில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மின்சார விலையேற்றம் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறு-குறுதொழில்கள் ஆகியவற்றை மோசமாக பாதிக்கும் என்பதை கவனத்தில்கொண்டு பங்கேற்க அழைக்கிறோம். 2012இல் இதேபோன்ற எதிர்ப்பை மே17 இயக்கம் பதிவு செய்து விலையேற்றத்தை தவிர்த்தோம். அதேபோன்று இன்றும் அழைக்கிறோம்.
தமிழர் நலன்களுக்காக என்றும் மே17 களத்தில் நிற்கும். பங்கேற்க வாரீர்.
இடம்: கலைவாணர் அரங்கம்
நாள்: 22.08.2022 திங்கட்கிழமை காலை 9மணி.
( 9மணிக்கு வந்து முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கருத்தை பதிவு செய்யமுடியும். ஆகவே அனைவரும் கட்டாயம் 9மணிக்கு முன்பதிவு செய்துவிட்டு உள்நுழையவும்).
மே17 இயக்கம்
9884864010
]]>தோழர் பேரறிவாளன் விடுதலைக்கு பிறகான தொடர் பயணங்களுக்கு நடுவில், 25-05-2022 அன்று மாலை தோழர் பேரறிவாளன், அற்புதம்மாள் மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் நேரில் சந்தித்து உரையாடினர். அவர்களோடு மே பதினேழு இயக்கத் தோழர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். எதிர்பாராத இச்சந்திப்பை ஏற்படுத்தி மகிழ்ச்சிக்குள்ளாக்கிய தோழர் டேவிட் பெரியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 14-04-2022 காலை சென்னை கோடம்பாக்கத்திலுள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் பறையிசைத்துக் கொண்டே அணிவகுத்து சென்று முழக்கங்கள் இட்டவாறு மரியாதை செலுத்தினர். விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளில், மக்கள் விடுதலை முன்னணி (PLF) சார்பாக மண்ணுரிமை மீட்பு – நீலச்சட்டை அணிவகுப்பு பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று (14-04-2022) காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>