*சேலம் புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்!*
நவம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை, *சேலம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாநகராட்சி திடலில்* நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் பங்கேற்கிறது.
*அரங்கு எண் : 132*
தமிழ்த்தேசியம், திராவிடம், அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம், ஈழம், சாதி ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் அரங்கு எண் 132-ல் கிடைக்கும்.
தொடர்புக்கு: 8939782116
]]>]]>
]]>
மத்திய, மாநில அரசுகளே!
சாதி ஆணவப்படுகொலைகள்,
பெண்குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுத்து நிறுத்து!
கண்டன ஆர்ப்பாட்டம்!
நவம்பர் 24, சனி, மாலை 5 மணிக்கு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சேலம்
சாதி ஒழியும் இடத்தில் தான் தமிழ் வெல்ல முடியும். தோழர்கள் அனைவரும் வாருங்கள். சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான நமது குரலை உரத்து எழுப்புவோம்!
சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றிடு!
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு சட்டம் இயற்றிடு!
சாதி ஆணவப்படுகொலை செய்யும் குடும்பத்தாரின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை பறிமுதல் செய்!
அவர்களுக்கு வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், விவசாயக் கடன்கள், மானியங்கள், சலுகைகள் எதுவும் இல்லை என அறிவித்து சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகும் வகையில் சட்டம் இயற்றிடு!
– மே பதினேழு இயக்கம்
9884072010
]]>
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் சேலத்தில் 24-5-18 வியாழன் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தோழர்களும் பங்கேற்றனர்.
வேதாந்தாவின் ஆளாகவு, பாஜகவின் பினாமியாகவும் செயல்படும் எடப்பாடி-பன்னீர்செல்வம் அரசு பதவி விலக வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.