SDPI கட்சியின் “ஒடுக்கப்படோர் அரசியல் எழுச்சி” மாநாட்டில் மே 17 இயக்கம் பங்கேற்பு

- in பரப்புரை

திருச்சியில் அக்டோபர் 21 அன்று நடைபெற்ற SDPI கட்சியின் “ஒடுக்கப்படோர் அரசியல் எழுச்சி” மாநாட்டில் ”நெருக்கடிக்குள்ளாகும் மதச்சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்” என்ற தலைப்பில் காலையில் நடைபெற்ற கருத்தரங்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கருத்தரங்கிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார்.
பல்வேறு ஜனநாயக இயக்கங்களின் பிரதிநிதிகளும் இக்கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினர்.

மாலை நடைபெற்ற மாநாட்டு பொதுக்கூட்டத்தினை லட்சக்கணக்கான தோழர்களின் பங்கேற்புடன் எழுச்சியுடன் நடத்திய SDPI கட்சிக்கு மே பதினேழு இயக்கம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply