திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் ஈழத்தமிழர்களுக்கான தனி சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டுமென கடந்த 20-05-2022 முதல் தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் உச்சகட்டமாக கடந்த ஜூன் 24 அன்று உமாரமணன் என்ற ஈழத்தமிழர் தீக்குளித்துள்ளார். அவர்களது ஒரே கோரிக்கை, சித்திரவதை கூடமாக இருக்கும் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்பதே.
போராடும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு ஆதரவாக, ஈழத் தமிழர்களை சித்திரவதை செய்யும் திருச்சி சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைக்கும், திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் வரும் புதன் (29-06-2022) காலை நடைபெறுகிறது.
* ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்யும் திருச்சி சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூடு!
* 40 நாட்களாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபடும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக விடுதலை செய்!
* போராட்டத்தில் தீக்குளித்த ஈழத்தமிழரான உமாரமணன் என்பவருக்கு உரிய நீதியை வழங்கிடு!
* தமிழ்நாட்டை நம்பி வந்த தொப்புள்கொடி உறவுகள் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்திடு!
இடம்: திருச்சி சிறப்பு முகாம்
நேரம்: 29-06-2022 புதன் காலை 10 மணி
ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு வலுவூட்ட அனைவரும் ஒன்றுதிரள்வோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
திருச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம், காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில், மே 21, 2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றுகிறார்.
நினைவேந்தல் உரையாற்றுபவர்கள்:
தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
தோழர் குடந்தை அரசன்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
தோழர் உ.தனியரசு
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
நாகை.திருவள்ளுவன்
தமிழ்ப்புலிகள் கட்சி
கே.எம்.செரிஃப்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
உ.இளமாறன்
தமிழர் விடியல் கட்சி
பிரபாகரன் வீரஅரசு
முன்னாள் மாணவ செயல்பாட்டாளர்
ஒருங்கிணைப்பு:
மே பதினேழு இயக்கம்
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழ்ப்புலிகள் கட்சி
தமிழர் விடியல் கட்சி
இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 1.5 இலட்சம் ஈழத் தமிழர்களை நினைவில் ஏந்துவோம்!
சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்றுகூடுவோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சமநீதி வழக்கறிஞர்கள் சங்கம் ஒருங்கிணைப்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள செவனா ஹோட்டலில், 28-11-2021 ஞாயிறு அன்று நடைபெற்ற கருத்தரங்கில், ‘பெரியார் தொட்ட இடமும், பின்வந்தவர்கள் விட்ட இடமும்’ என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சமநீதி வழக்கறிஞர்கள் சங்கம் ஒருங்கிணைப்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள செவனா ஹோட்டலில், இன்று (28/11/2021) ஞாயிறு காலை 9 மணியளவில் நடைபெறும் கருத்தரங்கில், ‘பெரியார் தொட்ட இடமும், பின்வந்தவர்கள் விட்ட இடமும்’ என்ற தலைப்பில் மே 17 இயக்கத்தின் சார்பில் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.வாய்ப்புள்ள தோழர்கள் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>உரிமைகள் கோரும் அறவழி போராட்டங்களின் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கு அதிமுக-பாஜக அரசுகளை வலியுறுத்தி மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பின் சார்பில் திருச்சி உழவர் சந்தை திடலில் 06-03-2021 சனி அன்று நடைபெற்ற மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாட்டுத் தீர்மானங்கள்
வீர வணக்கத் தீர்மானங்கள்:
1) தமிழ்மொழிகாப்பு போராட்டம், சாதி ஒழிப்புப் போராட்டம், மக்கள் வாழ்வுரிமைக்கான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தீரத்துடன் கலந்துகொண்டு அரச அடக்குமுறையால் உயிரிழந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி தூத்துக்குடி ஸ்னோலின், நீட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த அனிதா போன்ற ஈகியர்களுக்கு மக்கள் இயக்கங்களின் உரிமைகளுக்கான கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது.
2) தமிழகத்திற்கு வெளியே இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து தீரத்துடன் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்நீத்த விவசாயிகள் 163 பேருக்கும் இந்த மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.
