தமிழர் விரோத ஓசிஎப் தொழிற்சாலை முற்றுகை

மத்திய அரசு தொழிற்சாலையான ஆவடி ஓசிஎஃப் தொழிற்சாலையில் பணியிடங்களை நிரப்புவதில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்துப் போராடி வந்த தையல் தொழிலாளி துளசிராமை பணி இடைநீக்கம் செய்ததோடு, அவரை பழிவாங்கும் நோக்கோடு அசாமுக்கு பணிமாற்றம் செய்துள்ளனர்.

ஓசிஎப் நிர்வாகத்தின் தமிழர் விரோத, தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து ஏப்ரல் 27 வியாழன் அன்று ஓசிஎப் தொழிற்சாலை முற்றுகை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினால் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் பங்கற்றனர். மே பதினேழு இயக்கத் தோழர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply