காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வரும் வேளையில், 31-08-2021 அன்று நடைபெறவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேத்தாட்டு அணை ஒரு விவாதப்பொருளாக இணைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக நாளை (30.08.2021 திங்கள்) காலை 9 மணி முதல் நடைபெறும் #TNRejectsMekadatuAgenda சமூகவலைத்தளப் பரப்புரையில் மே பதினேழு இயக்கமும் பங்கேற்கிறது. ஆகவே, மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் #TNRejectsMekadatuAgenda என்ற ஹேஸ்டேக் பதிவுகள் இட்டு சமூகவலைத்தளப் பரப்புரையில் பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
கூடங்குளம் அணுமின்நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து நாளை நடைபெறும் #StopKudankulamExpansion சமூக வலைத்தள பிரச்சாரத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. மிக முக்கியமான இந்த பரப்புரையில் அனைவரது பங்கேற்பும் பங்களிப்பும் மிக அவசியமானது. ஆகவே தோழர்களையும், ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் இப்பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக்கொள்ள மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.மே பதினேழு இயக்கம்9884864010
]]>சட்டக்கல்லூரி மாணவர் வாகைகுளம் முத்துமனோ சிறைப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஐந்திணை மக்கள் கட்சி சார்பாக இன்று (15-05-2021) 5 மணி முதல் நடைபெறும் இணையவழி தொடர் கண்டன முழக்க போராட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.
Zoom Meeting ID: 854 90072119
Pass Code: 643807
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010
செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை உடனே இயக்கிடு! – இணையவழி ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் எச்.எல்.எல்.லைப் கேர் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்.எல்.எல் பயோடெக் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் செங்கல்பட்டில் அமையப்பெற்ற தடுப்பூசி தயாரிக்கும் தடுப்பூசி வளாகம்.
ஆரம்பத்தில்594 கோடியில் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டம் காலதாமதம் ஆனதால் 2017இல் 710 கோடியாக 2019இல் 904 கோடியாகவும் அதிகரித்து திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இங்கே உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசி தயாரிப்பதற்கான எந்திரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இந்த தடுப்பூசி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து அதன் அடிப்படையில் இந்த தடுப்பூசி நிறுவனத்தை எந்தவித பயன்பாட்டுக்கும் பயன்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
கிட்டத்தட்ட இங்கு பணியாற்றிய 174 பணியாளர்களையும் பணியில் இருந்து வேறு பணிக்கு சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டு அனுப்பி விட்டார்கள்.
இந்த தடுப்பூசி வளாகம் ஒருவேளை செயல்பாட்டிற்கு வந்திருந்தால் ஏழு வகையான தடுப்பூசிகளை இந்த மையத்தில் இதுவரை தயாரித்து உள்நாட்டு தேவைக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருக்க முடியும். ஆனால் அது தற்போது வாய்ப்பில்லாமல் கிடப்பில் கிடக்கிறது.
தற்போதைய கொரோனா சூழலில் அதற்கான தடுப்பூசிகள் தயாரித்து கொடுப்பது மிக சிரமம் நிலவி வருகிற சூழ்நிலையில் இந்த செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் செயல்பாட்டுக்கு வந்தால் தடுப்பூசி தேவைகளுக்கு தென் மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் இங்கிருந்தே தயாரித்து மக்கள் உயிர் ஆயிரக்கணக்கில் காப்பாற்றப்படும்.
பாஜக-மோடி அரசே!
* தமிழகத்திற்கு போதுமானவையை கொடு!
* தமிழர்களுக்கு மட்டுமே வேலைகளை ஒதுக்கு!
* தனியார் லாபத்திற்காக தடுப்பூசியை வணிகமயமாக்காதே!
* தடுப்பூசி மக்களுக்கானது; கார்ப்பரேட்களுக்கான விற்பனை பொருளல்ல!
மே 12 புதன்கிழமை காலை 10 மணிக்கு, வீட்டின் முன் கோரிக்கை பதாகைகளை ஏந்தியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் இணைய வழி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் (30-08-20) – மே பதினேழு இயக்கம் வேண்டுகோள்!
தமிழீழ விடுதலைப் போராட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை, போராடுபவர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படுவது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் ஒரு செயல்திட்டமாக இலங்கை அரசினால் செயல்படுத்தப்படுகிறது. இராணுவத்தினர் விசாரிப்பதற்கு அழைத்து சென்றும், அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டும், வெள்ளை வேன் கடத்தல் என சட்டத்திற்கு புறம்பாக தமிழர்களை கடத்தி சென்று இலங்கை அரசினால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, 60,000 முதல் 1 லட்சம் வரையிலான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படியாக கடத்தி செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை இன்று வரை என்ன என்று தெரியவில்லை.
ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலமாக அழுத்தம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்த பிறகும், இலங்கை அரசு ஆக்கப்பூர்வமாக எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதற்காக அமைக்கப்பட்ட ஆணையங்களும் செயல்படாமல் உள்ளன. இதனால் 2017 பிப்ரவரியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்களால், குறிப்பாக பெண்களால், கிளிநொச்சியில் துவங்கி தமிழீழம் முழுவதும் போராட்டம் பரவ, 1000 நாட்களை கடந்தும் தொடர் போராட்டமாக நடைபெற்று வருகின்றன. இதில் 53 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலை அறியாமலே இறந்தும் போயுள்ளனர். இலங்கை சுதந்திர நாளை கரிநாளாக அனுசரித்து பல்வேறு நாட்களில் பல பேரணிகளை முன்னெடுத்துள்ளனர். கோத்தபாய ராஜபக்சே பதவியேற்ற பிறகு இவ்வாறு போராடுபவர்கள் மிரட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இதனை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்வது தமிழ் சமூகத்தின் கடமையாக உள்ளது.
