தர்மபுரி தொப்பூர் அருகே தமிழ்ச்செல்வன், ஜீவா, சசிதரன் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதான சாதிவெறியாட்டத்தை கண்டித்தும், சிறப்பு புலன் விசாரணை கோரியும் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக இன்று (16-06-2022) வியாழன் மாலை 3 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் மீது சாதிவெறி கும்பல் கொலைவெறி தாக்குதலை கண்டித்து, தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக அதன் தலைவர் தோழர் நாகை.திருவள்ளுவன் தலைமையில் 22-01-2022 அன்று திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். தோழர் பிரவீன் குமார் கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தமிழ்தேசிய களத்தில் மே பதினேழு இயக்கத்தோடு இணைந்து பயணம் செய்த மறைந்த எங்கள் அருமை தோழர் மகாலிங்கம் அவர்களின் நினைவாக நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்வு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 22-01-2022 அன்று மாலை தர்மபுரியில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தோழர் மகாலிங்கம் அவர்களின் தாயார் மற்றும் தோழமை அமைப்புகளின் பிரதிநிகள் முன்னிலையில் அவரது படம் திறந்து வைக்கப்பட்டது. தோழர் திருமுருகன் காந்தி, தோழமை அமைப்புகளின் பிரதிநிகள் மற்றும் தோழர் மகாலிங்கம் அவர்களோடு பயணித்த தோழர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் அவருடனான நினைவை பகிர்ந்து கொண்டனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>