ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம் 12.02.16

 

முருகதாசன் நினைவுநாளில் சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக வருடம் தோறும் இப்போராட்டம் மே17 இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இன்று நிகழ்ந்த போராட்டத்தில் , ஐ.நா மனித உரிமை ஆணையர் அல்-ஹுசைனின் அறிக்கையை கண்டித்து முழக்கங்களுடன் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன. இப்போராட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள்/கட்சிகள்
மதிமுக, மனித நேய மக்கள் கட்சி , எஸ்.டி.பி.ஐ, விடுதலைத் தமிழ்ப்புலிகள், தந்தைப்பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக்கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழ்த்தேசிய குடியரசு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னனி, தமிழக மக்கள் புரட்சிக்கழகம், மே17 இயக்கம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.

அல்-ஹுசைனைக்கண்டித்தும், ஐ.நாவின் தீர்மானத்தின் மூலமாக நடத்தப்படும் இலங்கை ஆதரவு அரசியலை அம்பலப்படுத்தியும் தோழர்கள் போராட்டம் நடத்தி கைதானார்கள்.

Leave a Reply