தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான கலையுலக ஆளுமையாக திகழ்ந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான கலையுலக ஆளுமையாக திகழ்ந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களை மே பதினேழு இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்த் திரையுலகில் முக்கியமான படைப்புகளை வெளிக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், தமிழீழத்திற்கும் சென்று புலிகள் அமைப்பினருக்கும் கலைப் படைப்புத் திறனை பயிற்று வித்து வந்த மிக முக்கியமான ஆளுமையாக இயக்குநர் மகேந்திரன் திகழ்ந்தார்.

கலை, படைப்பு என்பதை வர்த்தகத்திற்கானதாக மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இனத்தின் விடுதலைக்கான போராளிகளுக்கு பயிற்றுவித்த கலைஞரான மகேந்திரன் அவர்களின் இழப்பு பெரியது. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

 

Leave a Reply