ஏழு தமிழர் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் தோழர் திலீபன் செந்தில் அவர்களின் கைதிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

ஏழு தமிழர் விடுதலைக்காக தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் தோழர் திலீபன் செந்தில் அவர்களை கைது செய்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அனைத்து ஜனநாயக சக்திகளையும் இணைத்து ஏழு நிரபராதித் தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டுமென தொடர்ச்சியாக தோழர் திலீபன் செந்தில் போராடி வந்தார். அவரை முடக்கி, ஏழு தமிழர் விடுதலைக்கான போராட்ட நகர்வுகளை நசுக்க நினைத்த தமிழக அரசு, 2006ம் ஆண்டு அவரின் மீது போடப்பட்ட பொய் வழக்கினைக் காட்டி தற்போது கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply