பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட விபரங்களை பொதுவெளியில் வெளியிடும் தமிழக காவல்துறையை மே17 இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட விபரங்களை பொதுவெளியில் வெளியிடும் தமிழக காவல்துறையை மே17 இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
————————–————————–—————
கடந்த சில வாரங்களுக்கு முன் பொள்ளாச்சியில் பல பெண்களை திட்டமிட்டு ஏமாற்றிய கும்பலின் நடவடிக்கை பொதுவெளிக்கு வந்தது. இச்சமயத்தில் அந்த குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி தமிழ்ச் சமூகத்தில் இருக்கின்ற பல்வேறு முற்போக்கு அமைப்புகள், கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி பொதுவெளியில் வருவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனை சீர்குலைக்கும் விதமாக தமிழக அரசும், காவல் துறையும் திட்டமிட்டு பாதிக்கப்பட்ட பெண்களின் முகத்தையும் அவர்களின் தனிப்பட்ட விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டு வருகிறது. நீதிமன்றம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்களின் எந்த ஒரு தனிப்பட்ட விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்று தீர்ப்புக் கொடுத்த பின்னும், தமிழக காவல் துறை திட்டமிட்டு அவர்களின் தனிப்பட்ட விவரங்களை பொது வெளியில் வெளிவிடுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்க முடியும்.(ஆதாரம் இணைப்பில்)

ஏனென்றால் இப்படி பொதுவெளியில் வெளியீட்டு குறிப்பிட்ட பெண்ணை அடையாளப்படுத்திவிட்டால் அவர்களை இந்த சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திவிடமுடியும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் யாரும் புகார் கொடுக்க வர மாட்டார்கள். இதன் மூலம் இந்த மிருகச்செயலை செய்த குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் எல்லோரையும் காப்பாற்றிவிடலாம் என்ற நோக்கோடு இப்படி செய்கிறதா காவல்துறை என்ற சந்தேகம் எழுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய அரசும், காவல்துறையும் இப்படி குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது. ஆகவே அரசு இது போன்ற செயலை கைவிட்டுவிட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply