மதிமுக தோழர்களுக்கும் அதன் பொதுச்செயலாளர் அய்யா வைகோ அவர்களுக்கும் நன்றி

- in போராட்டங்கள்

மதிமுக தோழர்களுக்கும் அதன் பொதுச்செயலாளர் அய்யா வைகோ அவர்களுக்கும் நன்றி:

தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் உள்ளிட்ட தோழர்களின் மீதான குண்டர் சட்டத்தை இரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து குரல்கொடுத்துவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் அய்யா வைகோ அவர்கள். தற்போது தஞ்சையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் தோழர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து தோழர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துவரும் மதிமுகவின் பொதுச்செயலாளர் அய்யா வைகோ அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அக்கட்சியினருக்கும் மே 17 இயக்கத்தின் சார்பாக எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி
மே 17 இயக்கம்

Leave a Reply