திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.
அரங்கு எண்: 83
அரசியல், சமுகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அரங்கில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருக.
தொடர்புக்கு: 8939782116
]]>இராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்
இராமநாதபுரம் இராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 19 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர் பதிப்பகம்’ பங்கேற்கிறது.
நிமிர் பதிப்பக அரங்கு எண்: 24
அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் குறித்த இடதுசாரி கண்ணோட்ட புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த தோழர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்!
தொடர்புக்கு: 8939782116
]]>பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று (04-02-2023 சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் சென்னை ஆலந்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்புக்குழு சார்பாக, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், 27-01-2023 வெள்ளிக்கிழமை மாலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கௌரி திரையரங்கம் நெடுஞ்சாலைப் பாலம் அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>திருப்பத்தூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 5 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை, தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.
அரங்கு எண்: 86
அரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம் சார்ந்த நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
தோழர்கள் அனைவரும் அரங்கிற்கு வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்லுமாறு அழைக்கிறோம்.
தொடர்புக்கு: 8939782116
]]>திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்
19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா, வேலன் ஓட்டல் வளாகத்தில் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5 வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறுகிறது. இதில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.
நிமிர் பதிப்பக அரங்கு எண்: 8
ஈழம், தமிழ்த்தேசியம், திராவிடம், அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் கிடைக்கப்பெறும்.
தொடர்புக்கு:
8939782116
ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்ய முயற்சிக்கும் பாஜக சதியினை முறியடிக்க, ‘ஜல்லிக்கட்டு உரிமைப் பாதுகாப்பு மாநாடு’ மே பதினேழு இயக்கம் சார்பாக ஜனவரி 7, 2023 சனிக்கிழமை மாலையில் தாம்பரம் மார்க்கெட் அருகில் நடைபெற்றது.பறையிசை முழங்க, மே பதினேழு இயக்கத் தோழர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்வை துவங்கினர்.தோழர் கொண்டல் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்வினை தொகுத்து வழங்கினார். தோழர் பரந்தாமன் துவக்க உரை நிகழ்த்தினார்.நிகழ்வில் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் தாம்பரம் முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம்.எச்.ஜவஹருல்லா, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு பசும்பொன் பாண்டியன்.மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொருளாளர் திரு ஹாருண் ரஷீத், இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் திரு முகமது முனீர், எஸ்டிபிஐ கட்சியின் திரு ஏ.கே.கரீம், விசிகவின் மாவட்டத் தலைவர் திரு தேவ அருள் பிரகாசம், மதிமுகவின் வழக்கறிஞர் திரு ஆவடி அந்தரிதாஸ், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் திரு குடந்தை அரசன்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் திரு கே.எம்.சரீப், மக்கள் கண்காணிப்பக்கத்தின் தோழர் திரு ஹென்றி திபேன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
டிசம்பர் 6, பாபர் மசூதி அராஜகமாக இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமுமுக ஒருங்கிணைத்த வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் 06-12-2022 செவ்வாய் மாலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக, 06-12-2022 செவ்வாய் காலை சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அண்ணலின் உருவ சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>டிச 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை பாசிச எதிர்ப்பு தினமாக அறிவித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் 06-12-22 செவ்வாய் காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் கொண்டல் சாமி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>