கொள்கைத் தீர்மானங்கள்
3) ஸ்டெர்லைட் எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, குடியுரிமை சட்ட எதிர்ப்பு, தமீழீழ இனப்படுகொலை எதிர்ப்பு, உயர்மின் அழுத்த கோபுர எதிர்ப்பு, கெயில் குழாய் எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு மீட்பு, எட்டுவழிச்சாலை எதிர்ப்பு, காவேரி உரிமை மீட்பு, நீட் எதிர்ப்பு, சாதி வன்கொடுமை எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, தமிழ்நாடு நாள் கொண்டாட்டவிழா, எழுவர் விடுதலை, அத்திகடவு- அவினாசி கூட்டு குடிநீர் திட்ட ஆதரவு, நீயூட்ரினோ எதிர்ப்பு என பலவகைப்பட்ட சனநாயக மக்கள் எழுச்சி போராட்டங்களில் அமைதி வழியில், அறவழியில் போராடிய பொதுமக்களை, அரசியல்- சமூக போராளிகளை, மனித உரிமையாளர்களை பல்வேறு பொய் வழக்குகள், கொடும் சிறைகள், விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு சனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் முடக்க நினைக்கும் அதிமுக – பாஜகவை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது. உடனடியாக இவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
4) தமிழகத்தில் பாசக அரசுக்கு ஏதிராக சனநாயக வழியில் தேர்தலில் வேலை செய்ய கூட்டமைப்பு உருவாக்கினார்கள் என்பதற்காக வேறு காரணங்களை சொல்லி தோழர் பாலன், கோ.சீனிவாசன், தோழர் அனுப்பூர் செல்வராஜ், தோழர் விவேக், தோழர் தருமபுரி சித்தானந்தம், தோழர் சுரேஷ் விஜயராசன் மற்றும் தோழர் கோவை மருத்துவர் தினேஷ் ஆகியோரை ஊபா சட்டத்தில் கைது செய்ததை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
5) தமிழகத்திற்கு வெளியே பீமாகோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டுவருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் வர வர ராவ், ஆனந்த் டெல்டும்டே, சுஜா பரத்வாஜ், கவுதம் நவ்லகா உள்ளிட்ட அறிவுசீவிகளையும், குடியுரிமை திருத்தச்சட்ட போராட்டத்தின் போது கலவரம் செய்ய தூண்டுதலாக இருந்ததாக போலியாக வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டிருக்கிற உமர் காலித் உள்ளிட்டவர்கள் மீதான வழக்கையும், சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த காரணத்திற்காக தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இளம் சூழலியல் போராளி திசா ரவி உள்ளிட்ட அனைவர் கைதையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது, இவர்கள் மீதான வழக்கை உடனடியாக திரும்ப பெறுவதோடு இவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
6) போராடுகின்ற உரிமை அமைதி வழியின் ஒன்று கூடும் உரிமை ஆகியன சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் கீழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளாக வரையறை செய்யப்பட்டு, அதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இந்த உரிமைகளின் அடிப்படையில் போராடுவது என்பது நமது அடிப்படை உரிமை. இந்த உரிமையை நிலைநாட்ட தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
7) உரிமை போராட்டங்களில் பங்குகொண்டு அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி, குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளுக்கு தக்க இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
8) மக்களின் வாழ்வாதார போராட்டங்களில் பங்கெடுத்ததால் அரசினால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று, வேலைவாய்ப்பை இழந்து, கடவு சீட்டு இழந்து நிற்கும் போராளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
9) அரசியல் செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் வகையில் – மாநில அரசுகளுக்குள்ள சட்டம் ஒழுங்கு அதிகார வரம்புகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய புலனாய்வு (NIA) முகமையை இரத்து செய்ய வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
10) அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருக்கும் கொடிய மக்கள் விரோத சட்டங்களான குற்றத் தடுப்புச் சட்டம் (UAPA), தேசத்துரோகச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் போன்ற சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
மாநாட்டில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை
]]>தமிழர் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் தான் ஜல்லிக்கட்டு தடை. அதுவே தமிழர்களை ஒன்றிணைத்து தடைக்கு எதிராக போராட வைத்தது. சென்னை மெரினா கடற்கரை துவங்கி, தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் தன்னியல்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடினர். ஜல்லிக்கட்டு போராட்ட களம் என்பது வெறும் போராட்டக்களமாக மட்டுமல்லாமல் அரசியல் பயிலும் களமாக மாறியது. இதனால் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசுகளுக்கு எதிராக மக்கள் வெல்ல முடிந்தது. அதனாலேயே போராடிய மக்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவியது. காவல்துறையே கலவரங்களை உண்டாக்கி மக்கள் மீது பழியை போட்டது. போராடிய மக்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவளித்த மக்கள் மீதும், உறுதுணையாக நின்ற அரசியல் இயக்கங்கள் மீதும் அரசு பொய் வழக்குகளை பதிந்துள்ளது
இந்திய அரசு தமிழின அழிப்பை நேரடியாக மேற்கொண்ட ஒரு செயல் தான், காவிரி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டங்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை வட இந்திய பார்ப்பன-பனியா கூட்டம் கொள்ளையடிக்க கொண்டு வந்ததோடு, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை அழிப்பதன் மூலம் தமிழ்நாடு தன்னிறைவு அடைவதை தடுத்து, இந்தி ஒன்றிய அரசின் தயவில் செயலாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டதாகும். வீரு கொண்ட விவசாய பெருங்குடி மக்கள் டெல்டா முழுவதும் போராட்டத்தை துவங்க, தமிழ்நாடு முழுக்க மக்கள் ஆதரவாக போராட துவங்கினர். இந்த போராட்டத்தையும் நசுக்க அரசு போராடியவர்கள் மீது எண்ணற்ற வழக்குகளை பதிந்தது. மக்கள் போராட்டத்தின் விளைவாக திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், வழக்குகள் மட்டும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டிற்காக போராடிவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக திருப்பிப் பெற வேண்டும்.
தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழர்கள் ஒன்றிணைந்து போராடிய வேளையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை துவங்க வைத்தது அன்றைய காங்கிரஸ்-திமுக அரசுகள். 1000 நாட்களை கடந்த மிக அமைதியான அறவழி போராட்டத்தை தமிழர்கள் நடத்தி காட்டினர் தலைமுறைகளை பாதித்திடும் அணு உலைக்கு எதிராக போராடிய கூடங்குளம் கிராம மக்கள் மீது உலகிலேயே மிக அதிக வழக்குகள் பதியப்பட்டன. வழக்குகளை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும், இன்றும் பல வழக்குகளை சந்தித்து வருகின்றனர். இன்று மேலும் மேலும் அணு உலைகள் வந்துகொண்டே உள்ளன. ஆட்சி மாறியும் மக்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறையவே இல்லை. இந்த வழக்குகள் காரணமாக வேலைவாய்ப்புக்காக அந்த மக்கள் வெளிநாடு செல்வது தடைபட்டுள்ளது. இந்த வழக்குகளை நீக்குவதே அம்மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தரும்.
இது போன்ற பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி உழவர் திடலில் மார்ச் 6 சனிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு மேல், மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க மாநாடு நடைபெறுகிறது. மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த மாநாட்டில், கட்சி, சாதி, மாத எல்லை கடந்து தமிழினத்தின் உரிமைக்காக போராடிய அனைவரும் திரள்வது மட்டுமல்ல, போராட்டங்களுக்கு ஆதரவளித்த வெகுமக்களும் குடும்பத்தினரோடு பங்கேற்க வேண்டுமென, மே பதினேழு இயக்கம் சார்பாக தோழமையுடன் அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884072010
மாநாடு நாள் : 06.03.21 சனிக்கிழமை
இடம் : உழவர் சந்தை திடல், திருச்சி
]]>மக்கள் உரிமைகளுக்காக போராடி வரும் இயக்கங்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை, அரசியல் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி, மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பாக, வரும் மார்ச் 6 சனிக்கிழமை மாலை திருச்சி உழவர் சந்தை திடலில் வைத்து, ‘அறப்போராட்டங்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு’ என்ற முழக்கத்தோடு, மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்கப் பேரணி-மாநாடு நடைபெறவிருக்கிறது.
கட்சி, சாதி, மத எல்லை கடந்து தமிழினத்தின் உரிமைக்காக போராடிய அனைவரும் திரள்வது மட்டுமல்ல, இதற்கு ஆதரவளிக்க பொதுமக்களும் குடும்பத்தினரோடு பங்கேற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் சார்பாக தோழமையுடன் அழைக்கின்றோம்.
மே பதினேழு இயக்கம்
9884072010
]]>திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பெயரில் உள்ளது போல, சமத்துவத்தை விரும்பிய பெரியாரின் சிலையை அவமதித்ததன் மூலம், அவமரியாதை செய்தவர்கள் சமத்துவத்தை விரும்பாதவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர் என்று புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் காவி நிறம் என்ற அசிங்கத்தை கொண்டு கறைபடுத்தியதன் மூலம், காவி என்பது சமத்துவத்திற்கு எதிரானது என்றும் கூற விளைகின்றனர்.
பாஜகவின் எச்.ராஜா, பெரியார் சிலை குறித்த பேசிய பின்பு தொடங்கிய பெரியார் சிலை மீதான அவமதிப்பு என்பது தற்போது வரை தொடர்கிறது. அப்போதே எச்.ராஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று இத்தகைய அத்துமீறல்கள் தொடர்ந்திருக்காது. ஒவ்வொரு முறை பெரியார் சிலை அவமதிக்கப்படும் போதும், சிலை அவமதிப்பு செய்தவர்கள் மீது மட்டுமல்லாது அதன் பின்னணியில் செயல்படுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று அரசுக்கும், உள்ளூர் காவல்துறையினருக்கும் தெரிந்த பின்பும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாது இருப்பது, அதிமுக அரசு இத்தகைய செயலை ஊக்குவிக்க விரும்புகிறதோ என்ற கேள்வி எழுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரோ, இத்தகைய சமூக விரோத கும்பலை ஒடுக்காமல் விட்டுவைப்பதன் மூலம், கலவரத்தை தூண்ட நினைக்கும் காவி கும்பலுக்கு துணை போகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது.
பெரியாரின் வாரிசான அண்ணாவின் பெயரைக் கொண்ட கட்சியை வைத்திருக்கும் ஆளும் அண்ணா திமுக அரசு, சந்தர்ப்பவாத அரசியலுக்கு அண்ணாவையும், பெரியாரையும் விட்டுக்கொடுப்பது என்பது கொள்கையை விட்டுக்கொடுப்பது என்பதாகும். பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதை தமிழ்ச் சமூகம் இனியும் அனுமதிக்காது. சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய அரசும் காவல்துறையும் இனியும் இச்செயலை கடந்து செல்லுமானால், மே பதினேழு இயக்கம் தமிழகத்தின் அனைத்து ஜனாநாயக அமைப்புகளை ஒன்றுதிரட்டி ஜனநாயக முறையில் எதிர்ப்பினை பதிவு செய்வோம்.
மே பதினேழு இயக்கம்
9884072010
]]>