சிறை சென்று திரும்பிய தோழர்களின் எழுச்சியுரையுடன் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

- in போராட்டங்கள்

சிறை சென்று திரும்பிய தோழர்களின் எழுச்சியுரையுடன் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதாக தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மாற்றும் அருண்குமார் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தினை உடைத்து தோழர்கள் சிறை மீண்டுள்ளனர். இதனிடையே தமிழர் கடல், காவிரி உரிமை, மூடப்படும் ரேஷன் கடைகள், நீட் தேர்வு உட்பட தமிழினத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இழந்த உரிமைகளை மீட்க சூளுரைத்த தோழர்கள் முதல்கட்டமாக தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நாளை (23-09-2017) சென்னை தியாகராய நகரில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் திருமுருகன் காந்தி உட்பட சிறை மீண்ட 4 தோழர்களும் எழுச்சியுரையாற்ற இருக்கின்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்று எம்முடன் கரம்கோர்த்து வலுப்படுத்த வாருங்கள். தோழர்களை நண்பர்களுடன், குடும்பத்தினருடன் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.

நாள்: செப்டம்பர் 23, 2017 சனி மாலை 5 மணி
இடம்: முத்துரங்கன் சாலை (பேருந்து நிலையம் அருகில்), தி.நகர், சென்னை

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply