யூடியூப் இணைப்பு
]]>தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் திரு.தினேஷ்பொன்ராஜ் அவர்களை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று நேரில் சந்தித்து கிளாமங்கலத்தின் சாதிய வன்முறையையும், அதை பாதுகாக்கும் அதிகாரவர்க்க போக்குகளையும் விளக்கமாக எடுத்துரைத்து அவற்றை களைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள தோழர்கள் அரங்ககுணசேகரன், குடந்தை அரசன், பாரதி ஆகியோருடன் கோரிக்கை வைத்தார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>கிளாமங்கலம் சாதிய வன்கொடுமை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த இன்று (02-12-2022) இருதரப்பினரையும் பாப்பாநாடு காவல்நிலையம் அழைக்கப்பட்டிருந்தனர். பிரதிநிதிகள் மட்டும் அழைக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து 10 பேர் வந்திருந்த போது, குற்றமிழைத்தவர்கள் தரப்பில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். தங்கள் ஆதிக்கத்தை காட்ட வேண்டும், அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும், அமைதி பேச்சு வார்த்தையை நடத்தவிடக் கூடாது என்ற நோக்கமுமே குற்றமிழைத்தவர்கள் திரண்டு வந்ததில் இருந்தது. காவல்துறையினரும் நூற்றுக்கணக்கானோரை எப்படி பேச்சுவார்த்தைக்கு அனுமதித்து என்ற கேள்வியும் எழுகிறது.
மே 17 இயக்கத் தோழர் ராஜேந்திரன் கூட்டத்தை புகைப்பட எடுக்க முயன்ற போது மிரட்டியுள்ளனர். அடிக்கவும் பாய்ந்துள்ளனர். பாதுகாப்பற்ற சூழலில் பேச்சு வார்த்தையை சுமூகமாக நடத்திவிட முடியாது என்பதை உணர்ந்து தோழர் அரங்க குணசேகரன் மற்றும் ஊர் மக்கள் தோழர்களுடன் அவ்விடத்திலிருந்து வெளியேறினர். பின்னர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் அரங்க குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட ஊர்மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊர் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டுமென காவல்துறையினரிடம் வலியுறுத்தப்பட்டது. நீதி கிடைக்கும் வரை மே பதினேழு இயக்கம் மக்களுடன் களத்தில் நிற்கும் என தோழர் திருமுருகன் காந்தி ஊர் மக்களிடம் உறுதியளித்தார்.
இப்பிரச்சனையின் ஆரம்பம் முதலே காவல்துறையினர் குற்றமிழைத்த ஆதிக்க சாதியினருக்கு சார்பாக செயல்பட்டு வருகின்றனர். இது பட்டியல் சமூக மக்கள் மீதான சாதிய தீண்டாமையை ஊக்குவிப்பது போல் அமைந்துவிடக் கூடும் என்று திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து எச்சரிக்கிறோம். அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். சமூகநீதியை காக்க திமுக அரசு முன்வர வேண்டும்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>மே பதினேழு இயக்கம்
9884864010
]]>பாஜக அரசின் உழவர் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டில்லியில் போராடி வரும் உழவர்களுக்கு ஆதரவாகவும், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பாக, 04-01-2021 அன்று, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் அரங்க.குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.
]]>]]>
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தஞ்சாவூரில் அதிநவீன விமானப்படை தளத்தை தொடங்கி இருக்கிறோம் என்று முப்படையின் கூட்டு தலைவர் பிபின் ராவத் பேசியிருக்கிறார். https://www.thehindu.com/
உண்மையில் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என்றால் ஒருசில கேள்விக்கு பிஜேபியின் மோடி அரசு தமிழர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.அதாவது
1.இந்தியாவிற்கு சீனா தான் எதிரி நாடு என்றால் எதிரி நாடான சீனாவிற்கு அதிக நன்மையை தரும் பொருளாதார ஒப்பந்தமான ரீஜினல் எக்னாமிக் பார்ட்னர்ஷிப் அக்ரிமென்டில் கையெழுத்திட ஏன் இந்தியா முதலில் (இறுதியில் கையெழுத்துபோடவில்லை என்பது வேறு விசயம்) ஒப்புக்கொண்டது.
2. சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்க தான் தமிழகத்தின் தஞ்சாவூரை தேர்ந்தெடுக்கிறோம் என்றால் ஏன் சீன பிரதமரை அதே தமிழகத்தில் மகாபலிபுரத்தில் வைத்து சந்தித்தீர்கள்? அவ்வளவு தூரம் அரசியல் அறிவு இல்லாதவர்களால் பிஜேபியின் வெளியுறவு கொள்கை யாளர்கள்.
3. சீனாவின் பொருளாதாரத்தை முடக்கினால் அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்து இந்திய பெருங்கடலில் அவர்களை கண்காணிக்கவே இந்த விமானதளமென்றால், ஏன் இந்தியாவின் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்த சீனாவின் ’ஹவாய்’ கம்பெனிக்கு அனுமதி கொடுத்தீர்கள். அத்தோடு சில தினங்களுக்கு முன் சீனாவின் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் ’வின்டெக்’ நிறுவனம் உற்பத்தி தொழிற்சாலையை சென்னையில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்க அனுமதியையும் மத்திய மாநில அரசுகள் வழங்கியிருக்கின்றது.
இதன் மூலம் சீனா இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார நன்மையை அடையப் போகிறார்களே. நீங்களே சீனாவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறார்கள் பின் அதை கட்டுப்படுத்தவும் செய்வோம் என்கிறீர்களே ஏன் இந்த இரட்டை நிலை? உண்மை என்ன?
இப்படிப்பட்ட மிக முக்கியமான கேள்விகளுக்கு பதில் தராமல் தமிழகத்தை ராணுவ மயமாக்கும் வேலையை ஏன் செய்கிறீர்கள். யாருடைய நன்மைக்காக செய்கிறீர்கள் என்பதை தமிழர்களுக்கு இந்திய அரசு சொல்லியாக வேண்டும்.
தமிழகத்தை ஆப்கானிஸ்தானாக மாற்ற இந்திய அரசு நினைக்கிறதோ என்ற அச்சம் தமிழர்களுக்கு ஏற்படுகிறது.
மே 17 இயக்கம்
9884072010
“மாவீரன் திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப் போரும்”
கருத்தரங்கத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறப்புரையாற்றுகிறார்.
20-11-2019, புதன் மாலை 5 மணி
ஹனபியா பள்ளிவாசல், விசிறிக்கார தெரு, கீழவாசல், தஞ்சை
வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்கவும்
]]>சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இணையதள பிரிவினர் மதச்சார்பற்ற தமிழரின் அடையாளமான திருவள்ளுவருக்கு காவி உடையும், பட்டையும் அணிவித்து எடிட் செய்து ஒரு படத்தை வெளியிட்டு அவமதித்ததற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இது நடைபெற்ற அடுத்த தினங்களிலேயே தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் வன்முறையை உருவாக்கும் நோக்குடன் அம்பேத்கர் சிலையை அவமதிப்பது, பெரியார் சிலையை அவமதிப்பது, தற்போது திருவள்ளுவர் சிலை என்று சிலை அவமதிப்பினை ஒரு கலாச்சாரமாக சில சமூக விரோத சக்திகள் செய்து வருகின்றன.
அந்த கும்பல் யாராக இருந்தாலும் உடனடியாக கண்டறியப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
– மே பதினேழு இயக்கம்
9884072010
தொடர்ச்சியாக ஏவப்படும் அரசின் அடக்குமுறைகளை மே பதினேழு இயக்கம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.
]]>