பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று (04-02-2023 சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் சென்னை ஆலந்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்ய முயற்சிக்கும் பாஜக சதியினை முறியடிக்க, ‘ஜல்லிக்கட்டு உரிமைப் பாதுகாப்பு மாநாடு’ மே பதினேழு இயக்கம் சார்பாக ஜனவரி 7, 2023 சனிக்கிழமை மாலையில் தாம்பரம் மார்க்கெட் அருகில் நடைபெற்றது.பறையிசை முழங்க, மே பதினேழு இயக்கத் தோழர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்வை துவங்கினர்.தோழர் கொண்டல் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்வினை தொகுத்து வழங்கினார். தோழர் பரந்தாமன் துவக்க உரை நிகழ்த்தினார்.நிகழ்வில் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் தாம்பரம் முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு எம்.எச்.ஜவஹருல்லா, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு பசும்பொன் பாண்டியன்.மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொருளாளர் திரு ஹாருண் ரஷீத், இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் திரு முகமது முனீர், எஸ்டிபிஐ கட்சியின் திரு ஏ.கே.கரீம், விசிகவின் மாவட்டத் தலைவர் திரு தேவ அருள் பிரகாசம், மதிமுகவின் வழக்கறிஞர் திரு ஆவடி அந்தரிதாஸ், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் திரு குடந்தை அரசன்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் திரு கே.எம்.சரீப், மக்கள் கண்காணிப்பக்கத்தின் தோழர் திரு ஹென்றி திபேன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக, 06-12-2022 செவ்வாய் காலை சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அண்ணலின் உருவ சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே பதினேழு இயக்கத் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>டிச 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை பாசிச எதிர்ப்பு தினமாக அறிவித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில் 06-12-22 செவ்வாய் காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் கொண்டல் சாமி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மே பதினேழு இயக்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 05-12-2022 திங்கள் கிழமை மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும், இந்தியை திணிக்கும் மோடி அரசை கண்டித்து தன்னுயிர் நீத்த ஐயா தாழையூர் தங்கவேல் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவின் திரு ஆர்.எஸ். பாரதி, மதிமுகவின் திரு வந்தியத்தேவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் வன்னியரசு, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தோழர் புழல் சேக், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தோழர் உமர் பாரூக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் முஹம்மது முனீர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், தமிழக மக்கள் முன்னணியின் பாவேந்தன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சௌ சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, ஆலந்தூர் சங்கர நேத்ராலயா அருகில், இன்று (06-12-2022 செவ்வாய்) காலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, ஆலந்தூர் சங்கர நேத்ராலயா அருகில், இன்று (06-12-2022 செவ்வாய்) காலை 10:30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010
தலைவரின் 68-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கம் சார்பாக, “தலை நிமிர் தமிழா! இன உணர்வு கொள் தமிழா!!” என்னும் பொதுக்கூட்டம், 26-11-2022 சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கக் கலைக்குழுவின் பறையிசையுடன் துவங்கிய நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பெரியாரிய உணர்வாளர் தோழர் தமிழ் சாக்ரடீஸ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் கரு.அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010
]]>தலைவரின் 68-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கம் சார்பாக, “தலை நிமிர் தமிழா! இன உணர்வு கொள் தமிழா!!” என்னும் பொதுக்கூட்டம், வரும் 26-11-2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு மே பதினேழு இயக்கம் நடத்தும் சுயமரியாதை கொள்கை விளக்கக் கூட்டம்!
“இன உணர்வு கொள் தமிழா!!” பொதுக்கூட்டம்
நாள்: 27-09-2022 செவ்வாய் மாலை 5 மணிக்கு
இடம்: எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில், சென்னை
தமிழர்களை சூத்திரர்கள் என இழிவுபடுத்தியது யார்? தமிழர்களைப் பற்றி இந்துமத நூல் மனுஸ்மிருதி என்ன சொல்கிறது? அப்படியென்ன சொல்லிவிட்டார் ஆ.ராசா?
விளக்கமாக விவாதிப்போம்! மதவெறி மாய்ப்போம்!
நாளை (27-09-22) செவ்வாய் மாலை 5 மணிக்கு சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், மற்றும் தோழர் கொண்டல் சாமி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
அனைவரும் வருக! இன உணர்வு பெருக!
மே பதினேழு இயக்கம்
9884864010