- in பரப்புரை
ஐ.நா விசாரணைகளும், சர்வதேச சதிகளும் – ஆய்வரங்கம்

சென்னை திநகர் செதெ நாயகம் பள்ளியில் மே 17 இயக்கம் சார்பில் அக்டோபர் 12, 2014 அன்று நடத்தப்பட்ட ஐ.நா விசாரணைகளும், சர்வதேச சதிகளும் ஆய்வரங்கம். இந்த ஆய்வரங்கத்தில் மனோஜ், கொண்டல்சாமி, விவேகானந்தன்,அருள்முருகன், ஆகியோரும், பாலச்சந்திரன் மாணவர் இயக்கத் தோழர் பன்னீர், எழுத்தாளர் வளர்மதி ஆகியோர் ஆய்வுரை வழங்கினர். பின்னர் இந்த ஆய்வுரைகளின் மீது தமிழ் தேசிய பேரியக்கத் தோழர் பெ.மணியரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கோவை இராம்கிருட்டிணன், SDPI கட்சித் தோழர் காஞ்சி பிலால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர் ஆளூர் ஷானவாஸ், தமிழ்ப் புலிகள் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர் அரங்க குணசேகரன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை கழகத் தோழர் நிலவழகன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மே 17 இயக்கத் தோழர்கள் லெனா குமார் மற்றும் பிரவீன் குமார் தொகுத்து வழங்கினர். மே 17 இயக்கத் தோழர் திருமுருகன் நன்றியுரையாற்றினார். இந்த ஆய்வரங்கத்தில் ஈழ இனப்படுகொலையில் பிரிட்டனின் பங்கு, அமெரிக்காவின் பங்கு, இந்தியாவின் பங்கு, சர்வதேச சதியினில் ICG என்ற INGO நிறுவனத்தின் பங்கு, இனப்படுகொலை அரசியல், புவிசார் அரசியல், தெற்காசிய பிராந்திய அரசியல் குறித்த ஆய்வுரைகள் வழங்கப்பட்டன.

Leave a Reply