புதுச்சேரியில், சம்பூகன் சமூகநீதிக் கூட்டியக்கம் சார்பாக, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வருணாசிரம எதிர்ப்பு மாநாடு, வரும் 24-09-2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சுதேசிப் பஞ்சாலை அருகில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பாக, 25-08-2021 அன்று புதுச்சேரியில் “சனநாயகத்தைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>இதில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தோழர் ஸ்ரீதர், SDPI கட்சியின் புதுவை மாநில நகர செயலாளர் தோழர் பத்ருதீன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் கோகுல் காந்தி, பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் தோழர் தீனா, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் வீரமோகன், மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தோழர் முருகானந்தம், மக்கள் அதிகாரத்தின் தோழர் சாந்தகுமார், மக்கள் மனிதநேய செயற்பாட்டாளர் தோழர் பஷீர் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட எண்ணற்ற தோழர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
]]>புதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்!
விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் நோக்கில் இந்துத்துவ மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை கைவிட வலியுறுத்தி, செப்டம்பர் 26, 2020 சனிக்கிழமை காலை 10 மணியளவில், புதுச்சேரி தலைமை தபால் அலுவலகத்தை மே பதினேழு இயக்கம் முற்றுகையிடுகிறது.
தமிழர்களாய் ஒன்று திரள்வோம். அனைவரும் வாருங்கள்!
மே பதினேழு இயக்கம்
9884072010
மானியவிலை-இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் சட்ட திருத்தத்தை இப்படியாக கிரண்பேடி அவர்கள் வழிமொழிகிறார்
புதுவை யூனியன் பிரதேசத்தின் மின்சார நிர்வாகத்தை முழுமையாக தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள்
]]>மத்திய அரசு பல்கலைக்கழகம் என சொல்லிக் கொண்டு சுயநிதி தனியார் பல்கலைக்கழகத்தைப் போல் கட்டண உயர்வை செய்து, ஏழை மாணவர்களின் கல்விக் கனவை காசாக்கும் இக்கட்டண உயர்வை எதிர்த்து பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.
பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்தும் கல்விக்கட்டணத்தை குறைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தயாராக இல்லை.
மேலும் கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இலவச பேருந்து வசதியும் நிறுத்தப்பட்டிருக்கிறது. புதுச்சேரியின் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒதுக்கீடும் நீக்கப்பட்டுள்ளது.
கல்விக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், இலவச பேருந்தை ரத்து செய்யக் கூடாது, உள்ளூர் மாணவர்களுக்கான ஒதுக்கீடு போன்ற மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையே.
கல்வியை மக்களுக்கு அளிப்பது அரசின் கடமை. அதிலிருந்து பணம் சம்பாதிக்க அரசு முயலக் கூடாது. ஏற்கனவே புதுதில்லியின் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
எனவே மாணவர்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, கல்வி அனைவருக்குமானது என்பதை நிறுவ வேண்டும் என்று புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளும் நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இத்தகைய கட்டண உயர்வு நடவடிக்கையை மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் மேற்கொண்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கல்வியை வியாபாரமாக்கி தனியார்மயமாக்கும் முயற்சியை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010
வாய்ப்புள்ளவர்கள் அவசியம் வருக.
– 9884072010
]]>
புதுச்சேரியில் மில்லர் அரங்கில் மாவீரர்களின் படங்கள் மற்றும் விவரங்களை உள்ளடக்கிய சிறப்பான வடிவமைப்பினை தோழர்கள் செய்திருந்தனர்.
தமிழீழ தேசியக் கொடி மற்றும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு துவங்கியது
]]>
]]>