தோழர் திரு.பெ.மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை உடனே கைது செய்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு.பெ.மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை உடனே கைது செய்! – மே பதினேழு இயக்கம்

தஞ்சையில் தொடர்வண்டி நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த மணியரசன் அவர்களின் மீதும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தோழரின் மீதும் மர்ம கும்பல் தாக்குதலை நடத்திவிட்டு, அவர்களிடம் இருந்த கைப்பையினையும் பிடுங்கியுள்ளனர்.

இதில் கீழே விழுந்த தோழர் மணியரசன் அவர்களுக்கு கை மற்றும் கால்களில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோழர் மணியரசன் அவர்களைத் தாக்கிய கும்பலை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் காவல்துறையினை மே பதினேழு இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

Leave a Reply