டிசம்பர் 6, பாபர் மசூதி அராஜகமாக இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமுமுக ஒருங்கிணைத்த வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் 06-12-2022 செவ்வாய் மாலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>டிசம்பர் 6, பாபர் மசூதி அராஜகமாக இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமுமுக ஒருங்கிணைக்கும் வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் 06-12-2022 செவ்வாய் மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். தோழர்களை அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
‘நீட் தேர்வு ரத்து ஏன் அவசியம்’ – நீதியரசர் ஏ.கே.இராசன் அறிக்கை சொல்வது என்ன? – மே 17 இயக்கம் நடத்திய கருத்தரங்கம் அக்டோபர் 3 ஞாயிறு காலை 10 மணிக்கு, வேலூர் விருபாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள பாப்பம்மாள் துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கருத்துரையாற்றினார். இந்நிகழ்வில் தோழமை அமைப்புகளை சேர்ந்த பல்வேறு தோழர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
கருத்தரங்கில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் ஆற்றிய கருத்துரை
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>‘பனை விதை’ விதைக்கும் நிகழ்வு
நேற்று வேலூர், ஆம்பூர், காவேரிபாக்கம் ஆகிய பகுதிகளில் மே17 இயக்கத்தின் சார்பாக சுமார் 3200 பனை விதைகளும்,100க்கும் மேற்பட்ட மரங்கள் நடும் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள் கட்சி, எஸ்டிபிஐ, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளும் கலந்துகொண்டனர்.
அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான வாழ்வியலை உருவாக்கும் பொறுப்புடன் தொடர்ந்து செயல்படுவோம்.
மே 17 இயக்கம்
9884072010
மே 17 இயக்கம்
9884072010
மே17 இயக்கம்
9884072010
]]>
]]>
அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுதும் சமூகநீதிக்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும் போராடினார். ஆனால் இன்று அவரின் உழைப்பு மொத்தமும் இந்திய அரசினால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
அனிதாவின் படுகொலைக்கு நீதியைப் பெற்றாக வேண்டும் என்றும், இனி ஒரு அனிதாவை நாம் இழக்கக் கூடாது என்றும், அதற்கு நீட் தேர்வினை ஒழித்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் தோழர்கள் பேசினர்.
மேலும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்யப்படுவதை கண்டித்தும் தோழர்கள் பேசினர்.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று,
நீட் தேர்வினை எதிர்த்து ஒன்று கூடுவோம்.
கல்வி தமிழ்த்தேசிய உரிமை! நீட் தேர்வினை ரத்து செய். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்று!
சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம்.
அனிதாவின் கனவினை நிறைவேற்ற தோழர்கள் வாருங்கள்.
– மே பதினேழு இயக்கம்
9884072010