மறைந்த கவிஞர் சாக்கிய முகிலன் அவர்கள் எழுதிய ‘அரசு எந்திரம் எதைக் கிழித்தது’ நூல் வெளியீட்டு விழா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை சார்பாக 14-10-2022 வெள்ளிக்கிழமை மாலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பஜார் வீதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் நிறுவுவதை எதிர்க்கும் மக்களின் 100வது நாள் (மார்ச் 31, 2022) தொடர் போராட்டம் வெல்லட்டும்!
* வளமான விவசாய நிலத்தை அழித்து சிப்காட் அமைக்காதே!
* 1500 ஏக்கர் விவசாய நிலம், 500 வீடுகளை அப்புறப்படுத்தாமல் தரிசு நிலத்திற்கு சிப்காட்டை இடமாற்றம் செய்திடு!
* கிராம சபையின் சிப்காட் எதிர்ப்பு தீர்மானத்தை அங்கீகரி!
* போராடும் பாலியப்பட்டு மக்களுக்கு ஆதரவளிப்போம். இயற்கையை காப்போம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
சிப்காட் வளாகங்களின் பாதிப்பு ஆய்வு உள்ளதா? – திருமுருகன் காந்தி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
சிப்காட் கொண்டு வரும் அதிகாரிகளே ஒரு “Impact Study” (பாதிப்பு ஆய்வறிக்கை) வெளியிடுங்கள். நிலத்தில் என்ன பாதிப்பு, வாழ்வாதாரத்திற்கு என்ன பிரச்சனை வரும் என்று எல்லாவற்றையும் ஆய்வு செய்து சொல்ல வேண்டுமே தவிர ஸ்டெர்லைட் போல சுடுவோம், குண்டாஸ் போடுவோம் என்றெல்லாம் சொல்லக் கூடாது. சட்ட வழிமுறையை பின்பற்றி மாவட்ட ஆட்சியாளர் மக்களுடைய கருத்துக்களை அவர்களின் பகுதிகளுக்கு சென்று கேட்டு, உடனடியாக இந்தப் பகுதியில் சிப்காட் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
பாலியப்பட்டு காத்திருப்பு போராட்டத்தின் 50வது நாளன்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தின் 57வது நாளான 16.02.2022 புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு மரக்கன்றுகள் நடும் விழா கிராம மக்களால் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மக்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் முழு ஆதரவை அளிக்கிறது.
மேலும், தமிழக அரசு போராடும் கிராம மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே 17 இயக்கம்
9884864010
]]>
வாழ்வாதாரத்தை பறிக்கும் திருவண்ணாமலை சிப்காட் திட்டம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அதிக தரமிக்க தாதுக்கள் குவிந்துள்ளன. தமிழ் தேசிய இனத்தவரின் இந்த இயற்கை வளத்தை சூறையாடிடவே 8 வழி சாலை, சிப்காட் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக அரசியல் கட்சிகள் மார்வாடிகளுக்கு தரகு வேலை செய்து வருகின்றன. இம்மலை தொடர்ச்சி அழிந்தால் தமிழ்நாட்டின் மழை பொழிவு கடுமையான பாதிப்பிற்குள்ளாகும் என்று சூழலியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு ஊராட்சி பகுதியில் சிப்காட் அமைக்க விளைநிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என, பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தின் 50வது நாளை முன்னிட்டு, 09-02-22 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முழு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>
வீரளூர் கள ஆய்வறிக்கை வெளியீடு: பின்னணியும் தாக்கமும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
மே பதினேழு இயக்கம் சென்னையில் வைத்து தனது கள ஆய்வு உண்மை ஆவணங்களை வெளியிட்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேடை அமைத்து கொடுத்து அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையை தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பகிர்ந்திட ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது. கள ஆய்வறிக்கை வெளியீட்டின் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர், கலசப்பாக்கம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் அனைவரும் பணி இட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010
வீரளூர் சாதிய தாக்குதல் – கள ஆய்வு அறிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்களின் இறந்தவர் உடலை பொதுப்பாதையில் எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர், அருந்ததியர் பகுதிக்குள் புகுந்து கடும் தாக்குதலை நிகழ்த்தினர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மே பதினேழு இயக்கம் கள ஆய்வு மேற்கொண்டது. அதன் அறிக்கை கடந்த 28-01-22 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை மக்கள் பார்வைக்கு முன்வைக்கப்படுகிறது.
அறிக்கையை பதிவிறக்கம் செய்துகொள்ள
மே 17 இயக்கக் குரல்
9444327010
அருந்ததியரின் உடல் பொதுப்பாதையில் எடுத்துச் செல்லப்பட்டு சுயமரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவதை வீரளூர் மக்களுடன் இணைந்து உறுதி செய்த மே பதினேழு இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தின் பட்டியலின அருந்ததியர் சமூக மக்களின் இறந்தவர் உடலை பொதுப்பாதையின் வழியே மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவ்வூரை சேர்ந்த ஆதிக்க சாதியினர், கடந்த ஜனவரி 16 அன்று அருந்ததியர் மக்கள் மீது கடும் சாதிவெறி தாக்குதலை நிகழ்த்தினர். இது குறித்த கள ஆய்வு மேற்கொண்ட மே பதினேழு இயக்கம் அதன் அறிக்கையை 28-01-22 அன்று சென்னையில் வெளியிட்டது. இந்நிலையில், 28ம் தேதி அதே ஊரை சேர்ந்த மற்றொருவர் இறந்துவிட, அவரது உடலை மயானத்திற்கு பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியுமா என்றதொரு பதட்டமான சூழல் நிலவியது.
இறந்தவர் உடலை பொதுப்பாதையில் எடுத்துச் சென்று சமூகநீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு அரசு உறுதி செய்யவில்லையெனில் வீரளூர் அருந்ததியர் மக்களுடன் இணைந்து மே பதினேழு இயக்கம் அதனை செய்து முடிக்கும் என்று 28ம் தேதி நடைபெற்ற கள ஆய்வு அறிக்கை வெளியீட்டின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே பதினேழு இயக்கம் உறுதிபட கூறியது. அந்நிகழ்வில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் வீரளூர் மக்களுடன் களத்தில் நிற்போம் என்று உறுதியளித்தனர். இந்நிகழ்விற்கு முன்பே, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் இந்த கருத்தினை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து மே பதினேழு இயக்கம் உறுதிபட இருப்பதாக பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் வீரளூர் கிராமத்தில் இன்று (29-01-22) நடைபெற்ற சூழலில், மே பதினேழு இயக்கம் உறுதியளித்தபடி, ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் வீரளூர் கிராமத்திற்கு சென்றனர். தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன் அவர்களும் உடன் வந்திருந்தார். பல்வேறு முற்போக்கு அமைப்புக்களுடன் இணைந்து இறந்தவர் உடல் பொதுப்பாதையில் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சுயமரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவதை வீரளூர் அருந்ததியர் மக்களுடன் இணைந்து மே பதினேழு இயக்கம் உறுதி செய்தது. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் இறந்தவர் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>