திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 7 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.
அரங்கு எண்: 83
அரசியல், சமுகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அரங்கில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் வருக.
தொடர்புக்கு: 8939782116
]]>பண்பாட்டு ஆய்வாளர், மானுடவியலாளர், திராவிட-தமிழ்த்தேசிய பேராளுமை பேரா.தொ.பரமசிவன் அவர்கள் நேற்று (24-12-2020) மறைந்ததையடுத்து, அவரது இறுதி நிகழ்வு பாளையங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த இறுதி நிகழ்வில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் புருசோத்தமன் மற்றும் தோழர் பிரவீன் குமார் உட்பட மே 17 இயக்கத் தோழர்கள் முழக்கங்கள் இட்டவாறு அணிவகுத்து சென்று, பேரா.தொ.ப. அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஐயா தொ.ப. அவர்களுடனான நினைவை பகிர்ந்ததோடு, குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
பின்னர் ஊடகவியலாளர்களுக்கு நேர்காணல் அளிக்கையில், பேரா. தொ.ப. அவர்களுக்கு தமிழ்நாடு அரசு, அரசு மரியாதை செலுத்த வேண்டுமெனவும், பேரா. தொ.ப. அவர்களின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்தார்.
மே பதினேழு இயக்கம்
9884072010
விதிகளை மீறி இயங்கி தூத்துக்குடியை மாசுபடுத்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி குமரெட்டியாபுரத்தில் 100 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஸ்னோலின் உள்ளிட்ட 14 பேரை சுட்டுக் கொன்றதை ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் மே பதினேழு இயக்கம் பதிவு செய்தது. இதன் காரணமாக தோழர் திருமுருகன் காந்தி நாடு திரும்பும் போது அவரை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை, அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியது. அப்போது சிறைப்படுத்த மறுத்த நீதிபதி பின்னர் பிணை வழங்கினார்.
தோழர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகள் பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட போது, குமரெட்டியாபுரம் போராட்ட வழக்கு கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தோழர் திருமுருகன் காந்தி இன்று (23-12-20) கோவில்பட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அதே வழக்கில் உள்ள தோழர்கள் பேரா.பாத்திமாபாபு, ராஜா, ரீகன், மகேஸ் மற்றும் வழக்கறிஞர்.அதிசயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
]]>]]>
மே பதினேழு இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்
“முற்பட்ட சாதிகளுக்கான 10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானதே!”
மார்ச் 2, சனி மாலை 5 மணி
மூர்த்தி அரங்கம், சகுந்தலா ஓட்டல்,
வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி
இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு ஏன் மக்கள் விரோதமானது என்பதை விளக்குகிறோம்.
அனைவரும் வாருங்கள்!
– மே பதினேழு இயக்கம்
9884072010
]]>
”தமிழினம் காப்போம்” – உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்
சிறப்புரை:
திருமுருகன் காந்தி
லெனாகுமார்
புருசோத்தமன்
அருள்முருகன்
பிரவீன்குமார்
கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவி!
ஏழு தமிழரை விடுதலை செய்!
சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று!
டிசம்பர் 15, சனி மாலை 5 மணி,
பாளை சித்த மருத்துவக் கல்லூரி அருகில்,
பாளையங்கோட்டை
– மே பதினேழு இயக்கம்
9884072010