போர் மற்றும் அரசியல் காரணங்களால் காணாமல் ஆக்கப்படும் மக்களின் மீட்பு நடவடிக்கைகள் சர்வதேச கவனம் பெற, ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 30ம் நாள், ஐ.நா.வின் சாவதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழீழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து, இலங்கை அரசு ஐநா மனித உரிமை ஆணையத்தில் உறுதியளித்ததிற்கு மாறாக, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை சர்வதேச சமூகத்தில் அம்பலப்படுத்தும் விதமாகவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நீதி கேட்கவும் சமூக வலைத்தள பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 30-08-2020 ஞாயிறு அன்று தமிழ்நாட்டு நேரப்படி காலை 9 மணி முதல், #Justice4DisappearedTamils என்ற ஹேஷ்டேக் கொண்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்ய உலகத் தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என மே பதினேழு இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் ஒரே நேரத்தில் பதிவுகள் இடும்போது, உலகளாவிய ட்ரென்ட்டிங்கில் இடம்பெற முடியும். அப்படி செய்துகாட்ட இயலுமெனில் சர்வதேச கவனத்தை நம் பக்கம் ஈர்க்க முடியும்.
மே பதினேழு இயக்கம்
9884072010
இம்மசோதா நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதால் 10 நாட்களுக்குள் 22 அலுவலக மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டு மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், 25 நாட்களை கடந்தும் இன்றளவிலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, இந்த மசோதாவினை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பாக முன்னெடுக்கும் சமூகவலைத்தள பரப்புரைக்கு மே 17 ஆதரவளிக்கிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் நடைபெறும் #ScrapEIA2020 என்னும் சமூகவலைத்தள பரப்புரையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
]]>மே 17 இயக்கம் ஒருங்கிணைக்கும் இரண்டாம் கட்ட தொடர் இணையவழி கருத்தரங்கத்தின் நிறைவு நாளான இன்று சூலை 5 ஞாயிறு மாலை 6 மணிக்கு
மனிதநேய சனநாயக கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தோழர். தமிமுன் அன்சாரி அவர்களும்,
ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அய்யா அதியமான் அவர்களும்,
கொங்கு இளைஞர் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.தனியரசு அவர்களும்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தோழர்.முத்தரசன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மே17 இயக்கம்
9884072010
மே 17 இயக்கம் இணையம் வழியாக ஒருங்கிணைக்கும் இரண்டாம் கட்ட தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாளான இன்று 04.07.2020 சனிகிழமை மாலை 7 மணிக்கு ’சுகாதாரம் – கல்வி உரிமை மீட்க எழுச்சி கொள்வோம்’ என்கிற தலைப்பில் மருத்துவர் தோழர். எழிலன் அவர்களும், ,மனித உரிமைக் காப்பாளர்களின் பங்கு, எனும் தலைப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் ஹென்றி டிபேன் அவர்களும், ’பறிபோகும் தொழிலாளர் உரிமைகள்’ எனும் தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கனகராஜ் அவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மே 17 இயக்கம்
9884072010
’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கில்,
‘ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை எழட்டும்’ எனும் தலைப்பில் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் தோழர் சக்கையன் அவர்களும்,
‘கல்வி உரிமை மீட்போம்’ எனும் தலைப்பில் தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன் அவர்களும்,
‘சுற்றுச்சூழல் நீதி’ எனும் தலைப்பில் பச்சைத் தமிழகத்தின் தலைவர் சுப உதயக்குமார் அவர்களும்
இன்று 03-07-2020 வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு மே17 இயக்க முகநூல் பக்கத்தில் இணையவழி உரையாற்றவிருக்கின்றார்கள்.
]]>மே17 இயக்கம் சூலை 2 முதல் சூலை 5வரை ஒருங்கிணைக்கும் ’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வாக இன்று வியாழன் கிழமை 02.07.2020 அன்று மாலை 7மணிக்கு
தோழர் இளமாறன் – ஒருங்கிணைப்பாளர், தமிழர் விடியல் கட்சி ‘தமிழீழம் மீண்டெழட்டும்’ எனும் தலைப்பிலும்
தோழர் வெண்மணி – தலைவர், திராவிடர்- தமிழர் கட்சி ‘வெல்லப்படட்டும் தொழிலாளர் உரிமை’ எனும் தலைப்பிலும்
தோழர் சந்திரபோஸ் – தலைவர், தியாகி இமானுவேல் பேரவை ‘இட ஒதுக்கீட்டு உரிமை மீட்போம் எனும் தலைப்பிலும்
மே17 இயக்க முகநூல் பக்கத்தில் இணையவழி உரையாற்றவிருக்கின்றார்கள்.மேலும் நமது கேள்விகளுக்கும் பதில் சொல்லவிருக்கிறார்.
ஆகவே உங்களது கேள்விகளை askmay17movement@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த வாய்ப்பினை தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பயன்படுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
]]>